ஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்குத் தமிழில் அர்த்தம் சொல்வதென்றால்,"ஒரு மனிதரைப் பற்றியோ,ஒரு பொருளைப் பற்றியோ,ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம் மனதிற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனப்பிம்பம் அல்லது அதைப்பற்றிய நமது கண்ணோட்டம், "கருத்து" எனலாம்.
அவ்வாறு நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்து சரியாகத்தான் இருக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமில்லை.கண்ணால் காண்பதும் பொய்.காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதும்கூட 100% மெய் என்று சொல்வதற்கில்லை,அதற்குரிய தெளிவான அறிவு இல்லையென்றால். ஸ்டீவன் கோவி என்பவர் எழுதிய நூலில்,
ஒரு சம்பவத்தை உதாரணமாகக் காட்டி இதை விளக்குகிறார்.
ஒரு ஞாயிறு காலை வேளையில் அவர் நியூயார்க் நகர சுரங்க ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.பயணிகளில் சிலர் செய்தித்தாள்களை புரட்டிக்கொண்டிருந்தனர்.சிலர் ஏதோ சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தனர்.சிலர் கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுத்தனர்.
சூழ்நிலை மிக அமைதியாக இருந்தது.அப்போது ஒரு நபர்,தனது குழந்தைகளுடன் அந்த ரயில்பெட்டியில் ஏறினார். ஸ்டீஃபனுக்கு அருகில் இருந்த இருக்கையில்,அவர் ‘அக்கடா’ என அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார்.அவரது குழந்தைகள் அவ்வாறு அமைதியாக உட்காரவில்லை.கூச்சலிட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஓடுவதும்,
பொருட்களை எறிவதும்,இதர பயணிகளின் செய்தித்தாள்களை இழுப்பதுமாக,களேபரப் படுத்திக்கொண்டிருந்தார்கள்.அமைதியாக இருந்த சூழ்நிலை சடாரென மாறிவிட்டது.பயணிகள் அனைவருமே எரிச்சலடைந்தனர்.'உச்..உச்’ என்று ஒலி எழுப்பினர்.ஆனால் அந்த நபரோ,ஒன்றுமே நடக்காதது போல கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார்.
குழந்தைகளை அதட்டவோ கட்டுப்படுத்தவோ அவர் எதுவும் செய்யவில்லை. ஸ்டீஃபனின் பொறுமை எல்லைக்கடந்தது.இந்த அளவிற்கு பொறுப்பற்றவராக ஒரு தந்தை இருக்கமுடியுமா? என்ன மனிதர் இவர்? குழந்தைகளைக்கொஞ்சம் அதட்டினால் என்ன?  இவ்வளவு சத்தமும் காதில் விழாதவரைப்போல கண்ணை மூடிக் கொண்டு,
தியானத்தில் இருக்கிறாரே? ஸ்டீஃபனின் மனதில் அந்தத் தந்தையைப் பற்றிய paradigm உருவாகிக் கொண்டிருந்தது.  அதற்கு அவர் கண்ணால் காணும் காட்சிகளும்,காதில் விழும் சத்தங்களுமே ஆதாரம்!பொறுமையிழந்த அவர் அந்த நபரின் தோளைத்தட்டி, “நண்பரே, உங்கள் குழந்தைகளை கொஞ்சம் அதட்டினால் என்ன?
அவர்கள் இங்கிருக்கும் அனைவரையுமே தொந்தரவு செய்கின்றனரே?” என்றார்.திடுக்கிட்டு கண்விழித்த அவர், சற்று நேரம் ஒன்றும் புரியாதவரைப் போல சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, “ஆமாம்.நீங்கள் சொல்வது சரிதான். நான் ஏதாவது செய்ய வேண்டும்தானே? எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
இந்தக் குழந்தைகளின் தாயான என் மனைவி, சிறிது நேரத்திற்கு முன்பு மருத்துவமனையில் இறந்துவிட்டார். நாங்கள் அங்கிருந்துதான் வருகிறோம். இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்று என்னைப்போல, என் குழந்தைகளுக்கும் தெரியவில்லை போலிருக்கிறது.” என்றார்.ஸ்டீஃபன் திடுக்கிட்டுப் போனார்.
அந்தக் கணம் வரை,அந்த நபரைப் பற்றி அவர் எழுப்பி வைத்திருந்த paradigm சடாரென நொறுங்கி விழுந்தது. அந்தத் தந்தையின் மீதும் அவரது குழந்தைகள் மீதும் பரிதாபம் தோன்றியது.அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்கியது.  அந்தக் குழந்தைகள் இன்னும் கூச்சலிட்டுக் கொண்டுதான்
இருந்தார்கள்.ஆனால் ஸ்டீஃபனுக்கு அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.சில கணங்களுக்கு முன்புவரை அவர் அறியாமலிருந்து,அப்போதுதான் அறிந்த ஒரு தகவல் அவரது மனதில் ஏற்பட்டிருந்த மனப்பிம்பத்தை நேரெதிராக மாற்றிவிட்டது. இதை Paradigm Shift என்கிறார் ஸ்டீஃபன்.
ஸ்டீஃபன் அந்த நபரிடம் பேசாமலே இருந்தால், அல்லது அந்த நபர் தனது மனைவி இறந்த செய்தியை இவரிடம் சொல்லாமலே விட்டிருந்தால் என்னவாகி இருக்கும்? ஸ்டீஃபன் மனதில் ஏற்பட்டிருந்த Paradigm அப்படியே நிலைத்திருக்கும்!
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதே மெய்

உள்பொருள் இதுவென உணர்தல் ஞானமாம் - சீவக சிந்தாமணி

சொல்பவர் வாய்மொழி சோதித் தறிதலன்றி
சொல்லின் தரமறிவ தேது?

Wisdom is in deep inquiry of words and intentions
Not in trusting the lips that may utter for deception

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

14 Jan
சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார்.அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்."மகனே, உனக்கு ஒரு பெரிய சவால்.அதில் வெற்றி பெற்றால்,நீ தைரியம் மிக்க எதற்கும் அஞ்சாத பெரிய வீரனாகிவிடுவாய்.இன்று இரவு முழுவதும் நீ தனியாக,இந்தக் காட்டிலேயே இருக்கவேண்டும். Image
உன் கண்கள் கட்டப்படும்.ஆனாலும் நீ பயப்படக்கூடாது.வீட்டிற்கு ஓடிவந்து விடவும் கூடாது" என்றார்.சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.அவனது கண்களை தந்தைத் துணியால் இறுகக் கட்டினார்.பிறகு,தந்தை திரும்பிச்செல்லும் காலடி ஓசை, மெல்ல,மெல்ல மறைந்தது.
அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு,தூரத்தில் ஆந்தை கத்துவதும்,நரி ஊளையிடுவதும், நடுக்கத்தைக் கொடுத்தது.காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ,என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.மரங்கள் பேயாட்டம் ஆடின.
Read 10 tweets
13 Jan
"என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை"என்றான் ஒரு அரசன்,ஞானியிடம். "உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?" என்று ஞானி கேட்டார். "என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை.  கள்வர் பயம் இல்லை.அதிக வரிகள் விதிப்பதில்லை.முறையாக நீதி செலுத்தப்படுகிறது.நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.
ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை"என்றான்."அப்படியானால் ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு"என்றார் ஞானி. "எடுத்துக் கொள்ளுங்கள்"என்றான் மன்னன்."நீ என்ன செய்வாய்" என்றார் ஞானி."நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து,
பிழைத்துக் கொள்கிறேன்"என்றான் அரசன்."எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட,என்னிடமே வேலை செய்.உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது.அதையே செய்.என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா.நான் பிறகு வந்து கணக்கு,வழக்குகளை பார்க்கிறேன்."என்றார். சரி என்றான் மன்னன்.
Read 7 tweets
8 Jan
அர்ஜுனனும் கிருஷ்ணரும் ஒருநாள் தெருவில் உலவிக் கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவர் தர்மம் செய்யும்படி கேட்டார். அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி."ஆஹா!இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே." என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார்.
இதை கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை அந்த முதியவரிடம் இருந்து பறித்துச்சென்றுவிட்டான். சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லைக்கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.
முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டுசென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூடச் சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்துவிட்டார். இதை அறியாத அவரது மனைவி, பரணிலிருந்த பானையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்கச்சென்றாள். பானையை கழுவும்போது உள்ளிருந்த கல்,
Read 12 tweets
7 Jan
ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, அவதியுற்று வந்தார். ஒருநாள் அவரைப் பார்க்க, குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப்பார்த்த குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வோம், Image
எனக்கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக்கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு அந்த குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனைப்பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள்.
உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக்கூறினார். அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். குரு சொன்னதைக் கேட்டதும், நக்கலாக அவன் சிரிக்கத் தொடங்கினான். "வெறும் வார்த்தைகள் போய் அவனை குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?” எனக்கூறி சிரித்தான்.
Read 6 tweets
6 Jan
மூதுரை - பிளவு 

உங்களுக்கு யாராவது தீமை செய்து இருக்கிறார்களா?அவர்கள் மேல் உங்களுக்கு கோபம் வந்ததா?வந்த கோபம் இன்னும் உள்ளதா?யோசித்துப் பாருங்கள்.

இந்த கல்லு இருக்கிறதே.அது ஒருமுறை உடைந்துவிட்டால்,பின் ஒட்டவே ஒட்டாது.என்ன தான் செய்தாலும் விரிசல் இருந்து கொண்டேதான் இருக்கும்.
பொன் இருக்கிறதே,அதில் கொஞ்சம் பிளவு வந்துவிட்டால் உருக்கி ஒட்ட வைத்துவிடலாம்.ஒட்டும் ஆனால் கொஞ்சம் மெனக்கிட வேண்டும்.

இந்தத் தண்ணீரின் மேல் அம்பைவிட்டால், நீர் பிளக்கும் ஆனால் நொடிப்பொழுதில் மீண்டும் சேர்ந்துக்கொள்ளும். அம்புபட்ட தடம் கூட இருக்காது.
கயவர்களுக்கு நாம் ஒரு தீங்கு செய்தால்,வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டார்கள்.நமக்கு எப்படி மறுதீங்கு செய்யலாம் என்று இருப்பார்கள்.இராமனுக்கு கூனி செய்தது போல - கல்லின் மேல் பிளவு போல.
Read 7 tweets
6 Jan
குருஷேத்திர யுத்தம் முடிந்துவிட்டது. ஹஸ்தினாபுரத்து அரசனாக, தருமன் முடிசூட்டிக் கொண்டுவிட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால், மன நிம்மதியின்றி துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அலைந்துக் கொண்டிருந்தான்.அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது.
"என் தந்தை சத்தியவான்.செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே, துரியோதனனுக்கு ஆதரவாக போர்புரிந்தார்.ஆனால் அவரைப் பாண்டவர்கள்,நான் இறந்ததாக பொய்சொல்லி,அநியாயமாக கொன்றுவிட்டனர்.என் தந்தை செய்த தவறு என்ன" என மனதினுள் புலம்பிக் கொண்டிருந்தான்.ஒருநாள்,கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்தான்.
கிருஷ்ணன் மீது அவனுக்குக்கோபம் இருந்தது.அதனால், அவரிடமே தன் மனதில் இருந்த சந்தேகத்தைக்கேட்டான். "என் தந்தையை பாண்டவர்கள் அநியாயமாகக் கொன்றதற்கு நீதானே காரணம்.அவர்
செய்த தவறு என்ன?".கிருஷ்ணர் சிரித்துவிட்டு,"செய்த பாவத்துக்கு, யாராக இருந்தாலும்,தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்"
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!