காசி கோவில் பகுதியில் தொல்பொருள் ஆய்வு - டுவிட்டரில் டிரெண்டிங்
வாரணாசி : வாரணாசியில், விஸ்வ நாதர் கோவில் - ஞான்வாபி மசூதி அமைந்துள்ள வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதை வரவேற்று பலரும் டிரெண்ட் செய்தனர்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர், வி.எஸ்.ரஸ்தோகி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
வாரணாசியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காசி விஸ்வநாதர் கோவில், முகலாய மன்னர் அவுரங்கசீபால் இடித்து தள்ளப்பட்டது. அங்கு, மசூதி கட்டப்பட்டுள்ளது. இது வரலாற்றுப் பூர்வமான உண்மை.
முகலாயர் ஆட்சி முடிந்த பின்,மசூதிக்கு அருகே, விஸ்வநாதர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. அதனால், காசி விஸ்வநாதர் கோவில், ஞான்வாபி மசூதி வளாகத்தை, ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த வளாகத்தில், தொல்பொருள் ஆய்வு நடத்தினால், விஸ்வநாதர் கோவில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கும்.
அந்த வளாகத்தில் தான், கோவிலை இடிக்கும் போது இருந்த, விஸ்வநாதர் லிங்கமும் புதைக்கப்பட்டுள்ளது. என கூறப்பட்டு இருந்தது.
தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள, மசூதி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பல ஆண்டுகளாக, இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், விஸ்வநாதர் கோவில் மற்றும் மசூதி வளாகத்தில், தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்கான செலவை, மாநில அரசு ஏற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதை வரவேற்று பலரும் சமூகவலைதளமான டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #KashiMathuraisours, Mosque, Aurangzeb, #KashiVishwanath, #Mughal உள்ளிட்ட பல ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.
இந்த ஹேஷ்டாக்கில் பதிவிட்ட சிலரின் கருத்துக்களை இங்கு பார்ப்போம்...
* நமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கான நேரம். காசியை மீட்டெடுப்பதற்கான நேரம்.
* இதில் ஆராய்ச்சி செய்ய ஒன்றுமில்லை. கோவில்களை இடித்து முகாலாயர்கள் மசூதியை கட்டினார்கள் என்பது வரலாற்று சான்று.
இன்றும் காசி பகுதியில் தற்போது உள்ள மசூதிகளின் பின்னணியில் கோயில் தூண்கள் இருப்பதை பார்க்கலாம்.
* காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் ஞான்வாபி மசூதி வளாகம் தொடர்பான பிரச்னையில் தொல்பொருள் துறையின் குழுவிடம் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் இருந்தன என்பதற்கான ஆதாரத்துடன் உண்மை விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன்.
* 500 ஆண்டு போராட்டத்திற்கு பின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி கிடைத்தது. இத்தனை ஆண்டுகளில் ஒரு போதும் நாம் பின்வாங்கவில்லை.
இப்போது காசி விஸ்வநாதர் கோவில் - ஞான்வாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய கோர்ட் அனுமதி அளித்துள்ளது. ஞான்வாபி மசூதியின் கீழ் இந்து கோயில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். நிச்சயம் நீதி வெல்லும்.
* கோயில்களில் நந்தி எப்போதும் சிவலிங்கத்தை நோக்கி தனது முகத்தை வைத்திருப்பார்.
ஆனால் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள நந்தி ஞான்வாபி மசூதியை எதிர்நோக்கி இருப்பார். நந்தி வாசலைப் பார்க்கும்போது, தனது கடவுள் தோன்றுவார் என்று காத்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இன்றைய உத்தரவு நம்பிக்கையைத் தருகிறது. ஹர ஹர மகாதேவ்.
இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக முகாலாயர்கள் இந்திய கோயில்களை களவாடியது, இடித்தது, அவுரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்து தான் ஞான்வாபி மசூதியை கட்டினார் என்பதை பலரும் சுட்டிக்காட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது.
🇮🇳🙏1
இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.
🇮🇳🙏2
சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு
சந்தோஷமடைதல் என்று பொருள்.
தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது
சந்தோஷமடையுங்கள் என்று பொருள்
கொள்ளலாம்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ
என்ற ஆராய்ச்சியாளர் நீர்ல் நேர்மறை
சொற்களை பிரயோகித்தபொழுது நீரில்
உள்ள மூலக்கூறுகள் ஒரு
முறைமையுடனும் ஒழுங்குடனும்
வரிசைப்படுத்தப்படுவதை கண்டார்.
அதேசமயம், எதிர்மறை சொற்களை
அந்த நீரில் பயன்படுத்தியபொழுது
அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக
அமைந்ததைகண்டார்.
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச ஆதார விலை: மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டது பஞ்சாப் அரசு
வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டது பஞ்சாப் அரசு.
வேளாண் சந்தையில் விவசாயிகளுக்கு முழுமையான விலை சென்று சேர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இடைத்தரகர்கள் மூலமாக அல்லாமல் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
ஆனால், பஞ்சாப் அரசு இடைத்தரகர்கள் வழியாக விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கும் முறையைத் தொடர அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தது. இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
மே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் கிஷோரின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு
கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் பிரசாந்த் கிஷோர், ‛மேற்கு வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்' என பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இரு கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வரும் சூழலில், திரிணமுல் காங்., கட்சிக்கு தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ‛ஐ-பாக்' நிறுவனம் வகுத்துக் கொடுத்து வருகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில், தலைநகர் சென்னையில், 16.6 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லையாம்.
'சென்னையில் பெரும்பாலும் படித்தோர், விபரம் அறிந்தோர் தான் இருக்கின்றனர்' என, தமிழகத்தின் பிற பகுதி மக்கள் நினைத்துக் கொண்டிருந்தது, தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, கொரோனா நோய் பரவலை காரணம் கூற முடியாது. சென்னைவாசிகள், சமூக இடைவெளியை பின்பற்றித் தான் வாழ்கின்றனரா என்ன?தேர்தல் ஆணையம், சென்னை மீது தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
சிறுபான்மையினர் ஆதரவை கோரும் மம்தா: பிறரை யோசிக்கச் சொல்லும் அமித்ஷா
கோல்கட்டா: “சிறுபான்மையினரின் ஆதரவை மம்தா எதிர்பார்க்கிறார். மற்றவர்களின் ஆதரவை அவர் கோரவில்லை. அவர்கள் தற்போது முடிவெடுப்பார்கள்.” என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மேற்கு வங்க சட்டமன்றத்துக்கான 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு 31 சதவீதத்துக்கு அதிகமான வாக்கு வங்கி முஸ்லிம்களுக்கு உள்ளது. இடது முன்னணி 34 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்ததற்கும், மம்தா 2011-ல் வென்றதுக்கு பின்னணியில் இம்முக்கிய காரணி உண்டு.
இந்த முறையும் அதே போன்று அவர்களின் வாக்குகள் ஆட்சியை தீர்மானிப்பதில் பங்காற்றும். முஸ்லிம் வாக்கு வங்கியில் ஏற்படும் எந்தவொரு பிரிவும் 90 தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.