இயற்கையில் கிடைக்கும் அனைத்தும் மனித உடலுக்கு உகந்தது என்றும் செயற்கையில் தயாரிக்கப்படுபவை அனைத்தும் மோசமானவை என்றும் தொடர்ந்து மக்கள் நம்ப வைக்கப்படுகின்றனர். ஆனால் நம்முடைய உலகில் இயற்கையில் வளரும் தாவர வகைகளில் லட்சக்கணக்கான தாவரங்கள் விடத்தன்மை (Poisonous) வாய்ந்தவை ஆகும்.
உலகில் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மக்களை புற்று நோய்க்கு ஆளாக்கி கொல்லும் புகையிலை ஒரு இயற்கையில் வளரும் தாவரமாகும். வாழ்க்வாழ்க்கையை நாசமாக்கும் போதைப் பழக்கத்திற்கு ஆளாக்கும் கஞ்சா, ஒபியம் போன்றவைகளும் இயற்கையில் கிடைப்பதாகும். உண்டவுடன் மரணத்தை விளைவிக்கும் அரளிவிதை,
ஆமணக்கு, எட்டிக்காய் மற்றும் பல விஷ தாவரங்கள் இயற்கையில் எல்லா இடங்களிலும் விளைந்து கிடக்கின்றது. இந்தக் கொடிய வகைத் தாவரங்களை தவறுதலாக உண்டு பல விலங்கினங்களும், மனிதர்களும் ஆண்டுதோறும் உயிர் இழக்கின்றனர். ​அதேபோலவே செயற்கையில் தயாரிக்கப்படும் பல்லாயிரக்கணக்கான மருந்துகள்,
கோடிக்கணக்கான மக்களை இன்றும் உலகம் முழுவதும் காப்பாற்றி வருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடதகுந்தது. இவை காய்ச்சலை போக்க வல்ல ‘பாராசிட்டாமால்’ முதல் கேன்சர் நோயை குணப்படுத்தும் ‘இமாப்டினாப்’ வரை நீள்கின்றன. ​தாவர வகை உணவுகள் உடலுக்கு நல்லது என்றும் மாமிச உணவுகள் உடலுக்கு
ஆபத்தானது என்றும் மற்றுமொரு கருத்தும் நாட்டில் நிலவுகிறது. இதுவும் தவறானது ஆகும். ​இரண்டு மனிதர்கள் ஒரு காட்டுக்குள் சிக்கி கொண்டனர் என்று கருதுவோம். அங்கே உணவு ஏதும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு மனிதர் மாமிச உணவு பிரியர். மற்றுமொருவர் தாவர உணவு பிரியர். மாமிச உணவு பிரியர்
அங்கே காட்டுக்குள் கண்ணில் தென்படும் ஏதாவது ஒரு விலங்கினை அடித்து நெருப்பு மூட்டி உண்கிறார். அதே போல தாவர உணவு பிரியர் ஏதாவது ஒரு தாவரத்தை கொண்டு வந்து சமைத்து உண்கிறார். இருவரில் யார் விஷத்தன்மை உடைய உணவை உண்டு இருக்கும் வாய்ப்பு அதிகம் என்றால் தாவர உணவை உண்டவர் தான் விஷத்தன்மை
உடைய உணவை உண்டு இருக்கும் வாய்ப்பு அதிகமாக கொண்டவர். ஏனெனில் தாவர வகைகளி்ல் பெரும்பாலானவை மனிதன் உண்ண தகுதியற்றவை ஆகும். ​எனவே இயற்கை அனைத்தும் நன்று, செயற்கை மோசம் என்பதும், தாவர உணவுகள் நல்லது இறைச்சி உணவு மோசமானது என்பதும் தவறான ஆதாரமற்ற நம்பிக்கைகள் ஆகும்.

-டாக்டர் சட்வா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

8 May
கொரோனாவுக்கான சிகிச்சையை அரசு காப்பீட்டு திட்ட அட்டை உரிமையாளர்கள் காப்பீட்டு திட்டம் நடைமுறையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் எடுத்துக்கொள்ளும் போது அந்த செலவினத்தை அரசு ஏற்கும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை பெற தகுதியானவர்கள்:

வருட வருமானம் ரூபாய். 72000க்கும் குறைவாக ஈட்டுபவர்கள்.
குடும்ப அட்டை வைத்திருருந்தால் இந்த திட்டத்தில் பயனடைய முடியும்.

அரசு காப்பீடு திட்ட அட்டை பெறும் வழிமுறைகள்:
அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட அலுவலகத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO ) வருமானச்சான்றில் கையெழுத்து பெறவேண்டும்.
பின்பு அந்த விண்ணப்பத்தை அந்த மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சர் காப்பீடு
Read 7 tweets
8 May
தனியாக செயல்படுகின்ற மளிகை பலசரக்கு காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும். மின் வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது!

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும் தேநீர் கடைகள் 12:00 மணி வரை மட்டுமே செயல்படும்.

பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், தனியார் விரைவு தபால் சேவை மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள்,
ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள் அனைத்து சரக்கு வாகன போக்குவரத்து விவசாயிகள் விளை பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் வாகனங்கள் எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் முழு உரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
Read 5 tweets
6 May
போலியோ தடுப்பு மருந்தை கண்டுபித்து உலக முழுவதும் போலியோ வைரஸ் பாதிப்பு குறைய வழிவகை செய்தவர் ஜோன்ஸ் சால்க்.

சால்க் வைரஸ்களை அழிக்காமல் அவற்றை செயலிழக்க வைத்து அதன் மூலம் அவற்றை நோய் எதிர்ப்புக்கு பயன்படுத்தும் முயற்சியில் ஆய்வுகளை செய்து கொண்டு இருந்தார்.
சால்க் மற்றும் அவருடன் குழுவினரின் ஏழு வருட உழைப்பால் போலியோவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 1955-ல் ஜோன்ஸ் சால்க் உடைய போலியோ தடுப்பு மருந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் போலியோ தடுப்பு மருந்து கண்டுபிக்கப்பட்ட ஆண்டில்
45,000 பேர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் போலியோவால் பாதிக்கப்படுபவர்கள் 910 ஆக குறைந்தனர்.

ஜோன்ஸ் சால்க் போலியோவிற்கு கண்டுபிடித்த தடுப்பு மருந்தினை போன்றே ஆல்பர்ட் சபின் என்பவரும் 1956-ல் வாய்வழி மருந்தாக போலியோ தடுப்பு
Read 6 tweets
6 May
முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்றால் என்ன?
ஒரு தொற்றுநோய் முதலில் ஒரு குழுவினரை பாதிக்கும். இது முதல் அலை இந்த தோற்று உச்சத்திற்கு சென்று பின்னர் நோய்த்தொற்றுகள் குறைய தொடங்கும். மறுபடியும், தொற்றுநோய்கள் மக்கள்தொகையின் வேறுபட்ட பகுதியில் அதிகரிக்கும்,
இதன் விளைவாக இரண்டாவது அலை நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன.

100 வருடங்களுக்கு முன் ஸ்பானிஷ் ஃப்ளூ 1917 முதல் 1919 வரை உலகம் முழுவதும் பரவியது. முதல் உலகப் போருக்குப் பிறகு பரவிய மிகப்பெரிய தொற்று அது. அந்தக் காய்ச்சல் உலகம் முழுவதும் மூன்று அலை வரை பரவியது.
முதல் அலையில் முக்கியமான நகரங்களும் இரண்டாம் அலையில் சின்ன சின்ன ஊர்களும் மூன்றாம் அலையில் கிராமங்களும் பாதிக்கப்பட்டன. ஸ்பானிஷ் ஃப்ளூ வந்தபோது இந்தியாவில் சுமார் 5 கோடி பேர் இறந்துள்ளதாகப் புள்ளி விவரம் உள்ளது. கொரோனாவில் உலக அளவில் பார்க்கும்போது இது நான்காம் அலை.
Read 11 tweets
6 May
மே 6: மாணவர்களுக்கு மிகப் பிடித்த கல்வி முறையை உருவாக்கிய மரியா மாண்டிச்சோரியின் நினைவு நாள் இன்று.

மரியா மாண்டிசோரி மருத்துவப்படிப்பு படிக்கப்போனார். அங்கே அவரைப்பெண் என்பதால் இழிவாக நடத்தினார்கள். பாடங்களை சொல்லித்தரக்கூட ஆசிரியர்கள் மறுத்தார்கள். விலங்குகளை அறுக்கிற
பொழுது தனியாக ஒரு அறையில் விட்டு அறுக்க வைத்தார்கள். மனம் வெறுத்தார் அவர். இருந்தாலும் மருத்துவப்பட்டம் பெற்று வெளியே வந்தார். உளவியலில் தன்னுடைய ஆர்வத்தை செலுத்தினார்.
கல்வி சார்ந்த இத்தாலியில் ஐம்பது ஏழைப்பிள்ளைகளுக்கு கண்காணிப்பாளராக அவர் ஆனார்.. பிள்ளைகளை மிரட்டுவதோ,
அடிப்பதோ பிடிக்காத அன்பான நபர் அவர். அங்கே இருந்த பிள்ளைகளின் பொழுதை எப்படி உற்சாகம் நிறைந்ததாக ஆக்குவது என்று அவர் யோசித்தார். அப்படி எழுந்த அவரின் மாண்டிசோரி கல்வி முறையில் உலகம் முழுக்க இன்றைக்கு நூற்றி பத்து நாடுகளில் இருபத்தி இரண்டாயிரம் பள்ளிகள் உள்ளன.
Read 4 tweets
15 Apr
தொடர்ந்து நண்பர்கள் பலருக்கும் ஆங்கில நூல்கள் வாசிக்க ஆசை. தொழில்முறையாக ஆங்கில மின்னஞ்சல் எழுதுபவர்களுக்குக் கூட ஒரு வகையான தயக்கம் இருப்பதால் ஆங்கில நூல்கள் படிக்காமல் இருக்கிறார்கள். அவர்களுக்கான எனது வழிகாட்டுதல் இது.
தொடக்கத்தில் எந்த ஆங்கில நூலை எடுத்தாலும் கடினமாகத் தான் இருக்கப் போகிறது. ஆனால் ஓராண்டில் படிக்கப்படிக்கப் பழகிவிடும். அதனால் எந்த நூலை எடுத்தாலும் சிரமமாக இருந்தாலும் எப்படியாவது படித்து முடித்துவிடப் பாருங்கள். இன்று தொடங்கினாலும் ஓராண்டு ஆகும்,
காத்திருந்து அடுத்த ஆண்டு தொடங்கினாலும் ஓராண்டு ஆகும். சிரமம் பார்க்காமல் இன்றே தொடங்குங்கள்.

எங்கே தொடங்கலாம்?
1. புதுமொழி என்பதால் வாசிக்கும் போது கடினமாகத் தான் இருக்கும். கூடவே வாசிக்கும் தலைப்பும் உங்களுக்குப் பிடிக்கவில்லை, புரியவில்லையென்றால் ஒரு வித வெறுப்பு வரும்.
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(