முகலாயர்களின் காலம் வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு பகதூர் ஷாவுடன் முற்றுப்பெற்றது. சுமார் 450 வருட காலங்கள் இந்தியாவை ஆக்கிரமித்திருந்த முகலாயர்களின் ஆதி அரசர் எனக் கருதப்படுபவர்தான் தைமூர்.
முகலாயப் பேரரசர் பாபரின் முப்பாட்டன். ஒருவகையில், தற்போது பெயர் சூட்டப்பட்டிருக்கும் பிள்ளை தைமூருக்கு, மரபணு ரீதியிலான தொடர்புடையவர்தான் அரசர் தைமூர்.
Emir Timur in the Gur-e-amir Mausoleum in Samarkand, Uzbekistan.
அரசர் தைமூர், முகலாயர்களில் கொடுங்கோல் அரசராகக் கருதப்பட்டவர். நாடோடி அரசர்களில் கடைசி தலைமுறை என்று கருதப்பட்டவர். அவருக்குப் பின்னான முகலாயர்கள் நிலையான ஒரு நிலத்தில்தான் தங்களது ஆட்சியை நிறுவினார்கள். செங்கிஸ்கானின் வழித்தோன்றலாகத் தன்னை அறிவித்துக்கொண்ட தைமூர்,
வாழ்நாளில் தான் போர் தொடுத்த இடங்களில் எல்லாம் செங்கிஸ்கானின் கொள்கைகளைப் பரப்பியதாக வரலாற்றின் ஒரு பக்கம் கூறுகிறது. தைமூரை, நாடோடி எனக் குறிப்பிட்டாலும்... ஈரான் தேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்கிறார் ஆய்வாளர் சாண்டர்ஸ். 1370-ல் தொடங்கி எகிப்திலிருந்து தெற்கு
ரஷ்யா, மத்திய ஆசியா எனப் பல பகுதிகளைக் கைப்பற்றத் தொடங்கி இருந்தார் அரசர் தைமூர். தற்போதைய பஞ்சாப் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த தைமூர், டெல்லியின் சுல்தான் நாசர் அல் தீன்... அவரது, சிறு படையைத் தோற்கடித்து அனுப்பியதை அடுத்து... கோபம் கொண்டு அப்போதே
கொரில்லா முறைத் தாக்குதல் நடத்தித் தலைகளை வெட்டிச் சாய்த்ததாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். போரில், தொடையில் தைத்த காயம் ஆறாமல் போகவே... கால் தாங்கி நடக்கும் பழக்கம் தைமூருக்கு ஏற்பட்டது. ‘நொண்டி தைமூர்’ என்ற சொல்லாடலும் அதற்குப் பிறகுதான் வந்தது. டெல்லியைக் கைப்பற்றிய பின்
அங்கிருந்து அபகரித்த யானைகளை... தனது பாதுகாப்புக்காக உபயோகப்படுத்திக்கொண்ட தைமூர், அதற்கு வண்ணம் பூசி காவலுக்கு நிற்கவைத்ததைத் தனது குறிப்புகளில் சுட்டிக் காட்டுகிறார்கள் ஆய்வறிஞர்கள்.
தைமூர், சமயோசிதத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் பெயர்போன அரசர். அதற்கு, தைமூரின் மங்கோலிய மற்றும் நாடோடிப் பின்புலமும் உதவியாக இருந்தது. சட்டத்தை, தன் போக்கில் மாற்றிக்கொள்ள இந்தப் பின்புலத்தைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தியதற்கான ஆவணங்கள் தைமூர் காலத்தைப் பற்றிய
குறிப்புகளில் கிடைக்கின்றன. இந்தியாவைக் கைப்பற்றிய பின் வெளியேறிய தைமூர், இங்கிருந்த கலைஞர்களையும் சிற்பிகளையும் தன்னுடன் அழைத்துப்போனதாக வரலாறு கூறுகிறது. அடுத்து, சீனாவைக் கைப்பற்றத் திட்டங்களை வடிவமைத்து வந்த நிலையில் உடல்நிலை சிக்கல் காரணமாக இறந்ததாகக் கூறுகின்றன
குறிப்பேடுகள். உலகத்தின் பகுதிகளை, தன் கரம் கொண்டு உலுக்கியவரின் மரணம் சாதாரணமாக நிகழ்ந்ததாகக் கூறுகின்றன ஆவணங்கள்.
காலம் :9 April 1370 – 14 February 1405
ஆண்டியாக இருந்தாலும் சரி, அலெக்ஸாந்தராக இருந்தாலும் சரி, வடக்கிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்துக்குள் நுழைய வேண்டுமென்றால் - விண்ணை முட்டும் இமயமலைத் தொடரைத் தாண்டியாக வேண்டும். அல்லது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆழமான சிந்து நதியைக் கடந்தாக வேண்டும். இயற்கை அமைத்துத் தந்த
இந்தப் பெரும் அரண்களைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்து, அதில் கம்பீரமாக வெற்றிகண்டவர்கள் - கிரேக்க மன்னன் அலெக்ஸாந்தர் உட்பட - மிகச் சிலரே.
அலெக்ஸாந்தரை தொடர்ந்து சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி.1221-ல் மங்கோலியத் தலைவன் செங்கிஸ்கான் வெறிபிடித்த பெரும் படையுடன் சிந்து நதிக்கரை வரை வந்து நின்றான். “இந்தியாவா, பாரசீகமா?’ என்று சிந்தனையுடன் அவன் வெளிப்படுத்திய மூச்சு, வட இந்தியாவை அங்குமிங்குமாக
ஆண்டுகொண்டிருந்த மன்னர்களை வெப்பக் காற்றாகத் தாக்கி நடுங்க வைத்தது. நல்ல காலமாக அவன் பாரசீகம் (பெர்ஷியா) பக்கம் குதிரைகளைத் திருப்பிக்கொண்டு முன்னேற - இந்தியா அவன் ரத்த வெறியிலிருந்து தப்பியது என்று சொல்லலாம்!
பிறகு, 1398-ல்தான் இந்தியாவுக்கு நிஜமான ஆபத்து வெடித்தது. மங்கோலியப் பரம்பரையில் வந்த தைமூர் என்கிற கொடுங்கோல் மன்னன் மத்திய ஆசியாவிலிருந்து ஒரு பெரும் படையுடன் கிளம்பி ஆப்கானிஸ்தானைக் கடந்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்தான். சிந்து நதியை அவன் சட்டை செய்யவில்லை.
படகுகளை வரிசையாக நிறுத்தி இணைத்துப் பாலம் ஏற்படுத்தி கணநேரத்தில் நதியைக் கடந்து டெல்லியை நோக்கி முன்னேறினான்.
இந்தியாவில் தோன்றுவதற்கான ஒரு முக்கியக் காரணம் தைமூர் என்பதால் அவன் சம்பந்தப்பட்ட ரத்தமயமான இந்திய அத்தியாயங்களை நம்மால் ஒதுக்க முடியவில்லை. ஆகவே, சற்று நெருக்கமாகச் சென்று - இதோ சிந்து நதிக் கரைக்குப் பெரும் படையுடன் வந்து சேர்ந்த தைமூருடன் சற்றுப் பயணிப்போம்.
ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலின் வடக்கில், முந்தைய சோவியத் ரஷ்யாவின் தென்கோடியில், இன்றைய உஸ்பெக் பகுதியில் உள்ள முக்கிய நகரம் சாமர்கண்ட். துருக்கிய - மங்கோலிய இனத்தைச் சேர்ந்த தைமூரின் தலைநகரம் அதுதான். சாமர்கண்டிலிருந்து கிளம்பிய
தைமூரின் மாபெரும் படை முதலில் பாக்தாத் நகரைச் சூறையாடியது. பிறகு பாரசீகம். வெறியும் வேகமும் கொண்ட தைமூரின் வீரர்கள் பாரசீகத்தைப் பந்தாடினார்கள். கொடூரக் களிப்புடன் அவர்கள் வெட்டி வீழ்த்திய மனிதத் தலைகளின் எண்ணிக்கை சுமார் எழுபதாயிரம். அவற்றைக் குவித்து
நூற்றுக் கணக்கான மனிதத் தலை பிரமிடுகளை உருவாக்கிய பிறகே தைமூர் பாரசீகத்தைவிட்டு வெளியேறினான்.
அடுத்தபடி ரஷ்யா. மாஸ்கோவுக்குள் புகுந்து சூறையாடிவிட்டு சில நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டு நேராக இந்தியாவை நோக்கி அவன் படை முன்னேற ஆரம்பித்தது. இலக்கு - அவன் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த, புகழ்பெற்ற டெல்லி நகரம்.
இந்தியாவை நோக்கி தைமூரின் படை முன்னேறிய வேகத்தோடு ‘பறவைகள் கூடப் போட்டியிட முடியவில்லை’ என்று சரித்திர ஆராய்ச்சியாளர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
செப்டம்பர் 22. ஆண்டு 1398. தைமூரின் படை சிந்து நதிக்கரையோரம் வந்து சேர்ந்தது. இந்தப் பரபரப்பான செய்தி வந்து சேர்ந்தவுடனே வட இந்தியா பீதியில் ஆழ்ந்தது. டெல்லியில் கோலோச்சிய பலம் வாய்ந்த சுல்தான் பிரோஷ் ஷா துக்ளக் இறந்து பத்து ஆண்டுகள் நகர்ந்துவிட்டன. ‘நானா,
நீயா?’ என்று கோஷ்டிச் சண்டையில் ஈடுபட்டிருந்த ‘பொம்மை’ அரசர்கள் இருவர் டெல்லியை ஏதோ ஒரு ஒப்புக்கு ஆண்டு கொண்டிருந்தனர். ஒரு கோஷ்டியின் தலைவனான மல்லூகான் இக்பாலின் கை ஓங்க, அவன் உதவியோடு டெல்லி அரியணையில் உட்கார்ந்தான் முகம்மது ஷா. அவன் பதவியேற்ற கையோடு தைமூரின்
படை டெல்லியை நெருங்கிக் கொண்டிருக்கும் செய்தியும் வந்து சேர்ந்தது.வரட்டுமே! ஒரு நொண்டி மன்னனுக்கா நாம் பயப்படுவது? ஆர்ப்பாட்டம் போடும் அந்த மங்கோலிய நாடோடியைத் தோற்கடித்தால் டெல்லி சுல்தானாகிய தாங்கள்தான் உலக சாம்பியன்!” என்கிற ரீதியில் மன்னனை மல்லூகான் இக்பால்
உசுப்பேற்ற - யார், என்ன, ஏது என்று எதுவும் விசாரித்து அறியாமலேயே போர் உடை பூண்டான் முகமது ஷா (இளம் வயதில் ஒரு போர்க்களத்தில் எதிரியின் அம்பு தொடையில் பாய்ந்ததால் தைமூரின் கால் பாதிப்புக்குள்ளானது. ஆகவே, சற்று விந்தி விந்தி நடந்த அவனை தைமூர்இ லெங் -
‘நொண்டி தைமூர்’ என்று மற்றவர்கள் குறிப்பிட்டார்கள். ‘இப்படி எனக்கு ஒரு பெயர் இருப்பது தெரியும். ஆனால், என் எதிரில் வந்து யாரும் என்னை அப்படி அழைக்க மாட்டேன் என்கிறார்களே!’ என்று அலுப்புச் சிரிப்புடன் தைமூர் குறிப்பிடுவதுண்டு.
சிந்து நதியைக் கடந்த தைமூரின் படை, மகிழ்ச்சியைக் கொண்டாட பஞ்சாப் பகுதி முழுவதையும் சூறையாடி வெறியாட்டம் போட்டது. சுமார் ஒரு லட்சம் பேர் தைமூரிடம் அடிமைகளாகச் சிக்கினார்கள். அவர்களை மொத்தமாகக் கயிறுகளால் கட்டி தைமூரின் படை கூடவே இழுத்துச் சென்றது.
டிசம்பர் ஆரம்பம். வாள்களை
உயர்த்தியவாறு, ஏகமான ரத்த ஆர்வத்துடன் டெல்லி நகர எல்லையில் முகாமிட்ட இந்த மங்கோலியப் படையின் மொத்த எண்ணிக்கை சுமார் தொண்ணூறு ஆயிரம்!
டெல்லி பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த தைமூரிடம் நெருங்கிச் சென்ற சில தளபதிகள், களத்தில் குதிக்கும் தருணத்தில் கையோடு சுமார் ஒரு லட்சம் அடிமைகளை -
அதுவும் இந்தியாவைச் சேர்ந்தவர்களை - பக்கத்தில் வைத்துக்கொண்டிருப்பது சற்று ஆபத்தானது என்றும் ஏதேனும் கலவரமான சூழ்நிலையில் அவர்கள் தப்பித்து எதிரிகளோடு சேர்ந்தால் அதனால் பிரச்னை ஏற்படலாம் என்றும் எடுத்துச் சொன்னார்கள். ஆகவே, தேர்ந்த சில ஆயிரம் அடிமைகளைத் தவிர, மற்றவர்களைத்
தீர்த்துக்கட்டிவிடலாம் என்றும் யோசனை சொன்னார்கள். “அடங்கி ஒடுங்கிப்போய் துவண்டு கிடக்கும் இந்த அடிமைக் கூட்டத்தைக் கொன்று தள்ளுவதில் நேரத்தைச் சலவிட்டுக் கொண்டிருக்க முடியாது. பிரச்னையைத் தீர்க்க நான் வேறு ஒரு வழி பண்ணுகிறேன்!” என்று சொன்ன தைமூர், சில நூறு அடிமைகளை நட்ட
நடுவில் கொண்டுவரச் செய்தான். மறுகணம் அவன் ஆணையிட, தைமூரின் வீரர்கள் உருவிய வாட்கள் அந்த அடிமைகளின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி வீழ்த்தித் தள்ளின. “ஏதேனும் வாலாட்டினால் இதே கதிதான் மற்றவர்களுக்கும்!” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் தைமூர். இந்தப் பயங்கரக் காட்சியைப் பார்த்த
பல்லாயிரக்கணக்கான அடிமைகள் கதிகலங்கிப் போனார்கள்.
இருந்தாலும் விதி அந்த அடிமைகளை விட்டு வைக்கவில்லை. டெல்லி சுல்தானின் போர் ஏற்பாடுகளைப் பற்றித் துப்பறிய, தன் தளபதிகளுடன் கிளம்பிச் சென்றான் தைமூர். இதை எப்படியோ தெரிந்து கொண்ட மல்லூகான் திடீரென்று ஒரு படையுடன் கோட்டையிலிருந்து
வெளிப்பட்டு, சில வீரர்களோடு மட்டும் இருந்த தைமூரைத் துரத்தியடித்த தமாஷ் நடந்தது.
முகம் சிவந்து, கோபம் கொந்தளிக்கப் பாசறைக்குத் தைமூர் திரும்பியபோது பேரணியாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த அடிமைகளில் சிலர், தங்களின் பரிதாபச் சூழ்நிலையையும் மறந்து களுக்கென்று சிரித்துவிட
(அல்லது தன்னைப் பார்த்து அவர்கள் சிரித்ததைப் போன்ற ஒரு பிரமை தைமூருக்கு ஏற்பட்டிருக்கலாம்...!), அவர்கள் பக்கம் பார்வையைத் திருப்பிய தைமூர் நிதானமாக, “இவர்களில் யாரும் உயிரோடு இருக்கக்கூடாது” என்று கர்ஜித்தான்.
அதைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குள் அத்தனை பேருடைய தலைகளும் சீவப்பட்டன.
இந்த ஒட்டுமொத்த கொலைக்குப் பிறகும் அவ்வப்போது தைமூர் முகத்தில் லேசான கவலை ரேகைகள். “அடுத்தபடி நாம் எதிர் கொள்ள வேண்டிய அந்தப் பிரச்னையைச் சமாளிக்க ஏற்பாடுகள் தயாரா?” என்று தன் தளபதிகளிடம் கேட்டான்
தைமூர். தைமூரின் கவலைக்குக் காரணம் உண்டு. இமயமலைத் தொடர், சிந்து நதி - இரு பெரும் அரண்களுக்கு அடுத்தபடி வேற்று நாட்டப் படைகளுக்கு திகிலூட்டிய விஷயம் - இந்தியர்களுக்கே உரித்தான ‘யானைப் படை’ என்கிற நடமாடும் அரண்!
எளிமையான இந்திய அரசர்களிடம் கூட நிறைய யானைகள் உண்டு என்பதும்,
அந்த யானைகள் கட்டுப்பாட்டோடும் ஆவேசத்தோடும் போர்களில் பங்கேற்பது வழக்கம் என்பதும், யானைகளையே நேரில் பார்த்திராத வெளிநாட்டு மன்னர்களுக்கு வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியது. இந்தியாவுக்குள் நுழையப் பார்த்த கிரேக்க, மங்கோலிய, ஆப்கான் மற்றும் துருக்கிய தளபதிகள்
பலர், தங்களை நோக்கி ஆயிரக் கணக்கில் யானைகள் பிளிறிக் கொண்டு புழுதி பறக்க திமுதிமுவென்று ஓடிவருவதாகக் கற்பனை செய்துகொண்டே பீதியில் ஆழ்ந்ததுண்டு. ஆகவே, தைமூரும் சற்றே கவலைப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆனால், அந்தக் கவலை அவனைப் பெரிதாகக் கலவரப்படுத்தவும் இல்லை.
டெல்லி சுல்தானின் யானைப் படையை எதிர்கொள்ளத் தயாரானான் தைமூர்.
டிசம்பர் 17-ம் தேதி....
சுல்தான் முகமது ஷாவின் கோட்டைக் கதவுகள் திறந்தன. உயர்த்திப் பிடித்த வாட்களும் கேடயங்களும் பளிரிட, பத்தாயிரம் குதிரை வீரர்கள் வெளியே அணிவகுத்து வந்தனர். தொடர்ந்து நாற்பதாயிரம் வீரர்கள் கொண்ட
காலாட் படை... பிறகு தரை அதிர தொடர்ந்து வந்தன யானைகள் - நெற்றிப் பகுதியில் இரும்பு முட்கள் பதிக்கப்பட்ட கவசங்களுடன், தந்தங்களில் பொருத்தப்பட்ட நீண்ட வாட்களுடன்!
‘யானை என்கிற இந்தப் பிராணி இத்தனை பெரிய உடம்பைத் தூக்கிக்கொண்டு இவ்வளவு வேகமாகக்கூட முன்னேறுமா?’ -
சில விநாடிகள் பயந்தான் தைமூர். பிறகு அவன் தலையசைக்க, படிப்படியாக அவன் தீட்டிய போர்த் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. அவனுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட குதிரை வீரர்கள் ஏராளமான துணிச்சலுடன் மின்னல் வேகத்தில் பாய்ந்து சுல்தானின் படைக்குள் புகுந்தார்கள். அவர்கள் வீசியெறிந்த -
‘கதை’ போன்ற உருண்டைப் பகுதி பூராவும் கூர்மையான ‘முட்கள்’ பதிக்கப்பட்ட - ஆயுதங்களை, முன்னேறி வந்த யானைகள் மிதித்து வலி தாங்காமல் பிளிறித் தடுமாறின. அதையும் மீறி வந்த யானைகள் தைமூர் படை தோண்டி வைத்த நூற்றுக்கணக்கான பள்ளங்களில் கால் பதிக்க, பள்ளங்களில்
புதைக்கப்பட்டிருந்த சூலாயுதங்கள் அவற்றின் பாதங்களைத் துளைத்து ரணமாக்க, யானைப் படை நிலைகுலைந்தது. எதிர்பாராமல் நிலவிய வித்தியாசமான இந்தக் கலவரத்தால் கவனம் சிதறிய சுல்தானின் குதிரை விரர்களை தைமூரின் வீரரர்கள் வெட்டிக் சாய்த்தார்கள்.
உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கையைச் செயல்படுத்த ஆணையிட்டான் தைமூர். இருபுறமும் பக்கவாட்டிலிருந்து தைமூர் படையினரால் அணிவகுக்கப்பட்டிருந்த ஒட்டகங்களும் எருமைகளும் ஏக காலத்தில் முகமது ஷாவின் படையை நோக்கி விரட்டப்பட்டன. அவற்றின் முதுகுகளில் பெரிதாக வைக்கோல் மூட்டை! அவற்றோடு
பாய்ந்து வந்த மங்கோலியக் குதிரை விரர்கள், கடைசி நிமிடத்தில் எல்லா வைக்கோல் மூட்டைகளுக்கும் தீ வைத்து விட்டு விநாடியில் பின்தங்கினார்கள். திடீரென்று கிளம்பிய ஒரு ராட்சத நெருப்பு வியூகம், சுல்தானின் படையை நோக்கிக் குறுகிக்கொண்டே வந்ததைக் கண்ட யானைகள் தாறுமாறாக ஓடித் தங்கள்
வீரர்களையே துவம்சப்படுத்திய அதே நேரத்தில் தைமூரின் வீரர்கள் முழு வெறியோடு புகுந்து விளையாடினார்கள். அவர்களின் சிவந்து போன வாட்களின் வீச்சில் பல நூற்றுக் கணக்கான தலைகள் அங்குமிங்கும் ரத்தத் துளிகளுடன் பறந்தன.
ஒரே நாளில் - மாலை நேரம் வந்து சேர்வதற்குள் போர் முடிந்துவிட்டது.
தைமூரின் தலைமையில் அவனுடைய வெற்றிப் படை, நடுங்கிக் கொண்டிருந்த டெல்லிக்குள் ஆரவாரத்துடன் நுழைந்தது...!
Source :வந்தார்கள்... வென்றார்கள்! - மதன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பாக்-இ பாபர் என்பது ஆப்கானிசுத்தானின் தலைநகரமான காபுலில் உள்ள ஒரு வரலாற்றுப் பூங்கா ஆகும். முகலாயப் பேரரசை நிறுவி அதன் முதல் பேரரசராக இருந்த பாபரின் சமாதியும் இங்கேயே உள்ளது. இப் பூங்கா 1528 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
பாபரின் குறிப்புக்களான "பாபர்நாமா" என்னும் ஆவணத்தில், காபுலில் ஒரு பூங்காவைக் அமைக்க பாபர் ஆணையிட்டது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
பாபர் கோவிலை இடித்தாரா?
எந்த இடத்தில் கோவிலை இடித்துவிட்டு பாபர் மசூதியைக் கட்டினார் என்று சொல்லப்படுகின்றதோ அதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத்தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள்ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை
"பேரழகியான ஜஹானாரா மீது ஷாஜகான் பைத்தியமாக இருந்தார். தந்தையை மிகவும் அக்கறையாக கவனித்துக் கொண்டார் ஜஹானாரா. அவரால் மேற்பார்வையிடப்பட்ட உணவு மட்டுமே அரசருக்கு வழங்கப்படும் என்ற அளவுக்கு ஜஹானாராவின் கண்காணிப்பு இருந்தது".
ஷாஜகான்- மகள் ஜஹானாரா உறவு விவாதப் பொருளானது ஏன்?
"தந்தைக்கும் மகளுக்குமான உறவு குறித்து பரவலாக பேசப்பட்டது. இதுபற்றி ஜாடைமாடையாக பேசிய சில அரசவை அதிகாரிகள், 'தான் நட்ட மரத்தில் விளையும் பழங்களை பறித்து உண்ணும் உரிமை அரசருக்கு உண்டு" என்று கூறியதாக பெர்னியர் கூறுகிறார்.
முகலாய பேரரசர் ஷாஜகான், தனது மூத்த மகள் ஜஹானாராவுடன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ராணி மும்தாஜ் மஹலின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வந்தது.
உடனே தாயின் அறைக்கு ஓடிச் சென்ற ஜஹானாரா, தாயின் பிரசவம் சிக்கலாக இருக்கிறது; குழந்தை கருப்பையில் இருந்து
பாதவத்தி எத்தனை பேரோட வாழ்ந்து அத்தனை பேரையும் கொன்று சந்தோஷ பட்டவள் .
கிளியோபாட்ராவின் மரணம். பெரிய கிளியோபாட்ராவின் வாழ்க்கை, காதல் மற்றும் இறப்பு.
கிளியோபாட்ரா VII (கிமு 69 - 30) - எகிப்தின் கடைசி ராணி, பண்டைய காலத்தின் மிகவும் பிரபலமான பெண்.ஒரு வேசி ராணி, எகிப்தின் தீய மேதை. நயவஞ்சகமான, கொடூரமான, கோழைத்தனமான மற்றும் நயவஞ்சகமான, மற்றவர்களின் துரதிர்ஷ்டங்களின் மீது அவளது நல்வாழ்வைக் கட்டியெழுப்ப,
இறுதியில் அவள் இறக்க நேரிட்டது, அவளுடைய சொந்த சூழ்ச்சிகளின் வலையமைப்பில் சிக்கிக்கொண்டது.
அறிவார்ந்த மற்றும் படித்த கிளியோபாட்ரா உலகின் மிக புகழ்பெற்ற பெண். அழகான மனிதர்களின் அரிய கலையை கிளியோபாட்ரா தேர்ச்சி பெற்றார், மேலும் வலிமை இன்னும் ஆண்களின் கைகளில் இருந்ததால், எகிப்திய
நாடகத்தின் இடைவேளையில் திடீரென முதல்வர் காமராஜர் அரங்குக்கு வருகிறார். அவரை சோ அழைக்கவில்லை. நாடகம் நடத்திய சபா, சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.
நாடகத்தைப் பாராட்டி ஜெமினி கணேசன் மேடையில் பேசுகிறார். “அருமையான இந்த நாடகத்தை மேடையேற்ற அரசு அதிகாரிகள் லைசென்ஸ் மறுத்ததாக சோ சொல்கிறார்” என்று ஜெமினி பேச, காமராஜருக்கு ‘கெதக்’கென்று ஆனது. (அப்போதெல்லாம் ரேடியோ வைத்திருக்கவே லைசென்சு வேண்டும்).