இரு அண்டகோசங்கள்,இருதுடைகள்,இரு முழந்தாள்கள்,இரு கனுக்கால்கள்,இரு கெண்டைக்கால்கள்,இரு பாதங்கள்.
இவ்விடங்களில் தீ,நீர்,நிலம்,காற்று,பத்து திசைகள்,பத்து திக்பாலகர்கள்,எட்டு வசுக்கள் வாசம் செய்கிறார்கள்.இவர்களை நினைத்து வணங்கி இட்டுக்கொள்ள வேண்டும்.
பாதங்களில் சமுத்திரங்கள், பரந்தமுதுகில் அனைத்து நதி தீர்த்தங்களும் என தேவதைகளாக வசிக்கின்றனர்.
8 இடங்களும் அங்கு வசிக்கும் தேவதைகளும்
குஹ்யம்,நெற்றி,இருகாதுமடல்கள்,இரு தோள்பட்டைகள்,மார்பு, தொப்புள் ஆகிய எட்டு இடங்களில்,பிரம்மதேவனும் சப்தரிஷிகளும், தேவதைகளாக விளங்குகின்றனர்.
திருநீரின் பெருமையறிந்த சான்றோர்களே,இவ்வெட்டு இடத்தை குறிப்பிட்டுள்ளனர்.
5 இடங்களும் அதற்குரிய தேவதைகளும்
நெற்றி,இரு புஜங்கள்,மார்பு,தொப்புள் என்னும் ஐந்திடங்களே திருநீரணிய ஏற்ற இடம். இவற்றிற்கேற்றவாறு திருநீற்றை உடல் முழுவதும் பூசியோ, நீரில் குழைத்தோ அணியலாம்.
நெற்றியில் இடும்பொழுது முக்கண்ணரும்,முக்குணங்களுக்கு ஆதாரமானவருமான சிவப்பரம்பொருளை மனதிலே தியானித்து அணியவேண்டும்.நெற்றியிலும் முதுகு-கழுத்தின் பின்புறமும் முப்புரியாக அணியலாம்.வியாஸரின் சீடரான சூதபுராணிகர், உயர்ந்ததான திருநீற்றைப் பற்றி சிவபுராணத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
யமுனை நதியில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அங்கே வந்த கோபிகைகள் ஆற்றைக்கடந்து செல்ல வகையறியாது திகைத்து நின்று கொண்டிருந்தனர்.எப்போதும் உள்ள பரிசல்காரனும் அப்போது இல்லை.அதுசமயம் தற்செயலாக அங்கு வந்தார் வசிஷ்ட முனிவர்.அன்று அவர் கண்ணபிரானுக்காக உபவாசம் இருக்கும் தினம்.
கடும் உபவாசத்தால் சற்றுச் சோர்வுற்றிருந்தார். அவரும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியவர்தான். அது தெரிந்த கோபிகைகள்,"சாமி! நீங்கள்தான் ஆற்றை கடந்துச்செல்ல எங்களுக்கு உதவ வேண்டும்" என்றார்கள்."சரி"என்று சொன்ன அவர், கோபிகைகளின் கைகளில் இருந்த பானைகளைப் பார்த்தார். உடனே அவர்கள்,
"ஐயா! பால்,தயிரெல்லாம் விற்றுப் போய்விட்டது. வெண்ணெய் மட்டும்தான் இருக்கிறது.வேண்டுமா?" என்று கேட்டார்கள். "கொடுங்கள்" என்று இவர் சொல்லவும், அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு பெரிய உருண்டையாக எடுத்து அவரிடம் நீட்டினார்கள். அவரும் பொறுமையாக நீட்டப்பட்ட அவ்வளவு வெண்ணெயையும்,
உங்களுக்கு யாரேனும் தீமை செய்தனரா?அவர்கள் மேல் உங்களுக்கு கோபம் வந்ததா?வந்த கோபம் இன்னும் உள்ளதா?யோசித்துப் பாருங்கள்.கல் இருக்கிறதே.ஒருமுறை உடைந்துவிட்டால்,பின் ஒட்டவே ஒட்டாது.என்னதான் செய்தாலும்,விரிசல் இருந்து கொண்டேதான் இருக்கும். பொன் இருக்கிறதே,அதில் கொஞ்சம் பிளவு வந்தால்
உருக்கி ஒட்ட வைத்துவிடலாம்.ஒட்டும்,ஆனால் கொஞ்சம் மெனக்கிட வேண்டும்.இந்தத் தண்ணீரின் மேல் அம்பைவிட்டால்,நீர் பிளக்கும் ஆனால் நொடிப்பொழுதில் மீண்டும் சேர்ந்துக்கொள்ளும்.அம்புபட்ட தடம் கூட இருக்காது.கயவர்களுக்கு நாம் ஒரு தீங்கு செய்தால்,வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டார்கள்.நமக்கு
எப்படி மறுதீங்கு செய்யலாம் என்றே இருப்பார்கள்.இராமனுக்கு கூனி செய்தது போல-கல்லின் மேல் பிளவு போல.நல்லவர்களுக்கு நாம் ஒரு தவறு செய்துவிட்டால்,கொஞ்சநாள் மனதில் வைத்து இருப்பார்கள்,பின் மறந்து விடுவார்கள்-பொன் மேல் பிளவு போல.ஆன்றோர் அல்லது பெரியோர் இருக்கிறார்களே,அவர்களுக்கு நாம்
பராசர பட்டர் என்பவர் ஒருமுறை காட்டுபாதையில் சென்றுக் கொண்டிருந்தார்.திடீரென்று அங்கே ஏதோ ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்துவிட்டார்.நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாததால் அவரைத் தேடிச்சென்ற சீடர்கள்,அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள்.அவரை மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்து
மயக்கம் தெளிவித்தனர். பட்டர் எழுந்தவுடன், “காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா?” என்றெல்லாம் வினவினார்கள் சீடர்கள்.ஒன்றுமே இல்லை. நான் ஒரு காட்சியைக் கண்டேன். அதனால் மயங்கி விழுந்துவிட்டேன்"என்றார் பட்டர்.
“என்ன காட்சி?” என்று பதற்றத்துடன் சிஷ்யர்கள் கேட்டார்கள். “ஒரு வேடன் ஒரு முயல்குட்டியைப் பிடித்தான். அதை ஒரு சாக்குப்பையில் மூட்டைக்கட்டி எடுத்துச்சென்றான். இதைக்கண்ட அந்த முயல்குட்டியின் தாய்முயல்,அந்த வேடனைத் துரத்திச்சென்று, அவன் கால்களை பிடித்துக்கொண்டு மன்றாடியது.
ஒரு மிகப்பெரிய கோவிலில் சரியான கூட்டம். கடவுளை தரிசிக்க வரிசையில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். வழியில் உண்டியல் அருகே வந்தவுடன் பலர் பார்க்கும்படி பெருமிதமாக ஒரு பத்து ரூபாய் எடுத்துப்போட்டார். ஆனால் அது கிழிந்துப்போய்,வெளியில் யாரிடமாவது கொடுத்தாலும் வாங்காத அளவில்,
அழுக்காய் இருந்தது அந்த செல்லா நோட்டு. சரி கடவுள் தானே. அவரிடம் செல்லாத நோட்டு என்று உண்டா? வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்லவேண்டும். அப்பாடா இந்த கிழிந்த ரூபாயை சாமி தலையில் கட்டிவிட்டேன் என்று நினைத்துகொண்டு, வரிசையில் நகர்ந்தார்.
வரிசை நகர,சில வினாடிகள் கழித்து அந்த நபரிடம்,பின்னாடி வரிசையில் நின்றுக்கொண்டிருந்த இன்னொருவர்,எம்பி இவரிடம் தோளைத் தட்டி ஒரு 500 ரூபாய் தாளை நீட்டினார்.அந்த நபருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே,சரி என்று நம்மாள் அதை உண்டியலில் போட்டுவிட்டு,'எவ்வளவு பக்தி இவருக்கு' என்று வியந்தார்.
ஒரு குறுநில மன்னன் இருந்தான். அவனுக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால் திடமான இறைபக்தி கிடையாது.ஒருநாள் அரச சபையில் இருந்த அனைவரையும் பார்த்து,"இறைவன் எங்கே இருக்கிறான்?"என்று கேட்டான். ஒரு மந்திரி சொன்னார்,"கடவுள் நம் அருகிலேயே இருக்கிறார். கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறார்".
முதலையின் வாயில் தன் கால் மாட்டிக்கொண்டு மீள முடியாதபோது,
'ஆதிமூலமே' என்று யானை ஒன்று கதறி அழுது கூப்பிட்டபோது,
இறைவன் வந்து அதைக் காப்பாற்றவில்லையா? தன் மானம் பறிபோகும் நிலையில்,'கண்ணா என்னைக் காப்பாற்று' என்று திரெளபதி கூக்குரல் இட்டபோது,இறைவன் உதவிக்கு வந்து அவள் மானத்தைக்
காக்கவில்லையா? ஆகவே இறைவனைக் கூப்பிட்டால்,கேட்கும் தூரத்தில்தான் இருக்கிறார். நீங்கள் மனம் உருகி அழைத்தால் அவர் வருவார். உங்களுக்கு வேண்டியதைச் செய்வார்"என்றார். அவர் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்தான் மன்னன்.ஆனாலும் அவன் அதை முழுதாக அதை ஏற்றுக் கொள்ளாமல், தொடர்ந்துக் கேட்டான்.
ஒருமுறை கோவிலுக்குச் சென்ற ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,
"ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம், எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை" என்று முறையிட்டனர்.
இதைக்கேட்ட பரமஹம்சர்,"இன்றைக்குக் கோவில் வாசலிலே, ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்புகள் உள்ளே வராது" என்று கூறினார். அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்துவிட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன.
"உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன.ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது, பரமஹம்சர் சொன்னார்,