போர் இனி தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. பாண்டவர்களை ஒழித்தால் தான் நிம்மதியாக அரசாள முடியும் என்ற முடிவுக்கு துரியோதனன் வந்தான். போர் ஆயத்தங்கள் முடிகின்ற நிலை."ஹூம்,அவர்களிடம் வெறும் ஏழு அக்ஷௌஹிணி சேனை மட்டும்தான். என்னிடமோ பதினோரு அக்ஷௌஹிணி சேனை.
ஒருவனை ஒருவன் வீழ்த்தினால் கூட மிச்ச்ம் நாலு மிஞ்சும் வெற்றியுடன். குடும்பத்தில் பெரியவரான பீஷ்மர் என் பக்கம். அனைவருக்கும் குருவான துரோணர் என் பக்கம். ஆசார்யர் கிருபர் என் பக்கம்.அருமைத்தம்பிகள்,மாமா சகுனி,ஏராளமான ராஜாக்கள்! அட இது போதாதா என் வெற்றிக்கு” என எண்ணி மகிழ்ந்தான்
துரியோதனன். ஆனால் அவனுக்கு ஒரே ஒரு உறுத்தல்.'அந்த மாயக் கண்ணன் அவர்கள் பக்கம்.அவன் ஏதாவது மாயாஜாலம் செய்து விடுவானோ',துரியோதனனுக்கு இந்த பயம் சற்று இருந்தது. அவனுக்கு பதில் தெரியவேண்டிய கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
'வெற்றி உறுதி என்ற போதிலும் கூட போர் எப்போது முடியும்,
எத்தனை நாள் தான் நடக்கும்?' என்பதுதான். இரவு முழுவதும் சிந்தனை. விடிந்ததும் பிதாமகர் பீஷ்மரை நோக்கி துரியோதனன் வினவினான்: “இதோ பிரம்மாண்டமான இந்த பாண்டவ சேனையை எவ்வளவு காலத்தில் வெல்வீர்?”. இதைக் கேட்ட பீஷ்மர் பதில் அளித்தார்:
“பதினாயிரம் காலாட்களையும்,ஆயிரம் தேராளிகளையும் ஒரு பாகமாகச் செய்து, பாண்டவர்களின் சேனையை நாள்தோறும் அழிப்பேன். இது எனது பாகமாகக் கொள்கிறேன். யுத்தத்தில் நின்று கொண்டு லட்சம் பேர்களைக் கொல்கின்ற மஹாஸ்திரங்களை விடுவேன் என்றால் ஒரு மாதத்தில் கொல்லுவேன்”.
துரியோதனன் இப்போது துரோணர் பக்கம் திரும்பினான்: “ஓ! ஆசார்யரே! நீர் பாண்டுபுத்திரர்களின் சேனைகளை எவ்வளவு காலத்தில் வெல்லுவீர்?”. துரோணர் அவனை நோக்கி சிரித்துக் கொண்டே பதில் கூறினார்:"கிழவனாயிருக்கிறேன்.சக்தியும் முயற்சியும் எனக்குக் குறைந்துவிட்டன.
பாண்டவ சேனையை பீஷ்மர் போல் ஒரு மாதத்தில் எரிப்பேன் என்பது என் எண்ணம். இதுதான் என் சக்தியின் அளவு. இதுதான் என் வலிமையின் அளவு”. துரியோதனன் கிருபரை நோக்க அவர், “இரண்டு மாதங்களில் கொல்வேன்” என்றார்.அஸ்வத்தாமன் பத்து தினங்களில் பாண்டவ சேனையை வதம் செய்வதாக பிரதிக்ஞை செய்தார்.
கர்ணனோ ஐந்து தினங்களில் பாண்டவர்களை வதம் செய்வேன் என்று பிரதிக்ஞை செய்தான்.கர்ணனின் இந்த வார்த்தையைக் கேட்ட கங்காபுத்திரரான பீஷ்மர் ஹாஹா என்று சப்தத்துடன் சிரித்தார்.
"ஓ ராதையின் புத்திரா கர்ணா! தேரில் ஏறி வருகின்ற அர்ஜுனனை நெருங்காத வரையில்,நீ இவ்விதம் நினைப்பாய்.
உன்னால் இப்படியும் இதற்கும் மேலும் இஷ்டப்படி சொல்லுவதற்கு முடியும்” என்றார் பீஷ்மர். இந்த விஷயங்களை தனது ஒற்றர் மூலம் அறிந்து கொண்ட தர்மர் தனது தம்பிகளை நோக்கி நடந்த விஷயங்களைச் சொன்னார்.பின்னர் அர்ஜுனனை நோக்கி, “நீ எவ்வளவு காலத்தில் பகைவர்களை நாசம் செய்வாய்?” என்று கேட்டார்.
அர்ஜுனன்,"நான் சத்தியம் தவறாமல் சொல்கிறேன். கிருஷ்ணனின் சகாயத்துடன், தேவர்களோடு கூடிய மூவுலகங்களையும்,எல்லா சராசரங்களையும்,சென்றதையும்,இருப்பதையும்,இனி உண்டாவதையும்,ஒரு நிமிஷத்தில் கொல்லுவேன். கிருஷ்ணன் எதை விரும்புகிறானோ அதன்படியே நடக்கும். வேறுவிதம் ஆகாது.
பாசுபதாஸ்திரம் என்னிடம் உள்ளதை பீஷ்மரும் அறியமாட்டார். துரோணருக்கும் அது தெரியாது. கிருபருக்கும் தெரியாது. அஸ்வத்தாமனும் அறியான்.எனில் கர்ணனுக்கு மட்டும் எப்படித் தெரியும்? என்றாலும் திவ்ய அஸ்திரங்களினாலே சாமான்ய மனிதர்களைக் கொல்வது உசிதமில்லை.
ஓ பாண்டவரே! ஒருவராலும் வெல்லப்படாத சிகண்டி,யுயுதானன், திருஷ்டத்யும்னன்,பீமசேனன்,நகுல சகாதேவர்,யுதாமன்யு, உத்தமௌஜஸ்,விராட துருபதர்கள்,சங்கன்,கடோத்கஜன், அவனது புத்திரனான் அஞ்சனபர்வா,சாத்யகி,அபிமன்யு, திரௌபதியின் ஐந்து புத்திரர்கள் ஆகிய இவர்கள் தேவர்களுடைய சேனையைக் கூட வெல்வார்கள்.
அதேப்போல கோபத்தால் நீர் எந்த மனிதனைப் பார்ப்பீரோ,அவன் சீக்கிரம் இல்லாமல் போய்விடுவான் என்பது நிச்சயம் என்று உம்மை நான் அறிகிறேன் அண்ணா.” என்று பதில் கூறினான். ஒருமாதம் நடக்குமா, பத்துமாதம் நடக்குமா, அல்லது ஐந்து நாட்கள் நடக்குமா? அர்ஜுனன் கூறியது போல ஒரே நிமிடத்தில் முடியுமா?
அல்லது தர்மரின் ஒரு கோபப்பார்வையே போதுமா?
அர்ஜுனன் கணித்தபடி கிருஷ்ணன் எதை விரும்புகிறானோ அதுவே நடக்கும். மாயக் கண்ணன் முன்பே முடிவு செய்துவிட்டான். படிப்படியாக பதினெட்டு நாட்களில், களை எடுத்து வேருடன் பகைவரை அழிப்பதென்று. அவன் எடுத்த முடிவை யாரால் மாற்றமுடியும்.
தர்மயுத்தம் கோரமாக நடந்தது. தர்மம் வென்றது. அதர்மம் தோற்றது.
பாவிகள் ஒழிந்தனர். புண்ணியர் ஜெயித்தனர்.
குறிப்பு - வியாச பாரதம், உத்யோக பர்வத்தில், 2 அத்தியாயங்களின் சுருக்கம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
விருந்தினர்களை உபசரிப்பது என்பது நமது பண்பாடு."விவேக சிந்தாமணி"சொல்லித் தருகிறது,நாம் விருந்தினர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்று.
வியத்தல்:
விருந்தினரை ஆவலோடு,ஆச்சரியத்தோடு வியந்து நோக்க வேண்டும்.எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து வந்தீர்களே.அதுவே பெரிய சந்தோஷம் எனக்கூறுதல்.
நன்மொழி உரைத்தல்:
நல்ல வார்த்தைகளை இனிமையாகச் சொல்லவேண்டும்.
வீட்டில் அனைவரும் நலமா?உங்கள் உடம்பு நலமா?என விசாரித்தல்
திருந்துற நோக்கல்:
நன்மொழி உரைக்கும்பொழுது,கனிவான அன்பான பார்வை அவர்கள் முகத்தின்மேல் இருக்க வேண்டும். விதியே என சொல்லக்கூடாது.
அவர்களை நன்றாகப் பார்க்கவேண்டும்.
கடிகா என்றால் 24 நிமிடங்கள்
க்ஷணம் என்றால் ஒரு நொடி/வினாடி
முதல்தரமான மனிதர்களிடத்தில் ஒரு நொடிப்பொழுதுதான் கோபம் நீடிக்கும். குணக்குன்றாக விளங்கும் முதல்தர (உத்தம) மக்களிடையே கோபம், ஒரு நொடிப்பொழுதில் தோன்றி மறைந்துவிடும்.
இதற்கு அடுத்த (மத்தியம) தரத்திலுள்ளோர் கோபம் இரண்டு கடிகை (48 நிமிடங்கள்) இருக்கும்.
கடைத்தரத்திலுள்ளோர் கோபம் ஒரு நாள் முழுவதும்(24 மணிநேரம் நீடிக்கும். இதை சம்ஸ்கிருதத்தில் அஹோராத்ரம் (பகல்+ இரவு) என்பர்.
தஞ்சாவூரில் மகத்தான கோவிலை நிர்மானித்த ராஜராஜசோழன், அந்தக் கோவில் கட்டும் வேலை நடைபெற்றபோது அதனை மேற்பார்வையிடச் சென்றான்.ஒரு ஆள் மிகவும் கஷ்டப்பட்டு கற்களை உடைத்து அவைகளை சரியான அளவுக்கு வெட்டிக் கொண்டிருந்தார். மன்னன் அவன் அருகில் சென்று,"ஐயா, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"
என்று கேட்டான்.அதற்கு அவன்,"மன்னா வணக்கம்! நான் கல் உடைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் பணிவாக.மன்னன் சிறிது தூரம் நடந்தான். மற்றொருவன் அதேப் பணியை செய்துகொண்டிருந்தான். "ஐயா என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?என்று கேட்டார். அவன் சொன்னான்,"மன்னா வணக்கம்!நான் கல் உடைத்து
சம்பாதித்து,குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன்" என்றான் பணிவாக.மன்னன் மேலும் சிறிது தூரம் நடந்தான். மற்றொருவன் அதே பணியைச் செய்துகொண்டிருந்தான். "ஐயா என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்"என்று கேட்டான். அவன் பதில் சொன்னான்,"மன்னா வணக்கம்! நான் கல் உடைத்து அவைகளைக் கொண்டு,
ஒருமுறை கயிலை மலைக்குச் சென்று தவம் புரிந்தான் ராவணன். அவன் தவத்தை மெச்சிய சிவபெருமான்,அவனுக்கு முன் காட்சி தந்தார். "உனக்கு வேண்டியதைக் கேள்"என்றார். "அடியேன் வாழும் இலங்கையும் நானும் என்றுமே அழியாவண்ணம் அருள் புரியவேண்டும்"என்றான்.இவன் மொழிகேட்ட கருணை வள்ளலான ஈசன்,
அவனிடம் ஒரு சிவலிங்கத்தைக் கொடுத்து,"இதனை அருமையுடன் ஆராதித்து வா.ஆனால் ஆசாரத்தின் பொருட்டு இவைகளை எந்த வாஹனத்திலும் ஏற்றாமலும்,கீழே வைக்காமலும் எடுத்துச்செல்" என்றார்.இப்படி ஆசார அனுட்டானத்துடன் கொண்டு சென்று, இலங்கையில் ஸ்தாபித்தால் நீயும் அழிய மாட்டாய்,இலங்கையும் அழியாது.
ஆனால் எங்கேனும் கீழே வைத்தால்,லிங்கத்தை எடுக்கமுடியாது.அது அங்கேயே ஸ்தாபிதமாகிவிடும்"என சிவபெருமான் மொழிந்தார்.
உடனே ராவணன் அந்த சிவலிங்கத்தினை கையில் ஏந்தி தெற்கு நோக்கி நடந்து வந்தான்.இதைத் தேவர்கள் கண்டு நடுநடுங்கினர். இவன் ஏற்கனவே நமக்கு, சொல்லொணாத் துயரம் தருகின்றான்.
மந்திரங்களை அனைவரும் கற்கலாமா? மந்திரங்களை புத்தகத்திலிருந்து படிக்கலாமா? இந்தக் கேள்விகளுக்கு, சிருங்கேரி சங்கராசார்யார் ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானதா சிவஅபிநவ நரசிம்மபாரதி சுவாமிகள் ஒரு சுவையான கதை மூலம் பதில் தந்துள்ளார்.
ஒரு பக்தர் இந்த கேள்வியைக் கேட்டார்.
பக்தர்: சுவாமிகளே!ஏன் சில மந்திரங்களை ஒருசில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று சொல்லுகிறீர்கள்? ஏன் ஒருசில தகுதி அல்லது நிலையிலுள்ளவர்கள் மட்டுமே படிக்கலாம் என்று விதிமுறைகள் விதித்துள்ளனர்?
சுவாமிகள்: யாருக்காக ஒரு மந்திரம் உருவாக்கப்பட்டுள்ளதோ,அவர் சொல்லும்போதுதான் அது மந்திரம். மற்றவர் சொன்னால் அது வெறும் சப்தங்களின் தொகுப்புதான்.
பக்தர்: அது எப்படி? மந்திரங்களும் சப்தங்களின் தொகுப்புதானே?
சுவாமிகள் பதில்: சப்தங்களின் தொகுப்பு எல்லாம் மந்திரம் ஆகிவிடாது.
ஒரு ஜப்பானிய மன்னன் பலரையும் அணுகி,சுவர்க்கம் - நரகம் என்றால் என்ன என்ற கேட்டுவந்தான். யாரிடமிருந்தும் அவனுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை.
மன்னனின் மந்திரி,"ஒரு ஜென் மாஸ்டர் இருக்கிறார்.அனைத்தையும் உணர்ந்தவர்.அவரிடம் சென்று நீங்கள் கேட்டால்,உங்களுக்குத் திருப்தியான பதில் கிடைக்கும்” என்றார். மன்னனும் அந்த ஜென் மாஸ்டரிடம் சென்று தனது வழக்கமான கேள்விகளைக் கேட்டான்.
ஜென் மாஸ்டர் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார்.
பின்னர் மன்னனை நோக்கி,"என்ன முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கிறாய் நீ! அகம்பாவம் பிடித்தவனே! உன்னைப் போன்ற ஒரு முட்டாளையும் அவலட்சணமானவனையும் நான் பார்த்ததில்லை” என்று வெறுப்புத் தொனிக்கும் குரலில் கூறினார்.
மன்னன் அதிர்ச்சியுற்றான்.அவனிடம் இப்படி யாருமே பேசியதில்லை.