ஒரு ஏழைச்சிறுவன் வீடுவீடாகச் சென்று,தேவைப்பட்ட பொருள்களை, பலருக்கும் விற்று சிறிது காசு சம்பாதித்தான்.கிடைக்கும் காசை வைத்து தன் பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டினான். புத்தகங்களையும் தானே வாங்கினான்.ஒருநாள் விற்றுக்கொண்டிருக்கும்போது, சிறுவனுக்கு அதீத பசி எடுத்தது.ஆனால் அவன் கையிலோ
சிறிது காசே இருந்தது. தான் செல்லவிருக்கும் அடுத்த வீட்டில் அந்த காசைக்கொடுத்து ஏதேனும் வாங்கி உண்ணலாம் என்று முடிவு செய்தான்.ஆனால் அடுத்த வீட்டின் கதவைத் தட்டியபோது வெளியே வந்த அழகிய இளம் பெண்ணைப் பார்த்து அவன் தயங்கினான். தான் கேட்க நினைத்ததைக் கேட்க அவனால் முடியவில்லை.
ஆனால் பசியோ பசி.ஒரு டம்ளர் தண்ணீர் தருமாறு கேட்டான் அவன்.
அந்த இளம்பெண் அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து அவன் அளவற்ற பசியால் துடிக்கிறான் என்பதை உணர்ந்தாள்.ஆகவே தண்ணீருக்கு பதிலாக ஒரு பெரிய டம்ளரில் பாலைக் கொண்டுவந்து கொடுத்தாள்.மெதுவாக அதைக் குடித்த அந்தச் சிறுவன்,
“நான் இந்த பாலுக்காக எவ்வளவு கொடுக்க வேண்டும்?” என்று அந்தப் பெண்ணிடம் கேட்டான்.“எனக்கு ஒன்றும் தர வேண்டாம். அன்பினால் செய்யும் காரியத்திற்கு விலை பேசக்கூடாது என்று என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாள்” என்றாள் அவள்.
“அப்படியானால் என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு
என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றான் அந்தச் சிறுவன்.அந்தச் சிறுவனின் பெயர் ஹோவர்ட் கெல்லி. அந்த வீட்டைவிட்டு வெளியேறும் போது ஒரு புத்துணர்ச்சியைப் பெற்றான் அவன்.கடவுள் மேலும்,மனிதாபிமானம் மேலும் அவனுக்கு இருந்த நம்பிக்கைக் கூடியது.ஒரு தக்க தருணத்தில் இப்படி ஒரு அன்பை
காட்டிய பெண்மணி அவனுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தாள்.வருடங்கள் ஓடின.அவன் ஒரு பெரிய டாக்டராக ஆனான்.பெயரும் புகழும் பெற்றான்.ஒருநாள் எந்த இளம் பெண் அவனுக்குப் பாலை வழங்கினாளோ,அவளுக்கு கடுமையான நோய் ஒன்று வந்தது.அவள் வசித்து வந்த ஊரில் உள்ள டாக்டர்கள்
திகைத்தனர்.அதை குணப்படுத்த அவர்களால் முடியவில்லை.
அவர்கள் நகருக்குச் சென்று டாக்டர் ஹோவர்ட் கெல்லியை பார்க்குமாறு ஆலோசனைக் கூறினர்.அந்தப் பெண்ணும் ஸ்பெஷலிஸ்டான ஹோவர்ட் கெல்லியை பார்க்கச் சென்றாள்.அந்தப் பெண் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்பதைக் கேட்டவுடன் கெல்லியின் கண்கள்
பளபளத்தன. நேராக நோயாளி இருந்த இடத்திற்கு விரைந்து சென்றார். ஆம்,அதே பெண்தான்! அவர் நன்றாக அடையாளம் கண்டுக்கொண்டார்.உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினார். எப்பாடு பட்டேனும் அவளைக் காப்பாற்றுவது என்று உறுதி பூண்டார்.
பெரும்பாடுபட்டு கடைசியாக அவர் வென்றார்.அந்தப்பெண் பூரண குணமடைந்தாள்.
கெல்லி அவர்கள்,அக்கவுண்ட்ஸ் பிரிவின் அதிகாரிக்கு,அந்த பெண்மணிக்கு ஆன செலவுக்கான பில்லை, தனக்கு அனுப்பச் சொன்னார்.அக்கவுண்ட்ஸ் பிரிவும் அவரது அங்கீகாரத்திற்காக அந்த பில்லை அவரிடம் அனுப்பியது.அந்தப் பில்லைப் பார்த்தார் அவர்.பெருந்தொகை தான்.அந்த பில்லின் கீழே கோடியில் சில
வார்த்தைகளை அவர் எழுதி, பில்லை அந்த பெண்ணிடம் அனுப்பச்சொன்னார். அந்தப் பெண்மணி நடுநடுங்கிக் கொண்டிருந்தாள் பில்லை நினைத்து. இந்த ஜென்மத்தில் அந்த பில் தொகையை தன்னால் கட்ட முடியுமா என்பதே அவள் பயம்.
அந்த பில்லை வாங்கிப் பார்த்தாள்.அடேயப்பா எவ்வளவு ரூபாய்,வாயடைந்துப்போனாள்.
ஆனால் பில்லின் அடியில் ஓரத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள் அவள் கவனத்தை ஈர்க்கவே அவள் அதைப் படித்தாள்...

"ஒரு டம்ளர் பாலால், பில் முழுவதும் கட்டப்பட்டது."
கையொப்பம்: ஹோவர்ட் கெல்லி.

அந்த பெண்மணியின் கண்களில் நீர் வந்தது.அவள் ஹோவர்ட் கெல்லி யார் என்பதை இப்போது தெரிந்துக்கொண்டாள்.
(இந்தக்கதை உண்மையில் நடந்தது என்று கூறப்படுகிறது).

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

5 Jul
ஒரு இளைஞன் காட்டுவழியே நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்கு பசியெடுத்தது.ஒரு மரத்தின் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.மரத்தின் மேல் சரசரவென்று ஏறினான்.மிக கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன.அவற்றை எட்டிப் பறிக்க,கிளையின் மேல் நகர்ந்து சென்றபோது Image
அவனது பாரம் தாங்காமல் அந்தக் கிளை முறிந்தது. சட்டென்று சுதாரித்த அவன்,கீழே இருந்த ஒரு கிளையை பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.குனிந்து பார்த்தான்.தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று
திரும்பத் திரும்ப கத்த ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்கும் நிலை வந்துவிட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனை பார்த்தார். அவன்மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார்.
Read 8 tweets
3 Jul
ஒருநாள் ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி, வாரம் இருமுறை உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தன. எனவே,தலைவர் குரங்கிடம் போய்,மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன்,தலைவர் குரங்கும் ”சரி அவ்வாறே செய்துவிடுவோம்.
அதற்கு முன்னால் உண்ணாவிரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்துவிடுங்கள்.ஏனெனில் விரதம் முடியும்பொழுது பசியாக இருக்போம்.எனவே, அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது” என்று அறிவுரை சொன்னது.
அதை ஆமோதித்த மற்ற குரங்குகளும்,அருகில் இருந்த தோட்டத்தில் இருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டுவந்து தலைவர் முன் வைத்தன.உடனே தலைவர், ”சரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விடுவோம்” என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு, ”தலைவரே! விரதம் துவங்குவதற்கு முன்,
Read 9 tweets
24 Jun
போர் இனி தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. பாண்டவர்களை ஒழித்தால் தான் நிம்மதியாக அரசாள முடியும் என்ற முடிவுக்கு துரியோதனன் வந்தான். போர் ஆயத்தங்கள் முடிகின்ற நிலை."ஹூம்,அவர்களிடம் வெறும் ஏழு அக்ஷௌஹிணி சேனை மட்டும்தான். என்னிடமோ பதினோரு அக்ஷௌஹிணி சேனை.
ஒருவனை ஒருவன் வீழ்த்தினால் கூட மிச்ச்ம் நாலு மிஞ்சும் வெற்றியுடன். குடும்பத்தில் பெரியவரான பீஷ்மர் என் பக்கம். அனைவருக்கும் குருவான துரோணர் என் பக்கம். ஆசார்யர் கிருபர் என் பக்கம்.அருமைத்தம்பிகள்,மாமா சகுனி,ஏராளமான ராஜாக்கள்! அட இது போதாதா என் வெற்றிக்கு” என எண்ணி மகிழ்ந்தான்
துரியோதனன். ஆனால் அவனுக்கு ஒரே ஒரு உறுத்தல்.'அந்த மாயக் கண்ணன் அவர்கள் பக்கம்.அவன் ஏதாவது மாயாஜாலம் செய்து விடுவானோ',துரியோதனனுக்கு இந்த பயம் சற்று இருந்தது. அவனுக்கு பதில் தெரியவேண்டிய கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
'வெற்றி உறுதி என்ற போதிலும் கூட போர் எப்போது முடியும்,
Read 15 tweets
21 Jun
விருந்தின னாக ஒருவன்வந் தெதிரில்
வியத்தல்நன் மொழியினி துரைத்தல்
திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல்
எழுதல்முன் மகிழ்வன செப்பல்
பொருந்துமற் றவன்தன் அருகுற இருத்தல்
போமெனிற் பின்செல்வ தாதல்
பரிந்துநன் முகமன் வழங்கலிவ் வொன்பான்
ஒழுக்கமும் வழிபடு பண்பே.
விருந்தினர்களை உபசரிப்பது என்பது நமது பண்பாடு."விவேக சிந்தாமணி"சொல்லித் தருகிறது,நாம் விருந்தினர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்று.

வியத்தல்:
விருந்தினரை ஆவலோடு,ஆச்சரியத்தோடு வியந்து நோக்க வேண்டும்.எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து வந்தீர்களே.அதுவே பெரிய சந்தோஷம் எனக்கூறுதல்.
நன்மொழி உரைத்தல்:
நல்ல வார்த்தைகளை இனிமையாகச் சொல்லவேண்டும்.
வீட்டில் அனைவரும் நலமா?உங்கள் உடம்பு நலமா?என விசாரித்தல்

திருந்துற நோக்கல்:
நன்மொழி உரைக்கும்பொழுது,கனிவான அன்பான பார்வை அவர்கள் முகத்தின்மேல் இருக்க வேண்டும். விதியே என சொல்லக்கூடாது.
அவர்களை நன்றாகப் பார்க்கவேண்டும்.
Read 7 tweets
20 Jun
நாலு வகை கோபக்காரர்கள் இருக்கிறார்கள். இதை ஒரு சம்ஸ்கிருதப் பாடல் அழகாக வருணிக்கிறது. உலகில் சம்ஸ்கிருதத்தில் இல்லாத விஷயம் எதுவுமே இல்லை.
 
உத்தமே ச க்ஷணம் கோப: மத்யமே கடிகாத்வயம்
அதமே ஸ்யாத் அஹோராத்ரம் பாபிஷ்டே மரணாந்தக: ||
கடிகா என்றால் 24 நிமிடங்கள்
க்ஷணம் என்றால் ஒரு நொடி/வினாடி
 
முதல்தரமான மனிதர்களிடத்தில் ஒரு நொடிப்பொழுதுதான் கோபம் நீடிக்கும். குணக்குன்றாக விளங்கும் முதல்தர (உத்தம) மக்களிடையே கோபம், ஒரு நொடிப்பொழுதில் தோன்றி மறைந்துவிடும்.
இதற்கு அடுத்த (மத்தியம) தரத்திலுள்ளோர் கோபம் இரண்டு கடிகை (48 நிமிடங்கள்) இருக்கும்.
 
கடைத்தரத்திலுள்ளோர் கோபம் ஒரு நாள் முழுவதும்(24 மணிநேரம் நீடிக்கும். இதை சம்ஸ்கிருதத்தில் அஹோராத்ரம் (பகல்+ இரவு) என்பர்.
Read 4 tweets
20 Jun
தஞ்சாவூரில் மகத்தான கோவிலை நிர்மானித்த ராஜராஜசோழன், அந்தக் கோவில் கட்டும் வேலை நடைபெற்றபோது அதனை மேற்பார்வையிடச் சென்றான்.ஒரு ஆள் மிகவும் கஷ்டப்பட்டு கற்களை உடைத்து அவைகளை சரியான அளவுக்கு வெட்டிக் கொண்டிருந்தார். மன்னன் அவன் அருகில் சென்று,"ஐயா, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"
என்று கேட்டான்.அதற்கு அவன்,"மன்னா வணக்கம்! நான் கல் உடைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் பணிவாக.மன்னன் சிறிது தூரம் நடந்தான். மற்றொருவன் அதேப் பணியை செய்துகொண்டிருந்தான். "ஐயா என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?என்று கேட்டார். அவன் சொன்னான்,"மன்னா வணக்கம்!நான் கல் உடைத்து
சம்பாதித்து,குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன்" என்றான் பணிவாக.மன்னன் மேலும் சிறிது தூரம் நடந்தான். மற்றொருவன் அதே பணியைச் செய்துகொண்டிருந்தான். "ஐயா என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்"என்று கேட்டான். அவன் பதில் சொன்னான்,"மன்னா வணக்கம்! நான் கல் உடைத்து அவைகளைக் கொண்டு,
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(