இவர் இளவயதில் தற்கொலைக்கு முயன்று அதில் உயிர்பிழைத்தவர்.. தற்போது அமெரிக்காவில் தற்கொலை தடுப்பு சமூக ஆர்வலராக பிரபலமாக இருப்பவர்..
10 வயது இருக்கும் போது வலிப்பு நோய் (epileptic seizures) காரணமாக மருந்துகள் சாப்பிட ஆரம்பித்தார்.. 16 வயது வரை அந்த மருந்துகள் சாப்பிட்டவர் வலிப்பு நோய் குணமடைந்ததால் அந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திவிட்டார்..
ஆனால் அந்த மருந்துகளின் பக்கவிளைவுகளாக மனச்சோர்வு (depression) மற்றும் இருமுனையப் பிறழ்வு (bipolar disorder) அவருக்கு வந்திருப்பதை அவர் அறியவில்லை..