கலைஞர் பற்றி நாத்திகர் பெரியார் முதல் ஆத்திகர் குன்றக்குடி அடிகளார் கூறியது வரை
என்னதான் கருணாநிதியை நீங்கள் ஆத்திரமாகத் திட்டினாலும், நேருக்கு நேர் சந்தித்தால் எந்தப் பெரிய மனிதரும் அவரிடம் சரணாகதி அடைந்துவிடுவார்கள் -
கண்ணதாசன்
'கிடைத்தற்கரிய வாய்ப்பு`
கலைஞர் நமக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்... ஒரு பகுத்தறிவாளராகவும், ஆட்சிக் கலையில் அரிய ராஜதந்திரியாகவும் நடந்துவருவதன் மூலம் தமிழர்களுக்குப் புது வாழ்வு தருபவராகிறார் நமது கலைஞர்—பெரியார்
'கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான்'
என்னை முழுவதும் அறிந்தவர்கள்தான் கழகத்திலே இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத் தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடம் உண்டு. கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான்!—அண்ணா
நாடு உயர்கிறது'
சிலருக்கு பதவி கிடைத்தால் நாடு குட்டிசுவராகிவிடுகிறது. நமது கலைஞருக்கு பதவி கிடைத்தாலோ நாடு உயர்கிறது.
- எம்.ஜி.ஆர்
என்ன பேசுவேன்?'
என் அருமை நண்பனைப் பற்றி நான் என்ன பேசுவது? கலைஞரைப் பற்றி பேசினால், நானும் அதில் சேர்ந்திருப்பேனே? அப்படியென்றால் என்னை நானே புகழ்ந்துகொள்வதாகிவிடுமே, அதைப் பற்றி பேசுவதா? இருவரும் சிறுபிள்ளைகளாகத் தஞ்சை மாநகரிலே சந்தோஷமாக சுற்றித்
திரிந்தோமே அதைப் பற்றி பேசுவதா? திமுகவுக்கு நிதி திரட்டுவதற்காக ஊர் ஊராக தெருத் தெருவாக நாடகம் போட்டோமே, அதைப் பற்றிப் பேசுவதா? சினிமாவுக்கு வந்த பிறகு 'பராசக்தி'யில் அவருடைய வசனத்தில் பேசி நடித்தேனே,
அதைப் பற்றி பேசுவதா? அந்தப் படம் வந்த ஒரே நாளில் புகழ் வானத்தில் பறந்தேனே, அதைப் பற்றி பேசுவதா?- சிவாஜி கணேசன்
காப்பீட்டுத் தமிழன்'
தமிழ் மக்களின் காப்பீட்டுத் தமிழன் கலைஞர். நம் உயிர் காக்கும், மொழி காக்கும், இனம் காக்கும் தமிழனாக விளங்குபவர்.
- பாரதிராஜா
அழகான கவிதை
தானே எழுத்தாகி, தானே சொல்லாகி, தானே பொருளாகி, தானே யாப்புமாகி, தானே அணியுமாகி, மொழியாய், மொழி வளமாய், கவிதையாய் தன்னை தானே எழுதிக்கொண்ட அழகான கவிதை கலைஞர்!—இளையராஜா
'கேட் பாஸ்'
நான் நடிக்க வந்த காலத்தில் கலைஞர் வசனத்தை அழகாகப் பேசிகாட்டுவதுதான் நடிப்பிற்கான கேட் பாஸ்.- கமல்ஹாசன்
கடவுளுக்கு பிடிக்கும்'
சிலருக்குக் கடவுளைப் பிடிக்காது. ஆனால், கடவுளுக்கு அவர்களைப் பிடிக்கும். கலைஞர் அப்படித்தான்!—ரஜினிகாந்த்
கலைஞரின் பங்கு மகத்தானது'
திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் மீது மிகுந்த மதிப்பு கொண்டவன் நான். இந்த மண்ணில் சாதி, மத அடையாளங்களை எல்லாம் கடந்து நாம் அனைவரும் உணர்வால், 'தமிழர்' என்று உணரவைத்த இயக்கம் அது. இதில் கலைஞரின் பங்கு மகத்தானது.-- ஏ.ஆர்.ரஹ்மான்
'காண்டீபன் கலைஞர்'
கண்ணனாக இருந்து சொல்லெறிந்தவரும், காண்டீபனாக இருந்து வில்லெறிந்தவரும் கலைஞர்தான்!—வைரமுத்து
தேசிய தலைவர்கள் வரிசையில்'
பேசும் வார்த்தைகளுக்கும் எழுதும் எழுத்துகளுக்கும் உள்ள மதிப்பையும் வலிமையையும் உணர்ந்த தலைசிறந்த தேசியத் தலைவர்கள் வரிசையில் வருபவர் கலைஞர். திலகர், காந்தி, நேரு, இஎம்எஸ், அண்ணா ஆகியோரின் வரிசையில் வைக்கத் தக்கவர்!-- என். ராம், 'தி இந்து'
ஆன்மிக கலைஞர்’
தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஆன்மிகவாதிகள் என்ன கருத்து சொல்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுக்கொள்பவர் கலைஞர்.
- குன்றக்குடி அடிகளார்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பாதவத்தி எத்தனை பேரோட வாழ்ந்து அத்தனை பேரையும் கொன்று சந்தோஷ பட்டவள் .
கிளியோபாட்ராவின் மரணம். பெரிய கிளியோபாட்ராவின் வாழ்க்கை, காதல் மற்றும் இறப்பு.
கிளியோபாட்ரா VII (கிமு 69 - 30) - எகிப்தின் கடைசி ராணி, பண்டைய காலத்தின் மிகவும் பிரபலமான பெண்.ஒரு வேசி ராணி, எகிப்தின் தீய மேதை. நயவஞ்சகமான, கொடூரமான, கோழைத்தனமான மற்றும் நயவஞ்சகமான, மற்றவர்களின் துரதிர்ஷ்டங்களின் மீது அவளது நல்வாழ்வைக் கட்டியெழுப்ப,
இறுதியில் அவள் இறக்க நேரிட்டது, அவளுடைய சொந்த சூழ்ச்சிகளின் வலையமைப்பில் சிக்கிக்கொண்டது.
அறிவார்ந்த மற்றும் படித்த கிளியோபாட்ரா உலகின் மிக புகழ்பெற்ற பெண். அழகான மனிதர்களின் அரிய கலையை கிளியோபாட்ரா தேர்ச்சி பெற்றார், மேலும் வலிமை இன்னும் ஆண்களின் கைகளில் இருந்ததால், எகிப்திய
நாடகத்தின் இடைவேளையில் திடீரென முதல்வர் காமராஜர் அரங்குக்கு வருகிறார். அவரை சோ அழைக்கவில்லை. நாடகம் நடத்திய சபா, சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.
நாடகத்தைப் பாராட்டி ஜெமினி கணேசன் மேடையில் பேசுகிறார். “அருமையான இந்த நாடகத்தை மேடையேற்ற அரசு அதிகாரிகள் லைசென்ஸ் மறுத்ததாக சோ சொல்கிறார்” என்று ஜெமினி பேச, காமராஜருக்கு ‘கெதக்’கென்று ஆனது. (அப்போதெல்லாம் ரேடியோ வைத்திருக்கவே லைசென்சு வேண்டும்).
மறைந்த பின்பும் அவரை வசை சொற்களால் புளங்காகிதம் செய்யும் அற்பர்களே !
வாழ்ந்த காலத்திலும் கல்லடியும் சொல்லடியும் பட்டு போராடி அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் சரி சமூக நீதி குறித்துச்
செயல்படுவதில் அவருக்கு முழு அர்ப்பணிப்பு இருந்தது. எந்த ஒரு விவகாரத்திலும் அவர் சமூக நீதி குறித்து சிந்திப்பவராக இருந்தார்.
ஆதிக்க சாதி மனநிலைய ஆணாதிக்க மனநிலையுடன் அவர் காலத்தில் அரசியலில் போராடி முன்னுக்கு வந்தவர் எவருமிலர்.
பிராமணரல்லாதோர் இயக்கத்தின் பின்னணியில் இருந்து
வந்திருந்தாலும், அவருக்கு பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டும் பழக்கம் இருந்ததே இல்லை. அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும். மூத்த நண்பர் என்றே கருதவேண்டும். அவர் சித்தாந்த ரீதியாக எதிர்த்தாரே தவிர பிராமணர்கள் மீதும் சரி எந்தவொரு குழு மீதும் சரி பாரபட்சம் காட்டியதே
’மணமாகி ஒருவரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் என அறிந்தும் கருத்து அறியும் வயதில் இரு பெண் பிள்ளைகள் இருப்பது தெரிந்தும் ஒருவரைத் திருமணம் செய்த காம விரசம் கொண்ட தாமரை 🙃🙃🙃🙃
கலைஞர் பெயரில் பல்கலைக் கழகம்: திரு.திருமாவளவன் கோரிக்கை!
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள கோரிக்கையில், "தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றிய கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் தமிழ்நாட்டில் மொழியியல்
பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் எத்தனையோ பல துறைகளுக்கெனத் தனித்தனியே பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு அவையாவும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. ஆனால், மொழியியலுக்கென தனியே
பல்கலைக்கழகம் ஏதும் இல்லை.
உலகின் பல்வேறு மொழிகளைக் கற்பிக்கவும், இந்திய மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், மொழிபெயர்ப்புகளை ஊக்குவிக்கவும், உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து ஆராய்ச்சிக் கல்வி பயிலுவோர் இந்தியாவுக்கு வந்து மொழியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும்
ராதிகா சரத்குமார் வாக்கு சேகரிப்பில் திமுக சார்பில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து மிக கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். எந்தவிதமான மக்கள் சேவையிலும் ஈடுபடாதவர் உதயநிதி ஸ்டாலின், அரசியலில் களம் இறங்குவதற்காகவே சினிமாவில் நடித்துவிட்டு நேரடி அரசியலுக்கு வந்துள்ளார்
சுற்றிப்பாருங்கள் என்ன நடக்கிறது. ஒரு பிரதான கட்சி, வெளிச்சம் வருகிறது, விடியல் வருகிறது என கூறுகிறார்கள். காலையில் எழுந்து நாம் சூரியனைப் பார்த்து கும்பிடுகிறோம். அவருக்கு மட்டும் இன்னும் விடியவில்லை. இன்னும் இருட்டுக்குள்ளேயே இருக்கின்றனர். ஏனென்றால்,