முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடுநிலைவாதிகள், '50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில், தமிழகம் சீர்குலைந்து விட்டது.
இந்த இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நேர்மையான ஒரு ஆட்சி அமைய வேண்டும்' என, நினைத்தனர். நடிகர் ரஜினி மூலம், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றம் கிடைத்தது என்றாலும், அதே திரை துறையிலிருந்து, அரசியலுக்கு வந்த கமல், ஆச்சரியம் அளித்தார்.
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாமல், அ.தி.மு.க., ---- தி.மு.க., சந்திக்கும் முதல் சட்டசபைத் தேர்தல் இது. அதனால், இந்த தேர்தலில் பரபரப்புக் காணப்பட்டது. ஜெ., மறைவுக்கு பின், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு, ஆட்சியையும், கட்சியையும் திறம்பட நிர்வகித்தார்,முதல்வர் இ.பி.எஸ்.,
அவ்வகையில் அவருக்கு, 'சபாஷ்' போடலாம். இ.பி.எஸ்., ஆட்சியில் குறைகள் இல்லாமலில்லை. ஆனால், எதிர்க்கட்சியான, தி.மு.க.,வை பார்க்கையில், இவர்களது குறைகள் பெரிதாகத் தெரியவில்லை. அ.தி.மு.க.,வில் அராஜகம், ரவுடியிசம், அநாகரிக பேச்சு போன்றவை இருக்காது.
இவை அனைத்தும், தி.மு.க., ஆட்சியில் கொடி கட்டி பறக்கும். கருணாநிதி இருக்கும் வரை, தி.மு.க., தன் கட்சி நிர்வாகிகளை நம்பியது.
ஸ்டாலின், அவர்களை நம்பாமல், வட மாநிலத்தைச் சேர்ந்த, 'ஐபேக்' நிறுவனத்தை, அரசியல் ஆலோசனைக்காக, 300 கோடி ரூபாய் கொடுத்து, பணியமர்த்தினார்.
'ஐபேக்' இயக்கிய நாடகத்தில், ஸ்டாலினின் கதாபாத்திரம், காமெடியனாகத் தான் இருந்தது. மேலும், அரசியல் அரிச்சுவடிக் கூட தெரியாத, தன் மகன் உதயநிதியை, வேட்பாளராக களமிறக்கியது, பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியது.
ஆனால், கூட்டணிக்கட்சிகளின் பலத்தால், தி.மு.க.,வும் தேர்தல் களத்தில் வலுவாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. துண்டு, துக்கடா கட்சிகள் இந்த தேர்தலில் கணிசமான ஓட்டுகள் வாங்குவதை விட, இரு பெரும் திராவிடக் கட்சிகளின் ஓட்டைப் பிரிக்கும்என்பது தான் உண்மை.
ஒருவேளை, ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால், மக்கள் எதிர்பார்த்த மாற்றம் வந்திருக்கும். அல்லது அவர், 'வாய்ஸ்' கொடுத்திருக்கலாம்; எதுவுமே அவர் செய்யவில்லை.
ஆக, இந்த தேர்தல் எப்போதும் போல, இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் போட்டி தான். இரண்டில் ஒன்று, ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறது. மக்கள் எதிர்பார்த்த மாற்றம் வராது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கர்மா பொல்லாதது.. அதை வெல்ல யாராலும் முடியாதது.. இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன் ..
மறைந்த பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சிபெற்றார். ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார். ஆனால், ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மாண்டார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய்விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசு கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டார்.
அரசின் கட்டுப்பாட்டில் இருந்து 51 கோயில்கள் விடுவிப்பு: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு
டேராடூன்: உத்தரகண்டில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த 51 கோயில்களை அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதாக அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார்.
உத்தரகண்டில் புதிய முதல்வராக பொறுப்பேற்ற தீரத் சிங் ராவத், சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின்போது, சார் தாம் தேவஸ்தானம் மேலாண்மை மசோதாவை தாக்கல் செய்தார்.
இதற்கு கவர்னர் பேபி ராணி மவுரியா, ஒப்புதல் வழங்கியதை அடுத்து, மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்துவந்த 51 கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார். இதில், பத்ரிநாத், கேதர்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி உள்ளிட்ட கோயில்களும் அடங்கும்
காசி கோவில் பகுதியில் தொல்பொருள் ஆய்வு - டுவிட்டரில் டிரெண்டிங்
வாரணாசி : வாரணாசியில், விஸ்வ நாதர் கோவில் - ஞான்வாபி மசூதி அமைந்துள்ள வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதை வரவேற்று பலரும் டிரெண்ட் செய்தனர்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர், வி.எஸ்.ரஸ்தோகி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
வாரணாசியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காசி விஸ்வநாதர் கோவில், முகலாய மன்னர் அவுரங்கசீபால் இடித்து தள்ளப்பட்டது. அங்கு, மசூதி கட்டப்பட்டுள்ளது. இது வரலாற்றுப் பூர்வமான உண்மை.
பிரசவ வலியால் துடிக்கிறது ஒரு பெண் யானை. அருகே மூத்த யானைகள் ஆதரவாக நிற்கின்றன. ஒரு யானை தன்னுடைய துதிக்கையால் இடுப்பை அழுத்திப் பிடித்து அரவணைக்கின்றது, மற்றொன்று வாலை தூக்கி பிடித்து குட்டியானை வெளிவர உதவுகிறது.
மற்ற யானைகள் பெண் யானைக்கு ஆதரவாக நிற்கின்றன.குட்டியானை உலகை காண ஆவலோடு வெளி வருகின்றது.
இது போன்ற காட்சிகளை NATIONAL GEOGRAPHIC சேனலிலும்,DISCOVERY சேனலிலும் பார்த்து பரவசம் அடையும் நாம்,
மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: மாநில பா.ஜ., வலியுறுத்தல்
மும்பை:''ஊழல் வழக்குகளில், அமைச்சர்கள் சிக்கி பதவியிழந்து வருகின்றனர். இதைவிட, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேறு என்ன காரணம் வேண்டும்,'' என, மஹாராஷ்டிரா பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
புலனாய்வு
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., அடங்கிய கூட்டணி அரசு அமைந்துள்ளது.தேசியவாத காங்.,கைச் சேர்ந்த, மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது, முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங், ஊழல் புகார் கூறினார்.
அதைஅடுத்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.இந்த நிலையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள் நிரம்பிய கார் நிறுத்தப்பட்ட வழக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே கைது செய்யப்பட்டார். அவரிடம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
திருப்பதி : ஆஞ்சநேயர் பிறப்பிடம், திருமலையில் உள்ள அஞ்னாத்திரி மலைத் தொடர் என்பதற்கான ஆதாரங்களை, தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி அன்று வெளியிட உள்ளதாக, திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையான் குடியிருக்கும் திருமலை, ஆஞ்சநேயரின் பிறப்பிடமாகவும் அடையாளம் காணப்பட உள்ளது.
இதுகுறித்து பல புராண இதிகாசங்களை ஆராய்ந்து அறிய, ஆறு பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை, திருமலை தேவஸ்தானம் அமைத்தது. அவர்களும், பல புராணங்கள், கிரந்தங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து தகவல்களை சேகரித்து உள்ளனர்.