#செங்கோட்டையன் என்னைக் குத்தியதும் மூக்குக் கண்ணாடி உடைந்தது.

சத்தசபை ஆன சட்டசபை! - ஆட்சிக் கவிழ்ப்பு சதி...

ராஜினாமாக் கடிதத்தையும் அரசியல் விலகல் அறிக்கையையும் வெளியிட்ட தி.மு.க ஆட்சியைக் கண்டித்துக் கண்டனப் பேரணியை,
மார்ச் 24-ம் தேதி சென்னையில் நடத்தினார் ஜெயலலிதா. இந்தப் போராட்டம் தி.மு.க-வுக்கு எதிரானது என்றபோதும், ‘அரசியலிலிருந்து நான் விலகவில்லை; லைம்லைட்டில்தான் இருக்கிறேன்’ என்பதைச் சமூகத்துக்குச் சொல்லவே அதைக் கையிலெடுத்தார் ஜெயலலிதா. அதற்கு அடுத்த நாள், தமிழக சட்டசபையில்
பிரளயம் நடக்கப்போவதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.
ஜெயலலிதா அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், சசிகலா குடும்பமும் ஓய்வெடுக்க வேண்டியதுதான். ஆனால், அதை நடராசன் விரும்பவில்லை. ஜாமீனில் வெளியே வந்திருந்த அவர், மீண்டும் ‘ஆலோசகர்’ ஆனார். ஆலோசனையின்
அடுத்த நகர்வு சட்டமன்றத்தை நோக்கி இருந்தது. 1988 ஜனவரியில் ஜானகி ஆட்சிக் கவிழ, முக்கியக் காரணமாக இருந்தது சட்டசபையில் நடைபெற்றக் கலவரம். ஜானகி ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க நடந்த தகராறு, அடிதடி, சோடா பாட்டில்கள் வீச்சு, போலீஸ் தடியடி எனச் சட்டசபை,
சத்தசபை ஆனது. இதனால் ஆட்சி கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சி வந்தது. இந்தச் சம்பவம் நடந்து ஓர் ஆண்டுதான் ஆகியிருந்தது. தி.மு.க-வும் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின. சட்டமன்றத்தில் மீண்டும் அப்படியான சம்பவம் நடந்தால், தி.மு.க ஆட்சிக் கவிழும்
என்பதுதான் நடராசன் போட்ட கணக்கு!
1989, மார்ச் 25-ம் தேதி சனிக்கிழமை. பட்ஜெட் கூட்டத் தொடருக்காகக் கூடியது சட்டசபை. கலைஞர் பட்ஜெட்டைப் படிக்க ஆரம்பித்தபோது ஜெயலலிதா எழுந்து, ‘‘முதல்வர்மீது உரிமை மீறல் பிரச்னை கொடுத்திருக்கிறேன். அதை முதலில் எடுக்க வேண்டும்’’
என்றார். முதல்வர் கலைஞர் , சென்னை போலீஸ் கமிஷனர் துரை ஆகியோரைக் கடுமையாகப் பேசினார் ஜெயலலிதா. அவர் பேசிய எதுவும் அவைக்குறிப்பில் ஏறவில்லை. ஜெயலலிதா பேச ஆரம்பித்ததும் அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களும் தகராறு செய்தார்கள்.
ஜானகி அணி எம்.எல்.ஏ பி.ஹெச்.பாண்டியன் பேசியபோது, அ.தி.மு.க-வினர் அவரைக் கடுமையாக திட்டினார்கள். அவையில் அமளி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன.
உடனே ஜெயலலிதா, குமரி அனந்தன் கொடுத்த தீர்மானங்களைத் திங்கட்கிழமை எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் தமிழ்க்குடிமகன் சொன்னார்.
ஆனால், ஜெயலலிதா, கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருநாவுக்கரசர், உகம்சந்த், எஸ்.ஆர்.ராதா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆக்ரோஷமாகப் பேசினார்கள். அ.தி.மு.க உறுப்பினர்களின் கூச்சலுக்கிடையே கலைஞர் , பட்ஜெட் உரையைச் சத்தமாகப் படிக்க ஆரம்பித்தார். இரண்டு வரிகள்கூட
படித்திருக்கமாட்டார். எதிர்க்கட்சிகள் வரிசையிலிருந்து, ‘‘குத்துங்கடா’’ எனக் குரல்கள் வந்தன. பட்ஜெட் படிப்பதற்கு வசதியாக, டேபிளின்மீது இன்னொரு சிறிய டேபிள் போடப்பட்டிருந்தது. அதில் பட்ஜெட் புத்தகத்தை வைத்துப் படித்துக்கொண்டிருந்தார் கலைஞர் .
அ.தி.மு.க உறுப்பினர்கள் கலைஞர் யை நோக்கிப்பாய்ந்தனர். செங்கோட்டையனும் மற்றவர்களும் சிறிய மேஜையைத் தட்டிவிட்டு, கலைஞர் யிடமிருந்து பட்ஜெட் புத்தகத்தைப் பிடுங்கிக் கிழித்து வீசினார்கள். கலைஞர் யின் முகத்தை நோக்கி குத்துவிழ, அவர் நிலை தடுமாறினார். கண்ணாடி உடைந்தது.
மேஜை அவர் கையில் விழுந்து காயத்தை ஏற்படுத்தியது. பதிலுக்கு தி.மு.க உறுப்பினர்களும் அமைச்சர்களும் பாய்ந்து வந்து, அ.தி.மு.க-வினரைத் தாக்கினார்கள். அரண் அமைத்து, கலைஞர் யைப் பாதுகாப்பாக சபாநாயகர் அறைக்கு அழைத்துப் போனார்கள்.
இரண்டு தரப்பும் இருக்கைகள், மேஜைகள் மீது ஏறி நின்றுகொண்டு மல்லுக்கட்டினார்கள். பட்ஜெட் புத்தகக்கட்டுகள் தூக்கிவீசப்பட்டன. மைக்குள் ஆயுதங்களாகின. அவற்றைப் பிடுங்கி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டார்கள். செருப்புகள் இரண்டு பக்கமும் மாறிமாறிப் பறந்தன.
தூக்கி வீசப்பட்ட கட்டைகள், புத்தகங்கள் ஜெயலலிதா தலையிலும் தோள் பட்டையிலும் விழுந்தன. பறந்துவந்த மைக், வீரபாண்டி ஆறுமுகத்தின் நெற்றியைப் பதம்பார்த்தது. காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும் தப்பவில்லை. செருப்புகள், அட்டைகள், புத்தகங்கள் அவர்மீது வீசப்பட்டன.
இதுபற்றி பிறகு சொன்ன மூப்பனார், ‘‘விழுந்த செருப்புகளைச் சேகரித்து வைத்தால் ஒரு செருப்புக் கடையே வைக்கலாம்’’ என்றார். பரணி பாடிக் கொண்டிருந்த சட்டசபை, கலிங்கத்துப் போர்ப்பரணி ஆனது. வேறுவழியில்லாமல் போலீஸை உள்ளே அழைத்தார் சபாநாயகர். ஆனாலும், கலாட்டா அடங்கவில்லை.
சபை ஒத்திவைக்கப்பட்டது. ஜெயலலிதா தள்ளாடியபடியே, கட்சியினர் பாதுகாப்போடு காரில் ஏறிச் சென்றார்.
பட்ஜெட் தாக்கல் என்பதால், கலைஞர் பட்ஜெட் படிக்கும் காட்சியைப் படமெடுக்க பத்திரிகை போட்டோகிராபர்கள் சட்டசபைக்கு வந்திருந்தார்கள். அந்த நேரத்தில் கலவரம் ஏற்பட்டுவிட,
அதையும் சிலர் பதிவு செய்தார்கள். ஆனால், ‘‘சட்டசபையில் எடுக்கப்பட்ட எந்தப் படத்தையும் என் அனுமதியின்றி பத்திரிகைகள் வெளியிடக் கூடாது’’ என சபாநாயகர் தமிழ்க்குடிமகன் உத்தரவிட்டார். ஜெயலலிதாவும் அவரது கட்சி எம்.எல்.ஏ-க்கள் 27 பேரும் மார்ச் 31-ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.
சட்டசபையில் என்ன நடந்தது என்பதை கலைஞர் யும் ஜெயலலிதாவும் பத்திரிகையாளர்களை அழைத்துச் சொன்னார்கள். ‘‘என்னை, ‘கிரிமினல் குற்றவாளி’ என ஜெயலலிதா சொன்னபோதுகூட தி.மு.க. உறுப்பினர்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள். செங்கோட்டையன் என்னை நோக்கிப் பாய்ந்து வந்தபோது, ஜெயலலிதா,
அவரைப் பார்த்து, ‘குத்துடா அவனை’ என ஆக்ரோஷமாகச் சொன்னார். செங்கோட்டையன் என்னைக் குத்தியதும் மூக்குக் கண்ணாடி உடைந்தது. பட்ஜெட் புத்தகத்தைக் கிழித்து என் முகத்தில் அடித்தார்’’ என்றார் கலைஞர் .
கவர்னர் அலெக்ஸாண்டரிடம் புகார் கொடுத்துவிட்டு,
போயஸ் கார்டனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, ‘‘தி.மு.க. எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் என்னைக் குறிவைத்துத் தாக்கி, கொல்ல முயன்றார்கள். மைக்குகளைப் பிடுங்கி அடித்தார்கள். பார்வையாளர்கள் மாடத்திலிருந்து செருப்புகள் வீசப்பட்டன. அமைச்சர்கள்
மோசமான வார்த்தைகளில் திட்டியதுடன், கிடைத்த பொருள்களையெல்லாம் என் மீது வீசினார்கள். இதில் நான் மயக்கமடைந்தேன். துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் தாக்கினார்கள். மைக்கை ஆப் செய்துவிட்டு என்னைப் பார்த்து, கேவலமான வார்த்தையில் கலைஞர் திட்டினார்.
என் நடத்தையையும் மோசமாக விமர்சித்தார். அமைச்சர் துரைமுருகன், என் சேலையைப் பிடித்து இழுத்து உருவியதில் சேலை கிழிந்ததோடு நான் கீழே விழுந்தேன். தலையில் உள்காயம் ஏற்பட்டது. முதுகு, கால், முட்டிகளில் கடுமையான வலி’’ என்றார்.
வீரபாண்டி ஆறுமுகம் அரசு மருத்துவமனையிலும்
ஜெயலலிதா மயிலாப்பூர் தேவகி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். சட்டசபைக் கலவரத்தால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரவில்லை. ஆனாலும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வேலைகளைச் சளைக்காமல் நடராசன் செய்தார். பிரதமர் சந்திரசேகருடன் நடந்த சந்திப்புகள்,
ராஜீவ் காந்திக்குத் தரப்பட்ட பிரஷர்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பின. ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்த நடந்த சதிகள், சதிராட்டங்கள் தனி எபிசோடு. ஜெயலலிதா அரியணையில் அமர்ந்தால்தான் ‘அறுவடை’ செழிக்கும் என சசிகலா குடும்பம் நினைத்தது. அதுவும் நடந்தது.
ராஜினாமாவை சோபன்பாபுவிடம் கேள் என்பது தகாத வார்த்தையா ? அதனால் பிரளயாமா யாமறியேன்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

28 Jul
சற்றேறக்குறைய ஏழெட்டு வருடங்களுக்கு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில்கூட ஒரு சாதாரணப் பொதுக்கூட்டத்தையும் அனைத்திந்திய அண்ணா திமுகவினால் நடத்த முடியவில்லை என்பது சாதாரண விஷயம் அல்ல! இவற்றையெல்லாம் சொல்வதனால் நான் அழகிரியின் அரசியலை ஆதரிக்கிறேன் என்பதல்ல.
சில நிகழ்வுகளின் பின்னணிகளில் நடைபெறுகின்ற நடைமுறைகளின் அலசல்தான் இது.
மதுரை என்பது இன்றல்ல அன்றையிலிருந்தே எம்ஜிஆரின் கோட்டை என்றே இருக்கிறது..அதனைத் தகர்த்தாக வேண்டும். என்ன செய்யலாம்? தவிர அதனை இந்த வகையில் கட்டிக்காத்துக் கொண்டிருப்பவர் மதுரை முத்து. அவரைத் தொடர்ந்து பழக்கடை பாண்டி. மதுரைமுத்துவும் பழக்கடைப் பாண்டியும் பரமஹம்சரின் சீடர்களோ,
Read 22 tweets
27 Jul
#எம்ஜிஆர்_மோசடி

மாடி வீட்டு ஏழை படப்பிடிப்பு நின்று விட்டது குறித்து, சந்திரபாபு கூறியது: விதி எனும் காலதேவன் அந்த அறைக்குள் காத்திருந்ததை எப்படி அறிவேன்!
சுமார், 45 நிமிடங்கள், ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்ததே யுத்தம்... அதுபோன்று உள்ளே நடந்தது...
'வாங்க பாபு...' Image
'வணக்கம் மிஸ்டர் சக்கரபாணி, சவுக்கியமா... உங்க தயவு தான் வேணும்...'
'நான் என்ன பண்ணனும் சொல்லுங்க...'
'மிஸ்டர் எம்.ஜி.ஆர்., கால்ஷீட் கொடுத்தீங்கன்னாத்தான் நாங்க தப்பிக்க முடியும்; கொஞ்சம் பாத்து செய்யுங்க...'
'பாபு, நீங்க ஏன் எம்.ஜி.ஆரை போட்டு படம் எடுக்க நினைக்கிறீங்க...
நல்லா சம்பாதிக்கணும்ன்னு தானே... அப்படின்னா, நாங்க சொல்ற வரைக்கும் பொறுத்து தான் இருக்கணும். நீங்க நினைக்கிறபடி எல்லாம் எங்களால கால்ஷீட் கொடுக்க முடியாது...'
'நாங்க நினைக்கிறபடி, கால்ஷீட் கொடுக்க வேணாம்; நீங்க நினைக்கிறபடியே கால்ஷீட் கொடுங்க...'
'அத, அப்பப்ப தெரியப்படுத்தறோம்...'
Read 21 tweets
27 Jul
தொண்டன் தன் மனவருத்தத்தை தெரியப்படுத்தலாம்.
கழக பொதுச்செயலாளர் இப்படி பேசலாமா?
தன் கட்சியினரை பற்றி இப்படிப்பட்ட
குற்றச்சாட்டுகள் பொதுச்செயலாளர் பேசலாமா?
தவறு செய்தவர்களை அழைத்து தண்டனை வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர் இப்படி பேசலாமா?
ஆதாரங்கள் எல்லாம் இருக்கும் போது சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க என்ன தயக்கம்.
நீங்கள் சொல்வதை பார்த்தால் சம்பந்தப்பட்டவர்கள் உங்களுக்கு எதிராக அல்ல கழகத்திற்கு துரோகம் செய்திருக்கிறார்கள்..
பொதுவெளியில் பேசாமல் டெலிபோனில் உரையாடியதற்காக திருவண்ணாமலை
சாவல்பூண்டியார்,குடியாத்தம் குமரன், இளைஞரணி நெல்லை துரை போன்றோர் தண்டிக்கப்பட்ட போது கட்சிக்கு துரோகம் செய்தவர்களை ஏன் தண்டிக்கவில்லை..
-+--+----------------------------------------------------------+
Read 12 tweets
27 Jul
#எம்ஜிஆர்_மோசடி

எம்.ஜி.ஆர், சந்திரபாபு, ஜெயலலிதா என மூவரும் சாப்பிட அமர்ந்திரு க்கிறார்கள். முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திர்ருந்த எம்.ஜி.ஆருக்கு அவர் வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திர பாபுவுக்கோ வரவில் லை! “என்ன சாப்பிடலையா?” என கேட்ட எம்.ஜி.ஆர்,
“இன்னைக்கு என் சாப்பாட்டைசாப்பிடுங்கள்” என ‘ஒரு மாதிரி’யாகக் கூறி விட்டு எழுந்துபோயிருக்கிறார். ஏன் கோவ மாக இருக்கிறார் என குழம்பியி ருந்த சந்திரபாபுவிடம் “நான் உங்களைப் பிடித்து தூக்கினேன் இல்லையா? அது அவ ருக்குப் பிடிக்கவில்லை” என ஜெயலலிதா சொல்லி தெளிவித்திருக்கிறார்!!!!!
இதில் என்ன கொடுமை என்றால் சந்திரபாபு ஜெயலலிதாவின் குடு ம்ப நண்பர். சிறுவயதில் இருந்தே ஜெயலலிதா சந்திரபாபுவை “அங்கிள்” என்றுதான் அன்பொழுக கூப்பிடுவா ராம்! அப்படி உறவு கொண்டிருந்த ஒருவரைக் காப் பாற்றியதற்காகத்தான் எம்.ஜி.ஆரு க்கு அப் படி கோபம்!!
Read 52 tweets
26 Jul
#எம்ஜிஆர்_வெண்ணிற_ஆடை_நிர்மலா

“நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
நான்” ..என எம்.ஜி.ஆர். முடித்து வைத்த
இன்னொரு விஷயம்...சட்டமன்ற மேலவை...!
எம்.ஜி.ஆர். காலம்வரைக்கும் , சட்டசபையில்
மேலவை என்று தனியாக
ஒரு சபை இருந்து வந்தது...
அந்த மேலவைக்கு 1986 - ல் வெண்ணிற
ஆடை நிர்மலாவை உறுப்பினராக நியமனம்
செய்தார் எம்.ஜி.ஆர்...
நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம்
எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன...
நினைத்ததை முடித்த நிம்மதியில் இருந்த
எம்.ஜி.ஆரின் இந்த திட்டத்திற்கு எதிர்பாராத
ஒரு சட்டச் சிக்கல் எழுந்தது....
வெண்ணிற
ஆடை நிர்மலா ஏற்கனவே முன்பு ஒருமுறை திவாலானவர்.....
இந்திய அரசியலமைப்பின் 102-(1)c
பிரிவின்படி திவாலான ஒருவர் நாடாளுமன்ற
உறுப்பினராகவோ, மாநில
Read 9 tweets
26 Jul
ஆட்சியில் தலையிட்ட ஆளுநர் சென்னா ரெட்டியை ஜெயலலிதா எப்படி எதிர்த்தார் தெரியுமா?

தமிழக ஆளுநராக எம்.சென்னாரெட்டி இருந்த காலம் அது. முதல்வராக ஜெயலலிதா முதல் முறை அதிகாரத்திற்கு வந்திருந்ததும் அந்த காலகட்டம்தான். 1993 ஆகஸ்ட் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.
அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. பெருத்த சேதத்துடன் உயிர் பலியும் ஏற்பட்டது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி பதறியடித்து ஓடிவந்து நேரடியாக வந்து கள ஆய்வு செய்தார்.
பிரதமருக்கு கடிதம் இப்படி ஒரு இடர் காலத்திலும் கூட, ஆளுநர் அங்கு சென்றதற்கு, ஜெயலலிதா கடுமையான
ஆட்சேபணை எழுப்பினார். இதன்பிறகு 1995ல் மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற சென்னாரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆனால் அதையும் எளிதில் விடவில்லை ஜெயலலிதா. ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(