*கங்கையில் நீராடுவது, கங்கைக் கரையில் வசிப்பது, 'கங்கா' என்று உச்சரிப்பது, கங்கையின் நீரைப் பருகுவது, கங்கையை நினைப்பது...இவை யாவும் பாவம் போக்கும் செயல்களாகும்!*
*இமயமலையில், 'கோமுக்' பனிச் சிகரத்தில் உற்பத்தியாகி,* *மேற்கு_வங்காளத்தில் உள்ள #கங்கா_சாகரில் (வங்கக் கடலில்) சங்கமிக்கிறாள் கங்காதேவி! இவள், தான் பாய்ந்து வரும் வழிநெடுகிலும் உள்ள பல்வேறு தலங்களில், பல்வேறு சிறப்புகளுடன் திகழ்கிறாள்!*
*அமர்_கங்கா:*
*கடல் மட்டத்தில் இருந்து சுமார் 12,000 அடி உயரத்தில் உள்ளது அமர்நாத் குகை. இதன் அருகே ஓடும் 'அமர் கங்கா' நதி நீர் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.!*
*நீல_கங்கா:*
*ஒரு முறை, பார்வதிதேவியுடன் விளையாடியபோது, அவளின் கண் மை, சிவனாரின் முகத்தில் ஒட்டிக் கொண்டது. பரமனார் கங்கையில் முகம்கழுவ... நதி நீர், நிறம் மாறியது! இதனால், 'நீல கங்கா'எனப் பெயர் பெற்றது.!*
*காளி_கங்கா:*
*அமைதியின்றி ஆர்ப்பரித்து ஓடும் இந்த நதியின் சீற்றம், காண்போரை பயம் கொள்ள வைக்கும்.!*
*ராம்_கங்கா:*
*இது, உத்தரப் பிரதேசத்தில்- காசிப்பூர் என்ற இடம் தாண்டிப் பாய்கிறது.!*
*ஜட_கங்கா:*
*உத்தரப் பிரதேசம், குமாயூன் மண்டலின் பித்தோ ராகர் என்ற ஜில்லாவில் பாய்கிறது.!*
*கோரி_கங்கா:*
*வெண்மையான நீர் கொண்டு வருவ தால் கோரி (வெள்ளை) கங்கா என்று பெயர் தார்சூலா/முன்ஸியாரி கிராமத்தையடுத்து பாய்கிறது.!*
*கருட_கங்கா:*
*உத்தரப் பிரதேசம், அல்மோரா- பைஜ்நாத் சோத்திரம் அருகே பாயும் கங்கைக்கு, 'கருட கங்கா' என்று பெயர்.!*
*பாண_கங்கா:*
*'ஜம்மு'வைத் தாண்டி, ஸ்ரீவைஷ்ணவி கோயில் அருகே பாய்கிறது பாண கங்கா.!*
*பால_கங்கா:*
*இந்த நதி நீரில், ஸ்ரீவைஷ்ணவிதேவி தன் கூந்தலை அலசிய தால், 'பால கங்கா' என்றுபெயர்!*
*ஆகாச_கங்கா:*
*கயிலாய மலையை பரிக்ரமா (கிரிவலம்) செய்யும்போது, அங்கு காணப்படும் நதியே ஆகாச கங்கை!*
*பாதாள_கங்கா:*
*ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீசைலம் என்ற சிவ சோத்திரத்தின் அருகே பாய்கிறது
பாதாள கங்கா!*
*தேவ_கங்கா:*
*இது, மைசூர்- சாமுண்டி மலைக்குக் கிழக்கே பாய்கிறது.!*
*துக்த_கங்கா:*
*வடமொழியில் 'துக்தம்' என்றால், பால் என்று பொருள். கேதார்நாத் என்ற ஜோதிர்லிங்க சோத்திரத்தின் அருகே பாய்கிறது.!*
*வாமன்_கங்கா:*
*வாமன் என்றால், 'குள்ளம்' என்று அர்த்தம்! மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில், 'பேடாகாட்' என்ற சலவைக்கல் பாறைகள் உள்ள இடத்தில் பாய்கிறது.!*
*கபில்_கங்கா:*
*நர்மதை பரிக்ரமா (வலம் வரும்) செய் யும் வழியில் வருவது, 'தம் கட்' என்ற ஊர். இங்கிருந்து சுமார் 3 மைல் தூரத்தில் ஓடுகிறது கபில் கங்கை!*
*கரா_கங்கா:*
*சோணபத்திரை நதியின் உற்பத்தி ஸ்தானத்துக்குத் தெற்கில் அமைந்துள்ள இடம் பிருகு கமண்டலம். இங்கு பாய்வதே கரா கங்கா.!*
*மோக்ஷ_கங்கா:*
*நர்மதை நதியை வலம் வரும்போது சூலபாணேஸ்வரர் எனும் சோத்திரம் வரும். இங்கிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது 'மோக்கடி' என்ற கிராமம். இதையட்டி, 'மோக்ஷ கங்கா' ஓடுகிறது.!*
🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கர்மா பொல்லாதது.. அதை வெல்ல யாராலும் முடியாதது.. இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன் ..
மறைந்த பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சிபெற்றார். ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார். ஆனால், ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மாண்டார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய்விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசு கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டார்.
அரசின் கட்டுப்பாட்டில் இருந்து 51 கோயில்கள் விடுவிப்பு: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு
டேராடூன்: உத்தரகண்டில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த 51 கோயில்களை அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதாக அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார்.
உத்தரகண்டில் புதிய முதல்வராக பொறுப்பேற்ற தீரத் சிங் ராவத், சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின்போது, சார் தாம் தேவஸ்தானம் மேலாண்மை மசோதாவை தாக்கல் செய்தார்.
இதற்கு கவர்னர் பேபி ராணி மவுரியா, ஒப்புதல் வழங்கியதை அடுத்து, மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்துவந்த 51 கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார். இதில், பத்ரிநாத், கேதர்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி உள்ளிட்ட கோயில்களும் அடங்கும்
காசி கோவில் பகுதியில் தொல்பொருள் ஆய்வு - டுவிட்டரில் டிரெண்டிங்
வாரணாசி : வாரணாசியில், விஸ்வ நாதர் கோவில் - ஞான்வாபி மசூதி அமைந்துள்ள வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதை வரவேற்று பலரும் டிரெண்ட் செய்தனர்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர், வி.எஸ்.ரஸ்தோகி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
வாரணாசியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காசி விஸ்வநாதர் கோவில், முகலாய மன்னர் அவுரங்கசீபால் இடித்து தள்ளப்பட்டது. அங்கு, மசூதி கட்டப்பட்டுள்ளது. இது வரலாற்றுப் பூர்வமான உண்மை.
பிரசவ வலியால் துடிக்கிறது ஒரு பெண் யானை. அருகே மூத்த யானைகள் ஆதரவாக நிற்கின்றன. ஒரு யானை தன்னுடைய துதிக்கையால் இடுப்பை அழுத்திப் பிடித்து அரவணைக்கின்றது, மற்றொன்று வாலை தூக்கி பிடித்து குட்டியானை வெளிவர உதவுகிறது.
மற்ற யானைகள் பெண் யானைக்கு ஆதரவாக நிற்கின்றன.குட்டியானை உலகை காண ஆவலோடு வெளி வருகின்றது.
இது போன்ற காட்சிகளை NATIONAL GEOGRAPHIC சேனலிலும்,DISCOVERY சேனலிலும் பார்த்து பரவசம் அடையும் நாம்,
மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: மாநில பா.ஜ., வலியுறுத்தல்
மும்பை:''ஊழல் வழக்குகளில், அமைச்சர்கள் சிக்கி பதவியிழந்து வருகின்றனர். இதைவிட, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேறு என்ன காரணம் வேண்டும்,'' என, மஹாராஷ்டிரா பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
புலனாய்வு
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., அடங்கிய கூட்டணி அரசு அமைந்துள்ளது.தேசியவாத காங்.,கைச் சேர்ந்த, மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது, முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங், ஊழல் புகார் கூறினார்.
அதைஅடுத்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.இந்த நிலையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள் நிரம்பிய கார் நிறுத்தப்பட்ட வழக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே கைது செய்யப்பட்டார். அவரிடம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
திருப்பதி : ஆஞ்சநேயர் பிறப்பிடம், திருமலையில் உள்ள அஞ்னாத்திரி மலைத் தொடர் என்பதற்கான ஆதாரங்களை, தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி அன்று வெளியிட உள்ளதாக, திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையான் குடியிருக்கும் திருமலை, ஆஞ்சநேயரின் பிறப்பிடமாகவும் அடையாளம் காணப்பட உள்ளது.
இதுகுறித்து பல புராண இதிகாசங்களை ஆராய்ந்து அறிய, ஆறு பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை, திருமலை தேவஸ்தானம் அமைத்தது. அவர்களும், பல புராணங்கள், கிரந்தங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து தகவல்களை சேகரித்து உள்ளனர்.