பொதுவாக தமிழர்களின் விழாக்கள் அனைத்தும் சித்தர்கள் , கடவுளை அடைய நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை குறியீடுகளாக (MAP) சொன்னதுதான் பண்டிகை ஆகும் .
அந்த வரிசையில்தான் பொங்கல் பண்டிகையும் ,அதன் உண்மை பொருளும் !
1) "போகி பண்டிகை "
====================
போகம் என்று சொல்ல கூடிய மண் ஆசை,பெண் ஆசை ,பொன் ஆசை ,இவற்றை ஒழித்து ஆன்மீக பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் .அதாவது போகத்தை நீக்க வேண்டும் என்பதை நினைவு படுத்தவே போகி பண்டிகை .
2) "சூரியன் பண்டிகை "
===================
நம் உடலில் உயிர் மூச்சானது சந்திர கலையாகவும் ,சூரிய கலையாகவும் ,சுழிமுனையாகவும் ஓடி கொண்டு இருக்கிறது .
இப்படி பிரிந்து ஓடுகின்ற சூரிய மற்றும் சந்திர கலையை சுழி முனையில் ஒரு கலையில் செலுத்தினால் ,அந்த மனிதன் மரணம் தவிர்த்து கடவுளை அடைய முடியும் என்பது சித்தர் கண்ட மார்க்கம்.
"சங்கி ரண்டு தாரை ஓன்று
சன்னல் பின்னல் ஆகையால் மங்கி மாளுதே உலகில் மானிடர்கள் எத்தனை
சங்கி இரண்டையும் தவிர்த்து தாரை ஊத வல்லீரேல் கொங்கி பங்கி மங்கையரோடு கூடி வாழலாகுமே ".
என்று கலைகளின் இயக்கத்தை மாற்றி சுழிமுனையில் செலுத்த வேண்டும் அப்படி செலுத்தினால் கடவுளோடு சேர்ந்து வாழலாம் என்று மேற்கண்ட சித்தர் பாடல் கூறுகிறது .
ஆதலால் சூரிய சந்திர கலைகளை நினைவு படுத்தவே சூரியன் பண்டிகையாக வைக்கப்பட்டது .
3) "மாட்டு பொங்கல் "
=================
மாட்டு பொங்கல் என்பது, நம் தமிழர்களின் சடங்குகளில் பசு மாட்டை தான் நாம் பெரும்பாலும் வழிபாடு செய்வோம் .பசு என்பது சித்தர்களின் பரிபாஷையில் ஆன்மா என்று பொருள் .
அதனால் தான் புது வீடு குடி போகும்போது பசுவை வீட்டினுள் நிறுத்தும் பழக்கம் நம்மிடையே இருக்கிறதின் பொருள் அதான் ,,அதாவது வீடு என்ற இந்த உடம்பில் பசு என்ற ஆன்மாவை நிறுத்தி வைக்க வேண்டும்.
உடம்பை விட்டு ஆன்மா பிரியாமல் கடவுளை சேரனும் என்று காட்டவே அந்த பழக்கம் ஏற்படுத்தப்பட்டது ,பொருள் தெரியாமல் 5 அறிவு உள்ளு பசுமாட்டை வீட்டினுள் நிறுத்தி வருகிறோம் .பசு என்ற ஆன்ம தன்மையை அடையவேண்டும் என்று நினைவுபடுத்தவே மாட்டு பொங்கல் பண்டிகை.
அதாவது போகத்தை ஒழித்து ,சூரிய சந்திர கலையை மாற்றினால் பசு என்ற ஆண்மை தன்மையை பெற்று விட முடியும் என்பதை காட்டவே இந்த மாட்டு பொங்கல் பண்டிகை .
4) "காணும் பொங்கல் "
=========================
போகத்தை ஒழித்து ,கலைகளை மாற்றி பசு என்ற ஆன்ம தன்மையை பெறும்போது அந்த மனிதன் பேரின்பத்தை கண்டு பால் போன்று வெண்மை அதாவது மும்மலம் அற்று சுத்தமான நிலைய அடைவான்,
ஆனந்தம் பொங்கும் அவனிடம் ,அதான் ஆனந்தம் என்ற "பால் பொங்கி ஆகியாச்சா " என்று சித்தர்கள் ஒருவருக்கொருவர் கேட்டு கொள்வர் அந்த பழக்கம் இப்போதும் நம்மிடையே இருந்து கொண்டு வருகிறது.யோகம் செய்யாமல் ,கலை மாற்ற செய்யாமல் எப்படி பசு தன்மை அடைந்து ஆனந்த பொங்கும்.
"தை பிறந்தால் வழி பிறக்கும் "
=========================
இந்த பண்டிகை தை மாதம் கொண்டாடுவதற்கு காரணம் என்னவென்றால் .தை என்றால் புருவ மத்தி என்று பொருள் ,அதாவது நம் உயிர் நம் உடம்பை விட்டு செலும்போது உடம்பில் ஒன்பது துவாரம் வழியாக சென்றால்
அது மரணம் பத்தவது வாசல் என்று சொல்ல கூடிய நெற்றி கண் வழியே சென்றால் அது மரணமற்ற(சமாதி நிலை ,முக்தி ) ஒரு நிலை அதற்கு ,போகத்தை நீக்கி ,கலை ரகசியம் தெரிந்து அதனை நெறி படுத்தினால் அந்த உயிர் பத்தாவது வாசல் வழியாக செல்லும் ,
அப்படி நிலை பிறந்தால் அது நமக்கு கடவுள் உலகத்திற்கு வழி கிடைக்கும் பிறக்கும் என்று பொருளில் சொல்லப்பட்டது .
மேற்கண்ட யோக முறைக்கு உணவாக எடுக்க வேண்டுயதுதான் ,பாசி பருப்பு பொங்கல் உணவு ,ஆதலால்தான் பொங்கலுக்கு அந்த வகையான உணவை நாம் சமைக்கிறோம் ....
பொருள் தெரியாததின் விளைவு எப்படி இப்போது பொங்கல் கொண்டாட்டம் இருக்கறது என்று நமகெல்லாம் தெரிந்த விஷயமே. .
பொலிவுடனே பொங்கட்டும்
இவ்வாண்டு பொங்கல் !
நிரந்தரமாக தங்கட்டும்
நிம்மதி சந்தோஷம் நம் அனைவரின் வீட்டில்!
பொங்கலோ பொங்கல் !!!
வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கிருஷ்ண பரமாத்மாவுக்கு நூற்றுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. கிருஷ்ணரின் நாமம் கொண்டு திகழும் இந்த தலங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையில் அற்புதமான பரிகார தலங்களாகத் திகழ்கின்றன.
🇮🇳🙏1
அவற்றுள் *திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ண மங்கை, கபிஸ்தலம் ஆகிய 5 தலங்களும் “பஞ்ச கிருஷ்ண தலங்கள்”* என்ற சிறப்புப் பெற்றவை.
இந்த பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கையில் கருடன் உற்சவர் பெருமாளுடன் ஏகாசனத்தில் சேவை சாதிக்கின்றார். 🇮🇳🙏2
ஆனால் இங்கு சாதாரணமாக உள்ளது போல் அஞ்சலி ஹஸ்தத்துடன் இல்லாமல் கைகளைக் கட்டிக்கொண்டு, பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதற்கு தயாராக எப்போதும் திருவைகுண்டத்தில் இருப்பது போல நியம கருடனாக சேவை சாதிக்கின்றார்.
இத்தலம் பஞ்ச நாராயணத்தலங்களில் ஒன்றாகும் மற்ற தலங்கள்
திருவண்ணாமலை பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குரிய தலமான திருவண்ணாமலையில் விநாயகரின் முதல் படைவீடு இருக்கிறது. 🙏🇮🇳1
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய நுழைவாயிலுக்கு அருகாமையில் உள்ளே வடக்கு நோக்கிய சந்நதியில் கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார் அல்லல்போம் விநாயகர் என்கிற வினை தீர்க்கும் விநாயகர்.
🙏🇮🇳2
இவ்வாலயத்தின் பிராகாரங்களில், ராஜ கோபுர விநாயகர், சிவகங்கைத் தீர்த்த விநாயகர், வன்னிமர விநாயகர், ஆணை திறைகொண்ட விநாயகர், ஆலமர விநாயகர், விஜய விநாயகர் எனப்பல விநாயகர் சந்நதிகள் இருப்பினும் 🙏🇮🇳3
காஞ்சி பெரியவாளை பத்தி கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொன்னது"
“காஞ்சிப் பெரியவரின் அருமை இப்போது தெரியாது. இன்னும் 50 ஆண்டுகள் போனால், 'இந்து மதம் என்றால் என்ன?' என்று கேட்டால்,
'மஹா பெரியவர்' என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான் " என்று கவியரசர் கண்ணதாசன் 1973ம் ஆண்டு 'அர்த்தமுள்ள இந்துமதம்' கட்டுரையில் கூறியிருந்தார்.
உண்மையில், மஹா பெரியவர் ஸ்தூல சரீரத்துடன் நடமாடிக் கொண்டிருந்தபோது கொண்டாடப்பட்டதை விட தற்போது தான் அதிகம் ஆராதிக்கப்பட்டு வருகிறார்.
‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் மஹா பெரியவா அவர்களை குறித்த சந்தேகங்களுக்கு, விமர்சனங்களுக்கு கவியரசர் மிக மிக அழகாக அதே சமயம் ஆணித்தரமாக பதிலளித்துள்ளார்.
அரசியல் வாரிசுகளால்தான் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து -பிரதமர் மோடி
அரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் மிகப்பெரிய ஜனநாயக ஆபத்து என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலில் புகுத்துவதற்கு கண்டனம் தெரிவித்த மோடி இளைஞர்கள் பெருமளவு அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தேசிய இளைஞர் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்துக் கொண்ட பிரதமர் மோடி தங்கள் குடும்பத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலில் வெற்றி காணலாம் என்று கனவு காண்போரின் காலம் முடிந்துவிட்டது என்று கூறினார்.