ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், தெரனி, ஆலத்தூர் வட்டம்,பெரம்பலூர் மாவட்டம் 

மனிதர்களுக்கான வேண்டுதல்களும் , பிரார்த்தனைகளும், நாம் கேள்விப்பட்டவைதான். ஆனால் கால்நடைகளுக்குக் கூட பிரார்த்தனை செய்துகொண்டு வேண்டுதலை நிறைவேற்றும் வழக்கம் உள்ளது ஆச்சர்யம் தானே?.  

🙏🇮🇳1 Image
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தெரனி (தெரணி என்றும் சில ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது. ஊரின் பெயர்க்காரணம் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை ) எனும் சிறிய கிராமத்தில் உள்ள மலைமீது அமைந்துள்ள ஆஞ்சனேயர் கோவிலின் வரலாறுதான் இதைச்சொல்கிறது.

🙏🇮🇳2
ஒருகாலத்தில் சின்ன ஏரி, பெரிய ஏரி, எனும் இரண்டு ஏரிகளின் நீர்ப்பாசனத்தால் முப்போகம் விளைந்து கொண்டிருந்தது தெரனியில். பக்கத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் தாணியங்கள் வாங்க இந்த ஊரைத்தேடித்தான் வந்துகொண்டிருந்தார்கள் .🙏🇮🇳3
பசுமை சூழ்திருந்த புல்வெளிகளைக்கொண்ட அந்த ஊரில் பசுக்களுக்கு  குறைவில்லை. ஒரு சமயம் ஊரில் இருந்த கால்நடைகளுக்கு ஒருசேர கடுமையான நோய்த்தாக்குதல் ஏற்பட்டுள்ளது. 🙏🇮🇳4
ஒன்றன்பின் ஒன்றாக நோய்வீரியத்தின் காரணமாக மாடுகளும் ஆடுகளும்  இறக்க நேரிட்டது. எனவே, நோய் கண்ட கால்நடைகளிடமிருந்து நோய் மற்ற கால்நடைகளுக்கு பரவாமல் இருக்க ஊரில் இருந்த மலைக்கு நோய் கண்ட கால்நடைகளை விரட்டி விட்டனர். 

🙏🇮🇳5
அவ்வாறு விரட்டப்பட்ட கால்நடைகள் ஒரிரண்டு தினங்களில் திரும்பும் போது முழு ஆரோக்கியத்துடனும், முன்பைவிட அதிக உற்சாகத்துடனும் இருப்பதை கண்டு இது அவ்வூர் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். 🙏🇮🇳6
எப்படி இது நிகழ்கிறது? என்பதை அறியாத அம்மக்கள் இந்த அதிசயத்தை தெரிந்து கொள்வதற்காக ஒருநாள் மலையேறினர். 

அங்கே , மலையின் உச்சியில் அனுமன் புடைப்புச் சிற்பத்துடன்  ஒரு கல்தூண் (ஸ்தம்பம்) இருக்க அதைச்சுற்றிலும் நோய்வய்ப்பட்டு விரட்டப்பட்ட ஆநிரைகள் படுத்திருக்கக் கண்டனர். 🙏🇮🇳7
அந்த அதிசய கம்பத்தை அம்மக்களும் சுற்றி சுற்றி வந்து பார்த்தனர். அந்த இடமே ஒரு அமானுஷ்ய சக்தி உள்ளது என்பதை உணர்ந்தனர். கால் வலிக்க ஏறமுடியாமல் சிரமப்பட்டு ஏறிவந்த சில வயதானவர்கள் அக்கம்பத்தினை சுற்றியபின் சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும், 🙏🇮🇳8
உடலில் இருந்த வியாதியும் குணமடைவதை உணர்ந்தனர். நம் எல்லா பிணிகளையும் தீர்க்க வந்த பெருமாளை கண்டுகொண்ட உற்சாகம் அவ்வூர் மக்களிடம் தொற்றிக்கொண்டது. 

🙏🇮🇳9
ஊரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்து பெருமாளை தொழுதனர். ஆஞ்சநேயருக்கு கோவிலுக்கு உள்ளேயே ஆலயம் எழுப்ப ஊர் கூடி முடிவெடுத்தனர். அன்றிரவே ஆஞ்சசேயர் அவ் ஊர் பக்தர் ஒருவர் கனவில் தோன்றி எனக்கான கோவிலோ, சிலையோ, எதுவும் எடுக்க வேண்டாம். 🙏🇮🇳10
சஞ்சீவி மலையினை தூக்கிச் செல்லும் வழியில் சிதறிய சில துண்டுகளில் இக்குன்றும் ஒன்று.இவ்வூரில் ஒரே நேர்க்கோட்டில் பெருமாளும் சிவனும் குடிகொண்டிருக்கின்றனர், 🙏🇮🇳11
அவர்களின் ஆகர்ஷணசக்தியினை முழுமையாகப் பெற்று  இங்கு எழுந்தருளியுள்ள நான் இந்த பிரபஞ்சத்துக்கே காவலாக  இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். 🙏🇮🇳12
எனவே அதுமுதல்  கோவிலிலும் மலைமீதும் ஆஞ்சனேயருக்கு தனியாக சிலை பிரதிஷ்ட்டை செய்யும் முடிவை கைவிட்டு அந்த கல்தூணையே ஆஞ்சநேயராக கருதி வழிபட்டு வருகின்றனர்.

கொஞ்சம் கொஞ்சமாக இச்செய்தி அக்கம் பக்கம் உள்ள அனைத்து ஊர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. எல்லோரும் வர ஆரம்பித்தனர். 🙏🇮🇳13
அந்த வருடம் வந்த தீபாவளித்திருநாள் அவர்கள் எல்லோருக்கும் நோய்கள் அற்ற ஆரோக்கியமான வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்றி வைத்த தீபாவளியாக இருந்தது. தாங்களும் எங்கள் கால்நடைகளும் நன்றாக இருக்க மலைமீதுள்ள ஆஞ்சநேயரே காரணம் என்பதை உணர்ந்த சுற்றுவட்டார பல கிராம மக்கள் ஒன்று கூடி 🙏🇮🇳14
தீபாவளித்திருநாள் அன்று மலையில் ஏறி தீபம் ஏற்றி ,வாணவேடிக்கைகள் நிகழ்த்தி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். இன்றும் ஒவ்வொரு தீபாவளிக்கும் ஊர்கூடி மலைமேல் ஏறி வாணவேடிக்கை நிகழ்த்துவது இங்கே வழக்கமாக இருக்கிறது.குறைந்தது ஆயிரம் பேராவது அன்று மலைமீது இருப்பார்கள் என்கிறார்கள்.🙏🇮🇳15
மாலை 4.00 மணிக்கு துவங்கும் வாணவேடிக்கை இரவு வெகுநேர நடக்கும் என்கிறார்கள்.

மலைஅடிவாரத்தில் உள்ளது ”ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி” பெருமாள் கோவில். ராஜகோபுரம் அற்ற சற்று உயரமான படிகளைக்கொண்ட வாயில் மூலமாக உள்ன நுழைகிறோம். 🙏🇮🇳16
அதற்கு முன்பே நாம்  உயர்ந்திருக்கும் கருடஸ்தம்பத்தை கடக்கிறோம். இடப்பக்கம் ஒரு தீர்த்தக்கிணறு. சேவார்த்திகள் இக்கோவில் கிணற்றில் குளித்துவிட்டு பெருமாளை சேவிப்பது வழக்கமாக இருந்தது என 🙏🇮🇳17
சிறுவயது முதல் இக்கோவிலுக்கு வந்துபோகும் சென்னையிலிருந்து தம்பதியராய் வந்திருந்த ஒருவர் சொன்னார். 🙏🇮🇳18
பெருமாளுக்கு திருமஞ்சனம், மாலை, வஸ்திரங்களுடன் சென்னையிலிருந்து வந்திருந்த அந்தக்குடும்பத்திற்கு பெருமாள் இஷ்ட தெய்வமாம். மலைமேலிருக்கும் ஸ்தம்பத்திற்கு திருமஞ்சனம் முடித்து அப்போது தான் அடிவாரத்திற்கு  பட்டருடன் வந்திருந்தனர். 

🙏🇮🇳19
ஒரு திருச்சுற்றுடன் இருக்கும் இக்கோவில் அழகிய மதில்களை கொண்டுள்ளது. பலிபீடம் கருடாழ்வார் ஆகியவை மண்டபத்தின் முன் இருக்க அவைகளை வணங்கி மண்டத்தில் ஏறுகிறோம்.  🙏🇮🇳20
பதினைந்து தூண்களைக் கொண்ட மண்டபத்தின் தூண்களிள் பெருமாளின் அவதாரங்கள், லிங்கஸ்வரூபம், குபேரன், போன்றவை புடைப்பாக செதுக்கப்படுள்ளது. அவதாரங்களில் கையில் குடத்துடன் இருக்கும் மோகினி அவதாரச் சிலை மிகுந்த அழகுடன் மிளிர்கிறது. 🙏🇮🇳21
( எல்லா தூண்களுக்கும் வெள்ளை சுண்ணாம்பு அடித்துள்ளதால் சிலைகளின் நுட்பத்தை உணரமுடியவில்லை.)

அடுத்து தோரணவாயில்களைக் கடந்தால் நாம்பார்ப்பது,  அங்குள்ள வாயில்காவலர்களை. சோழர்காலச் சிற்பம் போல இருக்கிறது. 🙏🇮🇳22
இடப்புறம் உடையவர்,வலது புறம் நான்கடி உயர பெருமாள் சிற்பம் அது இங்குள்ள மலையில் ஒருபகுதியில் பாறையை வெட்டும்போது பிற்காலத்தில் கிடைத்ததாம் . அழகுற வடிக்கப்பட்டுள்ளது. செய்நேர்த்தி தெரிகிறது.சற்று பின்னமானதால் வெளிமண்ட்பத்தில் வைத்திருப்பதாக சொன்னார்கள். 

🙏🇮🇳23
அர்த்த மண்டபம் சிறியதாக, குறைந்த உயரமுடைய கூரைஉடையதாக இருக்கிறது. கருவரையில் பெருமாள்,ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளியிருக்கிறார்.படியாய் கிடந்து பவளவாயை கண்டுகொண்டேயிருக்கலாம் போல் இருக்கிறது. பிரகாரத்தில் தாயாருக்கு தனி சன்னிதி, மகாலட்சுமித்தாயார். 🙏🇮🇳24
வலதுபுறம் ஆண்டாளுக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. பிரகாரத்தை சுற்றும் போதே பின்னால் தெரியும் ஆஞ்சநேயர் மலையும், அதன் படிக்கட்டுகளும் நம்மை வா..வா… என்று அழைக்கிறது. அங்கிருந்து பார்க்க கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது அந்த மலை.

🙏🇮🇳25
ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் உள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ய வேண்டிக்கொள் கிறார்கள். தாயார் சன்னிதி போகும் வழியில் ராகு கேது சிற்பம்பெரிய அளவில் விதானத்தில் செதுக்கப்பட்டுள்ளது. 🙏🇮🇳26
பிரகாரம் சுற்றி வந்து நமஸ்காரம் செய்துவிட்டு மலைமேல் உள்ள ஆஞ்சசேயரை தரிசனம் செய்ய கிளம்புகிறோம்.

படியேற்றத்துவக்கத்தில் சித்திவிநாயகரைத் தொழுது ஏறலாம். தோரணவாயில் நுழைந்து ராம்..ராம்… சொல்லிக்கொண்டே ஏறத்துவங்குகிறோம். 🙏🇮🇳27
வெயிலுக்கு முன்னால் வந்தால் களைப்பு தெரியாமல் ஏறலாம். முழுக்க , முழுக்க, படிக்கட்டுக்கள் வளைந்து வளைந்து செல்கிறது. வழியில் பெரும் மரங்கள், அதில் எல்லா கிளைகளிலும் மணிகள் சிறிதும் பெரிதுமாக கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள்.  🙏🇮🇳28
பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றியதற்கான காணிக்கை அவைகள். அவற்றை காணும் போதே ஆஞ்சநேயரின் கீர்த்தி தெரிகிறது. அடடா… அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை இதுநாள் வரையில் பாராமல் இருந்துவிட்டோமே என்கிற ஏக்கமும் கூடவே வந்துவிடுகிறது. 

🙏🇮🇳29
உச்சி மலைக்கு சென்றால் 
ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு திண்ணைபோல இருக்கும் சுவற்றுக்கட்டையும்,  நிழல் தரும் மரமும் நம்மை அழைத்து அமரவைத்துக்கொள்கிறது. களைப்புடன் இருந்த அப்போது அம்மரநிழலும் இருக்கையும் ஆஹா… என்றிருந்தது. 🙏🇮🇳30
சிறிது தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு பதினெட்டுப்படிகளை ஏறுகிறோம், அது என்ன பதினெட்டு படிகள்?. என்கிற கேள்வி எழுகிறதா?. மலை மேலே கருப்பு சாமியும் குடிகொண்டுள்ளது. அந்த கருப்பு சாமியின் சிலையை அங்கு காணமுடியாது. 🙏🇮🇳31
அதன் வீர்யம் அதிகமாக இருந்ததாம் ஒருகாலத்தில். கிழக்கு பக்கம்  பார்த்து இருக்கும் அந்த மலையிலிருந்து அரியலூரை பார்த்தவண்ணம் இருந்த அந்த கருப்பின் வீர்யம் அதிகம் இருந்ததால் அரியலூரில் யாராவது சிறிய தவறுகள் செய்தாலும் இந்த உக்கிர  கருப்புசாமி அழித்து விடுமாம். 🙏🇮🇳32
பல பாதிப்புகள் ஏற்பட்டதால், 200 வருடங்களுக்கு முன்பு அங்கேயே அச்சிலை கவிழ்த்து புதைத்து வைக்கப்பட்டதாக இவ்வூர் பெரியவர் ஒருவர் கூறினார். அதற்கான சுவடும் அங்கு ஸ்தம்பத்திற்கு கீழே இருக்கும் பாருங்கள் என்றார். 

🙏🇮🇳33
உச்சி மேலே ஏறியதும் நம்மை வரவேற்பது அகண்ட வானல் போன்ற எண்ணெய் கொப்பறை. இதனை ”திருக்கோடி” என அழைக்கிறார்கள். இங்கு இது போல இரண்டு திருக்கோடிகள் இருக்கிறது. ஒன்று ஏறும் வாயில் அருகில் கற்கள் அடுக்கப்பட்டு அதன் மேல் உள்ளது. இது ஸ்தம்பத்திற்கு நேர் எதிரே இருக்கிறது. 🙏🇮🇳34
இன்னொன்று மலையிலிருந்து ஊருக்கே  தெரிவதுபோல மதில் ஓரமாக இருக்கிறது. விசேஷ காலங்களில் இங்கு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றப்படுகிறது. திருக்கோடி ஏற்றாத காலங்களில் இங்கு வருவோர் இவ்வூரில் உள்ள கடைக்களில் தொகையினை கொடுத்துவிட்டு பெயர் சொல்லிவிட்டுப் போகும் பழக்கமும் இருக்கிறது. 🙏🇮🇳35
விழாக்காலங்களில் அக்கடைகளில் இருந்து பக்தர்கள் கொடுத்த தொகைக்கு ஏற்றவாறு எண்ணெய் டின் கள் கடைக்காரர்களால் மலைக்கு பெயரகளுடன் அனுப்பி வைக்கப்படுகின்றது  .

எந்த பாதுகாப்பும் இல்லாமல் வெங்கல,மணிகள் கூட சிறிதும் பெரிதுமாக மரங்களில் ஆங்காங்கே தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது 🙏🇮🇳36
யாரும் தொடுவது கூட இல்லை.  எல்லாம் ஒரு சத்தியத்திற்கு கட்டுப்பட்டு நடக்கிறது.

அதைக்கடந்தால் சக்தி மிக்க அந்த கல்தூணை சேவிக்கமுடிகிறது. உடல்சிலிர்த்து நின்றோம். அண்ணாந்து பார்த்து பிரார்த்தனை செய்து கொண்டோம். அந்த நொடியில் கிடைத்த உணர்வு சொல்லில் அடங்காது. 🙏🇮🇳37
அருகிலேயே மணிமண்டபம். அதிலும் சிறியதும் பெரியதுமாக மணிகள். மூன்றுமுறை வலம்வந்து நமஸ்கரித்தோம். கொஞ்சநேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டு கீழே இறங்கினோம். வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தாலும் களைப்பே தெரியாமல் இறங்கினோம். 

🙏🇮🇳38
ஊருக்குள் பெருமாள் கோவிலுக்கு நேர் எதிரே சிவன் கோவில் மீனாட்சி உடனுறை நாகநாதஸ்வாமி. கிழக்குப்பார்த்த மூன்றுநிலைக் கோபுரம். ஒரே பிரகாரத்தில் தனித்தனிச்சன்னிதியாக அம்பாள், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், இரண்டு பைரவர்கள்,தட்சிணாமூர்த்தி, பிள்ளையார் , 🙏🇮🇳39
மூலஸ்தானத்தின் நேர் பின்னே வள்ளி தெய்வயானையுடன் ஆறுமுகன், திருச்சுற்றில் தனித்தனி சன்னதியாக கட்டமைப்பு கொண்ட கோவிலாக இருக்கிறது. 🙏🇮🇳40
நந்திமண்டபம் சற்றே உயரமாக நேராக ஈசனை நோக்கியிருப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்திலேயே கிணறும் இருக்கிறது. மிகத்தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது இக்கோவில்.

🙏🇮🇳41
திருமஞ்சனம் செய்பவர்கள், ஸ்தம்பத்திற்கு ஒன்றும் பெருமாளுக்கு ஒன்றுமாக எட்டுமுழம் நாலு முழம் வேட்டியும், மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி க்கு ஆறு கஜம் புடைவகள் இரண்டு, தனிச்சன்னதி கொண்டுள்ள தாயாருக்கு ஒன்பது கஜம் புடவை ஒன்று, ஆண்டாளுக்கு பாவாடை ஆகியவை கொண்டு செல்லலாம். 🙏🇮🇳42
ஊருக்குள் பெரிய அளவில் பூக்கடைகள் இல்லாததால் வரும்போதே மாலைகள் வாங்கி வந்துவிடவேண்டும். ஒருகால பூஜை என்பதால் அருகில் இருக்கும் அர்ச்சகரை தொடர்புகொண்டு செல்வது நன்று. 

🙏🇮🇳43
சித்திரை வருடப்பிறப்பு அன்று மலை படிக்கட்டுகள் முழுதும் விளக்கேற்றி படிபூஜை நிகழ்த்தப்படுகிறது. ஆடிப்பூரம்,புரட்டாசி நான்கு சனிக்கிழமைகள், தீபாவளி, காரித்திகை சோமவாரம் , போன்ற தினங்களில் மலைமீது பக்தர்களால் திருக்கோடி ஏற்றப்படுகிறது. 🙏🇮🇳44
இன்றும் நோய்வாய்பட்ட கால்நடைகளை இங்கு ஓட்டி வந்து வேண்டிக்கொண்டு நோய் குணமடைய பெற்று செல்வது நடக்கிறது.

பெருமாள், ஈசன், நேர்க்கோட்டில் அமைந்திருக்க அவர்களின் ஆகர்ஷண சக்தி பெற்று மலைமேல் இருந்து இத்தரணியை காக்கும் தெரனி ஆஞ்சநேயரை ஒருமுறை சென்று கண்டுவாருங்கள், 🙏🇮🇳45
அவரின் அருளால் உங்களுக்கு இந்த நாள் மட்டுமல்ல வரும் எல்லா நாட்களுமே சிறப்பாக அமையும்.

வழி: பெரம்பலூரிலிருந்து திருச்சி செல்லும் வழியில் பாடாலூரிலிருந்து ஆறு கி.மீ தொலைவில் இருக்கிறது. 

🙏🇮🇳46
இங்கு செல்ல விழைபவர்கள் அருகில் இருக்கும் கிட்னி ஸ்பெஷலிஸ்ட்  ஊட்டத்தூர் சிவன் கோவிலுக்கும் , சமீபகாலமாக பக்தர்கள் திரளும் ஸ்ரீராமர் கோவிலுக்கும், சென்று வருவதற்கு ஏற்றபடி பயணத்திட்டத்தை அமைத்துக்கொள்ளலாம்.

🙏🇮🇳47
இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழும் மண்.

ஸ்ரீ ராம ஜெயம்.

வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

14 Jan
பொங்கல் ஸ்பெஷல் !!

இனிய பாெங்கல் நல்வாழ்த்துகள்!

பொங்கல் – மஞ்சள்_குலை வாங்குவது ஏன்?

மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத்
திகழும் மஞ்சள் மகிமை மிக்கது.

மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள்_வாசம்_செய்கிறாள். Image
அதனால் தான் சுமங்கலிப்பெண்கள்
மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள்.

புத்தாடை அணியும்போது, அதில் மஞ்சள்தடவிஅணிகிறோம்.

எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில்
மஞ்சள்தடவிக்கொடுக்கிறோம்.
திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட
ஒரு சடங்கு இருந்தது.
முனைமுறியாத_அரிசியான அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிப்பர்.

எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம்.

சுமங்கலிகள்_வீடுகளுக்கு வந்து செல்லும்போது அவர்களுக்கு
மஞ்சள்_குங்குமம்_கொடுத்து வழியனுப்புவதும்
மங்கலத்தின்அடையாளம்தான்.
Read 6 tweets
14 Jan
*ஆனைமுகனின் ஆறுபடை வீடுகள். ஒரு சிறப்பு பார்வை.*

1.திருவண்ணாமலை படைவீடு

திருவண்ணாமலை பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குரிய தலமான திருவண்ணாமலையில் விநாயகரின் முதல் படைவீடு இருக்கிறது. 🙏🇮🇳1 Image
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய நுழைவாயிலுக்கு அருகாமையில் உள்ளே வடக்கு நோக்கிய சந்நதியில் கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார் அல்லல்போம் விநாயகர் என்கிற வினை தீர்க்கும் விநாயகர்.

🙏🇮🇳2
இவ்வாலயத்தின் பிராகாரங்களில், ராஜ கோபுர விநாயகர், சிவகங்கைத் தீர்த்த விநாயகர், வன்னிமர விநாயகர், ஆணை திறைகொண்ட விநாயகர், ஆலமர விநாயகர், விஜய விநாயகர் எனப்பல விநாயகர் சந்நதிகள் இருப்பினும் 🙏🇮🇳3
Read 26 tweets
13 Jan
காஞ்சி பெரியவாளை பத்தி கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொன்னது"

“காஞ்சிப் பெரியவரின் அருமை இப்போது தெரியாது. இன்னும் 50 ஆண்டுகள் போனால், 'இந்து மதம் என்றால் என்ன?' என்று கேட்டால்,
'மஹா பெரியவர்' என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான் " என்று கவியரசர் கண்ணதாசன் 1973ம் ஆண்டு 'அர்த்தமுள்ள இந்துமதம்' கட்டுரையில் கூறியிருந்தார்.

உண்மையில், மஹா பெரியவர் ஸ்தூல சரீரத்துடன் நடமாடிக் கொண்டிருந்தபோது கொண்டாடப்பட்டதை விட தற்போது தான் அதிகம் ஆராதிக்கப்பட்டு வருகிறார்.
‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் மஹா பெரியவா அவர்களை குறித்த சந்தேகங்களுக்கு, விமர்சனங்களுக்கு கவியரசர் மிக மிக அழகாக அதே சமயம் ஆணித்தரமாக பதிலளித்துள்ளார்.
Read 22 tweets
13 Jan
அரசியல் வாரிசுகளால்தான் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து -பிரதமர் மோடி

அரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் மிகப்பெரிய ஜனநாயக ஆபத்து என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலில் புகுத்துவதற்கு கண்டனம் தெரிவித்த மோடி இளைஞர்கள் பெருமளவு அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தேசிய இளைஞர் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்துக் கொண்ட பிரதமர் மோடி தங்கள் குடும்பத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலில் வெற்றி காணலாம் என்று கனவு காண்போரின் காலம் முடிந்துவிட்டது என்று கூறினார்.
Read 5 tweets
13 Jan
பொங்கல் ஸ்பெஷல் !

"பொங்கல் பண்டிகை "யின் உண்மை பொருள் என்ன ?

பொதுவாக தமிழர்களின் விழாக்கள் அனைத்தும் சித்தர்கள் , கடவுளை அடைய நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை குறியீடுகளாக (MAP) சொன்னதுதான் பண்டிகை ஆகும் .
அந்த வரிசையில்தான் பொங்கல் பண்டிகையும் ,அதன் உண்மை பொருளும் ! Image
1) "போகி பண்டிகை "
====================
போகம் என்று சொல்ல கூடிய மண் ஆசை,பெண் ஆசை ,பொன் ஆசை ,இவற்றை ஒழித்து ஆன்மீக பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் .அதாவது போகத்தை நீக்க வேண்டும் என்பதை நினைவு படுத்தவே போகி பண்டிகை .
2) "சூரியன் பண்டிகை "
===================
நம் உடலில் உயிர் மூச்சானது சந்திர கலையாகவும் ,சூரிய கலையாகவும் ,சுழிமுனையாகவும் ஓடி கொண்டு இருக்கிறது .
Read 16 tweets
13 Jan
இடது வலது பக்கம் இருப்பவர்கள் மன்னார்குடியை சார்ந்த சமூக சேவகர்கள்; வேத பாடசாலை நடத்துபவர்கள். நடுவில் இருப்பவர் zoho முதலாளி. பெயர் ஶ்ரீதர் வேம்பு.எளிமை , இறைப்பணி, மக்கள் பணி. அழகாக அமெரிக்க குடியுரிமை பெற்று புகழின் உச்சியில் வாழ்ந்து இருக்கலாம். Image
ஆனால் கிராமத்தில் தான் இந்திய நாகரிகம் மற்றும் கலாச்சாரம் உள்ளது என தீர்மானித்து கும்பகோணம் அருகில் வாழ்ந்து வருகிறார்.
நம் நிலைமை சிறிது உயர்ந்தவுடன் நம் பாரம்பரியம், கலாச்சாரம் மீது ஆர்வம் இல்லாமல் அயல் நாட்டின் அநியாயமான தனி மனித சுயநலம் தான் முக்கியம் , அது குடும்பத்தினர் மற்றும் நம்மைச் சார்ந்தவரை பாதிக்கும் என்றாலும் கவலைப்படாமல் இருக்கும் இக்கலிகாலத்தில் இப்படி பட்ட மனிதர்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!