கடந்த 2020-ம் ஆண்டில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறி தாக்குதல்: மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

கடந்த 2020-ம் ஆண்டில் எல்லையில் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் கடந்த 2020-ம்ஆண்டில் 5,133 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 46 பேர் இறந்தனர்.
பாகிஸ்தானின் அத்து மீறல்களுக்கு உரிய பதிலடி தரப்படுகிறது. மேலும் அனைத்து அத்துமீறல்களும் பாகிஸ்தான் உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஹாட்லைன்கள் மூலமும் கொடிக் கூட்டம் மற்றும் இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இடையிலான வாராந்திர பேச்சுவார்த்தையிலும் புகார் செய்யப்படுகிறது.

சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் புனிதத்தை பாதுகாப்பதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 28-ம்தேதி வரை எல்லையில் 299 முறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 2019-ம்ஆண்டில் இந்த தாக்குதல் எண்ணிக்கை 3,233 ஆக உள்ளது.
நமது பிராந்தியத்தில் கரோனா வைரஸ் பரவிவரும் வேளையிலும் எல்லையில் ஆத்திரமூட்டும் தாக்கு தல்களிலும் தீவிரவாதிகளை ஊருடுவச் செய்யும் முயற்சியிலும் பாகிஸ்தான் தீவிரம் காட்டியது. பாகிஸ்தானின் நடவடிக்கைகள் எல்லைகளில் மட்டுமே நடை பெறும் அத்துமீறல்களாக கட்டுப் படுத்தப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டிலிருந்து இதுவரை 11 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. வரும் மார்ச் மாதம் இதன் எண்ணிக்கை 17 ஆக உயரும். 2022 ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து விமானங்களும் இந்தியா வந்துவிடும்.
சுந்திரமான, கட்டுப்பாடுகள் அற்ற இந்தோ-பசிபிக் பிராந் தியத்தை உறுதி செய்வதே, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடு களை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் நோக்கமாகும்.
குவாட் நாடுகள் இடையே எதிர்கால ராணுவஒத்துழைப்புக்கான முன்னோட்டமே மலபார் போர் பயிற்சி ஆகும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தனது பதிலில் கூறியுள்ளார்.

இந்து

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

10 Feb
குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். Image
முதலில் யாரிந்த "சாமியார்" என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.
தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர்
Read 25 tweets
10 Feb
பெரியார் பற்றிப் பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரிய வழக்கு: பாடநூல் குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பெரியார் பற்றிப் பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரிய வழக்கில் பாடநூல் குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்புப் பாடநூலிலும், கல்லூரிப் பாடத் திட்டத்திலும் பெரியாருக்கு, யுனெஸ்கோ அமைப்பால் "தெற்காசிய சாக்ரடீஸ்" என்ற பட்டம் வழங்கப்பட்டதாக உள்ள தவறான தகவலை நீக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
Read 4 tweets
10 Feb
விவசாயிகளுக்கு உண்மை தெரிந்து விடுமோ என எதிர்க்கட்சிகளுக்கு அச்சம்: மோடி

புதுடில்லி: வேளாண் சட்டங்கள் குறித்து காங்., பொய்களை பரப்புவதாகவும், சட்டங்களுக்கு வர்ணம் பூசி விமர்சனம் செய்வதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாகும்.
சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளில் இந்தியாவை எங்கு அழைத்து செல்ல விரும்புகிறோம் என்ற புதிய தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும். தன்னிறைவு பெற்ற இந்தியாவை முன்னெடுத்து செல்வதை நாம் யோசிக்க வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியுள்ளது
Read 20 tweets
9 Feb
திருஆலவாய் என்னும் மதுரை திருத்தலத்தில்
ஸ்ரீ சொக்கநாதாின்
திருவிளையாடல்கள் அறுபத்து நான்கு.

அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் தனித்தனிப் படலங்களாக விளக்கப்பட்டுள்ளன.

🙏🇮🇳1 Image
1. இந்திரன் பழி தீர்த்த படலம் .
2. வெள்ளையானை சாபம் தீர்த்த படலம் .
3. திருநகரங்கண்ட படலம் .
4. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம் .
5. தடாதகையாரின் திருமணப் படலம் .
6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் .
7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் .
🙏🇮🇳2
8. அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம் .
9. ஏழுகடல் அழைத்த படலம் .
10. மலயத்துவசனை அழைத்த படலம் .
11. உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம் .
12. உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம் .
13. கடல் சுவற வேல்விட்ட படலம் .
14. இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம் .
🙏🇮🇳3
Read 10 tweets
9 Feb
*நாம் வைக்கும் வணக்கத்தில் எத்தனை வகைகள் உள்ளன? அவற்றின் பயன்கள் என்ன?*

நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன. அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்...
பாரதிய கலாச்சாரத்தில் ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் போது, மரியாதையின் அடையாளமாக இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் (Namaskar) செய்வர். இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்கு தரும் மரியாதைகள் 'பிரணாமங்கள்' அல்லது 'வணக்கங்கள்' (Namaste) என்றழைக்கப்படுகின்றன.
நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன.

அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

1) அஷ்டாங்கணம்
- உடலின் எட்டு அங்கங்கள் (கால்விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முழுமையாக விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)
Read 15 tweets
9 Feb
டெல்லி வன்முறை : தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது

டெல்லியில் டிராக்டர் பேரணியின் போது நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில், தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்பு படையினருடன் நிகழ்ந்த மோதல், செங்கோட்டையில் சீக்கிய மத கொடியை ஏற்றியது போன்ற சம்பவங்களில் தீப் சித்து இடம்பெற்றிருந்தது வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
தீப் சித்து உள்பட 8 பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று டெல்லி காவல்துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!