இஸ்லாமாபாத் : ''கடந்த, 73 ஆண்டுகளாக இல்லாத வகையில், ஒரு பலம் வாய்ந்த அரசு, தற்போது இந்தியாவில் இருப்பதால், பாகிஸ்தான் ராணுவத்தை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பின், எல்லையில் பாக்., படைகளின் அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுக்க, நம் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
பயங்கரவாத குழுக்களை ஆதரித்து வரும் பாக்., நடவடிக்கைகளுக்கு, உலக அரங்கில் நெருக்கடிகளை மத்திய அரசு ஏற்படுத்தியது.கடந்த, 2016ல், ஜம்மு -- காஷ்மீரின் யுரி பகுதியில், பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நம் வீரர்கள், 18 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் நடந்த, 11 நாட்களில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது, நம் வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.கடந்த, 2019ல், காஷ்மீரின் புல்வாமா பகுதியில், ஜெய்ஷ் -- இ - முகமது பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில்,
40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, பாக்.,கின் பாலக்கோட் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து, நம் விமானப் படையினர் நடத்திய தாக்குதலில், 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதன் பின், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.
பயங்கரவாத குழுக்களுக்கு பாக்., அளித்து வரும் ஆதரவு குறித்து, சர்வதேச சபையில், மத்திய அரசு, தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது.
இதன் பலனாக, எப்.ஏ.டி.எப்., எனப்படும், பொருளாதார நடவடிக்கைகளுக்கான அதிரடி குழு, பாக்.,கை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது. இது, பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாக்., பிரதமர் இம்ரான் கான், பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாகபரவி வருகிறது. இது, பாகிஸ்தானின், 73வது சுதந்திர தினத்தன்று, அவர் பேசிய வீடியோ எனக் கூறப்படுகிறது.
அதில், இம்ரான் கான் பேசியுள்ளதாவது: இந்தியாவில், தற்போது ஆட்சியில் உள்ள அரசை போல, கடந்த, 73 ஆண்டுகளில், ஓர் அரசு அமையவில்லை.
தற்போது பலம் வாய்ந்த அரசின் ஆட்சி, இந்தியாவில் நடக்கிறது. எனவே, நம் ராணுவத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தில், நாம் இருக்கிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திருவண்ணாமலை பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குரிய தலமான திருவண்ணாமலையில் விநாயகரின் முதல் படைவீடு இருக்கிறது. 🙏🇮🇳1
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய நுழைவாயிலுக்கு அருகாமையில் உள்ளே வடக்கு நோக்கிய சந்நதியில் கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார் அல்லல்போம் விநாயகர் என்கிற வினை தீர்க்கும் விநாயகர்.
🙏🇮🇳2
இவ்வாலயத்தின் பிராகாரங்களில், ராஜ கோபுர விநாயகர், சிவகங்கைத் தீர்த்த விநாயகர், வன்னிமர விநாயகர், ஆணை திறைகொண்ட விநாயகர், ஆலமர விநாயகர், விஜய விநாயகர் எனப்பல விநாயகர் சந்நதிகள் இருப்பினும் 🙏🇮🇳3
காஞ்சி பெரியவாளை பத்தி கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொன்னது"
“காஞ்சிப் பெரியவரின் அருமை இப்போது தெரியாது. இன்னும் 50 ஆண்டுகள் போனால், 'இந்து மதம் என்றால் என்ன?' என்று கேட்டால்,
'மஹா பெரியவர்' என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான் " என்று கவியரசர் கண்ணதாசன் 1973ம் ஆண்டு 'அர்த்தமுள்ள இந்துமதம்' கட்டுரையில் கூறியிருந்தார்.
உண்மையில், மஹா பெரியவர் ஸ்தூல சரீரத்துடன் நடமாடிக் கொண்டிருந்தபோது கொண்டாடப்பட்டதை விட தற்போது தான் அதிகம் ஆராதிக்கப்பட்டு வருகிறார்.
‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் மஹா பெரியவா அவர்களை குறித்த சந்தேகங்களுக்கு, விமர்சனங்களுக்கு கவியரசர் மிக மிக அழகாக அதே சமயம் ஆணித்தரமாக பதிலளித்துள்ளார்.
அரசியல் வாரிசுகளால்தான் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து -பிரதமர் மோடி
அரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் மிகப்பெரிய ஜனநாயக ஆபத்து என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலில் புகுத்துவதற்கு கண்டனம் தெரிவித்த மோடி இளைஞர்கள் பெருமளவு அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தேசிய இளைஞர் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்துக் கொண்ட பிரதமர் மோடி தங்கள் குடும்பத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலில் வெற்றி காணலாம் என்று கனவு காண்போரின் காலம் முடிந்துவிட்டது என்று கூறினார்.
பொதுவாக தமிழர்களின் விழாக்கள் அனைத்தும் சித்தர்கள் , கடவுளை அடைய நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை குறியீடுகளாக (MAP) சொன்னதுதான் பண்டிகை ஆகும் .
அந்த வரிசையில்தான் பொங்கல் பண்டிகையும் ,அதன் உண்மை பொருளும் !
1) "போகி பண்டிகை "
====================
போகம் என்று சொல்ல கூடிய மண் ஆசை,பெண் ஆசை ,பொன் ஆசை ,இவற்றை ஒழித்து ஆன்மீக பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் .அதாவது போகத்தை நீக்க வேண்டும் என்பதை நினைவு படுத்தவே போகி பண்டிகை .
2) "சூரியன் பண்டிகை "
===================
நம் உடலில் உயிர் மூச்சானது சந்திர கலையாகவும் ,சூரிய கலையாகவும் ,சுழிமுனையாகவும் ஓடி கொண்டு இருக்கிறது .
இடது வலது பக்கம் இருப்பவர்கள் மன்னார்குடியை சார்ந்த சமூக சேவகர்கள்; வேத பாடசாலை நடத்துபவர்கள். நடுவில் இருப்பவர் zoho முதலாளி. பெயர் ஶ்ரீதர் வேம்பு.எளிமை , இறைப்பணி, மக்கள் பணி. அழகாக அமெரிக்க குடியுரிமை பெற்று புகழின் உச்சியில் வாழ்ந்து இருக்கலாம்.
ஆனால் கிராமத்தில் தான் இந்திய நாகரிகம் மற்றும் கலாச்சாரம் உள்ளது என தீர்மானித்து கும்பகோணம் அருகில் வாழ்ந்து வருகிறார்.
நம் நிலைமை சிறிது உயர்ந்தவுடன் நம் பாரம்பரியம், கலாச்சாரம் மீது ஆர்வம் இல்லாமல் அயல் நாட்டின் அநியாயமான தனி மனித சுயநலம் தான் முக்கியம் , அது குடும்பத்தினர் மற்றும் நம்மைச் சார்ந்தவரை பாதிக்கும் என்றாலும் கவலைப்படாமல் இருக்கும் இக்கலிகாலத்தில் இப்படி பட்ட மனிதர்.