திருவண்ணாமலை பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குரிய தலமான திருவண்ணாமலையில் விநாயகரின் முதல் படைவீடு இருக்கிறது. 🙏🇮🇳1
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய நுழைவாயிலுக்கு அருகாமையில் உள்ளே வடக்கு நோக்கிய சந்நதியில் கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார் அல்லல்போம் விநாயகர் என்கிற வினை தீர்க்கும் விநாயகர்.
🙏🇮🇳2
இவ்வாலயத்தின் பிராகாரங்களில், ராஜ கோபுர விநாயகர், சிவகங்கைத் தீர்த்த விநாயகர், வன்னிமர விநாயகர், ஆணை திறைகொண்ட விநாயகர், ஆலமர விநாயகர், விஜய விநாயகர் எனப்பல விநாயகர் சந்நதிகள் இருப்பினும் 🙏🇮🇳3
இந்த வினை தீர்க்கும் விநாயகர் தொன்மைச் சிறப்பு வாய்ந்தவராகப் போற்றி வழிபடப்பட்டு வருகிறார். அத்துடன், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படைவீடு ஆகக் கொள்ளப்படும் சிறப்பையும், வினைதீர்க்கும் விநாயகர் சந்நதி பெறுகிறது. 🙏🇮🇳4
அண்ணாமலையாரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் இந்த விநாயகரையும் வழிபட்டால் துன்பம் அகலும் என்பது ஐதீகம்.
🙏🇮🇳5
2. விருத்தாச்சலம் படைவீடு: கடலூர்
விருத்தாச்சலம் விநாயகர்
ஐந்து கொடி மரங்கள், ஐந்து கோபுரங்கள், ஐந்து பிராகாரங்கள், ஐந்து விநாயகர் சந்நதிகள், ஐந்து நந்திகள் என எல்லாமே, ஐந்து ஐந்தாக உள்ள கோயில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்திலுள்ள பழமலை நாதர் கோயில் ஆகும்.🙏🇮🇳6
'விருத்தம்' என்றால் பழமை; 'அசலம்' என்றால், மலை என்று பொருள். இதனாலேயே பழமை மலை என்பதே பழையமலை என மாறி பழமலை என சுருங்கிற்று.பழமலை நாதர் என்ற பெயரில் இங்கு சிவபெருமான் திருநாமம் கொண்டுள்ளார்.
🙏🇮🇳7
திருவண்ணாமலைப் போன்றே இங்கும், மலை வடிவில் மகேஸ்வரன் முதலில் தோன்றினார். சுந்தரநாயனாரை, ஆட்கொண்டு தேவாரம் பாட வைத்து, 12 ஆயிரம் பொற்காசு வழங்கினார். காசி போல, விருத்தாச்சலமும் முக்தி தலமாக விளங்குகிறது. இத்தல நுழைவுவாயில் அருகேயுள்ள கோயில் கொண்டுள்ள ஆழத்துப் பிள்ளையார்.
🙏🇮🇳8
இரண்டாவது படைவீட்டு நாயகர் ஆவார். பெயருக்கு ஏற்றார்போல் கோயிலின் முதல் வெளிப்பிராகாரத்தில், சுமார் பதினெட்டு அடி ஆழத்தில், அமர்ந்திருக்கிறார் இத்தல விநாயகர். இதனாலே ஆழத்துப்பிள்ளையார் என பெயர் வரலாயிற்று. பெயருக்கேற்றவாறு ஆழத்தில் சந்நதி கொண்டுள்ளார்.
🙏🇮🇳9
படிக்கட்டுகளில் இறங்கிச்சென்றுதான் விநாயகரை தரிசிக்கவேண்டும். இவரை வணங்கினால் கல்வியும் செல்வமும் கிடைக்கும் என்பது ஆழமான நம்பிக்கை. சிவன் ஆலயத்தில் இருந்தாலும், இவருக்குத் தனிக் கொடிமரமும், தனியான விழாவும் நடத்தப்படுகிறது.
🙏🇮🇳10
3.திருக்கடவூர் படைவீடு: நாகை
திருக்கடவூர் விநாயகரின் படைவீடுகளில் மூன்றாவதாக இருப்பது திருக்கடவூர் கள்ளவாரணப்பிள்ளையார். 🙏🇮🇳11
சிவபெருமான் மார்க்கண்டேயனுக்காக காலனையே காலால் உதைத்த திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிவன் சந்நதியின் நந்திக்கு வலதுபுறம், இந்தப் பிள்ளையார் சந்நதி அமைந்துள்ளது.
🙏🇮🇳12
இது பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்ட சந்நதியாகும். அபிராமியைத் தொழுது அருள்பெற்ற அபிராமிப்பட்டர், இந்த விநாயகரை வணங்கிப் பாடிய திருக்கடவூர் கள்ளவிநாயகர்பதிகம், இவரது சிறப்பினைக் கூறும். கள்ள வாரணப்பிள்ளையார் தனது துதிக்கையில் அமிர்தகலசம் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். 🙏🇮🇳13
அமிர்தகலசம் பெற்ற தேவர்கள், தம்மை வழிபட மறந்ததால், அமிர்தகலசத்தை இவர் மறைத்து விளையாடினார் என்பதால் தான் இவருக்கு கள்ளவாரணப் பிள்ளையார் எனப்பெயர் உருவாயிற்று.
🙏🇮🇳14
செல்வவளம், கல்யாணவரம், குழந்தைவரம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் போன்றவற்றை அருளும் கருணாமூர்த்தியாக, கள்ள வாரணப் பிள்ளையார் காட்சியளிக்கிறார்.
🙏🇮🇳15
4. மதுரை படை வீடு.
மதுரை நான்காவது படைவீடு
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் நுழைவு மண்டபத்தில் வீற்றிருக்கும் சித்திவிநாயகர் சந்நதி. மீனாட்சி அம்மன் சந்நதியின் நுழைவு வாயிலின் இடதுபுறமாக இந்தக் கணபதி கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார்.
🙏🇮🇳16
மாணிக்கவாசகப் பெருமான், பாண்டிய மன்னன் விருப்பப்படி, குதிரை வாங்கச் செல்லும்போது இந்த சித்திவிநாயகரை வணங்கிவிட்டுச் சென்றதாகத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இதனால் இந்த விநாயகர் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவர் என்று அறியலாம். 🙏🇮🇳17
சகல காரியங்களிலும் வெற்றியளிக்கும் சித்திவிநாயகராக, இவர் அருளாட்சி செய்கிறார். இவரை வணங்கினால் புகழும், பெருமையும் சேரும், அவப்பெயர் நீங்கும்.
🙏🇮🇳18
5. பிள்ளையார்பட்டி படைவீடு: சிவகங்கை
பிள்ளையார்பட்டி விநாயகரின் ஐந்தாவது படைவீடு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலாகும். விநாயகப் பெருமானின் மிகப்பிரம்மாண்டமான ஆலயமாகக் கருதப்படுவது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர். இவர், சிவலிங்கத்தைக் கையில் வைத்து பூசை செய்கின்றார்.🙏🇮🇳19
இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் துண்டிராச விநாயகர் எழுந்தருளியிருக்கிறார். எல்லா பேறுகளைப் பெற்றாலும் இறுதியில் நமக்குத் தேவைப்படுவது வீடுபேறு ஆகும். 🙏🇮🇳20
இதனை அருள்பவராக காசி துண்டிராச கணபதி திகழ்கிறார். காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு முன்பு, துண்டிகணபதியின் ஆலயம் உள்ளது.
சிறிய கோயில் என்றாலும் புகழ்பெற்று உள்ளது. சிறிய தெருவில் கடைகளுக்கு இடையே கோயில் கொண்டுள்ள கணபதி அமர்ந்த நிலையில் செந்தூர நிறத்தில் காணப்படுகிறார். 🙏🇮🇳21
இவருக்குச் செந்தூர வர்ணத்தில், குங்கும அபிஷேகம் செய்வதால், இப்படிக் காட்சியளிக்கிறார். பக்தர்கள் ''துண்டி மகராஜ்'' என்று பரவசத்தோடு அழைக்கிறார்கள்.
காசிக்கு வருபவர்கள். இந்தக் கணபதியிடம் உத்தரவு பெறாமல் சிவனை வணங்கவோ, ஊரைவிட்டுச் செல்லவோ கூடாது என்பது மரபு. 🙏🇮🇳22
ஞானத்தின் திருஉருவான இவர், தீட்சாகணபதியாக இருந்து ஞானத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார். காசிக்குச் சென்று, துண்டிப்பிள்ளையாரை வணங்க முடியாதவர்கள், பிள்ளையார் பட்டிகணபதியை வணங்கி அதே அருளைப் பெறலாம் என்று ஆன்றோர்கள் சொல்கிறார்கள்.
🙏🇮🇳23
6. திருநாரையூர் படைவீடு: கடலூர்
திருநாரையூர்
விநாயகரின் ஆறாவது படைவீடாக இருப்பது, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் அருகேயிருக்கும் திருநாரையூரில் உள்ளது. திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் ஆலயத்தின் இடப்பக்கம் உள்ள சந்நதியில் கோயில் கொண்டுஅருள்கிறார் பொல்லாப்பிள்ளையார். 🙏🇮🇳24
பொல்லுதல் என்றால் செதுக்குதல் என்று பொருள். உளிக்கொண்டு செதுக்கப்படாதவர் என்பதால் இந்த பிள்ளையார்பொல்லாப்பிள்ளையார் என்று போற்றி வணங்கப் பெறுகிறார். 🙏🇮🇳25
நம்பியாண்டார்நம்பி மூலம், ராஜராஜசோழனுக்குத் தேவாரத் திருமுறைகள் கிடைக்கச் செய்தவர், இந்தப் பிள்ளையார் தான், இவரை வணங்கிட, கல்வியும், ஞானமும் மேம்படும் என்பது ஐதீகம்.வலம்புரி விநாயகராகக் காட்சி தருகிறார்.
கணபதி பப்பா மோரியா.
வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு ஆஸ்திகனும், நாஸ்திகனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கடவுளைப் பற்றி வாதம் செய்து கொண்டே இருப்பார்கள். ஒருவன் கடவுள் இருக்கிறார் என ஆதாரங்களை எடுத்துக் கூற, இன்னொருவன் எதிர்க்கேள்வி கேட்டு அவனை மடக்குவான்.
ஒருநாள், நாஸ்திக நண்பனை வற்புறுத்தி கோயிலுக்கு அழைத்துச் சென்றான் ஆஸ்திகன். இருவரும் கோயிலுக்குள் சென்று விட்டு, பிரகாரம் வலம் வரும் போது, ஒரு தூணில் இடறி விழுந்தான் ஆஸ்திகன். அவன் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
சற்று தூரத்தில், ஒரு நூறு ரூபாய் நோட்டு நாஸ்திகன் கண்ணில் பட்டது. அதை அவன் எடுத்துக் கொண்டான். நாஸ்திகன் நண்பனைப் பார்த்து சிரித்தான். டேய்! நீ கடவுளை வணங்கி விட்டு பிரகாரத்தை வலம் வந்தாய்.
இந்திரா காந்தி 1969 ல் வங்கிகளை தேசியமயமாக்க சட்டம் பிறப்பித்த போது...
இந்திரா காந்தி மன்னர் மானிய ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்த போது...
அவற்றை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய போது...
ஆஹா! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் கொண்டு வந்த, மக்களுக்கான சட்டத்தை...
எப்படி நீதிமன்றம் தலையிட்டு தள்ளுபடி செய்யலாம்?
EXECUTIVE மற்றும் JUDICIARY க்கு இடையே 'எல்லைக் கோடு' வேண்டாமா?
ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட (DEMOCRATICALLY ELECTED) அரசின் செயல்பாடுகளுக்கு நீதிபதிகள் நான்கு பேர் உட்கார்ந்து முட்டுக் கட்டை போடுவது எந்த வகையில் நியாயம்?
நாடாளுமன்றத்தின் உரிமையில் நீதி மன்றம் தலையிடலாமா?
அந்த ராமலிங்க முதலியார் செங்கல்பட்டு பக்கம் 17ம் நூற்றாண்டில் வசித்தவர், பெரும் வியாபாரி வெள்ளையனோடு வியாபாரம் செய்த காலத்தில் நன்றாக ஆங்கிலம் கற்று அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்.
இந்தியாவில் அவரை போன்ற ஆட்கள் அவசியம் என்பதால் தங்கமும் வெள்ளியும் கொட்டி தனக்கு சமமான அந்தஸ்தில் திவான் போல கிழக்கிந்திய கம்பெனி வைத்திருந்தது. பெரும் அரண்மனையும், குதிரை வண்டியும் வீடெல்லாம் தங்க பாளமும் வெள்ளி கட்டியுமாக பெரும் வாழ்வு வாழ்ந்தவர்.
அவர், அப்பொழுதே “அல்பேகா” எனும் கருப்பு கோட்டு அணிந்தவர். எப்பொழுதும் மூட்டை மூட்டையாக நாணயம் கொட்டப்படும் அள்ளப்படும் சத்தம் கேட்டு கொண்டே இருந்த வீடு அது. அவர் வியாபாரம் நடத்தியவர் என்றாலும் வெள்ளையனிடம் கவுரவ பதவியிலும் இருந்தார்.
கிருஷ்ண பரமாத்மாவுக்கு நூற்றுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. கிருஷ்ணரின் நாமம் கொண்டு திகழும் இந்த தலங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையில் அற்புதமான பரிகார தலங்களாகத் திகழ்கின்றன.
🇮🇳🙏1
அவற்றுள் *திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ண மங்கை, கபிஸ்தலம் ஆகிய 5 தலங்களும் “பஞ்ச கிருஷ்ண தலங்கள்”* என்ற சிறப்புப் பெற்றவை.
இந்த பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கையில் கருடன் உற்சவர் பெருமாளுடன் ஏகாசனத்தில் சேவை சாதிக்கின்றார். 🇮🇳🙏2
ஆனால் இங்கு சாதாரணமாக உள்ளது போல் அஞ்சலி ஹஸ்தத்துடன் இல்லாமல் கைகளைக் கட்டிக்கொண்டு, பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதற்கு தயாராக எப்போதும் திருவைகுண்டத்தில் இருப்பது போல நியம கருடனாக சேவை சாதிக்கின்றார்.
இத்தலம் பஞ்ச நாராயணத்தலங்களில் ஒன்றாகும் மற்ற தலங்கள்