பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம்: 15 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் எடுத்துச் சென்றுள்ளன
உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலாளர் திரு சுதான்சு பாண்டே, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம் மற்றும்
ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டம் குறித்து காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் இன்று உரையாடினார்.
அப்போது பேசிய அவர், கடந்த காலங்களைப் போல அதே முறையில் உணவு தானியங்கள் 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கப்படும் என்றும் இதற்கான செலவு முழுவதையும்
மத்திய அரசே ஏற்கும் என்றும் கூறினார்.
இதன்படி மே 10-ஆம் தேதி வரை 15.55 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மே மாதத்தில் விநியோகிக்கப்பதற்கு இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளிலிருந்து எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறிய அவர்,
ஒரு லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை சுமார் 2 கோடி பயனாளிகளுக்கு 12 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கோதுமையின் கொள்முதலுக்காக விவசாயிகளின் நேரடி வங்கிக் கணக்கில் ரூ. 49,965 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இதுவரை சுமார் 26.3 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இவற்றில் சுமார் 18.3 கோடி பரிவர்த்தனைகள் 2020 ஏப்ரல் முதல் 2021 ஏப்ரல் வரையில் கொவிட்-19 காலகட்டத்தில் பதிவாகி இருப்பதாகவும்,
புலம்பெயர் மக்கள் இதனால் பெருமளவில் பயனடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தியாவில் மெடிக்கல் படிப்பை அங்கீகரிக்கும் தன்னிகர் அமைப்பு Medical Council of India - MCI.
இந்தியாவில் எந்தக் கல்லூரி மெடிக்கல் கல்வி கொடுக்க வேண்டுமென்றாலும், MCI தான் அங்கீகரிக்க வேண்டும். அவர்களே Sole and Final அதாரிட்டி..!
2010ல் அவர்கள்
இந்தியாவில் மெடிக்கல் படிப்பு, நாடெங்கும் ஒரே மாதிரி சீராக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அதை அப்போதைய, திமுக அங்கம் வகித்த, காங்கிரஸ் அரசாங்கம் ஒத்துக் கொள்கிறது.
அதன்படி, 2012ல் அவர்கள் மெடிக்கல் படிப்புக்கு இந்தியா முழுமைக்கும்
ஒரே நுழைவுத் தேர்வு - NEET -
இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.
இந்த இரண்டு நடக்கும் போதும், அதை ஒத்துக் கொண்ட காங்கிரஸ் அரசாங்கத்தின் பகுதியாக இருந்தது திமுக..!
அப்போது மட்டும், திமுக, "NEET கூடாது..! இல்லையென்றால் நாங்கள் அரசிலிருந்து வெளியேறுகிறோம்..!"
120 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜனை முன்னுரிமை அடிப்படையில் ஜவகர்லால் நேரு துறைமுகப் பொறுப்புக் கழகம் மற்றும் புதிய மங்களூர் துறைமுகம் கையாண்டன
இடுகை இடப்பட்ட நாள்: 10 MAY 2021 5:45PM by PIB Chennai
120 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜனை முன்னுரிமை அடிப்படையில்
ஜவகர்லால் நேரு துறைமுகப் பொறுப்புக் கழகம் மற்றும் புதிய மங்களூர் துறைமுகம் இன்று கையாண்டன.
இந்தியாவின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகமான ஜவகர்லால் நேரு துறைமுக பொறுப்புக் கழகம், நான்கு மருத்துவ தரத்திலான ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 80 மெட்ரிக் டன் மொத்த கொள்ளளவுடன் கூடிய
கிரையோஜெனிக் களன்களை கையாண்டது. ஒவ்வொரு கொள்களனிலும் தலா 20 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் இருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்டில் நிரப்பப்பட்ட இந்த ஆக்சிஜன் கொள்கலன்கள் இன்று இந்தியாவை வந்தடைந்தன.
இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பல் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன்