ஒருமுறை கயிலை மலைக்குச் சென்று தவம் புரிந்தான் ராவணன். அவன் தவத்தை மெச்சிய சிவபெருமான்,அவனுக்கு முன் காட்சி தந்தார். "உனக்கு வேண்டியதைக் கேள்"என்றார். "அடியேன் வாழும் இலங்கையும் நானும் என்றுமே அழியாவண்ணம் அருள் புரியவேண்டும்"என்றான்.இவன் மொழிகேட்ட கருணை வள்ளலான ஈசன்,
அவனிடம் ஒரு சிவலிங்கத்தைக் கொடுத்து,"இதனை அருமையுடன் ஆராதித்து வா.ஆனால் ஆசாரத்தின் பொருட்டு இவைகளை எந்த வாஹனத்திலும் ஏற்றாமலும்,கீழே வைக்காமலும் எடுத்துச்செல்" என்றார்.இப்படி ஆசார அனுட்டானத்துடன் கொண்டு சென்று, இலங்கையில் ஸ்தாபித்தால் நீயும் அழிய மாட்டாய்,இலங்கையும் அழியாது.
ஆனால் எங்கேனும் கீழே வைத்தால்,லிங்கத்தை எடுக்கமுடியாது.அது அங்கேயே ஸ்தாபிதமாகிவிடும்"என சிவபெருமான் மொழிந்தார்.
உடனே ராவணன் அந்த சிவலிங்கத்தினை கையில் ஏந்தி தெற்கு நோக்கி நடந்து வந்தான்.இதைத் தேவர்கள் கண்டு நடுநடுங்கினர். இவன் ஏற்கனவே நமக்கு, சொல்லொணாத் துயரம் தருகின்றான்.
இந்த லிங்கம் ராவணனின் தலைநகருக்குச் செல்லாமல் தடுப்பது எப்படி என்று ஆலோசித்தனர். இவன் இலங்கைக்கு இதை, கொண்டு சென்றால் நமக்கு எல்லாம் முன்னை விட அதிக உபத்திரவம் செய்வான் என்று அஞ்சினர். முழு முதற்கடவுளான விநாயகனை வேண்டி வழிகாணுவோம் என்று விரைந்தோடினர்.
அவர்களைப் புன்சிரிப்புடன் வரவேற்றார் கணேசப்பெருமான். "பெருமானே! மகா துஷ்டனான ராவணன் ஒரு சக்திவாய்ந்த லிங்கத்தினை இலங்கையில் பிரதிஷ்டை செய்ய விரைந்துச் செல்கிறான். அவனைத் தடுத்து நிறுத்தி,இலங்கைக்கு அந்த லிங்கம் போகா வண்ணம் அருள்பாலிக்க வேண்டும்"என வேண்டினர்.
உடனே பிள்ளையார் வருணனை அழைத்தார். "நீ உடனே சென்று ராவணனின் வயிற்றில் புகுந்து, சலோபாதியை (மல,மூத்ர விசர்ஜன நெருக்கடி) உண்டாக்கவேண்டும். யாம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அவன் வயிற்றில் இருக்கவும்"என்றார். வருணனும் அவ்வாறே செய்தான்.
இதற்கிடையில் தேவர்களும் கண்டு வியக்கும் வண்ணம், விநாயகப் பெருமானும் ஒரு அழகிய அந்தணச் சிறுவன் வடிவம் கொண்டு ராவணனை பின் தொடர்ந்தார். ராவணன், காலைக்கடன் முடிக்கும் நெருக்கடிக்குள்ளானான். யாராவது ஆள் கிடைத்தால் அவன் தலையில் சிவலிங்கத்தை வைத்துவிட்டு,குளத்தையோ ஏரிக் கரையையோ
நோக்கி ஓடலாமே என்று எண்ணி சுற்றிப் பார்க்கையில் விநாயகப் பெருமான், கையிலேந்திய தண்டமுமாக, ஒரு பிரம்மாச்சரியைப் போல ராவணன் முன் தோன்றினார். "சிறுவனே! நீ தூய்மை உடைய பிரம்மச்சாரியாக காணப்படுகிறாய். நான் காலைக்கடன்களை செய்துவரும்வரை இச்சிவலிங்கத்தினை நீ வைத்திரு.
ஸ்நானம் முதலிய சுத்தம் இல்லாதவர் இதைத் தொடக்கூடாது. தரையிலும் வைக்கக் கூடாது" என்றான். பிள்ளையாரும்,"ஓ செய்கிறேன். ஆனால் நேரம் தாழ்த்தக்கூடாது. நான் நேரம் ஆகிவிட்டால் மூன்று முறை கூப்பிடுவேன்.அதற்குள் வராவிட்டால், வாங்கிக் கொள்ளாவிடில் கீழே வைத்துவிடுவேன்"என்றார்.
ராவணன்,"இதோ ஒரு நொடியில் திரும்புவேன்" என்று சொல்லி ஓடினான்.ஆனால் அவன் வயிற்றுக்குள் இருந்து வருணன் குடைந்தான். நேரம் போனதே தெரியவில்லை. விநாயகரும் முன்று முறை கூப்பிட்டுவிட்டு, சிவலிங்கத்தினை சுத்தமான தரையில் வைத்துவிட்டார்.
அதற்குப் பின் ராவணன் வயிற்றில் இருந்த வருணன், தன் இடத்திற்குப் போய் சேர்ந்தார். ராவணன் திரும்பி வந்தான். பிரம்மச்சாரி (விநாயகன்) கையில் சிவலிங்கம் இல்லாமைக் கண்டு திகைத்தான். பதறினான். சிவலிங்கம் எங்கேடா? என்றான். அதற்கு அந்தப் பையன்,
"நானோ துர்பலனுள்ள சிறுவன்.நெடுநேரம் ஆகியும் நீங்கள் வராததால், உன்னை மூன்று முறை கூப்பிட்டேன். அப்படியும் உம்மைக் காணமாட்டோமாய் அந்த இடத்தில் வைத்துவிட்டேன். நீவீர் அதை எடுத்துக்கொண்டு போம்" என்றான்.ராவணனுக்கு ஒரே கோபம். விழிகளை உருட்டினான்.பிள்ளையாரை மிரட்டினான்.அதட்டினான்.
"அவசர புத்திக்காரனே! இன்னும் சிறிது நேரம் பொறுக்கக்கூடாதா?" என்று சொல்லிக்கொண்டே கயிலை மலையையே பெயர்த்தெடுத்த எனக்கு இந்த சின்ன சிவலிங்கம் ஒரு பொருட்டா? என்று எண்ணி அதைத் தூக்க முயற்சித்தான். அதுவோ பாதாளம் ஏழினும் கீழே படந்து வேரூன்றிவிட்டது.அதை பலம் கொண்ட மட்டும் இழுத்தான்.
ஒரு பக்கம் மட்டும் பசுவின் காதினைப் போல இழுபட்டு உருக்கொண்டது. ஆயினும் அது இருந்த இடத்தைவிட்டு அகலவில்லை. அந்த இடத்திலேயே அதை விட்டுச் சென்றான்.இன்று வரை அந்த இடம் கோகர்ணம் (பசுவின் காது) என்றே
அழைக்கப்படுகிறது. சிவனுக்கு 'மஹாபலநாதன்' என்ற பெயர் ஏற்பட்டது.
ராவணன் அச்சிறுவனைப் பார்த்து,"அடா! உன்னாலன்றோ இக்கேடு உண்டாயிற்று" என்று சொல்லி அவன் தலையில் குட்டவே, விநாயகப் பெருமான் சுயரூபம் கொண்டார். யானை முகத்துடன் தோன்றி துதிக்கையினால் அவனைப் பிடித்து கரகரவென்று சுழற்றி, விண்ணுலகம் வரை செல்லுமாறு தூக்கி வீசினார்.
அவன் மேலே சென்று தலைகீழாக கீழே விழுகையில் அவனைப் பிடித்து மீண்டும் தூக்கி எறிந்தார். இவ்வாறு பலமுறை பிள்ளையார் அவனைப் பந்தாடினார். ராவணனுக்கு மூச்சு முட்டியது. "என்னை மன்னிக்க வேண்டும்"என்று பலமுறை சொல்லிக் கதறினான்.உடனே விநாயகப் பெருமான் பந்தாடுதலை நிறுத்தி,
அவனை பூமியில் இறக்கினார்.ராவணன் நடுநடுங்கி,விநாயகப் பெருமானை துதித்தான்.தவறுக்காக நெற்றியை பலமுறை நிலத்தில் மோதி மன்னிப்புக்கேட்டான்.அவரும் தயைக்கூர்ந்து,"உன்னை மன்னிக்கிறேன்.நீ இப்போது குட்டிக்கொண்டது போல யார் குட்டிக் கொள்கிறாரோ,அவர் குறைகளை எல்லாம் போக்குவேன்"என்றும் கூறினார்.
ராவணனைப் பிள்ளையார் பந்தாடிய கதை, கணேசப்புராணத்தில் இப்படி சுவைப்பட சொல்லப்பட்டிருக்கிறது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

21 Jun
விருந்தின னாக ஒருவன்வந் தெதிரில்
வியத்தல்நன் மொழியினி துரைத்தல்
திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல்
எழுதல்முன் மகிழ்வன செப்பல்
பொருந்துமற் றவன்தன் அருகுற இருத்தல்
போமெனிற் பின்செல்வ தாதல்
பரிந்துநன் முகமன் வழங்கலிவ் வொன்பான்
ஒழுக்கமும் வழிபடு பண்பே. Image
விருந்தினர்களை உபசரிப்பது என்பது நமது பண்பாடு."விவேக சிந்தாமணி"சொல்லித் தருகிறது,நாம் விருந்தினர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்று.

வியத்தல்:
விருந்தினரை ஆவலோடு,ஆச்சரியத்தோடு வியந்து நோக்க வேண்டும்.எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து வந்தீர்களே.அதுவே பெரிய சந்தோஷம் எனக்கூறுதல்.
நன்மொழி உரைத்தல்:
நல்ல வார்த்தைகளை இனிமையாகச் சொல்லவேண்டும்.
வீட்டில் அனைவரும் நலமா?உங்கள் உடம்பு நலமா?என விசாரித்தல்

திருந்துற நோக்கல்:
நன்மொழி உரைக்கும்பொழுது,கனிவான அன்பான பார்வை அவர்கள் முகத்தின்மேல் இருக்க வேண்டும். விதியே என சொல்லக்கூடாது.
அவர்களை நன்றாகப் பார்க்கவேண்டும்.
Read 7 tweets
20 Jun
நாலு வகை கோபக்காரர்கள் இருக்கிறார்கள். இதை ஒரு சம்ஸ்கிருதப் பாடல் அழகாக வருணிக்கிறது. உலகில் சம்ஸ்கிருதத்தில் இல்லாத விஷயம் எதுவுமே இல்லை.
 
உத்தமே ச க்ஷணம் கோப: மத்யமே கடிகாத்வயம்
அதமே ஸ்யாத் அஹோராத்ரம் பாபிஷ்டே மரணாந்தக: || Image
கடிகா என்றால் 24 நிமிடங்கள்
க்ஷணம் என்றால் ஒரு நொடி/வினாடி
 
முதல்தரமான மனிதர்களிடத்தில் ஒரு நொடிப்பொழுதுதான் கோபம் நீடிக்கும். குணக்குன்றாக விளங்கும் முதல்தர (உத்தம) மக்களிடையே கோபம், ஒரு நொடிப்பொழுதில் தோன்றி மறைந்துவிடும்.
இதற்கு அடுத்த (மத்தியம) தரத்திலுள்ளோர் கோபம் இரண்டு கடிகை (48 நிமிடங்கள்) இருக்கும்.
 
கடைத்தரத்திலுள்ளோர் கோபம் ஒரு நாள் முழுவதும்(24 மணிநேரம் நீடிக்கும். இதை சம்ஸ்கிருதத்தில் அஹோராத்ரம் (பகல்+ இரவு) என்பர்.
Read 4 tweets
20 Jun
தஞ்சாவூரில் மகத்தான கோவிலை நிர்மானித்த ராஜராஜசோழன், அந்தக் கோவில் கட்டும் வேலை நடைபெற்றபோது அதனை மேற்பார்வையிடச் சென்றான்.ஒரு ஆள் மிகவும் கஷ்டப்பட்டு கற்களை உடைத்து அவைகளை சரியான அளவுக்கு வெட்டிக் கொண்டிருந்தார். மன்னன் அவன் அருகில் சென்று,"ஐயா, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" Image
என்று கேட்டான்.அதற்கு அவன்,"மன்னா வணக்கம்! நான் கல் உடைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் பணிவாக.மன்னன் சிறிது தூரம் நடந்தான். மற்றொருவன் அதேப் பணியை செய்துகொண்டிருந்தான். "ஐயா என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?என்று கேட்டார். அவன் சொன்னான்,"மன்னா வணக்கம்!நான் கல் உடைத்து
சம்பாதித்து,குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன்" என்றான் பணிவாக.மன்னன் மேலும் சிறிது தூரம் நடந்தான். மற்றொருவன் அதே பணியைச் செய்துகொண்டிருந்தான். "ஐயா என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்"என்று கேட்டான். அவன் பதில் சொன்னான்,"மன்னா வணக்கம்! நான் கல் உடைத்து அவைகளைக் கொண்டு,
Read 6 tweets
18 Jun
மந்திரங்களை அனைவரும் கற்கலாமா? மந்திரங்களை புத்தகத்திலிருந்து படிக்கலாமா? இந்தக் கேள்விகளுக்கு, சிருங்கேரி சங்கராசார்யார் ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானதா சிவஅபிநவ நரசிம்மபாரதி சுவாமிகள் ஒரு சுவையான கதை மூலம் பதில் தந்துள்ளார்.
ஒரு பக்தர் இந்த கேள்வியைக் கேட்டார்.

பக்தர்: சுவாமிகளே!ஏன் சில மந்திரங்களை ஒருசில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று சொல்லுகிறீர்கள்? ஏன் ஒருசில தகுதி அல்லது நிலையிலுள்ளவர்கள் மட்டுமே படிக்கலாம் என்று விதிமுறைகள் விதித்துள்ளனர்?
சுவாமிகள்: யாருக்காக ஒரு மந்திரம் உருவாக்கப்பட்டுள்ளதோ,அவர் சொல்லும்போதுதான் அது மந்திரம். மற்றவர் சொன்னால் அது வெறும் சப்தங்களின் தொகுப்புதான்.

பக்தர்: அது எப்படி? மந்திரங்களும் சப்தங்களின் தொகுப்புதானே?

சுவாமிகள் பதில்: சப்தங்களின் தொகுப்பு எல்லாம் மந்திரம் ஆகிவிடாது.
Read 14 tweets
5 Jun
#ஜென்_குட்டிக்கதை

ஒரு ஜப்பானிய மன்னன் பலரையும் அணுகி,சுவர்க்கம் - நரகம் என்றால் என்ன என்ற கேட்டுவந்தான். யாரிடமிருந்தும் அவனுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை.
மன்னனின் மந்திரி,"ஒரு ஜென் மாஸ்டர் இருக்கிறார்.அனைத்தையும் உணர்ந்தவர்.அவரிடம் சென்று நீங்கள் கேட்டால்,உங்களுக்குத் திருப்தியான பதில் கிடைக்கும்” என்றார். மன்னனும் அந்த ஜென் மாஸ்டரிடம் சென்று தனது வழக்கமான கேள்விகளைக் கேட்டான்.
ஜென் மாஸ்டர் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார்.
பின்னர் மன்னனை நோக்கி,"என்ன முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கிறாய் நீ! அகம்பாவம் பிடித்தவனே! உன்னைப் போன்ற ஒரு முட்டாளையும் அவலட்சணமானவனையும் நான் பார்த்ததில்லை” என்று வெறுப்புத் தொனிக்கும் குரலில் கூறினார்.

மன்னன் அதிர்ச்சியுற்றான்.அவனிடம் இப்படி யாருமே பேசியதில்லை.
Read 6 tweets
21 May
ஒரு முறை ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர் மற்றும் அர்ஜுனன் ஆகிய மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது நேரங்கடந்து நள்ளிறவு ஆகிவிட்டதால், மூவரும் ஒரிடத்தில் தங்கி உறங்கி விட்டு, விடிந்த பின் செல்லலாம் என்று முடிவெடுத்தனர்.
காட்டில் கொடிய மிருகங்கள் இருக்கும் காரணத்தினால், மூவரும் ஒரே நேரத்தில் உறங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவர் உறங்காமல் மற்ற இருவருக்கும் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அதன்படி முதலில் அர்ஜுனன் காவல் இருக்க ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்க ஆரம்பித்தனர். Image
அப்போது திடீரென ஒரு புகை மண்டலம் தோன்றியது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிவந்தது. அகன்ற நாசியும்,கோரப் பற்களும்,பெரிய கண்களுமாக இருந்தது அவ்வுருவம். ஒரு மரத்தடியில் பலராமரும், ஸ்ரீகிருஷ்ணரும் தூங்குவதையும், அவர்களுக்கு அர்ஜுனன் காவல் இருப்பதையும் கண்டது அவ்வுருவம். Image
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(