#goofymovies
ஒரு இயக்குனர் தன் வாழ்வில் சந்தித்த பத்து பெண்களின் கதைதான் பதினொரு இயக்குனர்கள் இயக்கியுள்ள “X : Past is Present (2014)” படத்தின் கதை.
ஒவ்வொரு பெண்ணின் கதையையும் 10 நபர்கள் எழுதி, இயக்கி இருக்கிறார்கள். ஆக , படம் பல்வேறு நபர்களின் ஒரு கூட்டுப்பார்வை. இப்படி ஒரு விசித்திரமான ஐடியாவிற்கு உரிமையாளர், விமர்சகரும், இயக்குனருமான சுதிஷ் கமாத்.
திரைப்பட திருவிழா ஒன்றில் இயக்குனர் கே என்கிற கிஷனை சந்திக்கிறார் ஒரு பெண். இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து காலை பத்து மணி வரை அந்தப்பெண்ணுடன் கிஷன் பேசும் உரையாடல் தான் படம். காதல், காமெடி, காமம், ஹாரர், ஃபேன்டசி என சினிமாவின் பல வகைகளை கலந்து எடுக்கப்பட்டு இருக்கிறது X.
சிறுவயதில் கே தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் சந்திக்கும் பெண்ணில் இருந்து, அவரது முதல் படத்திற்கு உதவும் பெண், பள்ளிப்பருவ காதலி, மனைவி என பலரது வாழ்க்கையை வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்து இருக்கிறார்கள் இந்தியாவின் new-gen இயக்குனர்கள்.
கல்கத்தாவில் இருக்கும் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்க செல்கிறான் கே. அங்கு ஸ்டூடியோவில் இரவு வேலை பார்ப்பதால், பகலில் மட்டும் வீடு தேவைப்படுகிறது. காலையில் அலுவலகத்திற்கு செல்லும் ஒரு பெண் இரவுதான் வீடு திரும்புகிறாள். இருவருக்கும் ஒரே வீட்டை வாடகைக்கு விடுகிறார் வீட்டின் உரிமையாளர்
இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலே ஆறு மாதம் அந்த வீட்டில் தங்குகிறார்கள். திடீரென ஒருநாள், கிஷன் ஏதோ அவசர நிகழ்விற்காக கல்கத்தாவை விட்டு செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. அந்தப்பெண் கதறி அழுவதோடு அந்தக்கதை முடிகிறது. இப்படி படம் முழுக்க காதலும், காமமும் கலந்து இருக்கிறது.
தனித்தனி படம் என்பதால் San Franciscoவில் ஒரு கதை, லண்டனில் ஒரு கதை என ஒவ்வொரு இயக்குனரும் colourful ஆக எடுத்து இருக்கிறார்கள். முழுப்படமும் இரண்டு நாட்களில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் படத்தை எடிட் செய்து ஒரு கோர்வையாக மாற்ற மட்டும் ஒரு ஆண்டு காலம் ஆகி இருக்கிறது.
முழுப்படத்தையும் ஸ்ரீகர் பிரசாத்தும், விஜய் பிரபாகரனும் எடிட் செய்து இருக்கிறார்கள்.
பல கதைகள் பின்னிப்பிணைந்து இருப்பதால், படம் சற்றே தலை சுற்ற வைக்கும். சினிமா ஆர்வலர்கள், வித்தியாச சினிமா பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பா பார்க்கலாம்.
நன்றி : விகடன்.
படம் telegram channelல இருக்கு.
Channel ID :
love_t_read
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"இந்தியாவில் எத்தனை மனிதர்கள் வாழ்ந்தார்களோ, அத்தனை வகை மகாபாரதம் இருக்கிறது." என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்து வடிவிலும், செவி வழியாகவும் பல வடிவங்கள் கூறப்பட்டு வந்துள்ளன.
எண்ணற்ற கதாபாத்திரங்களையும், பல சிக்கல்களையும் காரண காரியத்தோடு கதைகள், உபகதைகள், கிளைக்கதைகள், பின்கதை என பல அடுக்குகளினூடு குழப்பம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கும். மகாபாரதம் தொடர்புடைய புத்தகங்கள் பற்றிய தொகுப்பு இது.
1. வெண்முரசு: ஜெயமோகன்
7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது.
#BiggBoss6Tamil இல் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள் பற்றிய thread.
#goofybooks
தஞ்சாவூர் - குடவாயில் பாலசுப்ரமணியம்
இந்த நூல் கி.பி. 600-ல் ஆரம்பித்து 1850 வரையிலான தஞ்சாவூரின் வரலாற்றைக் கல்வெட்டுகள், கோயில் கலை முதலான ஆதாரங்களைக் கொண்டு அரிய தகவல்கள், படங்களுடன் பேசுகிறது.
ஆபிரகாம் பண்டிதர் - நா. மம்மது
'தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை' என்று நிரூபித்த, தன் தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை ‘கருணாமிர்த சாகரத் திரட்டு’ என வெளியிட்ட, பல்துறை விற்பன்னரான ஆபிரகாம் பண்டிதர் பற்றிய புத்தகம்.