#காதல் என்றால் என்ன #கல்யாணம் என்றால் என்ன

சீடன் குருவிடம்..
"காதல் என்றால் என்ன?

குரு சீடனிடம்..

"கோதுமை வயலுக்கு சென்று, இருப்பதில் பெரிய கோதுமையை கொண்டு வா பதில் சொல்கிறேன்.. ஆனால் நீ ஒரு தடவை கடந்து சென்ற இடத்திற்கு திரும்பவும் வரக்கூடாது"
வயலின் முன்பகுதியிலேயே பெரிய கோதுமை ஒன்றை கண்டாலும் அவன் மனம், வயலின் உள்ளே இதைவிட பெரிய கோதுமை இருக்கக்கூடும் என்று எண்ணியது.

வயலின் பாதிப்பகுதியை தேடிய பின் தான் உணர்ந்தான். ஆரம்பத்தில் தான் கண்ட கோதுமையை போன்ற பெரியது இனிமேல் கிடைக்கப்போவதில்லை என்று!
திரும்ப சென்று அதை எடுக்க முடியாததால் (ஏற்கனவே சென்ற பாதை) கவலையுடனும் வெறும் கையுடனும் திரும்பினான் சீடன்!

ஒன்றுமில்லாமல் வந்த சீடனை பார்த்து குரு...
"இது தான் "காதல்"!
மனிதர்கள் தமக்கு பொருத்தமான, மிக நல்ல காதலர்களை தொடர்ந்து தேடுவர்.

ஆனால் இறுதியில், தாம் அந்த பொருத்தமான நல்லவர்களை இழந்து நீண்ட தூரம் வந்து விட்டதை உணர்வர்."

"அப்போ கல்யாணம் என்றால் என்ன?" - சீடன் திரும்பவும் கேட்கிறான்.
குரு: சோளக்கொல்லைக்கு சென்று இருப்பதில் பெரிய சோளத்தை கொண்டு வா! ஆனால் நீ ஏற்கனவே தேடிய பகுதிக்கு திரும்ப வர முடியாது!

அங்கே சென்ற சீடன், முதலில் கோதுமை வயலில் விட்ட தவறை மனதில் நினைத்து மிக கவனமாக தேடினான்.
சிறிது நேரத்தில் ஓரளவு பருமனான, நல்ல சோளப்பொத்தி ஒன்றைக் கண்டு திருப்தியடைந்து, குருவிடம் கொண்டு வந்து காட்டினான்.
குரு சீடனிடம்..

"இந்த முறை நீ ஒரு சோளத்தை பார்த்து, நன்றாக இருக்கிறது. இது போதும் என்ற நம்பிக்கை உன் மனதில் தோன்றி இருக்கிறது. அத்தோடு இது தான் எனக்குக் கிடைக்கக்கூடிய நல்ல பெரிய சோளம் என்று திருப்தி பட்டாய்!

இது தான் "கல்யாணம்"!

@drmathimaths @GopalanVs2 @MajorSimhan

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர்

Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

15 Sep
An interesting and hilarious forward I received!

சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?

நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றமிருக்கிறது.

சிவன் : என்ன குற்றம் கண்டீர்?
நக்கீரர் : எங்கே தாங்கள் இயற்றிய செய்யுளைச் சொல்லும்?

சிவன் : தின்பதோ வாழ்க்கை வேலை வேறில்லை தம்பி
ஓமம் சேர்க்காமல் கண்டதும் உளதே
கடுகும், பருப்பும், மிளகாயும் சேர்த்து
எண்ணெயில் தாளித்த பாவையே! இதை விடுத்து
வேறுண்டோ நீயறியும் ரவா உப்புமாவே

நக்கீரர் : இப்பாட்டின் உட்பொருள்?
சிவன் : நாடார் கடையில் உள்ள மளிகைப் பொருட்களை எல்லாம் வரிசையாக வாங்கிக் குவிக்கும் பெண்ணே! நீ கண்ட பொருட்களில் ரவாவைப்போல் வேறு அரியவகைப் பொருள் உண்டோ! அதில் நீ செய்த ரவா உப்புமாவிற்குத்தான் ஈடு இணை உண்டோ? என்பதே இதன் பொருள்.
Read 13 tweets
7 Sep
Forwarded as received

* Hindu *

It has been taught that the word "Hindu" is a corruption of the Arabic or Parsi word "Sindhu".
In the time of the Mughals and the English, the lie was spread among the common people that this was the name of our Sanatana Dharma.
But how untrue is that
Wrong, it's documentary
Note the proof.

Request to share forward in all your groups by reading this.

* The word "Hindu" is "heenam dushyati iti hindu:" *
That is, he who 'abandons ignorance and inferiority' is a Hindu.
The word 'Hindu' is a true Sanskrit word that has existed for ages. If this Sanskrit word is idolized then heena + du = that is
It is difficult to understand the meaning of one who stays away from bad thoughts.
Read 12 tweets
6 Sep
நாங்கள்..............⁉️

அடுப்பங்கரையிலும் அமெரிக்காவிலும், புரோகிதராகவும், பிரொபஷனலாகவும், தமிழ் எழுத்தளாராகவும், நுனி நாவில் ஆங்கிலம் பேசுவராகவும், பழுத்த ஆத்திகராகவும், கம்யூனிஸ்டாக… பல தளங்களில் பரந்து விரிந்தோம்.
அமெரிக்கா போனாலும் ‘ஆத்து’ பாஷை. எங்கெங்கு சென்றாலும், உலகெங்கும் தமிழ் சங்கம் வளர்த்தோம். தமிழ் நூல்கள் எழுதினோம்.

தமிழை ‘செந்தமிழ்’ முதலில் சொன்னோம். தேடி தேடி பழந்தமிழ் இலக்கியம் சேகரித்தோம்.
திடீரென ஒருவன் “நீ தமிழனில்லை” என்றான். முதலில் திகைத்து பிறகு சிரித்து சமாளிக்க கற்றோம்.

அரசாங்க வேலை உன்னதம் என்றே நம்பினோம். வேலையில் உண்மையாய் இருந்தோம். ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து’ என்று எவரும் சொல்லிக் கொடுக்காமலேயே வாழ்ந்தே காட்டினோம்.
Read 14 tweets
4 Sep
#குரு_துரோணர்களுக்கு இந்த #ஏகலைவன் வணக்கம்

தமிழ் உடலாய் நேர்மை உயிராய் ஆன்மீகம் வழியாய் கொண்டிருப்பதால் @premaswaroopam இந்த ஏகலைவனுக்கு குருவானார்
உண்ணும் உணவும் பருகும் நீரும் சுவாசிக்கும் காற்றும் என்னுள்ளும் நான் பார்க்கும் அனைத்தும் அந்த பரமாத்மனே என்று போதனை செய்வதால் @krishnananban55 இந்த ஏகலைவனுக்கு குருவானார்
My Traditions My Heritage My Faith - My Pride என்று சொல்லி என் அகக்கண்களை திறந்திடச் செய்த @makkolam இந்த ஏகலைவனுக்கு குருவானார்

பகைவர்க்கு அருள்வது பிழை தீமையை அழித்து காப்பது எம் இனம் என்று தேசியத்தை ஒரு வரியில் சொன்ன @MajorSimhan இந்த ஏகலைவனுக்கு குருவானார்
Read 15 tweets
28 Aug
#புத்தகங்கள்_ஏன்_படிக்கணும்? (ஒரு சிறுகதை)

தொழிலதிபரான அம்மாவுக்கும், பத்தாம் வகுப்பு படிக்கும் அவரின் மகளுக்கும் காரில் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.

மகள் "அம்மா, நான் பாடப் புத்தகம் படிக்கிறேன். நல்ல மார்க் வாங்குகிறேன். நல்ல மனிதப் பண்புகளை நீங்கள் சொல்லித் தருகிறீர்கள்.
பிறகு ஏன் வேறு கதை புத்தகமோ. கட்டுரை புத்தகமோ வாசிக்க வேண்டும்?’’

வேறு புத்தகங்களையும் படிக்க வேண்டிய அவசியத்தை தன் மகளுக்கு அந்த கார் பயணத்தில் எவ்வளவோ சொல்லிப் புரிய வைக்க முயன்றார் அம்மா. ஆனால் முடியவில்லை.

வேறு வழியின்றி விவாதத்தை விட்டுவிட்டார்.
அம்மாவும் மகளும் ஆபீஸில் இறங்கி அம்மாவின் கேபினுக்குள் நுழைந்தார்கள். அங்கே வயதான பெண்மணி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

‘‘என்ன சரஸ்வதி அக்கா, ரொம்ப நேரம் நிக்கிறீங்களோ?’’ அம்மா வரவேற்றார்.

‘‘ஆமாம்மா, எனக்கு 500 ரூபாய் வேணும்!’’
Read 20 tweets
27 Aug
WA forwarded as received

#சொர்க்கத்திற்கு_நுழைவது_இலவசம்

ஆனால்

#நரகத்திற்கு_நுழைய_பணம்_வேண்டும்...

ஒரு முதியவர் தனது பேரனிடம் : பேரனே! *சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம்*, ஆனால் *நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.*

*பேரன் 😗 அது எப்படி தாத்தா?
*முதியவர் 😗

*சூதாட்டத்திற்கு* பணம் வேண்டும்

*மது அருந்த* பணம் வேண்டும்

*சிகரெட் புகைக்க* பணம் வேண்டும்

*கூடாத இசை* கேட்க பணம் வேண்டும்

*பாவங்களோடு* பயணிக்க பணம் வேண்டும்,

ஆனால் மகனே!

*அன்பு* காட்ட பணம்
தேவையில்லை

*கடவுளை வணங்க* பணம் தேவையில்லை
*சேவை செய்ய* பணம் தேவையில்லை

*விரதம்* இருக்க பணம் தேவையில்லை

*மன்னிப்பு கோர* பணம் தேவையில்லை

*பார்வையை தாழ்த்த* பணம் தேவையில்லை

*நம் உரிமையை* நிலைநாட்ட
பணம் தேவையில்லை

இத்தனைக்கும் மேலாக
*இறைவன் "நாமம்"* சொல்ல வேறெதுவும் தேவையில்லை
பேரனே!
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(