அதானியின்”காட்டுப்பள்ளி துறைமுக” விரிவாக்கத் திட்டம் தேவையற்ற திட்டம்.இதன் நோக்கம் சென்னை, எண்ணூர்,தூத்துக்குடி துறைமுகங்களை மூடவைப்பதுதான். கொரோனா காலகட்டத்திற்கு முன்னுள்ள துறைமுக பயன்பாட்டு தரவுகளை வைத்து பார்க்கும்போது இந்த சந்தேகம் உறுதியாகிறது. தமிழகத்தில் உள்ள மூன்று பெரிய
துறைமுகங்களின் சரக்குகளை கையாள்வதற்கான கூட்டுதிறன் வருடத்திற்கு 274.9 மில்லியன் டன்கள். ஆனால் 2019-20ல் இந்த மூன்று துறைமுகங்களும் சேர்ந்து கையாண்டது 122.3மி.டன்கள். அதாவது 44% மட்டுமே.ஏற்கனவே உள்ள துறைமுகங்களின் நிலையே இப்படி இருக்கும் போது காட்டுப்பள்ளி துறைமுகம் 320மி.டன்களை
கையாளும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுக கையாளும் திறனில் இது ஒன்றில் 6 பங்கு. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள கூட்டு திறனைவிட 20%க்கும் கூடுதல். அப்படியெனில் அதானி துறைமுகம் வெற்றிபெறவேண்டுமெனில் மற்ற துறைமுகங்கள் கையாளும் சரக்கு இங்கே
திருப்பிவிடப்பட வேண்டும். எனவே தமிழக மக்களே, இந்திய மக்களே, நம் வரிப்பணத்தில் கடந்த பல பத்தாண்டுகளாக உருவாக்கப்பட்ட துறைமுகங்களை மூடப்போகும் திட்டத்தை நீங்கள் எதிர்ப்பீர்களா? தமிழகத்தில் உள்ள அனைவரும் சேரந்து எதிர்க்கவேண்டிய திட்டம் இது.
#StopAdaniSavePulicat
Errata:- ஆறில் ஒரு பங்கு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with G. Sundarrajan

G. Sundarrajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SundarrajanG

12 Jan
பூச்சிகள் சூழ் உலகம் :
இவ்வுலகில் உள்ள மக்கள் தொகையை விட 17 மடங்கு அதிகமான பூச்சிகள் உள்ளன. கடந்த பல பத்தாண்டுகளாக உரம் சார்ந்த விவசாயம், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் பூச்சிகள் அழிவை சந்தித்து வருகின்றன. பாலூட்டிகள், பறவைகள் ஊர்வனவற்றிற்கு ஏற்படும் அழிவை விட பூச்சிகள் 8
மடங்கு அதிக அழிவுகளை சந்திக்கின்றன.40% பூச்சிகள் அழியும் நிலையில் உள்ள என்றும் வருடத்திற்கு 2.5% பூச்சிகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்கின்றன உலகளாவிய ஆய்வுகள், இந்த ஆய்வுகளை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி பல்கலைக்கழக ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.இந்த நிலை தொடர்ந்தால்
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பூச்சிகள் இல்லா உலகமாகிவிடும்.
பூச்சிகள் இல்லைனா சூப்பர் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள், ஒரே ஒரு செய்தி, பூச்சிகள் இல்லையெனில் மனிதகுலம் இல்லாமல் போய்விடும், அவ்வளவுதான்.
பூச்சிகள்தான் பறவைகளுக்கு உணவு, பறவைகள் இல்லையெனில் .....? மரகந்த சேர்க்கை
Read 5 tweets
12 Jan
அதானிக்கு இப்போது தமிழகத்தின் மிகப்பெரிய நிலப்பரப்பு தேவை. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த, லட்சகணக்கான மக்களின் மீன்பிடி பகுதியாகவுள்ள இந்நிலத்தில் யாருமே கோராத துறைமுகத்தை அமைக்க இந்த நிலப்பரப்பை ஆக்கிரமிக்க போகிறது. #StopAdaniSavePulicat
@NityJayaraman ImageImage
துறைமுகத் திட்டம் பல்லுயிரியத்தை அழிக்கப்போவதோடு மட்டுமல்லாமல் சென்னையை நிரந்திரமாக தண்ணீர் பஞ்சத்திலும், வெள்ள அபாயத்திலும் வைக்கப்போகிறது. பழவேற்காடு சதுப்பு நிலத்திற்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே உள்ள குறுகிய நிலப்பரப்பு அதானி துறைமுகம் ஏற்படுத்தப்போகும் கடலரிப்பால் ImageImage
காணாமல் போய் கடல்நீர் உட்புகுந்து இரண்டும் ஒன்றோடுஒன்று கலந்துவிடும்.பல்வேறு நாடுகளில் உள்ள பூர்வகுடி மக்கள் அதானியை வரவிடாமல் தடுத்து வருகிறார்கள், இந்தியாவில் மட்டும் அவருடைய கரங்கள் விரிவடைந்து வருகின்றன, பலம்பொருந்திய நண்பர்களின் துணையால் @NityJayaraman #StopAdaniSavePulicat ImageImageImage
Read 4 tweets
10 Dec 20
கொரோனா போன்ற தொற்று நோய்களை அதிகரிக்க விரும்புகிறாரா அமைச்சர் கடம்பூர் ராஜு ?:-
8 வழிச்சாலை திட்டத்தினால் மக்கள் பாதிக்கப்படவில்லை- மத்திய அரசு வழங்கியுள்ள அற்புதமான திட்டம் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
10,000 ஏக்கர் விவசாய நிலம், நூற்றுக்கணக்கான நீர்நிலைகள்,
ஆயிரக்கணக்கான கிணறுகள், வழிபட்டு தலங்கள், பள்ளிகள் வீடுகள், சிறு வணிக வளாகங்கள்,19 கி.மீ தூரத்திற்கு காப்பு காடுகள், பல்லாயிரக்கணக்கான மரங்கள் என இவை அனைத்தையும் அழித்து 277 கி.மீ தூரத்திற்கு அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த சாலையினால் ஏற்படும் ஏதாவது ஒரு நன்மையை சொல்ல முடியுமா
அமைச்சரே? சென்னை-சேலம் எட்டு வழிச்சாலையில் நினைத்த இடத்தில் எல்லாம் இணைய முடியாது. சாலையின் இரண்டு பக்கமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போடப்படும் இந்த சாலையில் மூன்று இடங்களில் மட்டுமே இணையமுடியும். இந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாது, கார்கள்,பேருந்துகள், பெரிய
Read 11 tweets
4 Nov 20
ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் உத்தவ் தாக்கரே மீது. ஆனால் இந்தியாவில் அவர் ஒருவர் மட்டும்தான் பாசிச வாதிகளுக்கு அவர்களது மொழியிலேயே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இன்று புதிதாக கிளம்பியிருக்கும் கருத்து சுதந்திர போராட்ட வீரர்கள் கொஞ்சம் அவர்களுடைய வரலாறை லேசாகத் திரும்பிப்
பார்த்தால் தெரியும், அவர்களது போர் கொடியின் சாயம் எப்படி வெளுத்துக் கொண்டிருக்கிறது என்று.
இந்தியாவில் எத்தனை பத்திரிகையாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? கௌரி லங்கேஷின் கொலை வழக்கு என்ன ஆனது? எத்தனை பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள்? எத்தனை பத்திரிகையாளர்கள் மீது
தாக்குதல்கள்?
இன்று தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டு இருப்பதை கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவால் என்று சொல்வதற்கு உங்களுக்கு கூச்சமாக இல்லை?
கோஸ்வாமியின் மீதான வழக்கு அப்போதிருந்த பாஜக அரசால் மூடப்பட்டது. இன்றைய அரசு அதை கையில்
Read 4 tweets
2 Nov 20
நேற்று தமிழ்நாடு தினம் பற்றி முகநூலிலும் டிவிட்டரிலும் பல பதிவுகள். தலைவர்கள் வாழ்த்துகள். பல நிகழ்வுகள்.
கவனிக்க வேண்டிய விசயம்,இது போல கடந்த வருடமோ அதற்கு முந்தைய வருடங்களோ தமிழ்நாடு தினம் இப்படி கடைபிடிக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான்.
கடந்த ஒன்றிரண்டு வருடங்களாகவே இது போன்ற
தினங்கள் கூடுதல் உற்சாகத்தோடு சமூக ஊடகத்தில் கொண்டாடப்படுகிறது.சமூக ஊடகத்தின் பரவலாக்கம் ஒரு காரணம்,ஆனால் அது மட்டுமே காரணம் என்று சொல்லமுடியாது.
நேற்று தமிழ்நாடு தினம் போலவே கேரள தினமும், ஆந்திர தினமும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பொட்டி ஸ்ரீராமலுவுக்கு மரியாதை செலுத்திய ஜகன் மோகன்
ரெட்டி ஆந்திர பிரதேசத்துக்கு கடந்த 64 ஆண்டுகளாகவே அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்.
தமுஎசவின் மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் காங்கிரஸை சேர்ந்த முதல்வர் கலந்து கொள்கிறார்.
இதெல்லாம் எதிர்வினை. வினை, பா.ஜ.கவின் ஒரே தேசம் முயற்சி.
ஒரே தேசம் என்ற பெயரில் மாநிலங்களின்
Read 4 tweets
2 Nov 20
மழைக்காலம் பெரிதும் மாறுவது தெரிந்த விஷயம் தான். பருவநிலை மாற்றம் இந்த மாற்றத்தை மேலும் அதிகரித்துவிடுகிறது,இதனால் விவசாயிகளால் பயிர்களின் சுழற்சி முறையையும், விரும்பிய பயிர் வகைகளையும் பயிரிட முடிவதில்லை,” என்கிறார் பாம்பே இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் காலநிலை ஆய்வுகள் இடைநிலை ImageImageImage
திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா.பார்த்தசாரதி.மகாராஷ்டிராவின் நாஷிக் மற்றும் கொங்கன் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மழை அதிகரித்துள்ளது,அதுவேதானே மாவட்டத்தில்1976-77ஆம் ஆண்டு பெய்த கனமழைக்கு பிறகு மழை பொழியும் நாட்களில் மாற்றம் கண்டுள்ளதையும் அவரது ஆய்வில் கண்டறிந்துள்ளார்
“பருவநிலை மாற்றம் மழைப்பொழிவின் மீது தாக்கம் செய்துள்ளது.மழைக் காலத்தின் தொடக்கம், மழையின் முடிவு, மழை பெய்த நாட்கள்,பெய்யாத நாட்கள், ஒட்டுமொத்த மழைப்பொழிவு என அனைத்தும் மாறியுள்ளன. இவை விதைக்கும் தேதி, முளைக்கும் விகிதம், மொத்த விளைச்சலில் மோசமான தாக்கத்தை செலுத்துவதால் பெருமளவு
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!