*பெரியாரையும் அம்பேத்காரையும் காந்தியையும் வாசித்த ஒருவன் முதன்மையாகத் துறப்பது சாதிய அடையாளத்தைத் தான்.*
*ஒரேயொரு சூழியல் நூலை வாசித்து விட்டவன் வனப்பகுதியில் பீர் பாட்டிலை உடைத்து வீச மாட்டான்.*
*பேரிலக்கியங்களை வாசித்த ஒருவன் ஒரு போதும் தன்னை குறுகிய தேசியவாதத்தில் இன அரசியலில் அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டான்.*
*சிற்பங்களைப் பற்றிய ஒரேயொரு கட்டுரை வாசித்தவன் கூட குகை ஓவியங்கள் மீது ஐ லவ் யூ என கிறுக்க மாட்டான்.*
*இந்த உலகைச் செதுக்கிய வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்ட ஒருவனால் நடிகனின் கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய முடியாது.*
*நமது அறிதல் முறைகளை, தத்துவங்களை வாசித்து விட்ட ஒருவன் ஒருபோதும் ஒரு கார்ப்பரேட் சாமியாரின் காலடியில் பணத்தைக் கொட்ட மாட்டான்.*
*அரசியல் நூல்களை வாசித்த ஒருவன் இந்த ஜனநாயகத்திற்கு தேசம் கொடுத்திருக்கிற விலை என்ன என்பதறிவான். இந்தக் கட்டுமானம் சிதைக்கப்படாமல் இருப்பதற்கு தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்வான்.*
*உண்மையான சமூக இழிவென்பது அறியாமையே.*
*மனிதன் பண்பட, இன்னும் மேம்பட்டவனாக மாற, தான் வாழும் பூமியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்க அவன் வாசித்தே ஆகவேண்டும்*
- *வாசிப்பது எப்படி* புத்தகத்தில் இருந்து .

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

10 Apr
கடவுளை பற்றி காமராசர்
“நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?” என்று கேட்டேன்.
அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம்
ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா?. அரேபியாவிலே இருக்கிறவன்
“அல்லா” ன்னான், ஜெருசலத்தல இருக்கிறவன் “கர்த்தர்” ன்னான், அதிலேயும் சிலபேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினேஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக்
Read 21 tweets
10 Apr
இன்றைய இலவச புத்தகம்

ஆர்எஸ்எஸ் இயக்கம் தனது செயல்பாடுகளை பரந்து விரிந்த அளவில் நடத்துகிற காலம் இது. அதன் வரலாற்றையும் செயல்பாடுகளையும் பற்றி பல உண்மையற்ற தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. அவற்றை ஆதாரபூர்வமாக எதிர்கொண்டு அம்பலப்படுத்தும் புத்தகம் இது.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய அருணன் ஏராளமான புத்தகங்களை எழுதிக் குவித்து வருபவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்களின் சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர். தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.
சுதந்திர இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு, ஆனால் கடந்த ஏழு வருடங்களாக இந்திய ஒன்றியத்தை அதன் அரசியல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. 1924ல் இந்திய விடுதலைக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம், ஆனால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்த அமைப்பு ஈடுபடவில்லை.
Read 6 tweets
8 Apr
No one can live on this planet without exposing hypocrisy...!

18.09.2005 அன்று அம்பலம் இணைய இதழில், சுஜாதா...

விஜய் டிவி யிலிருந்து சாமக்கிரியைகளுடன் வந்து இறங்கினார்கள். "எங்களது 'ஆட்டோகிராப்' நிகழ்ச்சிக்காக உங்களுக்கு மதன் ஒரு பரிசு அனுப்பியிருக்கிறார்" என்றனர்.
அது ஒரு நடுத்தர சைஸ் மரப்பெட்டி. 'இதை நீங்கள் திறந்து பார்ப்பதைப் படம் பிடிக்க வேண்டும்' என்றார்கள். வெளிச்சம் போட்டார்கள். சட்டைக்குள் மைக் வைத்து, ஒன் டூ த்ரி சொல்லச் சொன்னார்கள்.
"ரெடி சார்? நீங்க என்ன பண்றீங்க? யார் கிட்டருந்து வந்திருக்குன்னு கன்னத்தில் கை வெச்சு
அல்லது விட்டத்தைக் பார்த்து முதல்ல யோசியுங்க. 1992 ன்னு போட்டிருக்கு. அதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லிக்கிட்டே யோசிங்க. அப்றம் பெட்டியைத் திறங்க. அதுக்குள்ள இருக்குற புத்தகங்களைப் பாருங்க. உள்ள ஒரு கார்டூன் இருக்கும். அதைப் பார்த்த உடனே, 'ஆஹா இதை நம்ம மதன் அனுப்பிச்சிருக்காரு.
Read 8 tweets
6 Apr
சிறார் இலக்கியம் பற்றி பேசியதால்

"மட்டில்டாவும் தொப்பி பூனையும்"

உலகப் புகழ் பெற்ற சிறார் நாவலின் கதை சுருக்கம்.
எழுத்தாளர்கள் ரோல் தால்,எனிட் பிளைடன், டாக்டர் சூஸ், பி. டி ஈஸ்ட்மேன், ஷெல் சில்வர்ஸ்டைன், அண்ணா சிவல், ஹாரியட் பீச்சர், என உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய
கதைகள், கதாபாத்திரங்கள் பிரபலமானவை. அவர்களுடைய சில கதைகளின் சாரத்தை சுவாரசியம் குறையாமல் சுருக்கி தந்திருக்கிறது இந்த நூல்.

ஒன்பது நாவல்களின் சுருக்கத்தை இங்கே கூறி அந்த நாவல்களைப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறார் எழுத்தாளர்.
டாம் மாமாவின் குடிசை மிக அற்புதமான கதை வாசித்து மனம் நெகழ்ந்த கதை.
ஏழு தலைமுறைகளின் கதை குழந்தைகள் நமது வரலாற்றில் மட்டுமல்லாமல் உலக வரலாற்றையும் அறிந்து கொள்ளும் விதமாக இருக்கும்.
ஸ்கூலுக்கு போகிறாள் சுஜித் நன்மையே தரும் மரம் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் மொழிபெயர்த்த கதை.
Read 4 tweets
6 Apr
“இந்து என உணர்தல்” - ஜெயமோகனின் கட்டுரை.

கீழே வருவது எழுத்தாளர் வாசு தேவனின் பதிவு.

“ஜெயமோகன் இன்று ''இந்து என உணர்தல்" என்ற கட்டுரையை எழுதியுள்ளார். சிக்கலான விஷயம்...அவரிடம் மொழிவளம் அபாரமாக உள்ளது...மொழி வசீகரத்தில் வாசகன் மயங்கிவிடும் அபாயமும் உள்ளது...
இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வான சாதிப்படிநிலைகள் உள்ளன என்பதை அவர் மறுக்கவில்லை. அதே வேளையில் கலைக்கும், தத்துவத்திற்கும் இந்து மதம் வழங்கிய கொடைகளும் உண்டு. மரபின் சிந்தனைகளை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மதத்திலும் ஞானிகளின் சிந்தனைகள், இலக்கியங்கள், கலைப்படைப்புகள்
திரட்டப்பட்டுள்ளன. இதை கற்க/ரசிக்க ஒருவர் தன் மதத்தோடு இணைத்துக்கொண்டு பெருமிததோடு அணுக வேண்டும் என்பது பிழையான வாதம். வாடிக்கன் போப் ஆண்டவர் ஆலய கூரையில் டாவின்சி வரைந்த ஓவியத்தை ரசிப்பதற்கு நான் கிறிஸ்துவனாக அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதில்லை. இஸ்லாமியர்களின்
Read 7 tweets
5 Apr
நம் வாக்கு, நம் உரிமை!
* பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க பிரிட்டனுக்கு விருப்பம் இல்லை. பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவது சரியாக இருக்காது என்று நினைத்தது.
* சிறுபான்மையினருக்கு வாக்குரிமை வழங்குவதாகச் சொன்ன பிரிட்டன்,
சில பெண்களே உரிமைகள் வேண்டாம் என்று சொன்னதால் ஒட்டுமொத்த இந்தியப் பெண்களுக்கும் வாக்குரிமை கிடையாது என்று கூறிவிட்டது.
* பெண்களுக்கு வாக்குரிமையைப் பயன்படுத்த தெரியாது என்பதால் அவர்களுக்கு அந்த உரிமை வேண்டாம் என்று பெரும்பான்மையினர் கருதினர்.
* தங்களுக்கு வாக்குரிமை அளிப்பதை கணவருக்கும் மகன்களுக்கும் பிடிக்காது என்பதால், வாக்குரிமை வேண்டாம் என்று குறிப்பிட்ட அளவு பெண்ளும் கருதினர்.
* ஆரம்பத்தில் மகாத்மா காந்திகூட பெண்களுக்கு வாக்குரிமைக்கு வழங்க ஆதரவு தெரிவிக்கவில்லை.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!