1.may 18. Unforgettable day. அப்பா விண்ணுலகில் நீங்கள் நலமா? நாம் மகிழ்வாக உள்ளோம். நீங்கள் மகிழ்வாக இருங்கள். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். நீங்கள் யாரிடம் எம்மை விட்டுச்சென்றீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கா. ? தாத்தாவும் அம்மம்மாவும் ( பெரியப்பாவும் பெரியம்மாவும்) எம்மை
2.மகிழ்வாக வைத்துள்ளனர். நீங்கள் எனக்கு சொன்ன குட்டிக்கதையை நான் உங்களுக்கு சொல்கிறேன். வானத்திலிருந்தபடி கேட்டு மகிழுங்கள். நாளைஇந்தக்கதையை கேட்டு சிரிக்க வேண்டும். ஒரு அழகான அன்பான குருவிக்குடும்பம் ஒரு காட்டுக்குள்ளே இருந்தாங்களாம். அந்த அம்மா குருவிக்கும் அப்பா குருவிக்கும்
3.ஒரு மகள் குருவியும் ஒரு மகன் குருவியும் இருந்திச்சாம் .ஒரு நாள் அந்த மகள் குருவி அப்பாவின் அணைப்பில் இருந்தபடி அப்பா அம்மாவை எப்படி திருமணம் செய்தீங்க என்று கேட்டிச்சாம். அப்பா குருவி ஒரு பாட்டு பாட தொடங்கிச்சாம். . அம்மு குருவி விழுந்து விழுந்து சிரிச்சிச்சாம். தம்பி குருவி
4.கைதட்டிச்சாம். அப்பா குருவி தன் காதல் கதையை சொல்ல தொடங்கிச்சாம். அப்பா குருவியும் அம்மா குருவியும் ஒன்றாக மனிதாபிமான மருத்துவ வேலை செய்தாங்களாம். அப்போ அப்பா குருவி தானாம் அம்மா குருவிக்கு பெரிய குருவியாம். அம்மா குருவியை எங்கோ அழைத்துச்சென்று உரையாற்ற விட்டாங்களாம். அம்மா
5.குருவியின் கதையில் மயங்கி பல சிட்டுக்குருவிகள் பின்னால் வந்தாங்களாம். அப்போ அப்பா குருவியும் ஆசைமாமா குருவியும் என்னவோ மந்திரம் அம்மா குருவி செய்யிறா போல என சிரித்துக்கொண்டாங்களாம்.. அப்பா குருவிக்கு எல்லோரும் மரியாதை கொடுப்பாங்களாம். ஆனால் அம்மா குருவி மட்டும் அப்பா குருவியை
6.பார்த்து அச்சுப்புச்சில்லாம கதைக்கிறீங்க என்று சொல்லிடிச்சாம். அப்பா குருவி ஒருநாள் அம்மா குருவியை கேட்டுடிச்சாம். எப்படி எல்லோரும் பின்னால் எழும்பி வருகிறாங்க என்று கேட்டுடிச்சாம் .அம்மா குருவி தெரியலை என்றிடுச்சாம். அப்படி ஒரு நாள் ஒரு பைத்தியமும் வந்து அது பெரிய பகிடியானதா்
7.அப்படியே அம்மா குருவியின் வலையில் யாரும் அசைக்க முடியாத ரதிச்சித்தி குருவியும் விழுந்திடிச்சாம். அப்படியே அம்மா குருவியிடம் அப்பா குருவியும் மயங்கிடுச்சாம். ஆனால் அப்பா குருவியினதும் அம்மா குருவியினதும் காதலை பலரும் எதிர்த்தாங்களாம். ஆனால் அப்பா குருவி காதலில் பிடிவாதமாக
8.இருந்திடிச்சாம. அப்போ பெரியமாமா குருவி காதலுக்கு பச்சை கொடி காட்டிச்சாம். காதல் வென்றிடுச்சாம்,அம்முக்குட்டியும் தம்பி குட்டியும் சேர்ந்து கைகளை தட்டி சிரித்தோமாம். சின்ன குருவிகளின் கரகோசம் வீட்டுக்குள்ள மட்டும் கேட்டிச்சாம். இப்போ சின்ன குருவி இரண்டும் பெரிய குருவியாக
9.வளர்ந்திடுச்சாம். 12 வருடத்துக்கு முன்னால் வேடன் எய்த அம்பினால் அப்பா குருவி இறந்திடுச்சாம். ஆனால் சிட்டுக்குருவி இரண்டும் பெரிய குருவியாகி தமது கைகளை தட்டுகின்றனவாம். வானளவுக்கு கரகோசம் கேட்டிச்சாம். அப்பா குருவி வானில் இருந்தபடி தனது 3 பிள்ளைகளாக அம்மா குருவி, மகள் குருவி ,
10/11தம்பி குருவி என அனைவரையும் ஆசீர்வதிக்குமாம் .அப்பா குருவி கடவுளாக மாறிட்டாம். அப்பா போயிட்டு வாங்கப்பா ,இரவுக்கு வாங்கப்பா என தம்பி குருவி அடிக்கடி 12 வருடத்துக்கு முன்னால் சொல்லுமாம். இனிமேல் அப்பா குருவி நீங்கள் நேராக உயிருடன் வரமுடியாது. இரவுக்கு வானத்தில் நட்சத்திரமாக
11/11தோன்றுவீர்கள்.. உங்கள் ஆசீர்வாதத்திற்காக காத்திருக்கும் வருடத்தில் ஒருநாள் மே 18.. .
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1.பிரபல இயக்குனரான வசந்தபாலனுக்கு, தொற்று உறுதிசெய்யப்பட்டு, ICUல் சிகிச்சை பெற்று வந்தார், தற்போது கொரோனாவிலிருந்து மீண்ட வசந்தபாலன் இயக்குனர் லிங்குசாமியை பாராட்டி நீண்ட கவிதையொன்றை எழுதியுள்ளார்.
அதன் வரிகள்,வீரம் என்றால் என்ன ?
பயமில்லாத மாதிரி நடிக்கிறது.
பழைய வசனம்.
2. வீரம் என்றால் என்ன தெரியுமா ?
பேரன்பின் மிகுதியில்
நெருக்கடியான நேரத்தில்
அன்பானவர்கள் பக்கம் நிற்பது
புதிய வசனம்
போன வாரத்தில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று
இரவு முழுக்க நித்திரையின்றி
இரவு மிருகமாய்
3. உழண்டவண்ணம் இருக்கிறது
விடிந்தும் விடியாமலும்
அதன் கால்கள் மருத்துவமனைத் தேடி விரைகிறது
எனைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திடம் போராடுகிறது
தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஒருவரைப் பார்க்க அனுமதிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது
முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன்,
2. பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் 12 ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக –
3. 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் – முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.
விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள்
1.தாய்குருவிமேவிதிராயர்
லெப்.கேணல் அமுதாப் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின்தளபதி லெப்.கேணல் அமுதாப் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 17 ஆண்டு காலச் சாதனைகள்…!
“சிறப்பு தளபதி லெப் கேணல் அமுதாப்.!
18 ஆம் ஆண்டில்
2. காலடி வைக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கடந்த காலச் சாதனைகளை அப்படையணியின் துணைத் தளபதி அமுதாப் விபரித்துள்ளார்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, 18 ஆம் ஆண்டில் கால் பதிப்பதனையிட்டு கடந்த வியாழக்கிழமை (10.04.08) நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசியதாவது:
இன்று நெருக்கடியான
3.கால கட்டத்தில், நெருக்கமான களங்களில் நின்று கொண்டு நெருக்கடிகளைச் சந்தித்து சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 18 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளில் சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நான் நினைக்கின்றேன்.தமிழீழ விடுதலைப
இறைபணிக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியத்துக்காகவும் அயராது உழைத்த, மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அதி வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை (80) காலமானார்.
நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், யாழ்.சம்பத்தரிசியார்
2.கல்லூரியின் பழைய மாணவர்.
கத்தோலிக்கச் சமூகத்துக்கு மட்டுமல்லாது, முழு ஈழத்தமிழருக்குமே ஆயரின் மறைவு பேரிழப்பு.
மன்னார் மறைமாவட்ட ஆயராக அருட்பணியாற்றிய காலப்பகுதியில், போர் என்ற போர்வையில் அரச எந்திரம் நடத்திய இனப்படுகொலையை உலகுக்குப் பறை சாற்றியவர் அவர்.மன்னார் மறைமாவட்டத்தின்
3.ஆயராக இருந்த போதும், வடக்கு, கிழக்கில் இடம் பெயர்ந்த மக்களின் துரித மீள் குடியேற்றத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போர்ச் சூழலில் பல்வேறு நிலைகளில் துன்பங்களைச் சுமந்துநின்ற மக்களின் துயரங்களைத் துடைக்க அவர் அரும்பாடுபட்டார்.
சிறைகளில்