கோவில் நிலங்களை குறைந்த வாடகைக்கு விடக்கூடாது: நிலுவை தொகையை வசூலிக்கவும் வலியுறுத்தல்
சென்னை :''கோவில் நிலங்களை வைத்து என்ன செய்யலாம் என்பது, அறங்காவலர் அதிகாரத்திற்கு உட்பட்டது; அரசு பொதுவான வழிகாட்டுதலை மட்டுமே தர முடியும்.
கோவில் இடத்தை குறைந்த வாடகைக்கு விடுகிறோம் என சொல்வது, சந்தனக்கட்டை வைத்து கொண்டு அடுப்பு எரிக்கலாம் என்று சொல்வது போன்றது,'' என, ஆலயவழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:வடபழநி ஆண்டவர் கோவிலுக்குச் சொந்தமான, 300 ரூபாய் கோடி மதிப்பி லான, 5.52 ஏக்கர் நிலத்தை, அறநிலையத்துறை அமைச்சரும், கமிஷனரும் தனிக்கவனம் செலுத்தி மீட்டது, மகிழ்ச்சி அளிக்கும் செயல்.
'கோவில் நிலங்களை யார் ஆக்கிரமித்திருந்தாலும், அவை மீட்கப்பட்டு, கோவில் வசம் ஒப்படைக்கப்படும்' என, அமைச்சர் கூறியுள்ளார். அதையும் வரவேற்கிறோம்.அதேசமயம், அறநிலையத்துறை அமைச்சர், கமிஷனருக்கு சில விஷயங்களை கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
பெரும் நஷ்டம்
* கோவில் நிதி, விழாக்கள், பூஜைகள் போன்றவை அரசின் அதிகாரத்தின் கீழ் வராது. கோவில் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவாறும், ஆகம முறைப்படியும், அறங்காவலர்கள் அதிகாரத்தின் கீழ் வருபவை.
அதுபோல, கோவில் நிலங்களை வைத்து, என்ன செய்ய வேண்டும் என்பது, அறங்காவலர் அதிகாரத்தின் கீழ் வரும். இதில், அரசு ஒரு பொதுவான வழிகாட்டுதலை மட்டுமே, சட்டப்பூர்வமாக செய்ய முடியும்.
கோவில் சொத்துக்களின் ஆக்கிரமிப்பை நீக்க, அறநிலையத்துறை சட்டத்தில், இணை கமிஷனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதனால், ஆக்கிரமிப்பு குறித்து அறங்காவலர் முறையிட்டால், அவற்றை நீக்க வேண்டியது இணை கமிஷனரின் கடமை.
கடந்த, 10 ஆண்டுகளாக தக்கார் முறையிட்டும் செய்ய வில்லை; தற்போது செய்திருக்கிறார்கள்.
வாடகை பாக்கி
* கடந்த, 15 ஆண்டுகளாக மீட்கப்பட்ட, கோவில் நிலங்களுக்கான பழைய வாடகை பாக்கியை வசூலிக்க, அறநிலையத் துறை நடவடிக்கை எடுப்பதே இல்லை.
இது, கோவில்களுக்கு மிகப் பெரிய நஷ்டத்தை தொடர்ந்து அளித்து வருகிறது.
அறநிலையத்துறை சட்டப்பிரிவு, '79- -சி' யில், கலெக்டருக்கு இணையான அதிகாரம் இணை கமிஷனருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இதை பயன்படுத்தி, ஜப்தி நடவடிக்கை எடுத்து, வாடகை, குத்தகை தொகையை, இணை கமிஷனர் வட்டியுடன் வசூலிக்க வேண்டும். இதைச் செய்ய தவறிய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது, அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தன கட்டையால்?
*மீட்கப்பட்ட மதிப்புமிக்க இடங்களுக்கு, அந்த இடத்தின் தன்மைக்கேற்ப வாடகை பெறுவது தான் நல்லது. அத்தகைய சிறப்பான வருமானம் வாயிலாக, கோவில்கள், மிக அதிக அளவில் அறச்செயல்கள் செய்யலாம்.கோவில் இடத்தை குறைந்த வாடகைக்கு விடுகிறோம் என்று சொல்வது,
சந்தனக்கட்டை வைத்து, ஒரு அடுப்பு எரிக்கலாம் என்று சொல்வது போன்றது. சந்தன கட்டைகளின் உண்மையான விலையை பெற்றால், பலரது வீடுகளில் அடுப்பு எரியும்; அவர்கள் வாழ்வு நலம் பெரும்
* மீட்கப்பட்ட நிலங்களை, கோவில் அறங்காவலர்கள், சிறப்பான வருவாய் பெறும் வகையில், வங்கி உத்தரவாதத்துடன் குத்தகை விடலாம் அல்லது ஹிந்து அமைப்புகளுக்கு நியாய வாடகைக்கு கொடுக்கலாம்.
அங்கே, ஹிந்து பள்ளிக்கூடங்கள், தொழிற்கல்வி நிலையங்கள் அல்லது ஹிந்து மருத்துவமனைகளை நடத்தும்படி, அவர்களிடம் சொல்லலாம். இதனால், கோவிலுக்கும் நியாயமான வாடகை வரும். ஆயிரக்கணக்கான ஹிந்து ஏழைகள், கல்வி, மருத்துவ வசதிகளை குறைந்த செலவில் பெறுவர்.
பொன்னான வாய்ப்பு
*கோவில் நிலங்களை யார் ஆக்கிரமித்தாலும், அவை மீட்கப்படும் என்று, அமைச்சர் கூறியுள்ளது நம்பிக்கை அளிக்கிறது. தற்போது, அத்தகைய மிக மதிப்புள்ள, ஆனால், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் பல உள்ளன.
அதன்படி, திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் பரணி தீப கட்டளையின், 500 கிரவுண்ட் நிலம் சென்னை அடையாறிலும்; 175 கிரவுண்ட் நிலம் ராயப்பேட்டையிலும் உள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 250 கிரவுண்ட் நிலங்கள் கிரீன்வேஸ் சாலையிலும்; 150 கிரவுண்ட் நிலங்கள் லஸ் சர்ச் சாலை, ராமகிருஷ்ணா சாலையிலும் உள்ளன.காஞ்சிபுரம், ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 141 கிரவுண்ட் நிலம் மீட்கப்படாமல் உள்ளது.
கோடம்பாக்கம், பாரத்வாஜேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 350 கிரவுண்ட் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த ஒரு கோவிலுக்கு மட்டும், 60 கோடி ரூபாய் வாடகை பாக்கி வரவேண்டியுள்ளது.
இவை அனைத்தும் சிறிய உதாரணங்கள் மட்டுமே. இந்த நிலங்கள் எல்லாம் மீட்கப்பட வேண்டும்.
வாடகை நிலுவை வசூல் செய்யப்பட வேண்டும். மீட்ட நிலங்களுக்கு உரிய வாடகை பெற்று, கோவில்கள் சிறப்பான அறச்செயல்கள் செய்ய வேண்டும்.தமிழகம் முழுதும், இது போன்று செய்ய, அறநிலையத்துறை அலுவலர்களை முடுக்கி விட, அரசுக்குப் பொன்னான வாய்ப்பு வந்துள்ளது.
இப்படிச் செய்தால், ஹிந்து மக்களிடம் மிகப்பெரிய நற்பெயரை, இந்த அரசு சம்பாதிக்கும். எந்த மாநில முதல்வரும், இதுவரை பெறாத நற்பெயரை முதல்வர் ஸ்டாலின் பெறுவார்.
லட்சம் பேருக்கு வேலை
* சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த சிறப்பான தீர்ப்பு, அரசு கோவில் நிலங்களை மீட்க ஓர் உறுதுணையாக உள்ளது. இந்த தீர்ப்பைப் பின்பற்றி, அரசு செயலாற்றினாலே போதும்; கோவில்கள் மீண்டும் செழிக்கும்.
நியாய வாடகை வருமானம் கொண்டு, கோவில் அறங்காவலர்கள், பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள், கோசாலைகள், சிற்பக்கல்லுாரி, ஓவியக் கல்லுாரி, கோசாலையுடன் கூடிய கால்நடை மருத்துவமனைகள் போன்றன அமைக்கலாம்.
இந்த அறச்சாலைகள் வழியாக, கோவில்கள் குறைந்தது, ஒரு இலட்சம் ஹிந்துக்களுக்கு நல்ல சம்பளத்துடன் தமிழகம் எங்கும் வேலை வழங்கலாம்.இதற்கு வழிவகுத்து கொடுத்து, கோவில் அறங்காவலர்களுக்கு சிறப்பாக உதவி செய்தால், அரசுக்கு மிகச் சிறந்த நற்பெயர் கிட்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
எந்த ஒரு நாட்டில் வீரர்களும் அறிஞர்களும் நிரம்ப இருக்கிறார்களோ அந்த நாட்டை எளிதில் அடிமைப் படுத்தவோ வீழ்த்தவோ முடியாது.
இது உண்மை.
முதன்முதலில் மொகலாயர்கள் பாரதத்தின் மீது படையெடுத்து வந்தபோது எண்ணற்ற போர் வீரர்கள் இருந்தனர்.அறிவில் சிறந்த பிராமணர்கள் கல்வியையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து போதித்து வந்தனர்.
முதலில் வந்த முகமது பின் காசிம் முதலில் செய்ய விழைந்தது பிராமணர்களுக்கு சுன்னத் தான்.அவர்கள் மறுத்ததால் 17வயதுக்கு மேலுள்ளவர்கள் கொல்லப்பட்டனர் என்ற வரலாற்றுக் குறிப்பை அம்பேத்கர் கூறுகிறார்.
லஞ்சப் புகாரில் கைது செய்யப்படுபவர்கள் குற்ற வழக்கில் விடுவிக்கப்பட்டதைக் காரணம் காட்டி, துறை ரீதியிலான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், துறைமுக அதிகாரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் துணை தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியவர் வி.பிரபாகர். லஞ்சப் புகாரில் இவரை 2013-ம் ஆண்டு சிபிஐ கைது செய்தது. அதையடுத்து இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு சிபிஐ நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கொரோனாவை கையாளுவதில், தமிழக அரசு காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது. ஆனால், மற்ற செயல்பாடுகள் பாராட்டும்படி இல்லையே!மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என அழைக்க வேண்டுமாம்.
தமிழை, மத்திய ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமாம். இதெல்லாம் இன்றைய சூழலில் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும் செயல்கள்.
வரிப்பணத்தை, ரேஷன் கடைவழியாக மக்களுக்கு வாரி வழங்குவது, ஆளுங்கட்சியின் சாதனை அல்ல. திராவிட ஆட்சியாளர்கள் யார் வந்தாலும், செய்யும் காரியம் தான்.
புதிய ஆட்சியாளர்களிடம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவற்றை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கோவில் சொத்தை எடுத்து, தவறாக பிரயோகம் செய்வது; ஹிந்திக்கு எதிராக செயல்படுவது போன்றவற்றை, மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
*கல்விச்செல்வத்தை குறைவில்லாது வாரி வாரி வழங்கும் ஸ்ரீ யோக ஹயக்ரீவமூர்த்தி கோவில்.*
🙏🇮🇳1
*அக்காலத்தில் சரியான சாலைகள் இல்லாததாலும், போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததாலும், செங்கல்பட்டு அருகே செட்டிப்புண்ணியம் என்ற சிற்றூர் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாக, மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாத பகுதியாக இருந்தது. 🙏🇮🇳2
இதனால் ஆங்கிலேயர்களிடம் இருந்து, இந்து கடவுள் சிலைகளை பாதுகாக்க, இந்த ஊரை நம் முன்னோர்கள் தேர்வு செய்தனர்.*
பல புகழ்பெற்ற ஊர்களில் உள்ள கோவில் விக்கிரகங்கள் இங்கு மறைத்து வைக்கப்பட்டன.
ஸ்ரீமடத்தில் மாலை வேளை தரிசனம். மகானை, பக்தர்கள் ஏகாந்தமாகத் தரிசித்துக் கொண்டு இருந்த சமயம் மகாபிரபு அருளுரை நல்க, அதை மெய்மறந்து மக்கள் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
இந்த நேரத்தில் மகான், "அடடா விளக்கு அணைந்து போயிற்றே...யானை மிரள்கிறதே" என்று சற்று பதறியதைப் போல் சொல்ல...உடனிருந்த அனைவரும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்
"என்ன விளக்கு? எங்கே யானை?" என்று அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை..
அருகில் இருந்த ஒருவரை அழைத்து, "திருவனந்தபுரத்தில் உள்ள ரப்பர் போர்டு சுவாமிநாத அய்யருக்கு போன் போட்டு எல்லாம் நல்லபடியா நடக்கிறதான்னு கேள்" என்றார் பெரியவா.
இந்திய அரசியல்... இந்திய அரசியல் சாசனத்தில் 'ஒன்றிய அரசு' என குறிப்பிடப்பட்டுள்ளதா? பா.ஜ.க தலைவர் SG சூர்யா விளக்கம்!
தி.மு.க-வினர் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக மத்திய அரசு என்ற ஒன்றே இல்லை என்றும், இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதால் ஒன்றிய அரசு என்றே அழைக்க வேண்டும் என்றும் பிரிவினையை ஊக்குவிக்கும் வண்ணம் பேசி வருகின்றனர்.
இது உண்மையா என்று ஆராய்ந்து நடுநிலையுடன் செய்தி வெளியிட வேண்டிய ஊடகங்களும் தி.மு.க-வினரின் பொய்ப் பிரச்சாரத்தையே தொடர்கின்றன. உண்மையிலேயே அரசியல் அமைப்புச் சட்டத்தில் 'ஒன்றிய அரசு' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறதா? மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதை பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?