#உண்மையில்_வர்ணாஸ்ரமம்_சொல்வது_என்ன ??

பிராமணன் தலையில் பிறந்தான்..
ஷத்ரியன் தோளில் பிறந்தான்..
வைசியன் தொடையில் பிறந்தான்..
சூத்திரன் பாதத்தில் பிறந்தான்..
என்று சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர்....1/
பொய்யை பலமுறை சொல்லிச் சொல்லி அதை உண்மை போல் உளருகிறார்கள்...
ஆனால் உண்மை என்ன..??
புருஷ சூக்தத்தில் வரும் ஸ்லோகம் சொல்வது இதுதான்..
பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:, பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத
இந்த வரிகளுக்கு அர்த்தம் யாதெனில்...2/
பிராமணணுக்கு முகமே பலம்..
வேதம் ஓதும் பிராமணன் முக லக்ஷணத்தோடு விளங்கவேண்டும். மேலும் தன் வாயால் நல்லாசி வழங்கவும். நல் உபதேசம் செய்யவும், நல் மந்திரம் உச்சாடனம் செய்யவும் முகமே துணை...
இதனால் பிராமணணுக்கு முக பலம் தேவை. எனவே, பிராமணன் முகத்தில் பிறந்தான் என்பது தவறு...3/
ஷத்திரியனுக்கு தோள் பலம் தேவை..
ஷத்திரியன் வாள் கொண்டு எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றவும், பாதுகாக்கவும், வறியவர்களுக்கு கொடை அளித்து ஆதரிக்கவும் ..தோள் பலம் கொண்ட கரங்கள் தேவை.. எனவே, ஷத்திரியன் தோளில் பிறந்தான் என்பது தவறு...4/
வைசியன் உட்கார்ந்த நிலையில் வியாபாரம் செய்பவன்... எனவே வியாபாரம் செய்யவும், கணக்கு வழக்குகளை பார்க்கவும் வைசியனுக்கு தொடை பலம் மிக்கதாக விளங்க வேண்டும்.
எனவே வைசியன் இடுப்பில் பிறந்தான் என்பது தவறு...5/
சூத்திரன் உழவு செய்பவன்... உழவு செய்பவனுக்கு கால் பலம் தேவை. கால்கள் பலமாக இருந்தால் தான் பயிரிடவும் விவசாயத்தை பராமரிக்கவும் முடியும்... எனவே சூத்திரன் காலில் பிறந்தான் என்பது தவறு..
மேலே குறிப்பிட்ட ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தில் ஜாதி என்பதே எங்குமே வரவில்லை..என்பதே உண்மை..6/
இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது? பிறப்பினால் யாரும் எதையும் அடைய முடியாது..
வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு.. தமக்கு தோன்றியதை அர்த்தம் புகட்டிவிட்டு... முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன்...
பிறப்பால் வர்ணங்கள் இல்லை – என்றே சொல்கிறது மனு தர்மம்...7/
ஆனாக இந்த பொய்யர்கள் மனு தர்மம் தவறாக சொல்கிறது என்று பொய்யாக விமர்சிக்கிறார்கள்..
மனுதர்ம ஸ்லோகம் சொல்வது என்ன...
ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே
அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே.....8/
தொழிலினால் தான் இரு பிறப்பாளராகின்றனர் (துவீஜம்).
இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது...
இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது..
ஜன்மனா – பிறப்பால்;
ஜாயதே – பிறந்த அனைவரும்;
சூத்ர – சூத்திரரே;
கர்மணா – தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு...9/
த்விஜ – இருபிறப்பாளனாக;
ஜாயதே – பிறப்பாளன் ஆகிறான்.
செய்யும் தொழில் தான் ஒருவரை அடையாளம் காண்கிறது... பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
இதையே திருவள்ளுவர் சொல்கிறார்..
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்....10/
இதன் பொருள்: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத்தன்மையானதே, அவரவர் செய்கின்ற தொழில்களின் அடிப்படையில் ..தொழில்களின் வேறுபாடுகளால்.. சிறப்பியல்பான குணம்/character/வர்ணம்) ஒத்திருப்பதில்லை...
இரண்டு வரிகளுள்ள திருக்குறளையே சரியாகப் படித்து, பொருள் கூற இயலாதவர்கள்..,11/
சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு தங்கள் விருப்பப்படி, பொருள் கூறி, தானும் குழம்பி... பிறரையும் குழப்புகின்றனர்...
நாத்திகவாதிகளால் காலம் காலமாக வர்ணாஸ்ரமம் திரித்து சொல்லப்பட்டு வருவதை நினைவில் நாம் கொள்ள வேண்டும்...
உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது...12/
காலகாலமாக செய்து வரும் செய்தொழில் அடிப்படையில் உண்டானதே அர்ச்சகர், ஆசாரி, கொல்லர், குயவர் மீனவர் ..
இவை நாட்பட்ட காலங்களில் மருவி பல ஜாதிகள் இதன் அடிப்படையில் உருவானது...
இப்படி உருவான ஜாதிகள் ஏன் எதற்கு எப்படி உண்டானவை என்பதை...13/
நாம் சரியாக புரிந்து கொள்ள முயற்சிக்காமல் விட்டு விட்டதே... இந்த சனாதனத்தை திரித்து பேசும் எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது..

சனாதன அடிப்படை தாத்பரியத்தை தெளிவாக புரிந்து கொண்டால் நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் உணரப்பட்டு களையப்பட்டு ஒற்றுமை உண்டாகும்....14/
சனாதன தர்மம் என்று அழைக்கப்படும் அர்த்தமும் இதுவே..
பாரபட்சம் தர்மத்தில் இருக்க முடியுமா.. சிந்தித்து செயலாற்றுவோம்... 15/15

@ நண்பரின் பகிர்வு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Nithin Kumar

Nithin Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Nithinbjp

31 Aug
இந்தியா சில தினங்களாக 90 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தியதும் ஒரு நாளில் அது ஒரு கோடி என்ற மிகபெரிய உலக சாதனை செய்ததும் வரலாறு
உலகளவில் ஒரே நாளில் செலுத்தபட்ட மிகபெரிய தடுப்பூசி எண்ணிக்கை அதுதான்

அதை இந்தியா செய்தது
இதை .....1/
உலகமே கொண்டாட தமிழக கம்யூனிஸ்டுகள் மட்டும் சீன சாதனை 200 கோடி என தூக்கி வந்தனர்
உண்மையில் சீனாவின் முரசொலியான குளோபல் டைம் பத்திரிகை கூட அதை தெரிவிக்கவில்லை, ஒரு வாதத்துக்கு வைத்தாலும் அவர்கள் மொத்த ஜனத்தொகை 140 கோடி
இந்த 140 கோடியில் ....2/
குழந்தைகள் பதின்ம வயதினர் என கழித்தால் தடுப்பூசி பெற வேண்டியவர் எண்ணிக்கை சுமார் 75 கோடி தாண்டும் என்கின்றார்கள்

ஆக ஆளுக்கு இரண்டு டோஸ் செலுத்தினாலும் சீனாவின் மொத்த சாதனையே 150 கோடிதான்,அதையாவது சீனா செய்ததா என்றால் அங்கே இன்னும் தடுப்பூசி செலுத்தாதோர் 40% என்கின்றது கணக்கு..3/
Read 9 tweets
31 Aug
1.சீனா 200கோடி தடுப்பூசி முக்கிய காரணமான Sinovac அமெரிக்கப் பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட சீன தனியார் நிறுவனம் என CPIMக்கு தெரியுமா?
2.UN WorldDataவுக்கே சென்ற 26ஆம் தேதி வரை சீனாவின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர் எண்ணிக்கை.....1/
நோய்த் தொற்று பாதித்தவர் புள்ளி விவரம் தெரியாது. CPIM சீனாவை வாழ்த்தி போஸ்டர் போட்டது 27ஆம் தேதி. எப்படி? யார் உத்தரவு? எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு உத்தரவு?
உறுதியாகக் கணிக்க முடியும் CPIMக்கு உத்தரவுகள் நாட்டின் வெளியிலிருந்து வருகிறது என்று....2/
3.நேற்று பிரதமர் புகைப்படம் தடுப்பூசி விவரத்தில் போடுவது தவறு என்றும், தடுப்பூசி சரியாகப் பரிசோதனை செய்யவில்லை என்றும், போதிய டேட்ட இல்லை என்றும், தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனத்தை அரசுடைமை ஆக்க வேண்டும் என்றும், தடுப்பூசி ஆபத்தானது என்றும்....,3/
Read 5 tweets
29 Aug
இன்றைய #மனதின்_குரல் நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் பேசியது 👇

குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்து தங்களின் தேவைகளை தாங்களே பயன்படுத்திக் கொள்வதன்
மூலம்....1/ Image
சிவங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராம மக்கள் நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்கின்றனர்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இன்று மேஜர் தியான்சந்த் பிறந்த நாள் என்பதால் நமது நாடு, அவரின் நினைவை போற்றும் வகையில், இந்நாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது....2/
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் 41 ஆண்டுகள் கழித்து இந்திய ஹாக்கி அணி வீரர்கள் திறமையை நிரூபித்து உள்ளனர். நமது இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள், ஹாக்கியில் மீண்டும் ஒரு முறை உயிரூட்டியிருக்கின்றார்கள்.

3/
Read 7 tweets
16 Jun
💧💦 தண்ணீர்...!?

ஆன்மீகத்தின் படி தண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு...

சமீபத்தில் ஒ ரு நெருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு பல திசைகளுக்குச் சென்று ஒரு கட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வந்து நின்றது...

1/
ஆற்றுத் தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது, மணல் திருட்டு, தண்ணீரை வீணாக்குவது என்று பேசிக் கொண்டிருந்த போது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தாமிரபரணி உருவாகும் இடம் பற்றியும் கூறிக் கொண்டிருந்தேன். அதைக் கேட்ட நண்பர்,

2/
"ஏங்க அப்ப அங்க பெரிய பெரிய முனிவர்கள்ல்லாம் தவம் பண்ணிருப்பாங்களே" என்று பரபரக்க கேட்டார்.

"இருக்கலாம்ங்க... ஏன் கேக்குறீங்க" என்றதும்,

"டாக்டர் மசாரு இமோடோ பற்றி கேள்விப் பட்டிருக்கீங்களா?" என்று கேட்டு விட்டு சில யூடியூப் வீடியோ லிங்க்குகளை வாட்சப்பில் அனுப்பி வைத்தார்.

3/
Read 16 tweets
16 Jun
#மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம் மறுபடியும் அதிசயத்தை கொடுத்திருக்கின்றது, மிக அதிசயமான அக்கோவில் முன்பு மண்ணில் மூழ்கி பின் வெளிவந்து பிரசித்தி பெற்றதெல்லாம் வரலாறு
இப்பொழுது சமீபத்திய தீவிபத்தினை அடுத்து கேரள பணிக்கர்கள் பிரசன்னம் பார்த்ததை அடுத்து...1/
இன்னொரு உப தேவதை அங்கு சரியான பூஜைகளின்றி நிற்பது கணிக்கபட்டது
ஆனால் இந்து அறநிலையதுறை அதிகாரிகள் பகுத்தறிவாளர்கள் அல்லவா, அப்படி எந்த சிலையும் இருக்க வாய்ப்பில்லை என மல்லுகட்டியிருக்கின்றார்கள்
பின் பணிக்கர்கள் சொன்ன இடத்தில் தோண்டும்பொழுது பழங்கால சிலை கிடைத்திருக்கின்றது...2/
இப்பொழுது அந்த பரிகார தேவதைக்கு பூஜைதொடங்கி சன்னதி கட்டபடுகின்றது
இதைத்தான் சொல்கின்றோம், அறநிலையதுறை நிர்வகிக்க அது வெறும் கம்பெனி அல்ல, கடை அல்ல‌
ஒவ்வொரு இந்து கோவிலும் இப்படி ஆயிரமாயிரம் அற்புதங்களும், சூட்சுமங்களும் மானிட சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியும் கொண்டவை...3/
Read 5 tweets
16 Jun
#சத்தியம்_வத

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை.

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான்

1/
அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான். நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்.

2/
ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே! வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்” என்றான். அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார்.

அவன் கூசாமல் உண்மையை சொன்னான்...

3/
Read 29 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(