*விட்டலன் அருள் புரியும் தென்னாங்கூர்*

*அருள்மிகு ரகுமாயீ சமேத பாண்டுரங்கன் திருக்கோயில்,தென்னாங்கூர்.*

(திருவண்ணாமலை மாவட்டம்)

சிறப்புகள்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள முக்கிய கோயில்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற கோயிலாக இத்திருக்கோயில் உள்ளது.

🙏🇮🇳1
பாண்டுரங்கப் பெருமாள் ரகுமாயீ தாயார் உடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.பாண்டுரங்க சுவாமி சுமார் 12 அடி உயர சாளக்கிராமத்தினால் நின்ற கோலத்தில் உள்ளார்.

🙏🇮🇳2
இத்திருக்கோயிலின் கோபுர அமைப்பானது ஒடிசா மாநிலத்திலுள்ள பூரி ஜகந்நாதர் கோயில் கோபுரத்தினைப் போன்று சுமார் 120 அடி உயரத்தில் உள்ளது.

இங்கு யந்திர வழிபாட்டில் முக்கியத்துவம் பெறும், ஸ்ரீசக்ரத்தின் அதி தேவதைகள் "மஹாசோடஷி' என்ற திருநாமத்தில் ஒரே வடிவில் அருள்பாலிக்கின்றனர்.
🙏🇮🇳3
ஸ்ரீ சக்ரத்தில் எத்தனை பிரிவு உள்ளதோ அத்தனை பிரிவிற்கும் உள்ள தெய்வங் களான "மகாசோடஷி, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, லட்சுமி, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசுவரன், விநாயகர், பாலா, அன்னபூரணி, அச்வாரூடா, ராஜமாதங்கி, வராஹி, பிரத்யங்கிரா, சரபேஸ்வரர், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர்,

🙏🇮🇳4
அகோரமூர்த்தி, வனதுர்க்கை, பராசரஸ்வதி, மேதா தட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், சண்டிமகாலட்சுமி, பிராஹ்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, மாகேந்திரி, சாமுண்டா,மகாலட்சுமி ஆகியோர் இத்தலத்தில் விக்ரக வடிவில் இருப்பது மிகவும் கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

🙏🇮🇳5
இங்கு தான் கோவிந்தராஜப்பெருமாள் திருப்பதியைப்போல், சனிக்கிழமைதவிர மற்ற நாட்களில் கல்யாண உற்சவம் கண்டு அருள்புரிகிறார்.

இங்கு பெருமாளின் திருக்கல்யாணம் வைதீக சம்பிரதாயமும், பஜனை சம்பிரதாயமும் இணைந்த உற்சவம் நடத்தப்படுகிறது.

🙏🇮🇳6
இறைவனை நாம சங்கீர்த்தனம் (பக்திப்பாடல்) மூலம் வழிபாடு செய்யப்படும் முறை இத்திருத்தலத்தின் சிறப்புகளுள் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.கோயிலின் பின்பக்கம் ஞானானந்த சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது.

🙏🇮🇳7
திருவிழாக்கள்

ஒவ்வொரு தமிழ் வருட பிறப்பின் போதும் "விஷுக்கனி உற்சவம்' என பழ அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்.

🙏🇮🇳8
கோகுலாஷ்டமியில் முத்தங்கிசேவை நடக்கிறது. இது தவிர ராஜகோபாலனாக, கோவர்த்தன கிரியை கையில் பிடித்திருக்கும் கிரிதாரியாக, கீதை உபதேசிக்கும் கண்ணனாக, தேரோட்டும் பார்த்தசாரதியாக, ராதாகிருஷ்ணனாக சேவை சாதிக்கிறார்.

🙏🇮🇳9
அலங்கார திருக்கோலம்

ஞாயிற்றுகிழமையில் மதுராபுரி ஆளும் மன்னன் அலங்காரத்திலும், வியாழக்கிழமையில் பாத தரிசனத்திற்காக மிக எளிமையாக பாண்டுரங்க அலங்காரத்திலும்,

🙏🇮🇳10
வெள்ளியன்று வெள்ளிக்கவச அலங்காரத்திலும், சனிக்கிழமை திருப்பதி ஸ்ரீனிவாசப் பெருமாள் அலங்காரத்திலும் திவ்யமாக காட்சியளிக்கிறார்.

🙏🇮🇳11
பலன்கள்

தொழில் வளர்ச்சி,குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு பலர் வருகின்றனர்.பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமிக்கு புது வஸ்திரம் காணிக்கையாக வழங்குகின்றனர்.

🙏🇮🇳12
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து

காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 36கி.மீ தொலைவிலும் வந்தவாசியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவிலும் உள்ளது.உத்திரமேரூரிலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவிலும் உள்ளது.

🙏🇮🇳13
சென்னையிலிருந்து சுமார் 30 நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும் காஞ்சிபுரத்திலிருந்து 20 நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும் உத்திரமேரூரில் இருந்து 15 நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும் உள்ளது.

🙏🇮🇳14
கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

கோயில் முகவரி

அருள்மிகு ரகுமாயீ சமேத பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர்.

வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

9 Apr
படித்தேன் பகிர்கிறேன்.

Karma is always Online......
Beware...

கர்மா பொல்லாதது.. அதை வெல்ல யாராலும் முடியாதது.. இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன் ..
மறைந்த பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சிபெற்றார். ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார். ஆனால், ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மாண்டார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய்விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசு கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டார்.
Read 15 tweets
9 Apr
அரசின் கட்டுப்பாட்டில் இருந்து 51 கோயில்கள் விடுவிப்பு: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு

டேராடூன்: உத்தரகண்டில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த 51 கோயில்களை அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதாக அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார்.
உத்தரகண்டில் புதிய முதல்வராக பொறுப்பேற்ற தீரத் சிங் ராவத், சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின்போது, சார் தாம் தேவஸ்தானம் மேலாண்மை மசோதாவை தாக்கல் செய்தார்.
இதற்கு கவர்னர் பேபி ராணி மவுரியா, ஒப்புதல் வழங்கியதை அடுத்து, மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்துவந்த 51 கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார். இதில், பத்ரிநாத், கேதர்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி உள்ளிட்ட கோயில்களும் அடங்கும்
Read 4 tweets
9 Apr
காசி கோவில் பகுதியில் தொல்பொருள் ஆய்வு - டுவிட்டரில் டிரெண்டிங்

வாரணாசி : வாரணாசியில், விஸ்வ நாதர் கோவில் - ஞான்வாபி மசூதி அமைந்துள்ள வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதை வரவேற்று பலரும் டிரெண்ட் செய்தனர்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர், வி.எஸ்.ரஸ்தோகி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
வாரணாசியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காசி விஸ்வநாதர் கோவில், முகலாய மன்னர் அவுரங்கசீபால் இடித்து தள்ளப்பட்டது. அங்கு, மசூதி கட்டப்பட்டுள்ளது. இது வரலாற்றுப் பூர்வமான உண்மை.
Read 13 tweets
9 Apr
பிரசவ வலியால் துடிக்கிறது ஒரு பெண் யானை. அருகே மூத்த யானைகள் ஆதரவாக நிற்கின்றன. ஒரு யானை தன்னுடைய துதிக்கையால் இடுப்பை அழுத்திப் பிடித்து அரவணைக்கின்றது, மற்றொன்று வாலை தூக்கி பிடித்து குட்டியானை வெளிவர உதவுகிறது. Image
மற்ற யானைகள் பெண் யானைக்கு ஆதரவாக நிற்கின்றன.குட்டியானை உலகை காண ஆவலோடு வெளி வருகின்றது.
இது போன்ற காட்சிகளை NATIONAL GEOGRAPHIC சேனலிலும்,DISCOVERY சேனலிலும் பார்த்து பரவசம் அடையும் நாம்,
Read 4 tweets
9 Apr
மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: மாநில பா.ஜ., வலியுறுத்தல்

மும்பை:''ஊழல் வழக்குகளில், அமைச்சர்கள் சிக்கி பதவியிழந்து வருகின்றனர். இதைவிட, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேறு என்ன காரணம் வேண்டும்,'' என, மஹாராஷ்டிரா பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
புலனாய்வு

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., அடங்கிய கூட்டணி அரசு அமைந்துள்ளது.தேசியவாத காங்.,கைச் சேர்ந்த, மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது, முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங், ஊழல் புகார் கூறினார்.
அதைஅடுத்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.இந்த நிலையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள் நிரம்பிய கார் நிறுத்தப்பட்ட வழக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே கைது செய்யப்பட்டார். அவரிடம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
Read 10 tweets
9 Apr
ஆஞ்சநேயர் பிறப்பிடம்: உகாதியில் ஆதாரங்கள்

திருப்பதி : ஆஞ்சநேயர் பிறப்பிடம், திருமலையில் உள்ள அஞ்னாத்திரி மலைத் தொடர் என்பதற்கான ஆதாரங்களை, தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி அன்று வெளியிட உள்ளதாக, திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையான் குடியிருக்கும் திருமலை, ஆஞ்சநேயரின் பிறப்பிடமாகவும் அடையாளம் காணப்பட உள்ளது.
இதுகுறித்து பல புராண இதிகாசங்களை ஆராய்ந்து அறிய, ஆறு பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை, திருமலை தேவஸ்தானம் அமைத்தது. அவர்களும், பல புராணங்கள், கிரந்தங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து தகவல்களை சேகரித்து உள்ளனர்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!