நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். கடந்த 25 ஆண்டுகாலமாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் முழுநேர எழுத்தாளரான இவர் இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வாழ்வு அனுபவங்கள் கொண்ட தேசாந்திரி . உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம், உறுபசி, துயில். நிமித்தம், சஞ்சாரம் ,இடக்கை, பதின் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள்
எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா போன்றவை இவரது முக்கிய வரலாற்று நூல்களாகும் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி, சிறிது வெளிச்சம் மூலமாக பல லட்சம் வாசகர்களின் விருப்பதிற்கு உரிய எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார்.
சிறார்களுக்காக பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார் வாழ்நாளை சாதனைக்கான இயல்விருது, தாகூர் விருது, பெரியார் விருது. மாக்சிம் கார்க்கி விருது, தமிழக அரசின் சிறந்த நூலிற்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்
அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

14 Apr
அம்பேத்கர் பற்றி
உங்களுக்கு
என்ன தெரியும்?
என்று கேட்டால்,
பெருவாரியான
பதில்கள்,
இந்திய
அரசியல் சட்டத்துக்கு
எழுத்து வடிவம் தந்தவர்.

தாழ்த்தப்பட்ட
மக்களுக்கான
தலைவர்
என்பதாகத்தான்
இருக்கும்.

ஆனால்,
அம்பேத்கர் என்ற
மகத்தான ஆளுமையை
இப்படியான
சிமிழ்களுக்குள்
அடைத்துவிட முடியாது.
காரல் மார்க்சுக்கும்,
அம்பேத்கருக்கும்
சில ஒற்றுமைகள்
இருக்கின்றன.

இருவரும்
தங்கள் வாழ்க்கையின்
கணிசமான பகுதியை
நூலகங்களில்
செலவழித்தவர்கள்.

மனித சமூகத்தின்
மேம்பாடு குறித்து
சிந்தித்துக்
கொண்டிருக்கும்போது
தங்கள்
குழந்தைகளை
வறுமையினால்
பலி கொடுத்தவர்கள்.
அம்பேத்கர்
வெறுமனே
ஒரு சட்ட மேதையாகவோ
தலித் தலைவராகவோ
மட்டும்
இருந்தவர் அல்ல.

அரசியல்,
இலக்கியம், தத்துவம்,
இதிகாசம், வரலாறு,
மதம், சட்டம்
பொருளாதாரம் என
மனித அறிவு சாதித்த
துறைகளில்
பெரும்பாலானவை
குறித்த
விரிவான வாசிப்பும்,
அறிதலும் கொண்டவர்.
Read 12 tweets
13 Apr
இன்றைய இலவச புத்தகம்
#freebooks #AmazonKindle

உண்மை மனிதனின் கதை - உலகப் புகழ்பெற்ற நாவல்.

பரீஸ் பொலேவோய் புகழ்பெற்ற நூலாசிரியர், பத்திரிகையாளர். சோவியத் யூனியனில் மாபெரும் தேசபக்தப் போர் தொடங்கியது முதல் பொலெவோய் ‘பிராவ்தா’ செய்தித் தாளின் போர்முனை நிருபராகப் பணியாற்றினார்.
அப்போதுதான் உண்மை மனிதனின் கதையின் கதைமாந்தரான செஞ்சேனையின் வீரமிக்க விமானி அலெக்சேய் மெரேஸ்யெவைச் சந்திக்கிறார். போர்முனையில் மிகச்சிறந்த விமானி எனப் பெயர் வாங்கியிருப்பதைக் கேள்விப்பட்டு, பரீஸ் அவரை பேட்டி காண விரும்பினார்.
அலெக்சேய் மெரேஸ்யெவிற்கும் மாஸ்கோவிலிருந்து வந்துள்ள ‘பிராவ்தா’ செய்தியாளரிடம் நாட்டில் நடந்துவரும் நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை. எனவே இரவு தன் கூடவே தங்குமாறு கூறி அழைத்துச் செல்கிறான்….
…..
Read 9 tweets
13 Apr
உப்பு நாய்கள்

இந்த நூலைப்பற்றி சாரு நிவேதிதா எழுதியதில் இருந்து:
-
உலகத் தரமான ஒரு படைப்பு…
-
லக்‌ஷ்மி சரவணகுமாரை தமிழர்கள் கொண்டாடி இருக்க வேண்டும். கொண்டாட வேண்டும். காரணம், யோசாவைப் போலவே இவர் ஒரு ரிக்‌ஷாக்காரனுக்குக் கூட புரியும் படி எழுதியிருக்கிறார்.
வேசிகளும், பிக்பாக்கெட்டுகளும், கொலைகாரர்களும் நிரம்பியுள்ள இந்த நாவலை அந்த மனிதர்களுக்கே படித்துக் காண்பித்தாலும் அவர்களுக்கு விளங்கும்.

ஏன், இந்த நாவலை வாரந்தோறும் தினத்தந்தியில் தொடராகப் போடலாம். அதாவது, இதன் புரியக்கூடிய தன்மைக்காகச் சொல்கிறேன்.
ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இங்கே நடந்து விடாது. ஆபாச நாவல் என்று சொல்லி சனாதனிகள் ஒரே வாரத்தில் தொடரை நிறுத்தி விடுவார்கள். இவ்வளவுக்கும் நாவலில் ஒரு கெட்ட வார்த்தை இல்லை.

என்னுடைய ஒரே ஆச்சரியம், இத்தனை நாளாக ஏன் யாருமே என்னிடம் லக்‌ஷ்மி சரவணகுமார் பற்றிச் சொல்லவே இல்லை?
Read 6 tweets
12 Apr
ராதையின் மகன் கர்ணன் சூத்திரன்.

வேட்டுவ குலத்தைச் சேர்ந்த ஏகலைவன் சீர்மரபினன்.

இருவரும் கூத்திரியர்களோ பிராமணர்களோ இல்லை என்பதால் தன் குருகுலத்தில் சேர்ந்து வித்தை சொல்லித் தர மறுத்து விட்டார் துரோணர்...
அதனால் துரோணர் போல சிலையை செய்து அதன் முன் நின்று விலவித்தை பயின்று மாபெரும் வில்லாளியானான் ஏகலைவன்.

( ஏகலைவன் தான் ஆன்லைனில் வித்தை பபின்ற முதல் மாணவன்)

பார்ப்பனர் அல்லாதோருக்கு வித்தை சொல்லித் தர மறுத்த பரசுராமரிடம் பிராமணன் என்று பொய் சொல்லி சீடனாக சேர்ந்து வித்தை
பயின்றான் கர்ணன்..

ஏகலைவன் அர்ஜுனனை விட பெரிய வில்லாளி என்று தெரிந்ததும் வில்லைப் பயன்படுத்த. அவசிமான வலது கை கட்டைவிரலை குருதட்சணையாக சூழ்ச்சியாகப் பெற்றுக் கொண்டார் துரோணர்...
Read 5 tweets
10 Apr
''திராவிடர்'' என்பதற்கு பதிலாக ''தமிழர்கள்'' என்று வைத்து கொள்ளலாமே என்று கேட்பவர்களுக்கு பெரியாரின் பதில் 👇

''தமிழர்'' என்று சொன்னாலே பார்ப்பனர்கள் தாங்களும் ''தமிழர்கள்'' தான் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள்.
நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம், வளர்கிறோம்
தமிழ் பேசுகிறோம். அப்படி இருக்கும் போது எப்படி எங்களை தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும் என்று கேட்கிறார்கள்.
ஒரு காலத்தில் ''தமிழர்'' என்பது (திராவிட) பண்பு உள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும் ஆனால் இன்று அது பொதுப் பெயராக மாறிவிட்டிருப்பதால் அம்மொழி பேசும் ஆரிய பண்புடைய மக்கள் யாவரும் தாமும் ''தமிழர்'' என்று உரிமை பாராட்ட முன் வந்து விடுகிறார்கள்.
Read 7 tweets
10 Apr
‘‘உண்மையில் திராவிடக் குடிகள் இந்தியத்துணைக் கண்டத்தில் மிக நீண்ட வரலாற்று அசைவியக்கம் கொண்டவர்கள். இத்துணைக் கண்டத்தின் அனைத்து நிலப்பரப்போடும் தொடர்புடையவர்கள்; வாழ்ந்தவர்கள்; இன்றும் வாழ்ந்து வருபவர்கள்.
இன்று இந்தியாவில் உள்ள 461 பழங்குடிகளிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட பழங்குடி கோண்டுகள் ஆவர். இவர்கள் திராவிடப் பழங்குடியினர். நடு இந்தியப் பகுதிகளில் வாழ்கிறார்கள். அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பழங்குடி பீல்கள். ராஜஸ்தான் தொடங்கி வட இந்தியாவில் 7 மாநிலங்களில் பரவி வாழ்கின்றனர்.
இவர்களும் திராவிடப் பழங்குடிகளே. நான்காவது பெரிய பழங்குடியான ஒராவன் திராவிடப் பழங்குடியே. இந்தியாவின் ஏழாவது பெரிய பழங்குடியான கோந்த் பழங்குடியும் திராவிடப் பழங்குடியே. ஒரிசா விலும் அதனை ஒட்டிய மாநி லங்களிலும் இவர்கள் வாழ்கிறார்கள்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!