1.பிரபல இயக்குனரான வசந்தபாலனுக்கு, தொற்று உறுதிசெய்யப்பட்டு, ICUல் சிகிச்சை பெற்று வந்தார், தற்போது கொரோனாவிலிருந்து மீண்ட வசந்தபாலன் இயக்குனர் லிங்குசாமியை பாராட்டி நீண்ட கவிதையொன்றை எழுதியுள்ளார்.
அதன் வரிகள்,வீரம் என்றால் என்ன ?
பயமில்லாத மாதிரி நடிக்கிறது.
பழைய வசனம். Image
2.
வீரம் என்றால் என்ன தெரியுமா ?
பேரன்பின் மிகுதியில்
நெருக்கடியான நேரத்தில்
அன்பானவர்கள் பக்கம் நிற்பது
புதிய வசனம்
போன வாரத்தில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று
இரவு முழுக்க நித்திரையின்றி
இரவு மிருகமாய்
3. உழண்டவண்ணம் இருக்கிறது
விடிந்தும் விடியாமலும்
அதன் கால்கள் மருத்துவமனைத் தேடி விரைகிறது
எனைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திடம் போராடுகிறது
தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஒருவரைப் பார்க்க அனுமதிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது
4.இடையறாது சண்டக்கோழியாய் போராடுகிறது
உங்களை அனுமதித்தால் உங்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது
பரவாயில்லை சில நிமிடங்கள் அனுமதியுங்கள் என்று இறைஞ்சுகிறது
வேறு வழியின்றி முழு மருத்துவ உடைகளுடன் அனுமதிக்கப்படுகிறது
மெல்ல என் படுக்கையை ஒட்டி
ஒரு உருவம் நின்றபடியே
5.எனைப்பார்த்த வண்ணம் இருக்கிறது.
ஆண்பென்குவின் போன்று தோற்றமளிக்கிறது.
எனையே உற்றுப்பார்த்த வண்ணம் இருக்கிறது
மருத்துவரா இல்லை
செவிலியரா என்று எனக்கு வித்தியாசம் தெரியவில்லை
உள்ளிருந்து "டாக்டர்" என உச்சரிக்கிறேன்
"லிங்குசாமிடா" என்றது அந்த குரல்
அத்தனை சுவாசக்கருவிகளையும்
6.மீறி மொத்த சக்தியையும் திரட்டி
"டே! நண்பா" என்று கத்தினேன்
"பாலா" என்றான் அவன் குரல் உடைந்திருந்தது
வந்திருவடா…
"ம்" என்றேன்
என் உடலைத் தடவிக்கொடுத்தான்
எனக்காக பிரார்த்தனை செய்தான்
என் உடையாத கண்ணீர்பாறையிலிருந்து ஒரு கண்ணீர்த்துளி கசிந்தது.
தைரியமாக இரு என்று ன்னிடம்
7/8 சொல்லிவிட்டு செல்லும்போது
யாரிந்த தேவதூதன் என்று மனசு அலட்டியது.
இந்த உயர்ந்த நட்புக்கு நான் என்ன செய்தேன் என்று
மனம் முப்பது ஆண்டுகள் முன்னே பின்னே ஓடியது.
"உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா….." என்றேன்
நானிருக்கிறேன்
நாங்களிருக்கிறோம்
என்றபடி ஒரு சாமி என் அறையை விட்டு
8/8 வெளியேறியது.

கோடிக்கணக்கான நட்பின் கரங்கள் எனை அணைத்தது போன்று இருந்தது.
ஆயிரம் முத்தங்கள் லிங்கு…..
ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ்வாய்..." என பதிவிட்டுள்ளார்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with UMASANGAR

UMASANGAR Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @UMASANGAR8

17 May
1.may 18. Unforgettable day. அப்பா விண்ணுலகில் நீங்கள் நலமா? நாம் மகிழ்வாக உள்ளோம். நீங்கள் மகிழ்வாக இருங்கள். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். நீங்கள் யாரிடம் எம்மை விட்டுச்சென்றீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கா. ? தாத்தாவும் அம்மம்மாவும் ( பெரியப்பாவும் பெரியம்மாவும்) எம்மை ImageImage
2.மகிழ்வாக வைத்துள்ளனர். நீங்கள் எனக்கு சொன்ன குட்டிக்கதையை நான் உங்களுக்கு சொல்கிறேன். வானத்திலிருந்தபடி கேட்டு மகிழுங்கள். நாளைஇந்தக்கதையை கேட்டு சிரிக்க வேண்டும். ஒரு அழகான அன்பான குருவிக்குடும்பம் ஒரு காட்டுக்குள்ளே இருந்தாங்களாம். அந்த அம்மா குருவிக்கும் அப்பா குருவிக்கும்
3.ஒரு மகள் குருவியும் ஒரு மகன் குருவியும் இருந்திச்சாம் .ஒரு நாள் அந்த மகள் குருவி அப்பாவின் அணைப்பில் இருந்தபடி அப்பா அம்மாவை எப்படி திருமணம் செய்தீங்க என்று கேட்டிச்சாம். அப்பா குருவி ஒரு பாட்டு பாட தொடங்கிச்சாம். . அம்மு குருவி விழுந்து விழுந்து சிரிச்சிச்சாம். தம்பி குருவி
Read 11 tweets
3 Apr
1.ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு....

முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன்,
2. பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் 12 ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக –
3. 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் – முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள்
Read 34 tweets
2 Apr
1.தாய்குருவிமேவிதிராயர்
லெப்.கேணல் அமுதாப் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின்தளபதி லெப்.கேணல் அமுதாப் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 17 ஆண்டு காலச் சாதனைகள்…!
“சிறப்பு தளபதி லெப் கேணல் அமுதாப்.!
18 ஆம் ஆண்டில்
2. காலடி வைக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கடந்த காலச் சாதனைகளை அப்படையணியின் துணைத் தளபதி அமுதாப் விபரித்துள்ளார்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, 18 ஆம் ஆண்டில் கால் பதிப்பதனையிட்டு கடந்த வியாழக்கிழமை (10.04.08) நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசியதாவது:
இன்று நெருக்கடியான
3.கால கட்டத்தில், நெருக்கமான களங்களில் நின்று கொண்டு நெருக்கடிகளைச் சந்தித்து சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 18 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளில் சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நான் நினைக்கின்றேன்.தமிழீழ விடுதலைப
Read 44 tweets
1 Apr
1.அதி வணக்கத்துக்குரிய
இராயப்பு ஜோசெப் ஆண்டகை.
16.04.1940 - 01.04.2021

இறைபணிக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியத்துக்காகவும் அயராது உழைத்த, மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அதி வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை (80) காலமானார்.

நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், யாழ்.சம்பத்தரிசியார் Image
2.கல்லூரியின் பழைய மாணவர்.

கத்தோலிக்கச் சமூகத்துக்கு மட்டுமல்லாது, முழு ஈழத்தமிழருக்குமே ஆயரின் மறைவு பேரிழப்பு.
மன்னார் மறைமாவட்ட ஆயராக அருட்பணியாற்றிய காலப்பகுதியில், போர் என்ற போர்வையில் அரச எந்திரம் நடத்திய இனப்படுகொலையை உலகுக்குப் பறை சாற்றியவர் அவர்.மன்னார் மறைமாவட்டத்தின்
3.ஆயராக இருந்த போதும், வடக்கு, கிழக்கில் இடம் பெயர்ந்த மக்களின் துரித மீள் குடியேற்றத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போர்ச் சூழலில் பல்­வேறு நிலை­களில் துன்­பங்­களைச் சுமந்­து­நின்ற மக்களின் துய­ரங்­களைத் துடைக்க அவர் அரும்பா­டுபட்டார்.
சிறை­களில்
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(