🌺😃😃 நன்றி மகளே....🌺

இதில் ஒரு பெண் என்னை அழகாகத் திட்டியிருக்கிறார். கோவிலில் அசைவம் சமைப்பவர் பரிஜாரகராவது தவறு என அரசு செய்யும் தவறைச் சுட்டிக் காட்டியதற்கு, முருகனுக்கு அசைவம்தான் பிடிக்குமென்றும், நான் மாற்றிப் பேசுகிறேன் என்றும் திட்டியிருக்கிறார்...

மிக்க நன்றி...
இதன் மூலம் ஒரு நன்மையை அவரறியாமல் செய்துள்ளார்.

செய்யுள்கள் எத்தனைத் தவறாகப் பொருள் கூறப்பட்டு, உண்மையைத் திரிக்கின்றன என்பதற்கான Example அல்ல... Sample இது. சரி அதன் பொருள் என்ன பார்ப்போமா?

அதாவது வேலன் என்பது இங்கு முருகனில்லை. சாமி ஆடுவது என்று நாம் கூறுவோமல்லவா... அதேதான்,
அப்படி வேலெடுத்து ஆடுவோரை வேலன் என அழைப்போம்.

கண்ணப்பநாயனார் கறி வைத்தார், வாயில் நீர் எடுத்து வந்து உமிழ்ந்து துடைத்தார் லிங்கத்தை என்பதால், வாயால் தண்ணீரைத் துப்பி பகவானைத் துடைப்பதுதான் தமிழர் மரபு என்று கூறுவரா இந்த புத்திசாலிகள்??

அதில் சிவபெருமான் ஏற்றுக் கொண்டது,
கண்ணப்ப நாயனாரின் பக்தியை. அவன் உலக அறிவோ, கல்வி அறிவோ அற்ற ஒரு காட்டில் வாழும் வேடன். ஆனாலும், பக்தியால் இறைவனை சுத்தம் செய்கிறான்.

இறைவன் கண்ணீலிருந்து ரத்தம் வழிகிறதென்றதும், தன் கண்ணைப் பிடுங்கி வைத்தானே... இன்று வாய் பேசும் இதே அறிவு ஜீவிகள் தன் கண்ணைத் தருமா?
"ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்” என்னும் அறிவிலிகள்...

அங்கு அவன் பக்தியக் கண்ட இறைவன் இறங்கி வருகிறார். அவரை நாயன்மாரில் ஒருவராக ஏற்று வணங்குகிறோம்.

இதில் கருத்து என்னவென்றால், அவரவர்க்குத் தெரிந்தபடி இறைவனுக்குப் படையல் தந்து பூஜை செய்கின்றனர். வம்புக்காம இல்லாமல்
மனமொப்பி, இறைவனுக்குச் செய்யும் எதிலும் இறைவன் பக்தியைக் காண்கிறான் என்பதே.

ஸ்ரீ ராமருக்கு குகன் தேனும் மீனும் கொடுத்தான் என்கிறார் கம்பர். உண்மையில் இது அவரது கற்பனையே. வால்மீகி ராமாயனம் அவ்வாறு கூறவில்லை. ஆனாலும், அங்கே குகனின் பக்தி மதிக்கப்படுவதைக் குறிப்பதாகத்தான் இதை
ராமர் ஏற்றார் என்கிறார். இது புரியாமல்,
ராமர் அசைவம் என வாதிடும் பஹூத் அறிவாளிகளுக்கு பதி சொல்வது தேவையா?

அப்படித்தான் இதுவும்... மக்களின் பக்தி பற்றிய செய்யுள்.

இதனை விளக்க ஒரு சந்தர்ப்பம் தந்தாய் மகளே... நீ வாழ்க.

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

16 Sep
🌺இன்னும் என்ன வேண்டும் திருடர்களே??🌺

முதல் நாள் தனுஷ், இரண்டாம் நாள் கனிமொழி, மூன்றாம் நாள் சௌந்தர்யா...

இந்த தற்கொலையைப் பற்றிப் பொதுவான கருத்துக்களை நான் பேச விரும்பவில்லை. மாறாக, இந்த ப்ரச்சனையின் ஆணி வேர் நோக்கிப் போவோமா?

தொந்தரவு தரும் ஒரு மரத்தில் கிளைகளை மட்டும்
கழித்துக் கொண்டு வந்தால், நிரந்தரத் தீர்வு வந்துவிடுமா? அடி மரத்தோடு வெட்டி, ஆணி வேரோடு பிடுங்கி அல்லது எரித்து அதனை அழிக்க வேண்டாமா?

இது மரத்துக்கு மட்டுமல்ல, நம் வாழ்க்கையில் ப்ரச்சனைகளையும் வேதனைகளையும் மட்டுமே தருவது எதுவாகினும் அதற்கும் இதுதானே தீர்வு?
முதலில் மாணவர்கள்...

தன்னம்பிக்கை என்பது ஏன் அற்றுப்போனது அவர்களுக்கு? தேர்தல் என்பதை ஒரு பயமாகவே மாற்றி விட்டதால். மாணவச் செல்வங்களே... எத்தனை நபர்களை தினமும் சந்திக்கிறீர்கள் வாழ்வில்? கணவனை இழந்தவர், பெற்றோரை இழந்த குழந்தைகள் முதல் கைகால்களை இழந்தவர் வரை உங்களைச் சுற்றி
Read 55 tweets
7 Sep
🌺Enjoy before sleeping....🌺

🤣 டாக்டருக்கும் ஆக்டருக்கும்
உள்ள ஒற்றுமை என்ன?

இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க!

🤣 சிவகாசிக்கும்
நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசில காச கரியாக்குவாங்க.

நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!
🤣 FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்?

FILE ல் உட்கார்ந்து பார்க்கணும்.

PILE க்கு பார்த்து உட்காரணும்.

🤣 செல்போனுக்கும்
மனிதனுக்கும் என்ன
வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது.

செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.
🤣ஒவ்வொரு இளைஞனின்
மன உளைச்சலுக்கும்
காரணம்?

மதிப்பெண்ணும்
மதிக்காத பெண்ணும்!

🤣 ஏழைக்கும் பணக்காரனுக்கும் வித்யாசமென்ன?

வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்!

வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்!

🤣 ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் விஷயங்கள் ரெண்டு?

ஒன்று பிகர், மற்றொன்று சுகர்!
Read 5 tweets
6 Sep
🌺Laugh & Think....🌺

அப்பா: என்னடா .... படிக்காம ஏன் உம்முனு இருக்க?

மகன்: வரலாறு புரியலைப்பா.

அ: சொல்லுடா... என்ன புரியனும்??

ம: நேரு மாமா - சோம்பலே உனக்கு எதிரி- னு சொல்றாரு.

கந்தி தாத்தா - எதிரியையும் நேசி- னு சொல்றாரு.

இப்போ நான் யால் சொல்றதைக் கேட்க??

அ: 😳😳
அம்மா : ரெண்டும் வேணாம். பாரதத் தந்தை இப்போ யாரு?

ம: மோடி அப்பா...

அம்: ம்ம்.... அவர் சொல்தைக் கேட்டுப் படி. அப்பத்தான் எங்கப்பா போல நீயும் வருவே... இல்லேன்னா உங்க ஈரோட்டு தாத்தா பேரனுங்க போல சீரழிஞ்சு போயிடுவ...

ம:😀😀😀

🍁Vasavi Narayanan🍁
Read 4 tweets
6 Sep
🌺முக்கிய இலக்கை நோக்கி மெல்ல மெல்ல அடியெடுக்கும் திருடர் கூட்டம்...🌺

ஸநாதன தர்மிகள் கவனித்தீர்களா சட்டசபையில் சேகர் பாபுவின் பேச்சை?

tamil.indianexpress.com/tamilnadu/tami…

எவரளித்தார் இந்த ஸ்வதந்த்ரத்தை HR & CE க்கு? ஏற்கனவே பல சட்ட வல்லுநர்கள் மூலம், இத்துறை ப்ரச்சனையுள்ள ஆலயங்களில் -
அதுவும் அவற்றைத் தீர்க்கும் வரையில்தான் (கணக்கு வழக்குகளில் மட்டும்) இவை இருக்கலாம். பின் அத்திருக்கோயில்கள் மீண்டும் தர்மகர்த்தாக்களின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இக்குறிப்பிட்ட காலத்திலும் நிர்வாகம், நிதி ஒழுங்கீடு தவிர வேறு எவற்றிலும் தலையிட அறநிலையத் துறைக்கு அதிகாரமில்லை.
"The jewels, gold, silver, precious stones, vessels and utensils and other movables belonging to the temple institution, with their weights and estimated value" என சட்டம் சொல்லுகிறது. அப்படியெனில், இதைக் கையாளுவதற்கு, அந்தந்த கோயிலின் தர்மகர்த்தாவுக்கும்
Read 21 tweets
21 Aug
🌺அழியாத உண்மை...🌺

எப்பவுமே எனக்கு #பிராமண_சமூகத்து மேல ஒரு பிரம்மிப்பும், ஆச்சர்யமும் இருந்துகிட்டே இருக்கும்.

கடந்த 4 தலைமுறையா, திராவிடம் ன்ற
பேர்ல பிராமணர்களை
ஒதுக்கி, ஒடுக்கி, நசுக்கி,
கேவலப்படுத்தி, அரசாங்கத்தோட எந்த உதவியும் இல்லாம பண்ணி,

ஓட ஓட விரட்டியும் கூட...
தோற்கடிக்கவே முடியாத, 'படிப்பு' ன்ற பிரம்மாஸ்திரத்தை கையிலெடுத்து இன்னைக்கு பெரும்பாலான பிராமணர்கள், வெற்றிக்கோட்டை எட்டினது மிகப்பெரிய ஆச்சர்யம்னாலும் கூட,

அவங்களோட #குழந்தைவளர்ப்பு முறை
அவங்க குழந்தைகள வளர்க்குற அந்த நேர்த்தி, குழந்தைகள 'மோல்ட்' பண்ணுற அந்த கைப்பக்குவம்...
வேற எந்த சமூகத்துக்கும் வராது.
பிராமணர்கள் மட்டுமே லாவகமா கையாளுற மிக அழகான கலை.

இப்ப மத்த குழந்தைகள் படிக்குற அதே பள்ளி கூடங்கள்ல தான பிராமண குழந்தைகளும் படிக்கிறாங்க? அப்படி இருக்கும் போது, ஒரே வயசுல இருக்குற மத்த பசங்கள கவனிச்சு பாருங்க...
Read 13 tweets
21 Aug
🌺த்ரிவிக்ரமப் பாமாலை...🌺

ஓங்கி யுலகளக்க உபேந்திரனாய்
கஷ்யபனா லதிதியு மீன்றெடுக்க
வாமனத் திருநாமங் கொண்டே
ப்ருஹஸ்பதி கைப்ரும்ம ஸூத்ரஞ்சூடி

கஷ்யபனாற் முஞ்சியும் பூட்டி
அதிதியிட்ட கௌபீனந் தான்தரித்து
பூதேவி கிருஷ்ணர் ஜனமளிக்கச்
சந்திரனின் தண்டந் தானேந்தி
ப்ரும்ம கமண்டல மதுபிடித்துக்
கதிரோனி னுபதேச காயத்ரிகூறி
குபேரபிக்ஷை பாத்திர முமேந்தி
உமையிட முதற்கை பிக்ஷைகொண்டு

மகாபலிதன் மோக்ஷ நாடக
மேற்றிய நாராயணா! பரந்தாமா!!
திருவடி தூசியும் படவேயான்
மாலிய ராய்ப்பதம் பிடித்தழுதேனே!!!
🥀கவிக்குழல்🥀

ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் நண்பர்களே...

@naturaize @NarananNambi @Santhosh0309M @srinivasan19041 @CVeeraraghavan @bullettuupandi @HariSri213 @premaswaroopam @Speakwithsense1

🍁வாஸவி நாராயணன்🍁
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(