*ஹரே கிருஷ்ணா*

மூட்டை தூக்கும் தொழிலாளியான ராமதேவ் தினமும் மாலையில் நீராடி, ஸ்ரீபாண்டுரங்கனைப் பாடி பூஜித்து, பழம்- கற்கண்டுகளை பக்தர்களுக்கு வழங்கி வந்தான்.
சம்பாதிப்பதில் ஒரு பங்கை உண்டியலில் சேமித்து வைத்து, வருடா வருடம் பண்டரிபுரம் சென்று, விட்டலனுக்கு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம்.
உண்டியல் பணத்தை எண்ணினார் ராமதேவன்.

இதில் விட்டலனுக்கு நூல் வேஷ்டியும்- அங்கவஸ்திரம் மட்டும்தான் வாங்க முடியும் என வருந்தினார். பிறகு மனதைத் தேற்றியபடி, நூல் வேஷ்டி மற்றும் அங்க வஸ்திரத்தை வாங்கிக் கொண்டு பண்டரிபுரம் நோக்கி நடந்தார்.
வழியில், அழுக்கு வேஷ்டியும் கிழிந்த துண்டுமாய் பெரியவர் ஒருவர் பின்னே வந்தார். ராமதேவிடம் அவர், ”தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டார். உடனே அவன், ”விட்டலனை தரிசிக்க பண்டரிபுரம் செல்கிறேன் சாமி”என்றார் உற்சாகத்துடன்.
அப்படியா! நானும் அங்குதான் செல்கிறேன். பண்டரிபுரம் செல்வதற்கு, குறுக்குப் பாதை ஒன்று உள்ளது. எனக்கு அந்த வழி தெரியும். சந்திரபாகா நதியில் குளித்து விட்டு, மாலையில் விட்டலனை தரிசிக்கலாம்” என்று ராமதேவனை அழைத்தார் பெரியவர். அவனும் சம்மதித்தான்.
பின்னர் இருவரும் பேசிக் கொண்டே வந்ததில், களைப்பே தெரியவில்லை. பெரியவர் சொன்னபடி மாலை வேளை துவங்கும் முன்பே கோயிலுக்கு அருகில் உள்ள சந்திரபாகா நதிக்கரையை அடைந்தனர்.
பண்டரிநாதனுக்கு சமர்ப்பிப்பதற்காகக் கொண்டு வந்த வஸ்திரத்தை ஒரு பையிலும், தான் குளித்து விட்டு உடுத்திக் கொள்ளும் ஆடையை வேறொரு பையிலுமாக வைத்திருந்தார் ராமதேவ்.

இரண்டு பைகளையும் கரையில் வைத்து விட்டுக் குளிக்கச் சென்றார்.
பெரியவரும் நீரில் இறங்கினார்.
தான் அணிந்திருந்த வேஷ்டியை, அங்கு இருந்த கல்லில் அடித்துத் துவைத்து, அலசி, கரையில் காய வைத்தார் ராமதேவ். பெரியவரோ, துவைப்பதற்கு சிரமப்பட்டார். இதை அறிந்த ராமதேவ், அவரது வேஷ்டியை வாங்கித் துவைத்து, நீரில் அலசிப் பிழிந்தார்.
பிறகு வேஷ்டியை காய வைக்க விரித்தவர், அதிர்ந்து போனார். ஏற்கெனவே கிழிந்திருந்த வேஷ்டி, இப்போது பல இடங்களில் கிழிந்திருந்தது. பெரியவரிடம் மாற்று வேஷ்டி கூட இல்லை.
பெரியவர் அப்போதே சொன்னார் ‘கடந்த வருடம் அன்பர் ஒருவர் கொடுத்த வேஷ்டி இது. ரொம்பவே கிழிந்து விட்டது. ஜாக்கிரதையாக துவையுங்கள் என்று! இப்போது இந்த வேஷ்டி பாழாகி விட்டதே! குளித்து விட்டு எதை உடுத்துவார்? நம்மிடமும் ஒரே ஒரு மாற்று வேஷ்டிதானே உள்ளது?
புதிதாக வேஷ்டி வாங்கித் தரலாம் என்றால் பணமும் இல்லையே? பாண்டுரங்கா!! என்ன செய்வது என்று புலம்பினார் ராமதேவ்.

என்ன? ராமதேவா! என் வேஷ்டி காய்ந்து விட்டதா?” என்று கேட்டபடி கரைக்கு வந்தார் பெரியவர். இடுப்பில் துண்டு மட்டுமே உடுத்தி இருந்தார்.
பெரியவரே! உங்கள் வேஷ்டியை அடித்துத் துவைத்ததில், நார்நாராகக் கிழிந்து விட்டது. என்னை மன்னியுங்கள் என்றார் ராமதேவ்.

இதைக் கேட்டதும் இப்போது என்ன செய்வது? என்று கவலைப்பட்டார் பெரியவர்.
வருந்த வேண்டாம் சுவாமி. பாண்டுரங்கனுக்கு சமர்ப்பிக்கப் புது வேஷ்டியும் அங்கவஸ்திரமும் எடுத்து வந்திருக்கிறேன். இதை உடுத்திக் கொள்ளுங்கள்” என்று பாண்டுரங்கனுக்காக வாங்கிய வேஷ்டி- அங்கவஸ்திரத்தைப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தார் ராமதேவ்.
அடடா!! என்ன காரியம் செய்கிறாய்?” என்று வேஷ்டியை வாங்க மறுத்தார் பெரியவர்.

பெரியவரே! பாண்டுரங்கனுக்கு பட்டு, பீதாம்பரம் போன்ற விலை உயர்ந்த வஸ்திரங்களை வழங்க பலர் உள்ளனர்.
கடந்த முறை இதேபோல், சாதாரண நூல் வேஷ்டியும், அங்கவஸ்திரமும் வாங்கி வந்தேன். இதை அணிவிக்க மறுத்து விட்டார் அர்ச்சகர்.
“பாண்டுரங்கனுக்கு பட்டும் பீதாம்பரமும்தான் அழகு. நீ கொண்டு வந்த நூல் வேஷ்டியைக் கோயில் வாசலில் இருக்கும் பிச்சைக் காரனுக்குக் கொடுத்து விட்டுப் போ” என்று ஏளனமாகப் பேசினார். பிறகு வயதான ஒருவருக்குத் தானமாகக் கொடுத்தேன்.
இப்போதும் அதேபோல் நூல் வேஷ்டி தான் எடுத்து வந்துள்ளேன். இதைப் பார்த்ததும், அந்த அர்ச்சகர் வழக்கம் போல் வேஷ்டியைப் புறக்கணிப்பார். இதற்கு உங்களுக்குக் கொடுக்கலாமே? ஏழையின் சிரிப்பில்தானே ஆண்டவன் இருக்கிறான்’ என்றார் ராமதேவ்.
அதன் பின், வேஷ்டியை வாங்கிக் கொள்ளச் சம்மதித்தார் பெரியவர்.
அத்துடன் ராமதேவா! வயதாகி விட்டதால் கைகள் நடுங்குகின்றன. நீயே எனக்கு அணிவித்து விடேன்!” என்றார்.
அதன்படி வேஷ்டியை அவரது இடுப்பில் கட்டிவிட்டவர், அங்கவஸ்திரத்தை அவரது தோளில் அணிவித்தார்.
ஆஹா! இப்போது நீங்கள், அந்த பண்டரிநாதனைப் போலவே இருக்கிறீர்கள்” என்றார்.
அந்தப் பெரியவர் மெள்ள புன்னகைத்தார்.

பின்னர் இருவரும் நெற்றியில் திருநாமம் தரித்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றனர். ராமதேவனுக்குப் பின்னே பெரியவர் வந்து கொண்டிருந்தார்.
அன்றைக்கு பாண்டுரங்கனை தரிசிக்க ஏகக் கூட்டம். ராமதேவ் திரும்பிப் பார்த்தார். பெரியவரைக் காணோம்.
பல இடங்களிலும் தேடினார். சரி.. பாண்டுரங்கனை தரிசித்து விட்டு, ‘மீண்டும் பெரியவரைத் தேடுவோம்’ என்று சந்நிதிக்கு வந்தார்.
அங்கே… ராமதேவன் வாங்கி வந்த நூல் வேஷ்டியையும் அங்கவஸ்திரத்தை யும் அணிந்தபடி காட்சி தந்தார் பரம தயாளனான அந்த பாண்டுரங்கன்.
வியப்பில் மூர்ச்சித்து நின்றார் ராமதேவன்.
பகவானே! பெரியவராக என்னுடன் வந்தது நீதானா? பட்டு- பீதாம்பரத்தை ஏற்கும் அர்ச்சகர்கள், குறைந்த விலையில் உள்ள வேஷ்டியையும், அங்கவஸ்திரத்தையும் அணிவிக்க மாட்டார்கள் என்று நேராக என்னிடமே வந்து,
என் கையாலேயே உனக்கு அணிவிக்கும் பாக்கியத்தையும் வழங்கி விட்டாய். என்னே உன் கருணை…” என்று பாண்டுரங்கனை விழுந்து வணங்கினார் ராமதேவ்.

#ஜெய்ஸ்ரீராம் 🇮🇳🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

12 Aug
🤣🤣🤣
முருகேசு : அப்பா உன்னை கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் '

அப்பா : எதுக்குடா என்னை வரச் சொல்றான் ?"

முருகேசு : கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க..
9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு..?
63 ன்னு சொன்னேன் ..
அப்பா : சரி அப்புறம்...

முருகேசு : 7அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க ..

அப்பா : அதே எழவு தானேடா. வரும்... சரி நீ என்ன சொன்ன.. ?

முருகேசு : அதே எழவு தானேடா வரும்னு சொன்னேன் ..உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க "

அப்பா : சரி ,சரி நாளைக்கு வரேன் "
அடுத்த நாள்,
முருகேசு : அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா ?"

அப்பா : இல்லடா நாளைக்கு வரேன்..

முருகேசு : சரி நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு..

அப்பா : எதுக்குடா ?
Read 8 tweets
12 Aug
கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே...!

அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பாள் உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில்.

இக்கோவில் உள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாக கூறப்படுகிறது.

🇮🇳🙏1 Image
மேற்கு பார்த்தபடி அமைந்த சிவன் கோவில் இது,
இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் ‘தாரமங்கலம்’ என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்...

🇮🇳🙏2
ஆண்டுதோறும் உத்தராயண, தட்சணயான புண்ணிய காலங்களில் மாலை வேளையில் சூரியன் கதிர்களும், சந்திரன் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகிறது.

🇮🇳🙏3
Read 6 tweets
11 Aug
இயற்கை வேளாண் கொள்கை: இப்போதாவது வெளியிடுமா அரசு?

சென்னை: கடந்த 10 ஆண்டுகளாககிடப்பில் போடப்பட்டு உள்ள, இயற்கை வேளாண் கொள்கையை, அரசு வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், நுண்ணுாட்ட சத்துக்களை, பல மாவட்ட விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தி, சாகுபடி செய்து வருகின்றனர். இதுபோன்ற ரசாயனங்களின் பாதிப்பு, உணவுப் பொருட்களிலும் கலந்து விடுகிறது.
ரசாயன கலப்புள்ள உணவு பொருட்களை சாப்பிடுவதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுமட்டுமின்றி, ரசாயன கலப்பு உள்ள பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.
Read 8 tweets
11 Aug
தி.மு.க. அமைச்சர் அறிவித்த குடும்ப கடன் ரூ.2.64 லட்சம் ! முதல் ஆளாக கட்ட வந்தவரால் பரபரப்பு !
தமிழக அரசின் கடன் ரூ.5.7 லட்சம் கோடி ரூபாய் இருப்பதாக திமுக நிதியமைச்சர் நேற்று வெள்ளை அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். அதில் ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேட்டை சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ். இவர் தனது கடனுக்கான தொகையை செலுத்துவதற்காக ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்தார். அப்போது ஆர்.டி.ஓ.விடம் தனது கடனுக்கான காசோலையை வழங்கினார். ஆனால் அதனை அவர் வாங்க மறுத்துவிட்டார்.
Read 7 tweets
11 Aug
பாக்.,கில் கோவில் சீரமைப்பு; ஹிந்துக்கள் வசம் ஒப்படைப்பு

லாகூர்: பாகிஸ்தானில் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்ட கோவில் சீரமைக்கப்பட்டு, ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார்கான் மாவட்டத்தின் போங்க் நகரில் பழமை வாய்ந்த ஹிந்து கோவில் உள்ளது. இந்த பகுதியில் ஹிந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர்.
கோவிலுக்கு அருகேஉள்ள மதராசாவை, ஹிந்து சிறுவன் இழிவுபடுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு ஆயுதங்களுடன் ஏராளமானோர் கோவில் முன் திரண்டனர்.
Read 5 tweets
11 Aug
கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன் மீதான பாலியல் வழக்கில் வீடியோவைக் கைப்பற்ற போலீஸார் தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் இந்து மதம், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக,
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மற்றும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(