திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: மதுரை ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா ஆவேசம்
இந்துக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து புன்படுத்தி வரும் திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசினார்.
மதுரை மேலமடையில் உள்ள புறநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தைச் சேதப்படுத்தியவர்களை கண்டித்து அண்ணாநகரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மகா சசீந்திரன் தலைமை வகித்தார்.
இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசியதாவது:
கடந்த ஓராண்டாகவே, குறிப்பாக குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து தமிழக மக்கள் உண்மைகளைப் புரிந்து கொள்ள தொடங்கிவிட்டனர்.
பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் இந்து மதத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வந்தனர். இப்போது அந்த வேலையை மு.க.ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
பாஜக நடத்தும் நம்ம ஊர் பொங்கல் விழாவுக்கு திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகளும், எஸ்டிபிஐ கட்சியும் இடையூறு செய்துள்ளனர்.
திமுக சமத்துவ பொங்கல் நடத்தி வருகிறது. இதற்கு பாஜக ஆட்சேபம் தெரிவிக்கிறதா? பாஜக பொங்கல் விழா நடத்தினால் உங்களுக்கு ஏன் எரிகிறது.
எஸ்டிபிஐ தடை செய்யப்பட வேண்டிய அமைப்பு என முன்பே கூறினேன். அதை செய்திருந்தால் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டிருக்காது. மதுரை மாநகர் பல்வேறு படுகொலையை பார்த்த நகரம். அதுபோன்ற சூழல் மீண்டும் திரும்பி வருகிறது.
மதுரையில் மீண்டும் பயங்கரவாதம், வன்முறை தலை தூக்கி வருகிறது. இதை அனுமதிக்க கூடாது. பயங்கரவாதம், வன்முறையை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும். திருமாவளவன், எஸ்டிபிஐயை வளர்த்து விடுவது தமிழகத்துக்கு ஆபத்தாக அமையும்.
திருமவளவன் தீய சக்தி. இந்துக்களின் மத உணர்வை புன்படுத்தி வருகிறார். அவரை ஏன் இதுவரை போலீஸார் கைது செய்யவில்லை. தொடர்ந்து குற்றச்செயல் புரிந்து வருகிறார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
மதுரையில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு எச்.ராஜா பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பாஜக பொதுச் செயலர் ஆர்.ஸ்ரீநிவாசன், வேலூர் இப்ராகிம், மதுரை மாவட்ட பார்வையாளர் கதலி நரசிங்க பெருமாள், நகர் மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன், முன்னாள் தலைவர் சசிராமன், துணைத் தலைவர் ஹரிகரன், கராத்தே ராஜா, ஊடகப்பிரிவு தலைவர் தங்கவேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திருவண்ணாமலை பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குரிய தலமான திருவண்ணாமலையில் விநாயகரின் முதல் படைவீடு இருக்கிறது. 🙏🇮🇳1
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய நுழைவாயிலுக்கு அருகாமையில் உள்ளே வடக்கு நோக்கிய சந்நதியில் கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார் அல்லல்போம் விநாயகர் என்கிற வினை தீர்க்கும் விநாயகர்.
🙏🇮🇳2
இவ்வாலயத்தின் பிராகாரங்களில், ராஜ கோபுர விநாயகர், சிவகங்கைத் தீர்த்த விநாயகர், வன்னிமர விநாயகர், ஆணை திறைகொண்ட விநாயகர், ஆலமர விநாயகர், விஜய விநாயகர் எனப்பல விநாயகர் சந்நதிகள் இருப்பினும் 🙏🇮🇳3
காஞ்சி பெரியவாளை பத்தி கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொன்னது"
“காஞ்சிப் பெரியவரின் அருமை இப்போது தெரியாது. இன்னும் 50 ஆண்டுகள் போனால், 'இந்து மதம் என்றால் என்ன?' என்று கேட்டால்,
'மஹா பெரியவர்' என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான் " என்று கவியரசர் கண்ணதாசன் 1973ம் ஆண்டு 'அர்த்தமுள்ள இந்துமதம்' கட்டுரையில் கூறியிருந்தார்.
உண்மையில், மஹா பெரியவர் ஸ்தூல சரீரத்துடன் நடமாடிக் கொண்டிருந்தபோது கொண்டாடப்பட்டதை விட தற்போது தான் அதிகம் ஆராதிக்கப்பட்டு வருகிறார்.
‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் மஹா பெரியவா அவர்களை குறித்த சந்தேகங்களுக்கு, விமர்சனங்களுக்கு கவியரசர் மிக மிக அழகாக அதே சமயம் ஆணித்தரமாக பதிலளித்துள்ளார்.
அரசியல் வாரிசுகளால்தான் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து -பிரதமர் மோடி
அரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் மிகப்பெரிய ஜனநாயக ஆபத்து என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலில் புகுத்துவதற்கு கண்டனம் தெரிவித்த மோடி இளைஞர்கள் பெருமளவு அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தேசிய இளைஞர் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்துக் கொண்ட பிரதமர் மோடி தங்கள் குடும்பத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலில் வெற்றி காணலாம் என்று கனவு காண்போரின் காலம் முடிந்துவிட்டது என்று கூறினார்.
பொதுவாக தமிழர்களின் விழாக்கள் அனைத்தும் சித்தர்கள் , கடவுளை அடைய நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை குறியீடுகளாக (MAP) சொன்னதுதான் பண்டிகை ஆகும் .
அந்த வரிசையில்தான் பொங்கல் பண்டிகையும் ,அதன் உண்மை பொருளும் !
1) "போகி பண்டிகை "
====================
போகம் என்று சொல்ல கூடிய மண் ஆசை,பெண் ஆசை ,பொன் ஆசை ,இவற்றை ஒழித்து ஆன்மீக பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் .அதாவது போகத்தை நீக்க வேண்டும் என்பதை நினைவு படுத்தவே போகி பண்டிகை .
2) "சூரியன் பண்டிகை "
===================
நம் உடலில் உயிர் மூச்சானது சந்திர கலையாகவும் ,சூரிய கலையாகவும் ,சுழிமுனையாகவும் ஓடி கொண்டு இருக்கிறது .
இடது வலது பக்கம் இருப்பவர்கள் மன்னார்குடியை சார்ந்த சமூக சேவகர்கள்; வேத பாடசாலை நடத்துபவர்கள். நடுவில் இருப்பவர் zoho முதலாளி. பெயர் ஶ்ரீதர் வேம்பு.எளிமை , இறைப்பணி, மக்கள் பணி. அழகாக அமெரிக்க குடியுரிமை பெற்று புகழின் உச்சியில் வாழ்ந்து இருக்கலாம்.
ஆனால் கிராமத்தில் தான் இந்திய நாகரிகம் மற்றும் கலாச்சாரம் உள்ளது என தீர்மானித்து கும்பகோணம் அருகில் வாழ்ந்து வருகிறார்.
நம் நிலைமை சிறிது உயர்ந்தவுடன் நம் பாரம்பரியம், கலாச்சாரம் மீது ஆர்வம் இல்லாமல் அயல் நாட்டின் அநியாயமான தனி மனித சுயநலம் தான் முக்கியம் , அது குடும்பத்தினர் மற்றும் நம்மைச் சார்ந்தவரை பாதிக்கும் என்றாலும் கவலைப்படாமல் இருக்கும் இக்கலிகாலத்தில் இப்படி பட்ட மனிதர்.