மகாபாரதப் போர் முடிந்து கிருஷ்ணர் துவாரகை கிளம்பினார். அப்போது தர்மர் அவரிடம் வந்தார்."ஸ்வாமி,தெரிந்தோ தெரியாமலோ போரில் அதிகம் பேர் மடிந்துவிட்டார்கள்.இந்தப் பாவத்திற்கு நானும் காரணமாகிவிட்டேன்.பாவம் போக்க என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்.இதற்கு பீஷ்மரே சரியானவர் எனக்கூறி
அவரிடம் அழைத்துச்சென்று, வந்த விவரத்தைக் கூறினார் கண்ணன்.
பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்,"ஏன் என்னைத் தேடி வந்திருக்கிறாய்.உன் அருகில் நிற்கிறானே கண்ணன்,அவன் தெய்வமாகத் தெரியவில்லையா? அவன் பெருமையை சொல்கிறேன் கேள். 10வது நாள் யுத்தம். நான் கௌரவ சேனைக்கு தலைமைத் தாங்கி புறப்பட்டேன்.
அப்போது துரியோதனன் வந்து,"பாட்டனாரே.உம்மைப் பற்றி எல்லோரும் பெரிய வீரன்,மகாபலசாலி என்றெல்லாம் சொல்கிறார்களே. உம்மைக் கண்டு பரசுராமரே நடுங்குவார் என்கிறார்களே. ஆனால் உம்மால் பாண்டவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லையே. நீர் கபடம் செய்கிறீர். எனக்கு துரோகம் செய்கிறீர்.
இந்த பத்து நாள் யுத்தத்தில்,நம் சேனைகளுக்குக் கடும் சேதம். இத்தனைக்கும் நீர் சேனாபதி.நாம் தோற்பதற்குக் காரணம் நீர். உம் பிரிய பேரன்மார் பாண்டவர்களைப் பார்த்த மாத்திரத்தில் ஒன்றும் செய்யாமல் வந்துவிடுகிறீர்.உமக்கு இருப்பது பாண்டவர் மீதான பரிவு"என்று சொல்லி என்னைத் திட்டினான்.
'அஸ்தினாபுரத்தைக் காப்பேன்’ என்று என் தந்தைக்குச்செய்து கொடுத்த சத்தியத்தைக் காத்துவரும் எனக்கு,இப்படி ஒரு அவச்சொல் கேட்க சகிக்கவில்லை.அவன் சொன்ன வார்த்தைகளைச் சகிக்க மாட்டாமல் அவனிடம் ஒரு சபதம் செய்தேன்."இன்றைக்கு பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடக்கும் யுத்தத்தில் என்ன
நடக்கிறது பார்.நான் செய்யும் கோரயுத்தம் தாங்காமல், இந்தப் போரில் ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று சபதம் செய்த கிருஷ்ணனையே ஆயுதம் ஏந்தச் செய்கிறேன்"என்று அவனிடம் சபதம் செய்தேன்.அப்படியே நான் போர்க்களத்துக்கு வந்த வேகத்தில், துரியோதனன் நாவினால் என்னைச் சுட்ட வடு ஏற்படுத்திய கோபம்.
வெறியோடு யுத்தம் செய்தேன்.எதிரில் தேரில் வந்தான் கண்ணன் அர்ஜுனனுடன்.அவன் மீது அம்பை எய்தேன்.அவனை மட்டுமா அடித்தேன்.விஷ்ணு பக்தனான நான் கண்ணனுக்கு சந்தனாபிஷேகம் செய்து திருப்பாதங்களைக் கழவாமல்,அந்தப் போர்க்களத்தில் என்ன செய்தேன்?கண்ணன் மீது அம்பு விட்டு அவன் உடலிலிருந்து ஓடும்
செங்குருதியால் அவன் பாதங்களை நனைத்து அபிஷேகம் செய்தேன். கிருஷ்ணனோ சிரித்துக் கொண்டிருந்தான்.ஆனால் நான் அடித்த அடியில் காண்டீபம் நழுவி மூர்ச்சையாகி விழுந்தான் அர்ஜுனன். பார்த்தான் கிருஷ்ணன்,தேரிலிருந்து குதித்தான்.அப்போது அவன் போட்டிருந்த மேல் வஸ்திரம் நழுவிக்கீழே விழுந்தது.
அதைத் தாண்டிக் கொண்டு அவன் வந்தான்.விழுந்திருந்த ஒரு தேரின் சக்கரத்தை ஆயிதமாக கையில் ஏந்திக்கொண்டு,என்னை நோக்கி வந்தான்.நானோ, 'அப்பா கிருஷ்ணா.அந்தப் பாவி துரியோதனன் போட்ட உப்பு போகட்டும். எனக்கு உன் சக்கரத்தால் மோட்சம் கிடைக்கட்டும்’ என்று சொல்லிக்கொண்டு எதிர்கொண்டேன்.
அப்போது மயக்கம் தெளிந்து எழுந்தான் பார்த்தன். கையில் சக்கரத்தோடு என்னை நோக்கி ஓடி வந்த கண்ணனைக் கண்டான். உடனே கண்ணனின் கால்களைப் பிடித்துக் கொண்டு, “ஹே கிருஷ்ணா!இந்தப் போரில் ஆயுதமெடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த நீ உன் சத்தியத்தை மீறலாமா?’ எனக் கேட்டான்.
கண்ணன் சொன்னான்,"என் சத்தியம் கிடக்கட்டும். நீ செய்த சத்தியத்தை நான் காக்க வேண்டாமா? கிருஷ்ணன் பாதத்தில் நான் தஞ்சம்,அவன் என்னைக் காப்பான் என்றாயே. இப்போது இந்தக் கிழவன் உன் கதையை முடித்துவிடுவான் போலிருக்கிறதே. நீ செய்த சத்தியத்தைக் காக்க என் சத்தியம் போனால் பரவாயில்லை என்றான்.
அவர்கள் இருவர் பேசுவதும் என் காதில் விழுந்தது.உண்மையில் தர்மா.கிருஷ்ணன் தன் சத்தியத்தை மீறுவதற்காகவும் ஆயுதம் ஏந்தவில்லை.அர்ஜுனன் சத்தியத்தைக் காப்பதற்காகவும் ஆயுதம் ஏந்தவில்லை.காலையில் துரியோதனனிடம் நான் செய்தேனல்லவா ஒரு சத்தியம்."இன்று போர்க்களத்தில் கிருஷ்ணனையே ஆயுதம் எடுக்க
வைக்கவில்லை என்றால் நான் கங்கையின் புத்திரன் இல்லை" என்று.என்னுடைய அந்த சத்தியத்தைக் காப்பதற்காக,எனக்காகவே என் பிரபு ஆயுதம் எடுத்தார்"என்றார் பீஷ்மர் கண்களில் நீர் தளும்ப.
இதிலிருந்து பக்தர்களுக்காகத்தான் கண்ணன் என்ற உண்மையை புரிய வைத்துவிட்டார் கிருஷ்ண பரமாத்மா.
கிருஷ்ணார்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மகாராஷ்டிர மாநிலத்தில் இது செய்தால் பாவம்,இது செய்தால் புண்ணியம் என்று சொல்லி,பாவத்தில் இருந்து விடுபட இந்த பரிஹாரம்,ஹோமம்,யாகம்,பூஜைகள் செய்யவேண்டும் என்று கூறி மக்களை செய்யவைத்து அதற்காக தானமாகவும்,தக்ஷணையாகவும் நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தனர் சிலர்.
இதைக்கண்டு சற்றும் சகியாத 'சந்து ராமதாசர்' என்னும் ராமபக்தர் ஒரு யோசனை செய்தார்.ஒருநாள் ஒரு உண்டிகோலை எடுத்துக் கொண்டு,அந்த ஆசாமிகள் இருக்கும் தெரு வழியாக நடந்துச்சென்றார்.அங்கு அவர் கண்ணில் பட்ட கிளிகளை எல்லாம் உண்டிகோலால் குறிபார்த்து அடித்து,
ஒவ்வொன்றாக சாகடித்து தன் தோளில் இருந்த பையில் போட்டுக்கொண்டே சென்றார்.இதைப்பார்த்த அந்த ஆசாமிகள் குய்யோ,முறையோ என்று கத்திக்கொண்டு வந்தனர்."நீங்கள் என்ன காரியம் செய்துவிட்டீர்கள்.இது எவ்வளவு பெரிய பாவம்"என்று கூறினர்.அதற்கு சற்றும் அசராத சந்து ராமதாசர்,
ஒரு ஊரில் அநாதை ஏழைப்பெண் இருந்தாள். அவளிடமிருந்த மாடுகளிடமிருந்து பாலைக்கறந்து,அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள்.அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.
ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள்தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.ஒருநாள் வழக்கம் போல,சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார்.ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை.
அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை
புரிந்துகொண்ட அவர்,அந்த பெண்ணிடம், “ஏன்மா!ஒழுங்கான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா.உன்னால எனக்கு எல்லாமே தாமதமாகுது”என்று கடிந்து கொண்டார்.“மன்னிக்கணும் சாமி. நான் வீட்டைவிட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன்.ஆனால் இங்கே வர்றதுக்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.”
ஒரு மன்னன், தெரியாத்தனமாக ஒரு பிராமணனைக் கொன்றதால், அவரை ‘பிரம்மஹத்தி’ பாவம் பிடித்துக் கொண்டது. ஒரு ரிஷியின் ஆஸ்ரமத்துக்குச் சென்று பரிஹாரம் கேட்க முடிவு செய்தார். அங்கே சென்றபோது ரிஷி இல்லை. அவருடைய மகனே இருந்தார். அவரிடம் தான் வந்த காரணத்தை மன்னன் கூறினார்.
அவர் “நானே பரிஹாரம் சொல்கிறேன். பக்தியுடன் மூன்று முறை 'ராம, ராம, ராம' என்று சொல்லுங்கள். அந்தப் பாவம் போய்விடும்” என்றார். இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில் ரிஷியும் வந்துவிட்டார். என்ன விஷயம் என்பதை அறிந்தார்.
அவருக்கு மகன் மீது கடும் கோபம் வந்தது.
“அட மூடனே! ஜன்ம ஜன்மாந்தரங்களில் செய்த பாவங்களும் ராமனின் நாமத்தை ஒரு முறை சொன்னாலேயே போய்விடுமே. உனக்கு எப்படி நம்பிக்கை குறைந்து மூன்று முறை சொல்லச் சொன்னாய்? இந்த நம்பிக்கைக் குறைவினால் அடுத்த ஜன்மத்தில் நீ வேடனாகப் பிறப்பாயாக” என்று சபித்தார்.
புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்திற்கு குடியேறினார்கள். அடுத்த நாள் காலையில் இருவரும் கூடத்தில் அமர்ந்து காபி குடிக்கும்பொழுது, பக்கத்துக்கு வீட்டு பெண், துணிகளை துவைத்து காயபோட்டுக் கொண்டிருப்பது ஜன்னல் வழியாகத் தெரிந்தது.
அதை பார்த்த மனைவி கணவனிடம்,"அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணிகளில் அழுக்கு, கருப்புப் புள்ளிகளாய் அப்படியே இருக்கு"என்றாள். ஜன்னல் வழியே பார்த்த கணவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும், அதை ஜன்னல் வழியாகப் பார்த்த மனைவி, துவைக்கத் தெரியலன்னு சொல்றதும்,கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்தது. திடீரென்று ஒருநாள் மனைவி ரொம்ப ஆச்சரியமாகச் சொன்னாள்,"இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டுப்
இரு அண்டகோசங்கள்,இருதுடைகள்,இரு முழந்தாள்கள்,இரு கனுக்கால்கள்,இரு கெண்டைக்கால்கள்,இரு பாதங்கள்.
இவ்விடங்களில் தீ,நீர்,நிலம்,காற்று,பத்து திசைகள்,பத்து திக்பாலகர்கள்,எட்டு வசுக்கள் வாசம் செய்கிறார்கள்.இவர்களை நினைத்து வணங்கி இட்டுக்கொள்ள வேண்டும்.
யமுனை நதியில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அங்கே வந்த கோபிகைகள் ஆற்றைக்கடந்து செல்ல வகையறியாது திகைத்து நின்று கொண்டிருந்தனர்.எப்போதும் உள்ள பரிசல்காரனும் அப்போது இல்லை.அதுசமயம் தற்செயலாக அங்கு வந்தார் வசிஷ்ட முனிவர்.அன்று அவர் கண்ணபிரானுக்காக உபவாசம் இருக்கும் தினம்.
கடும் உபவாசத்தால் சற்றுச் சோர்வுற்றிருந்தார். அவரும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியவர்தான். அது தெரிந்த கோபிகைகள்,"சாமி! நீங்கள்தான் ஆற்றை கடந்துச்செல்ல எங்களுக்கு உதவ வேண்டும்" என்றார்கள்."சரி"என்று சொன்ன அவர், கோபிகைகளின் கைகளில் இருந்த பானைகளைப் பார்த்தார். உடனே அவர்கள்,
"ஐயா! பால்,தயிரெல்லாம் விற்றுப் போய்விட்டது. வெண்ணெய் மட்டும்தான் இருக்கிறது.வேண்டுமா?" என்று கேட்டார்கள். "கொடுங்கள்" என்று இவர் சொல்லவும், அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு பெரிய உருண்டையாக எடுத்து அவரிடம் நீட்டினார்கள். அவரும் பொறுமையாக நீட்டப்பட்ட அவ்வளவு வெண்ணெயையும்,