ஒருநாள் ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி, வாரம் இருமுறை உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தன. எனவே,தலைவர் குரங்கிடம் போய்,மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன்,தலைவர் குரங்கும் ”சரி அவ்வாறே செய்துவிடுவோம்.
அதற்கு முன்னால் உண்ணாவிரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்துவிடுங்கள்.ஏனெனில் விரதம் முடியும்பொழுது பசியாக இருக்போம்.எனவே, அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது” என்று அறிவுரை சொன்னது.
அதை ஆமோதித்த மற்ற குரங்குகளும்,அருகில் இருந்த தோட்டத்தில் இருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டுவந்து தலைவர் முன் வைத்தன.உடனே தலைவர், ”சரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விடுவோம்” என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு, ”தலைவரே! விரதம் துவங்குவதற்கு முன்,
அவரவர் பழங்களை பிரித்துக் கொடுத்துவிடுவோம்.இல்லையென்றால் விரதம் முடிந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்” என்று யோசனை சொல்லிற்று. அதை ஆமோதித்த தலைவரும்,அவ்வாறே பழங்களைப் பகிர்ந்தளித்தது. அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தின் தோலை உரித்து வைத்து விடுவோம்.
அந்த நேரத்தில் உரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன், பழங்களின் தோல் உரித்து முன்னே வைக்கப்பட்டது. உடனே ஒரு குட்டிக் குரங்கு எழுந்து, “தலைவரே! இன்று முழுதும் விரதம் இருக்கப் போகிறோம். நாம் இதை உண்ணும்பொழுது,தோல் நீக்கிய இந்தப் பழங்களின் மேல் தூசிகள் படிந்து விடும்.
எனவே இந்த பழங்களெல்லாம் கனிந்து அழுகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நமக்குதான் உணவை வாயில் ஒதுக்கி வைத்துக்கொள்ளும் வசதி இருக்கிறதே? எனவே பழங்களை, அவரவர் வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்வோம்” என்றது. அவ்வளவுதான்! பழங்கள் அனைத்தும் வாயில் ஒதுக்கி வைக்கப்பட்டன.
சற்று நேரம்தான் ஆகியிருந்தது. வாயில் ஒதுங்கியிருந்த பழங்களெல்லாம், தானாகவே தொண்டைக் குழியை நோக்கி போகத் துவங்கின. இவ்வாறு குரங்குகளின் விரதம் நிறைவுக்கு வந்தது. மனிதனின் மனமும் இப்படி குரங்கு போன்றது. இவ்வுலகில் பெரும்பாலானவர்களின் விரத முயற்சியும், உலகப்பற்றை விடும் முயற்சியும்
இவ்வாறுதான் இருக்கிறது. சில பேருக்கு உலக ஆசையை வேகமாக விட்டுவிட வேண்டும் என்று எண்ணினாலோ,முயற்சித்தாலோ,அது நடப்பதில்லை. ஏனெனில்,அது எதிர்மறைச் சிந்தனையாகவும், முயற்சியாகவும் அமைந்துவிடுகிறது.
மாறாக நாம் ஆன்ம நாட்டத்தையும், இறைவன் மேலுள்ள பற்றையும், சிறிதுசிறிதாக அதிகப்படுத்திக் கொள்ளும்போது, தானாக நம்முடைய உலக ஆசைகள் ஒவ்வொன்றாக, நம்மை விட்டு ஓடி விடுவதை உணரலாம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
போர் இனி தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. பாண்டவர்களை ஒழித்தால் தான் நிம்மதியாக அரசாள முடியும் என்ற முடிவுக்கு துரியோதனன் வந்தான். போர் ஆயத்தங்கள் முடிகின்ற நிலை."ஹூம்,அவர்களிடம் வெறும் ஏழு அக்ஷௌஹிணி சேனை மட்டும்தான். என்னிடமோ பதினோரு அக்ஷௌஹிணி சேனை.
ஒருவனை ஒருவன் வீழ்த்தினால் கூட மிச்ச்ம் நாலு மிஞ்சும் வெற்றியுடன். குடும்பத்தில் பெரியவரான பீஷ்மர் என் பக்கம். அனைவருக்கும் குருவான துரோணர் என் பக்கம். ஆசார்யர் கிருபர் என் பக்கம்.அருமைத்தம்பிகள்,மாமா சகுனி,ஏராளமான ராஜாக்கள்! அட இது போதாதா என் வெற்றிக்கு” என எண்ணி மகிழ்ந்தான்
துரியோதனன். ஆனால் அவனுக்கு ஒரே ஒரு உறுத்தல்.'அந்த மாயக் கண்ணன் அவர்கள் பக்கம்.அவன் ஏதாவது மாயாஜாலம் செய்து விடுவானோ',துரியோதனனுக்கு இந்த பயம் சற்று இருந்தது. அவனுக்கு பதில் தெரியவேண்டிய கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
'வெற்றி உறுதி என்ற போதிலும் கூட போர் எப்போது முடியும்,
விருந்தினர்களை உபசரிப்பது என்பது நமது பண்பாடு."விவேக சிந்தாமணி"சொல்லித் தருகிறது,நாம் விருந்தினர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்று.
வியத்தல்:
விருந்தினரை ஆவலோடு,ஆச்சரியத்தோடு வியந்து நோக்க வேண்டும்.எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து வந்தீர்களே.அதுவே பெரிய சந்தோஷம் எனக்கூறுதல்.
நன்மொழி உரைத்தல்:
நல்ல வார்த்தைகளை இனிமையாகச் சொல்லவேண்டும்.
வீட்டில் அனைவரும் நலமா?உங்கள் உடம்பு நலமா?என விசாரித்தல்
திருந்துற நோக்கல்:
நன்மொழி உரைக்கும்பொழுது,கனிவான அன்பான பார்வை அவர்கள் முகத்தின்மேல் இருக்க வேண்டும். விதியே என சொல்லக்கூடாது.
அவர்களை நன்றாகப் பார்க்கவேண்டும்.
கடிகா என்றால் 24 நிமிடங்கள்
க்ஷணம் என்றால் ஒரு நொடி/வினாடி
முதல்தரமான மனிதர்களிடத்தில் ஒரு நொடிப்பொழுதுதான் கோபம் நீடிக்கும். குணக்குன்றாக விளங்கும் முதல்தர (உத்தம) மக்களிடையே கோபம், ஒரு நொடிப்பொழுதில் தோன்றி மறைந்துவிடும்.
இதற்கு அடுத்த (மத்தியம) தரத்திலுள்ளோர் கோபம் இரண்டு கடிகை (48 நிமிடங்கள்) இருக்கும்.
கடைத்தரத்திலுள்ளோர் கோபம் ஒரு நாள் முழுவதும்(24 மணிநேரம் நீடிக்கும். இதை சம்ஸ்கிருதத்தில் அஹோராத்ரம் (பகல்+ இரவு) என்பர்.
தஞ்சாவூரில் மகத்தான கோவிலை நிர்மானித்த ராஜராஜசோழன், அந்தக் கோவில் கட்டும் வேலை நடைபெற்றபோது அதனை மேற்பார்வையிடச் சென்றான்.ஒரு ஆள் மிகவும் கஷ்டப்பட்டு கற்களை உடைத்து அவைகளை சரியான அளவுக்கு வெட்டிக் கொண்டிருந்தார். மன்னன் அவன் அருகில் சென்று,"ஐயா, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"
என்று கேட்டான்.அதற்கு அவன்,"மன்னா வணக்கம்! நான் கல் உடைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் பணிவாக.மன்னன் சிறிது தூரம் நடந்தான். மற்றொருவன் அதேப் பணியை செய்துகொண்டிருந்தான். "ஐயா என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?என்று கேட்டார். அவன் சொன்னான்,"மன்னா வணக்கம்!நான் கல் உடைத்து
சம்பாதித்து,குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன்" என்றான் பணிவாக.மன்னன் மேலும் சிறிது தூரம் நடந்தான். மற்றொருவன் அதே பணியைச் செய்துகொண்டிருந்தான். "ஐயா என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்"என்று கேட்டான். அவன் பதில் சொன்னான்,"மன்னா வணக்கம்! நான் கல் உடைத்து அவைகளைக் கொண்டு,
ஒருமுறை கயிலை மலைக்குச் சென்று தவம் புரிந்தான் ராவணன். அவன் தவத்தை மெச்சிய சிவபெருமான்,அவனுக்கு முன் காட்சி தந்தார். "உனக்கு வேண்டியதைக் கேள்"என்றார். "அடியேன் வாழும் இலங்கையும் நானும் என்றுமே அழியாவண்ணம் அருள் புரியவேண்டும்"என்றான்.இவன் மொழிகேட்ட கருணை வள்ளலான ஈசன்,
அவனிடம் ஒரு சிவலிங்கத்தைக் கொடுத்து,"இதனை அருமையுடன் ஆராதித்து வா.ஆனால் ஆசாரத்தின் பொருட்டு இவைகளை எந்த வாஹனத்திலும் ஏற்றாமலும்,கீழே வைக்காமலும் எடுத்துச்செல்" என்றார்.இப்படி ஆசார அனுட்டானத்துடன் கொண்டு சென்று, இலங்கையில் ஸ்தாபித்தால் நீயும் அழிய மாட்டாய்,இலங்கையும் அழியாது.
ஆனால் எங்கேனும் கீழே வைத்தால்,லிங்கத்தை எடுக்கமுடியாது.அது அங்கேயே ஸ்தாபிதமாகிவிடும்"என சிவபெருமான் மொழிந்தார்.
உடனே ராவணன் அந்த சிவலிங்கத்தினை கையில் ஏந்தி தெற்கு நோக்கி நடந்து வந்தான்.இதைத் தேவர்கள் கண்டு நடுநடுங்கினர். இவன் ஏற்கனவே நமக்கு, சொல்லொணாத் துயரம் தருகின்றான்.
மந்திரங்களை அனைவரும் கற்கலாமா? மந்திரங்களை புத்தகத்திலிருந்து படிக்கலாமா? இந்தக் கேள்விகளுக்கு, சிருங்கேரி சங்கராசார்யார் ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானதா சிவஅபிநவ நரசிம்மபாரதி சுவாமிகள் ஒரு சுவையான கதை மூலம் பதில் தந்துள்ளார்.
ஒரு பக்தர் இந்த கேள்வியைக் கேட்டார்.
பக்தர்: சுவாமிகளே!ஏன் சில மந்திரங்களை ஒருசில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று சொல்லுகிறீர்கள்? ஏன் ஒருசில தகுதி அல்லது நிலையிலுள்ளவர்கள் மட்டுமே படிக்கலாம் என்று விதிமுறைகள் விதித்துள்ளனர்?
சுவாமிகள்: யாருக்காக ஒரு மந்திரம் உருவாக்கப்பட்டுள்ளதோ,அவர் சொல்லும்போதுதான் அது மந்திரம். மற்றவர் சொன்னால் அது வெறும் சப்தங்களின் தொகுப்புதான்.
பக்தர்: அது எப்படி? மந்திரங்களும் சப்தங்களின் தொகுப்புதானே?
சுவாமிகள் பதில்: சப்தங்களின் தொகுப்பு எல்லாம் மந்திரம் ஆகிவிடாது.