நாடகத்தின் இடைவேளையில் திடீரென முதல்வர் காமராஜர் அரங்குக்கு வருகிறார். அவரை சோ அழைக்கவில்லை. நாடகம் நடத்திய சபா, சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.
நாடகத்தைப் பாராட்டி ஜெமினி கணேசன் மேடையில் பேசுகிறார். “அருமையான இந்த நாடகத்தை மேடையேற்ற அரசு அதிகாரிகள் லைசென்ஸ் மறுத்ததாக சோ சொல்கிறார்” என்று ஜெமினி பேச, காமராஜருக்கு ‘கெதக்’கென்று ஆனது. (அப்போதெல்லாம் ரேடியோ வைத்திருக்கவே லைசென்சு வேண்டும்).
சோவிடம் விவரம் கேட்கிறார். மத்திய மாநில அரசுகளை விமர்சித்து சில வசனங்கள் நாடகத்தில் இடம் பெற்றிருந்ததாகவும், ஸ்க்ரிப்டை வாசித்த அரசு அதிகாரிகள் லைசென்ஸ் வழங்க மறுத்ததாகவும் சொன்னார். இதையடுத்து காமராஜருக்கும், சோவுக்கும் விவாதம் வலுக்கிறது.
“எனக்கு ஓட்டத் தெரியுமா தெரியாதான்னு நீங்களே இருந்து பார்த்திருந்தாதானே தெரியும். பாதியிலே வந்துட்டு இப்படி பேசுறது சரியா?”
இதைத் தொடர்ந்து காமராஜர் கோபமாக கிளம்புகிறார். நாடகத்தை நடத்தும் சபாவினருக்கு தர்மசங்கடம். நாடகம் பார்க்க வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி. நாட்டின் முதல்வரையே ஒரு சின்னப்பையன் எதிர்த்து, மரியாதை இல்லாமல் பேசுவதா என்று. அதே நேரம், இந்த சம்பவம்தான் சோவை
துணிச்சல் மிக்கவராகவும், கறாரான அரசியல் விமர்சகராகவும் பிரபலப்படுத்தியது.
சோவின் தந்தையார் காமராஜர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தவர். எனவே, காமராஜரிடம் மன்னிப்பு கேட்காமல் வீட்டுக்கு வந்தால் சேர்க்க மாட்டேன் என்று கூறிவிட்டார். சோ,
பணிபுரிந்த அலுவலகமான டி.டி.கே.வும் இதேரீதியான நிபந்தனையை விதித்திருந்தது.பிற்பாடு காமராஜரை பார்த்து தன்னிலை விளக்கம் சொல்ல சோ முயற்சிக்கிறார்.
“அதெல்லாம் எதுக்குங்குறேன்? அப்படி இல்லைன்னா நீங்க சோவே இல்லைங்கறேன்” என்று தன் பெருந்தன்மையை காமராஜர் காண்பித்தார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு ‘சோ பேசுகிறார்’ என்று தமிழகத்தில் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பரபரப்பான பேச்சாளராகிறார். அவ்வகையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை பேசவேண்டியிருக்கிறது.
பார்ப்பனீயச் சிந்தனைகளின் மொத்த உருவம் சோ.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களிடமோ அப்போது திராவிட சுயமரியாதை இயக்கக் கருத்துகள் நாடி, நரம்பெல்லாம் ஓடிக்கொண்டிருந்தன.
சோ பேசப்பேச மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பு. எழுந்து ஒருமையில் கோஷமிடத் தொடங்கினார்கள்.
“இப்படியெல்லாம் மேடையிலே பேச உனக்கு வெட்கமா இல்லையாடா?” என்று ஒரு மாணவர் சூடாக கேட்டார்.
“பேசுறது என்னடா... தைரியமா எழுதக்கூட செய்வேன்” என்று பதிலடி கொடுத்தார் சோ.
“நீ எழுதுனா எந்த பத்திரிகை பிரசுரிப்பான்? எவன் படிப்பான்?” மாணவர்களின் பதிலடி.
“எவனும் பிரசுரிக்கலேன்னா நானே பத்திரிகை ஆரம்பிச்சி எழுதறேன். எவனும் படிக்கலேன்னா நானே அதை படிச்சிக்கறேன்”
அடுத்த சில நாட்களில் ‘தி ஹிந்து’ பத்திரிகையில், “நான் பத்திரிகை தொடங்கலாமா?” என்றொரு விளம்பரத்தை தமிழிலேயே கொடுத்தார். அதுதான் அந்த ஆங்கில நாளிதழில் வெளிவந்த முதல் தமிழ்
விளம்பரம் என்கிறார்கள். அந்த விளம்பரத்தை கண்டு பத்தாயிரம் பேர் ‘தொடங்குங்கள்’ என்று சோவுக்கு கடிதம் எழுதினார்களாம் (அதென்ன ‘பத்தாயிரம்’ கணக்கு என்று தெரியாது. ‘முகம்மது பின் துக்ளக்’ படத்துக்கு சென்சார் பிரச்சினை வந்தபோதும் ‘பத்தாயிரம்’ பேர் தந்தி அனுப்பியதாக சொல்வார்).
ஆனால்-
பத்திரிகை நடத்துமளவுக்கு தனக்கு பொருளாதார பலமில்லை என்று சோ தயங்கிக் கொண்டிருந்தபோது, விகடன் நிறுவனம் அவரை தொடர்பு கொண்டு தங்கள் brandக்கு தொடர்பில்லாத வகையில், ஆனால் பின்னணியில் இருந்து ‘துக்ளக்’ தொடங்க உதவியிருக்கிறார்கள்.
‘ஆறு மாதத்தில் தொடங்கிவிடலாம்’ என்று விகடன் சொன்னபோது, “முடியாது. பதினைந்தே நாளில் ‘துக்ளக்’ வந்தாக வேண்டும். இல்லையேல் பத்திரிகையே வேண்டாம்” என்றாராம் சோ.
1970, ஜனவரி 14 அன்று ‘துக்ளக்’ முதல் இதழ் வெளிவந்தது.
எண்பதுகளின் இறுதியில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழுக்காக சோவை எஸ்.எஸ்.சந்திரன் எடுத்த பேட்டியில் இந்த விவரங்கள் விரிவாக உள்ளன.
ஆனால்-
சோ இதே கதையை வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார்.
அல்லது எழுதியிருக்கிறார். ‘அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’ தொடரில் நண்பர்களிடம் கட்டிய ஐந்து ரூபாய் பெட்டுக்காக தொடங்கப்பட்ட பத்திரிகை ‘துக்ளக்’ .
என்று சொல்லியிருப்பார். தொடர்ச்சியாக வாசிக்காததால் ‘குமுதம்’ தொடரில் என்னவென்று எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. நூலாக வெளிவந்த பின்தான் வாசிக்க வேண்டும்.
Source :யுவகிருஷ்ணா
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
முகலாயர்களின் காலம் வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு பகதூர் ஷாவுடன் முற்றுப்பெற்றது. சுமார் 450 வருட காலங்கள் இந்தியாவை ஆக்கிரமித்திருந்த முகலாயர்களின் ஆதி அரசர் எனக் கருதப்படுபவர்தான் தைமூர்.
முகலாயப் பேரரசர் பாபரின் முப்பாட்டன். ஒருவகையில், தற்போது பெயர் சூட்டப்பட்டிருக்கும் பிள்ளை தைமூருக்கு, மரபணு ரீதியிலான தொடர்புடையவர்தான் அரசர் தைமூர்.
Emir Timur in the Gur-e-amir Mausoleum in Samarkand, Uzbekistan.
அரசர் தைமூர், முகலாயர்களில் கொடுங்கோல் அரசராகக் கருதப்பட்டவர். நாடோடி அரசர்களில் கடைசி தலைமுறை என்று கருதப்பட்டவர். அவருக்குப் பின்னான முகலாயர்கள் நிலையான ஒரு நிலத்தில்தான் தங்களது ஆட்சியை நிறுவினார்கள். செங்கிஸ்கானின் வழித்தோன்றலாகத் தன்னை அறிவித்துக்கொண்ட தைமூர்,
"பேரழகியான ஜஹானாரா மீது ஷாஜகான் பைத்தியமாக இருந்தார். தந்தையை மிகவும் அக்கறையாக கவனித்துக் கொண்டார் ஜஹானாரா. அவரால் மேற்பார்வையிடப்பட்ட உணவு மட்டுமே அரசருக்கு வழங்கப்படும் என்ற அளவுக்கு ஜஹானாராவின் கண்காணிப்பு இருந்தது".
ஷாஜகான்- மகள் ஜஹானாரா உறவு விவாதப் பொருளானது ஏன்?
"தந்தைக்கும் மகளுக்குமான உறவு குறித்து பரவலாக பேசப்பட்டது. இதுபற்றி ஜாடைமாடையாக பேசிய சில அரசவை அதிகாரிகள், 'தான் நட்ட மரத்தில் விளையும் பழங்களை பறித்து உண்ணும் உரிமை அரசருக்கு உண்டு" என்று கூறியதாக பெர்னியர் கூறுகிறார்.
முகலாய பேரரசர் ஷாஜகான், தனது மூத்த மகள் ஜஹானாராவுடன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ராணி மும்தாஜ் மஹலின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வந்தது.
உடனே தாயின் அறைக்கு ஓடிச் சென்ற ஜஹானாரா, தாயின் பிரசவம் சிக்கலாக இருக்கிறது; குழந்தை கருப்பையில் இருந்து
பாதவத்தி எத்தனை பேரோட வாழ்ந்து அத்தனை பேரையும் கொன்று சந்தோஷ பட்டவள் .
கிளியோபாட்ராவின் மரணம். பெரிய கிளியோபாட்ராவின் வாழ்க்கை, காதல் மற்றும் இறப்பு.
கிளியோபாட்ரா VII (கிமு 69 - 30) - எகிப்தின் கடைசி ராணி, பண்டைய காலத்தின் மிகவும் பிரபலமான பெண்.ஒரு வேசி ராணி, எகிப்தின் தீய மேதை. நயவஞ்சகமான, கொடூரமான, கோழைத்தனமான மற்றும் நயவஞ்சகமான, மற்றவர்களின் துரதிர்ஷ்டங்களின் மீது அவளது நல்வாழ்வைக் கட்டியெழுப்ப,
இறுதியில் அவள் இறக்க நேரிட்டது, அவளுடைய சொந்த சூழ்ச்சிகளின் வலையமைப்பில் சிக்கிக்கொண்டது.
அறிவார்ந்த மற்றும் படித்த கிளியோபாட்ரா உலகின் மிக புகழ்பெற்ற பெண். அழகான மனிதர்களின் அரிய கலையை கிளியோபாட்ரா தேர்ச்சி பெற்றார், மேலும் வலிமை இன்னும் ஆண்களின் கைகளில் இருந்ததால், எகிப்திய
மறைந்த பின்பும் அவரை வசை சொற்களால் புளங்காகிதம் செய்யும் அற்பர்களே !
வாழ்ந்த காலத்திலும் கல்லடியும் சொல்லடியும் பட்டு போராடி அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் சரி சமூக நீதி குறித்துச்
செயல்படுவதில் அவருக்கு முழு அர்ப்பணிப்பு இருந்தது. எந்த ஒரு விவகாரத்திலும் அவர் சமூக நீதி குறித்து சிந்திப்பவராக இருந்தார்.
ஆதிக்க சாதி மனநிலைய ஆணாதிக்க மனநிலையுடன் அவர் காலத்தில் அரசியலில் போராடி முன்னுக்கு வந்தவர் எவருமிலர்.
பிராமணரல்லாதோர் இயக்கத்தின் பின்னணியில் இருந்து
வந்திருந்தாலும், அவருக்கு பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டும் பழக்கம் இருந்ததே இல்லை. அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும். மூத்த நண்பர் என்றே கருதவேண்டும். அவர் சித்தாந்த ரீதியாக எதிர்த்தாரே தவிர பிராமணர்கள் மீதும் சரி எந்தவொரு குழு மீதும் சரி பாரபட்சம் காட்டியதே
’மணமாகி ஒருவரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் என அறிந்தும் கருத்து அறியும் வயதில் இரு பெண் பிள்ளைகள் இருப்பது தெரிந்தும் ஒருவரைத் திருமணம் செய்த காம விரசம் கொண்ட தாமரை 🙃🙃🙃🙃