சிதம்பரத்தில் தில்லைவாழ் அந்தணர்களால் முடிசூட்டப்பட்ட ஒரே பாண்டிய மன்னன் என்ற பெருமைக்குரியவன் இவன்.இன்றளவும் ஶ்ரீரங்கநாதர் முன் உச்சரிக்கப்படும் ஒரே அரசனின் பெயரும் இவனுடையதுதான்.பாண்டியப் பேரரசை நெல்லூர் வரை விரிவடையச் செய்து எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள் என்ற பெயர் பெற்றவன்
ஶ்ரீரங்கத்தில் இவனும் இவன் அரசியும் யானை மேல் அமர்ந்து கொள்ள அதை ஒரு தெப்பத்தின் மீது ஏற்றி, அந்தத் தெப்பம் நீரில் எவ்வளவு அமிழ்கிறதோ அந்த அளவைக் கொண்டு அதற்குச் சமமான பொன்னும் பொருளும் ரங்கநாதருக்குச் சமர்ப்பித்து ‘ஆர்க்கிமீடீசுக்கு’ எல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவன்
தமிழகத்தின் இரு பெரும் கோவில்களான சிதம்பரத்திற்கும் ஶ்ரீரங்கத்திற்கும் இவன் பொன் வேய்ந்ததை திருப்புட்குழிக் கோவில் கல்வெட்டு இவ்வாறு புகழ்கிறது

வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்
வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்
வாழ்க சுந்தர பாண்டியன் தென்னனே
அப்படி பெரு வீரனாகவும் பெரும் பக்தனாகவும் திகழ்ந்து பாண்டிய நாட்டின் செல்வச் செழிப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்ற ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் பிறந்த நாள் இன்று (சித்திரை - மூலம்)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆

𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @tskrishnan

18 Apr
On the occasion of #WorldHeritageDay, it’s worthwhile to look into one of the great heritage sites of TN, Vaikuntha Perumal temple in Kanchipuram. Built by Pallavas, this Divya Desam, which is also called as Parameswara Vinnagaram has a set of panels depicting the Pallava History
Let’s look at some of the panels of this 8th century temple. This one illustrates how the Pallava dynasty was started. On the left, Aswathama, one of the warriors in the epic Mahabharata is doing penance & on right his child was put on creepers. The Child was hence named Pallava
Pallavas claim that they are descendants of Aswathama which is confirmed by the above panel.

The below one is Pallava King Kumara Vishnu doing Ashwamedha Yajna, with the horse tied to the Yupa. He ruled from Kanchi and was one of the earliest kings to perform this Yajna in TN.
Read 8 tweets
13 Apr
புத்தாண்டு - சூரியனையே மற்ற கோள்கள் எல்லாமும் சுற்றி வருகின்றன என்று சங்ககாலத்திலேயே தமிழர்கள் அறிந்திருந்தார்கள்.

“வானிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த விளங்குகதிர் ஞாயிறு”

என்று சிறுபாணாற்றுப்படை அந்தச் செய்தியைப் பதிவு செய்கிறது.
ஆனால் பூமியில் இருந்து பார்க்கும் போது மேட வீதி, இடப வீதி, மிதுன வீதி ஆகிய மூன்று வீதிகளில் சூரியன் செல்வது போல் தோன்றும். இந்த மூன்று வீதிகளையும்

“எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்”

என்று குறிப்பிடுகிறது பரிபாடல்.
இந்த மூன்று வீதிகளிலும் தலா நான்கு ராசிகளாக பன்னிரண்டு ராசிகள் அமைந்திருந்தன.

“ஆறு இருமதியினும் காருக வடிப்பயின்று”

என்ற சிலப்பதிகாரத்தின் வரிகள் பன்னிரண்டு ராசிகள் இருப்பதைத் தெரிவிக்கின்றன. சூரியன் இந்தப் பாதைகளில் செல்லும் விதத்தை வைத்தே தமிழர் நாட்காட்டிகள் அமைந்தன.
Read 6 tweets
10 Apr
வரலாற்றுப் புத்தகங்கள் பெரும்பாலும் கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றின் அடிப்படையில் எழுதப்படுபவை. ஆனால் இந்தப் புத்தகம் எழுதப்பட்ட வரலாறே தனி. இதன் ஆசிரியர் சேதுராமனின் நண்பர் ரமணி ஹரித்வார் செல்கிறார். அங்கே ஒரு மகானைச் சந்திக்கிறார். ரமணியிடம் அவர் ஒரு ஓலைச்சுவடித் தொகுப்பை
அளித்து இது ஶ்ரீபுஜண்டர் சுவடி என்றும் இதை வைத்து வேண்டியவர்களுக்குப் பலன் சொல்லி வரவேண்டும் என்றும் சொல்லிவிட்டுச் செல்கிறார்.சில நாட்கள் கழித்து ரமணி, சேதுராமனைத் தேடி வருகிறார்.சுவடியின் சில பக்கங்களை தாராசுரம் கோவிலில் வைத்து வாசிக்கவேண்டும் என்று எழுதியிருப்பதாகச் சொல்கிறார்
அதன்படி தாராசுரம் கோவிலில் வைத்து வாசிக்கத் தொடங்குகின்றனர்.அதில் அக்கோவிலைக் கட்டிய இரண்டாம் ராஜராஜ சோழனின் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. அதுவரை கிடைத்த சான்றுகளோடு ஒத்துப்போகும் தகவல்களோடு தெரியாத பல செய்திகளும் கிடைக்கின்றன. அவற்றை வைத்து எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம்.
Read 6 tweets
8 Apr
He was born blind. He was told that the Thiruvarur temple tank was becoming muddy. He was a Shivabhakth & he tried to clear the mud from the tank. As he couldn’t see, he placed few sticks in the tank & tied a rope to guide him in and out of the tank. However this irked sramanas Image
in the town who told him to stop this, as clearing mud will kill the small insects inside. But he was determined to go ahead with the Shiva Kaingaryam. Angered by this, they removed the sticks & rope. He went to the temple and cried before the Lord as his work was stopped.
Lord Shiva appeared in the dream of Chola King & asked him to arbitrate. King called both the sides & Sramanas told the king that if Shiva was true, then He should give eyesight to his devotee who was performing his duty
Read 4 tweets
27 Mar
பொயு 1323. இன்றைய நாள் போலவே ஶ்ரீரங்கம் கோவிலில் 8ம் திருநாள் உற்சவம். அழகிய மணவாளப்பெருமாள், பன்றியாழ்வான் கோவிலில் எழுந்தருளியிருந்தார். பின்னாளில் முகமது பின் துக்ளக் என்று அழைக்கப்பட்ட உலூக்கான் தன் படையோடு காவிரிக்கரையை நெருங்குவதாகச் சேதி கிட்டியது. பட்டர்கள் பதைபதைத்தனர் Image
சுவாமியை எடுத்துச் சென்றால் அங்கே கூடியிருப்போர் ‘ஓலக்கமாக அவன் பின்னேயே செல்லக் கிளம்பிவிடுவார்கள்’ என்பதால் திருவாராதானம் நடப்பதுபோல திரையிட்டு, “அழகியமணவாளனையும் உபயநாச்சிமார்களையும் ஒரு பல்லக்கில் வைத்து பிள்ளைலோகாசார்யாரையும் ஒரு அர்ச்சகரையும் சில சிஷ்யர்களோடு Image
தெற்கு திசை நோக்கி பாதுகாப்பிற்காக அனுப்பி வைத்தார்கள்”. படைகளோடு அங்கே வந்த உலூக்கான், பெருமாள் விக்ரகம் அங்கே காணாததால் கடும் கோபம் கொண்டு பன்றியாழ்வான் கோவிலைச் சேதப்படுத்தி அங்கே கூடியிருந்த 12000 பேரைக் கொன்று குவித்தான்.
Read 4 tweets
24 Mar
தமிழகத்தின் பழம்பெரும் விழாக்களில் ஒன்று நாளை திருவாரூரில் நடைபெறவுள்ள ஆழித்தேர்த்திருவிழா. அப்பர் பெருமான் இத்திருவிழாவை

ஊழித்தீயன்னானை ஓங்கொலி மாப்பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை நான் கண்டதாரூரே

என்று குறிப்பிடுகிறார்.இப்படி பொயு 7ம் நூற்றாண்டிலிருந்தே ஆவணப்படுத்தப்படும் Image
இத்திருவிழா பங்குனி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பூச நட்சத்திரமான இன்று தியாகராஜர் தேருக்கு எழுந்தருளி, ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் கண்டருளும் திருவிழாவாக உள்ளது. இந்தத் திருவிழாவை அப்பர் பெருமானே முன்னின்று நடத்துவதாக மரபு. Image
மற்ற திருவிழாக்களில் உற்சவம் நடத்துபவர்கள் அழைப்பிதழ் அளிப்பார்கள். ஆனால் இந்தத் திருவிழாவிற்கு இறைவனே அழைப்பதாக ஐதீகம். தியாகப் பெருமானுடைய ஶ்ரீமுகம் இவ்வாறு அமைந்திருக்கும்

யக்ஞகத்ரய நிர்மான த்ரான நிர்வான காரணம்
ததிதம் சாசனம் சம்போக பூர்வாரூர் வாசினஹ Image
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!