சட்டசபையில், மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழக அரசியல்வாதிகளுக்கு சி.ஏ.ஏ., சட்ட திருத்த மசோதா குறித்த புரிதல் இல்லையோ என தோன்றுகிறது.கடந்த 1955ல் அமல்படுத்தப்பட்ட சி.ஏ.ஏ., சட்டத்தில் சிறு மாற்றங்கள் தற்போது செய்யப்பட்டன; அவ்வளவே!
இந்தியாவிற்கு அகதியாக வந்த ஒருவர், எந்த மதத்தை சார்ந்தவராக இருப்பினும், 11 ஆண்டுகளுக்கு பின் அவரின் நன்னடத்தையை பொறுத்து, குடியுரிமை பெறுவார் என்பது 1955 முதல் இருந்து வரும் சி.ஏ.ஏ., சட்டம்.இதில், பா.ஜ., அரசு செய்துள்ள திருத்தம் சரியான விஷயம் தான்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து சிறுபான்மையினரான ஹிந்து, சீக்கியர், கிறிஸ்துவர், பவுத்தர், சமணர், பார்சி சமூகத்தினர் அகதிகளாக இந்தியாவிற்குள் வந்தால், ஐந்து ஆண்டுகளில் குடியுரிமை பெறலாம்.
இந்த சட்ட திருத்தம் மூலம் 2014 டிசம்பருக்கு முன் வந்த 31 ஆயிரம் அகதிகள், இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர். இப்போது சட்ட திருத்தத்தை திரும்ப பெற, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துவதால் என்ன பயன்?
இந்த சி.ஏ.ஏ., சட்ட திருத்தம், 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., அளித்த வாக்குறுதி தான். பா.ஜ.,விற்கு அளிக்கப்பட்ட ஓட்டுகள், அக்கட்சி அளித்த வாக்குறுதிக்கும் சேர்த்து தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்படும் சிறுபான்மை மக்களுக்கு, இந்த குடியுரிமை சலுகை வழங்குவதில் நியாயம் உள்ளது; ஆனால், அந்நாடுகளில் வசிக்கும் பெரும்பான்மை மக்களான இஸ்லாமியருக்கு, அந்த சலுகை வழங்க வேண்டிய அவசியம் இல்லையே!
உலகில் இருக்கும் மற்ற இஸ்லாமிய நாடுகள், அவர்களுக்கு உதவலாமே! ஆனால், சிறுபான்மையோருக்கு இந்தியாவை விட்டால் வேறு வழியில்லை.பா.ஜ., சிறுபான்மையோருக்கு எதிராக செயல்படும் கட்சி என்றால், இந்த திருத்த மசோதாவில் கிறிஸ்துவருக்கு அந்த சலுகை வழங்கப்பட்டு இருக்காது.
கடந்த 50 ஆண்டுகளில் ஐந்து லட்சம் இலங்கை அகதிகள், இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர்; தற்போது 90 ஆயிரம் அகதிகள் உள்ளனர். அவர்கள், தாய்நாடான இலங்கைக்கு திரும்புவதையே விரும்புகின்றனர்.
இலங்கை அகதிகளுக்கு விரைவில் குடியுரிமை வழங்கப்பட்டால், இலங்கை அரசு அதை ஒரு வாய்ப்பாக கருதி, மொத்த தமிழர்களையும் அங்கிருந்து விரட்டியடிக்க துணியும்.
முதல்வர்- ஸ்டாலின் அவர்களே... சட்டசபை தீர்மானம் உங்களுடைய புரிதலின்மையை காட்டுகிறது அல்லது சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக தெரிகிறது.
முதல் விஷயம் என்றால், படித்து தெரிந்து கொள்ளுங்கள். இரண்டாவது விஷயம் தான் உண்மையானால், அந்த ஓட்டுகள் எப்போதும் உங்களுக்கே. அதற்காக நீங்கள் இவ்வளவு மெனக்கெட வேண்டியதில்லை.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அமெரிக்காவில் உச்சம் தொடும் டெல்டா அலை; அலட்சியம் வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை
வாஷிங்டன்: 'அமெரிக்காவில் டெல்டா வைரசால் ஏற்பட்டிருக்கும் புதிய கோவிட் அலை விரைவாக உச்சம் தொடும்; கவனக்குறைவாக இருக்க வேண்டாம்' என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அவசர மருத்துவத் துறையின் துணை பேராசிரியர் பக்தி ஹன்சோதி தெரிவித்து உள்ளதாவது: அமெரிக்காவில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஏற்பட்ட கோவிட் அலை முடிவடைந்திருப்பது சற்று நிம்மதியை அளிக்கிறது.
ஆனால் தற்போது இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் ஒரே மாதிரியான கோவிட் தொற்று நிலை தொடர்வதை காண முடிகிறது.
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 13ம் தேதி வரையிலான ஏழு நாட்களில், பாதிப்பு 1.72 லட்சமாக பதிவாகியுள்ளது; தினமும் 1,800 பேர் உயிரிழந்து வருகின்றனர்.
பீஜிங்: சீனாவில் டெல்டா வகை வைரஸ் பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென் சீனப் பகுதியில் புஜியான் மாகாணத்தில் புட்டியான் நகருக்கு அண்மையில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மூலம் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அவரது பள்ளி செல்லும் மகனுக்கும் தொற்று ஏற்பட அந்தச் சிறுவன் மூலமாக 36 குழந்தைகளுக்குப் பரவியது. சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பள்ளிகளில் இந்த அளவுக்கு தொற்று பரவியது இதுவே முதன்முறை.
குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் மோடி
புதுடில்லி :இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய 'குவாட்' அமைப்பின் தலைவர்கள் முதல் முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
வாஷிங்டனில், வரும் 24ம் தேதி நடக்கும் குவாட் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இரு தரப்பு உறவுகள்
குவாட் அமைப்பின் தலைவர்கள் மாநாடு, கடந்த மார்ச் மாதம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்தது. இந்த நான்கு நாடுகளின் தலைவர்கள் நேரில் சந்திக்கும் முதல் மாநாடு 24ம் தேதி வாஷிங்டனில் நடக்கிறது.
அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு: வரவேற்பும் எதிர்ப்பும்!
சென்னை: சட்டமன்றத்தில் மனித வள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையில், “நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்”
என அத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெண்களிடம் வரவேற்பும், ஆண்களிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்த அறிவிப்புக்கு அரசுப் பணிகளுக்கு தயாராகும் பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின் புது கவர்னராக பொறுப்பேற்று உள்ள ஆர்.என்.ரவி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி என்பதால், காங்., தலைவர் உட்பட சிலர் கலக்கமுற்றுள்ளதாக தெரிகிறது.
இதில் கலக்கமடைய என்ன இருக்கிறது? மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் உண்டாகும்.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக இருந்து கலாட்டா நடந்ததால் பயந்து உள்ளனரோ... எல்லாரும் ஒரே மாதிரி தான் இருப்பர் என்று நினைக்க முடியுமா?
யார் புதிதாக பதவிக்கு வந்தாலும் திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும்.
ஆர்.என்.ரவி, கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகள் எஸ்.பி., உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார். பின், மத்திய அரசு பணிகளுக்கு மாற்றப்பட்டார்.
புதுடில்லி :ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள், பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது பற்றி, ஜி.எஸ்.டி., கவுன்சில் நாளை மறுதினம் பரிசீலனை செய்கிறது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது.
அதனால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் கூட்டம், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நாளை மறுதினம் நடக்க உள்ளது.