ஒரு முறை ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர் மற்றும் அர்ஜுனன் ஆகிய மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது நேரங்கடந்து நள்ளிறவு ஆகிவிட்டதால், மூவரும் ஒரிடத்தில் தங்கி உறங்கி விட்டு, விடிந்த பின் செல்லலாம் என்று முடிவெடுத்தனர்.
காட்டில் கொடிய மிருகங்கள் இருக்கும் காரணத்தினால், மூவரும் ஒரே நேரத்தில் உறங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவர் உறங்காமல் மற்ற இருவருக்கும் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அதன்படி முதலில் அர்ஜுனன் காவல் இருக்க ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்க ஆரம்பித்தனர். Image
அப்போது திடீரென ஒரு புகை மண்டலம் தோன்றியது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிவந்தது. அகன்ற நாசியும்,கோரப் பற்களும்,பெரிய கண்களுமாக இருந்தது அவ்வுருவம். ஒரு மரத்தடியில் பலராமரும், ஸ்ரீகிருஷ்ணரும் தூங்குவதையும், அவர்களுக்கு அர்ஜுனன் காவல் இருப்பதையும் கண்டது அவ்வுருவம். Image
தூங்கும் அவ்விருவரின் அருகில் சென்றது. அதைக் கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அந்த உருவத்தைத் தடுத்தான்.அப்போது அவ்வுருவம், அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும், அதற்கு நீ எனக்கு உதவ வேண்டும் என்று அர்ஜுனனிடம் கேட்டது. அதைக் கேட்டு மிகுந்த கோபம் கொண்ட அர்ஜுனன் அவ்வுருவத்தைத் தாக்கினான்.
அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக, அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதாகியது. அர்ஜுனன் இன்னும் மிகுந்த ஆக்ரோஷத்தோடு அதனுடன் சண்டையிட்ட போது, அதன் வடிவம் பூதகரமாகியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.
இரண்டாம் ஜாமத்திற்கு காவலிருப்பது பலராமர் முறை என்பதால், அவரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் உறங்க ஆரம்பித்தான். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்குதோன்றி, அர்ஜுனனிடம் கூறியது போலவே பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமரும் அதனுடன் கடுமையாகச் சண்டையிட்டார்.
பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும், அதன் வடிவமும் பெரிதானது.பின்பு அர்ஜுனனை தாக்கியதைப் போலவே,பலராமரையும் கடுமையாகத் தாக்கிவிட்டு,மறைந்தது அவ்வுருவம்.மூன்றாம் ஜாமம் காவலிருப்பது ஸ்ரீகிருஷ்ணரின் முறையாவதால்,அவரை காவலுக்கு எழுப்பிவிட்டு பலராமர் படுக்கச் சென்றார்.
இப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா பலமாகச் சிரித்தார். ”ஏன் சிரிக்கிறாய்?" எனக் கேட்டது அவ்வுருவம். “உனது தூக்கியப்பற்களும்,பெரிய முட்டைக் கண்களையும் கண்டு தான்” என சிரிப்பை அடக்க முடியாமல் கூறினார்.
அவர் தன்னை கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அவ்வுருவம் ஸ்ரீகிருஷ்ணருடன் சண்டை போட்டது. கிருஷ்ணரோ தன் புன்னகை மாறாமல் அக்கொடிய உருவத்துடன் சண்டையிட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்து கொண்டே போனது.
இறுதியில் அவ்வுருவம் சின்னஞ்சிறுப் புழுவாக மாறி தரையில் நெளிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுதும் விடிந்தது. பலராமரும்,அர்ஜுனனும் உறக்கத்திலிருந்து எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும்,
அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பின்னர் பெரிதாகியதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஸ்ரீகிருஷ்ணர் தனது துணியில் முடிந்திருந்த புழுவைக்காட்டி, "நீங்கள் இருவரும் நேற்று ஜாமத்தில் தீவிரமாக சண்டை போட்ட உருவம் இது தான்” எனக் கூறினார்.
“நீங்கள் இருவரும் அதனுடன் சண்டையிடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள்”. உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும், வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால், இதன் பலமும்,வடிவமும் குறைந்து கொண்டே வந்து பின்பு ஒரு புழுவாக மாறிவிட்டது”.
வம்பு சண்டைக்கு வருபவனை, புன்னகையோடு வெளியேற்றி விலகிச் சென்றுவிட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். “கோபத்தைக் குறைப்பவனே ஞானி” என்ற உண்மையை எடுத்துக்காட்டினார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த உபதேசம், நமக்கும் வாழ்வின் பல சூழ்நிலைகளுக்கும் பொருந்தும். இப்படித்தான் நாமும், பல விஷயங்களில் எதிர் வினையாற்றாமலிருந்தாலே, அவ்விஷயம் மிகப்பெரிய பிரச்சனை ஆகாமல் பிசுபிசுத்து, இந்த புழுவைப்போல் ஒன்றும் இல்லாமல் போய் விடும். Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

5 Jun
#ஜென்_குட்டிக்கதை

ஒரு ஜப்பானிய மன்னன் பலரையும் அணுகி,சுவர்க்கம் - நரகம் என்றால் என்ன என்ற கேட்டுவந்தான். யாரிடமிருந்தும் அவனுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை.
மன்னனின் மந்திரி,"ஒரு ஜென் மாஸ்டர் இருக்கிறார்.அனைத்தையும் உணர்ந்தவர்.அவரிடம் சென்று நீங்கள் கேட்டால்,உங்களுக்குத் திருப்தியான பதில் கிடைக்கும்” என்றார். மன்னனும் அந்த ஜென் மாஸ்டரிடம் சென்று தனது வழக்கமான கேள்விகளைக் கேட்டான்.
ஜென் மாஸ்டர் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார்.
பின்னர் மன்னனை நோக்கி,"என்ன முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கிறாய் நீ! அகம்பாவம் பிடித்தவனே! உன்னைப் போன்ற ஒரு முட்டாளையும் அவலட்சணமானவனையும் நான் பார்த்ததில்லை” என்று வெறுப்புத் தொனிக்கும் குரலில் கூறினார்.

மன்னன் அதிர்ச்சியுற்றான்.அவனிடம் இப்படி யாருமே பேசியதில்லை.
Read 6 tweets
20 May
மரணத்துக்குப் பின்,தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,"தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்கு, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், அவன் பக்கம் போர் புரிந்தேன்.ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான், "இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்துவிட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட, உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
"க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால்தான் சொல்கிறோம்.
அந்தக் 'கண்ணன்' என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும், முரண்பாடு வருகையில், விசேஷ தர்மத்தை கைக்கொள்ள வேண்டும். நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தை கைக்கொண்டு,
Read 8 tweets
19 May
பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் கொடுத்து, தலைமேல் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.
ஒரு குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி, இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்’ என்று பெயர்.
வைணவ பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் நம்மாழ்வார். நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் வேதம் தமிழ் செய்த மாறன் என்று புகழப்படுகிறார். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர்.
நம்மாழ்வார் கலி பிறந்த 43 வது நாளில், காரியார் மற்றும் உடைய நங்கைக்கு மகனாகப் பிறந்தார். உலக வழக்கப்படி குழந்தை பிறந்தவுடன் அழும். ஆனால் இவரோ இவை எவற்றையும் செய்யாமல், உலக இயற்கைக்கு மாறாக இருந்தார். எனவே அவரை மாறன் என்று அழைத்தனர்.
Read 9 tweets
14 Mar
அந்த அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். "துரோணாச்சார்யரே! எனக்கு ஒரு சந்தேகம்" என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன். "கேளுங்கள் மன்னா!’’
"சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல், வித்தை கற்பிப்பதுதானே நல்ல ஆசானின் இலக்கணம்?"திருதராஷ்டிரன் கேட்டார்.
"ஆம் மன்னா"பதிலளித்தார் துரோணர்."தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழவேண்டும் என்பதே எனது விருப்பம்"என்றார் மன்னர்."மன்னா என்ன கூறுகிறீர்கள்?"திடுக்கிட்டார் துரோணர்.
"துரோணரே!பாண்டவர்களையும் எனதருமைப்பிள்ளைகளையும் சரிசமமாக பாவித்து வித்தைகளைக் கற்பிக்க வேண்டும்."
பாண்டவர்கள் மீது பொறாமை கொண்ட துரியோதனாதிகள், தன்னைப் பற்றி கோள் சொல்லி இருப்பார்கள்"என்று உணர்ந்து கொண்டார் துரோணர்.பிறகு அவர்,"மன்னிக்க வேண்டும் மன்னா. நான் எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை. ஆர்வம், முயற்சி,உத்வேகம்,தனித்தன்மை போன்ற இயல்புகள் எல்லோரிடமும் ஒரே மாதிரி அமைவதில்லை,
Read 15 tweets
13 Mar
போர் முடிவடைந்த பிறகு,அஸ்தினாபுரத்தில் முறைப்படி தர்மருக்கு ராஜ்யாபிஷேகம் நடந்தது.பீஷ்மரின் தர்மோபதேசத்தால் தருமர் முடிசூட்டிக் கொண்டாலும்,அவரது மனம் கலக்கத்துடனேயே இருந்தது.ஒருநாள் சகோதர்களுடன் சென்று பீஷ்மருக்கு அருகில் அமர்ந்த தருமர்,தமது உள்ளத்தில் உள்ள சந்தேகங்களை கேட்டார்.
"பிதாமகரே! நல்ல குலத்தில் பிறந்தவர்கள் எவரும் வாய்க்காத நிலையில்,நற்குணமும் பண்பும் நிறைந்த வேற்று குலத்தவரை தனது அமைச்சராகவோ நண்பராகவோ ஓர் அரசன் ஏற்றுக் கொள்ளலாமா?”. பீஷ்மர் பதிலளித்தார், ”தருமா! இதுகுறித்து ஒரு கதை கூறுகிறேன் கேள்.
மனித நடமாட்டம் அதிகம் இல்லாத வனத்தில் முனிவர் ஒருவர் வசித்தார்.மகா யோகியான அவர்,முக்காலமும் உணர்ந்தவர். அந்த வனத்தில் உள்ள கொடிய விலங்குகள் கூட,அவரிடம் சகஜமாக பழகி வந்தன.அங்கு, நாய் ஒன்றும் இருந்தது. முனிவரைப் போலவே அந்த நாயும் சாத்வீகமானது. மாமிசத்தை ஏறெடுத்தும் பார்க்காமல்,
Read 12 tweets
12 Mar
ஸ்ரீராமன் காட்டிற்கு வனவாசம் போகவேண்டும் என்று தந்தையின் உத்தரவு. சீதையும் லக்ஷ்மணனும் அவர் கூடவே சென்றார்கள். கங்கை நதியை கடந்து அக்கரை செல்லவேண்டும். அப்போதுதான் முதன்முதலாக குகன்,ஸ்ரீராமனைப் பார்க்கிறார். ஶ்ரீராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவருக்குத் தெரியும். Image
நாட்டைத் துறந்து தன்முன் நிற்கும்,மரவுரி தரித்த ஸ்ரீராமனைக் காணமுடியாமல் கண்களில் குகனுக்குக் கண்ணீர்த்திரை. "என்னால் உனக்கு என்ன உதவி ஆகவேண்டும் ஸ்ரீராமா?” என பக்தியோடு கேட்டார். "கங்கையைக் கடந்து அக்கரை செல்லவேண்டும் குஹா" எனக் கூறினார் ஶ்ரீராமர்.
அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டுவிட்டு புறப்படத் தயாராக இருந்தது.அந்த படகோட்டியின் பெயர் கேவத். குகன் அவனை அணுகி, "கேவத் உன் படகை இங்கே கொண்டுவா” எனச்சொல்ல, படகு நெருங்கி வந்தது.”கேவத், இதோ நிற்கிறார்களே, இது யார் தெரியுமா? அயோத்தி மஹாராஜா
ஸ்ரீராமர்,அது சீதாதேவி,அவர் மனைவி,
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(