அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு: வரவேற்பும் எதிர்ப்பும்!
சென்னை: சட்டமன்றத்தில் மனித வள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையில், “நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்”
என அத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெண்களிடம் வரவேற்பும், ஆண்களிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்த அறிவிப்புக்கு அரசுப் பணிகளுக்கு தயாராகும் பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் ஆண்களுக்கு சமமான வேலைவாய்ப்பை பெண்களும் பெறுவார்கள், ஏராளமானோர் நிதிச் சுதந்திரம் அடைவார்கள். பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கும். குடும்பச் செலவுகள் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று ஆண்களின் சுமையையும் குறைக்க முடியும்.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்திருப்பது ஆண்களுக்கும் பயன் தரக்கூடியது என்பது அவர்களின் வாதமாக உள்ளது.
ஆண்கள் தரப்போ, “30 சதவிகித இடஒதுக்கீடு இருந்த போதே டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வுகளில் சுமார் 60% பணியிடங்களை பெண்களே பெறுகிறார்கள். காரணம் 30 சதவிகிதத்தோடு பொது பிரிவான 70 சதவிதத்திலும் அவர்களால் போட்டி போட முடியும்.
தற்போது அதனை 40 சதவிகிதமாக உயர்த்தியிருப்பதால் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் அவர்களுக்கு தான் செல்லும்.” என்கின்றனர்.
“1989-ல் தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் சம உரிமை கிடைக்க வேண்டும் என அப்போதைய முதல்வர் கருணாநிதி 30 சதவிகித இடஒதுக்கீட்டை அறிவித்தார்.
அன்றைக்கு குழந்தைத் திருமணம், பெண்களுக்கு பள்ளி கல்வி, உயர் கல்வி மறுப்பு, வேலைவாய்ப்பில் பெரியளவில் ஆண், பெண் இடையே ஏற்றத்தாழ்வு இருந்தது. அதனால் அத்திட்டம் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. தொலை நோக்கு திட்டமாக பார்க்கப்பட்டது.
ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் அரசு அறிவித்திருப்பது வாக்கு அரசியலுக்காக செய்யப்படும் ஒன்றோ என்ற சந்தேகம் எழுகிறது.” என்கின்றனர்.
சமவாய்ப்பு ஏற்கனவே இருக்கிறது!

அரசுப் பணிக்கு தயாராகும் ஆண்கள் இது தொடர்பாக சமூக ஊடகங்களில் #JusticeForMenInTNPSC என்ற ஹாஷ்டேக் மூலம் தி.மு.க., அரசின் இந்த அறிவிப்பை விமர்சிக்கின்றனர்.
“2019 குரூப் 1 தேர்வில் 360 பணியிடங்களில் சுமார் 65 சதவீத இடங்களை பெண்களே நிரப்பினார்கள். குரூப் 2 மற்றும் 4 பணிகளுக்கான தேர்வுகளிலும் இது தான் நிலைமை.
ஏற்கனவே பெண்கள் சமவாய்ப்பு பெறும் நிலையில் தற்போது பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 10 சதவிகிதம் உயர்த்தி வழங்கியிருக்கிறார்கள். இவர்கள் இந்த முடிவை எந்த அடிப்படையில் எடுத்தார்கள்?
டி.என்.பி.எஸ்.சி.,யிடம் கடந்த கால பணி நியமன தரவுகளை கேட்டுப் பெற்றிருந்தாலே இவ்விவரம் அமைச்சருக்கு தெரிந்திருக்கும்.
அதில் பெண்களுக்கு சமவாய்ப்பு இல்லை என காட்ட முடியுமா? ஓட்டரசியலுக்காகவும், விளம்பரத்துக்காகவும் இம்முடிவு எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.” என்கின்றனர்.
கட்சியிலும் அமல்படுத்தலாமே!

மேலும் சில ஆண்கள் இந்த அறிவிப்பு தொடர்பாக தங்கள் பதிவுகளில் கூறியிருப்பதாவது: “மாற்றத்தை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம் முக்கியமானது என்பதை உணர்ந்து இந்த இடஒதுக்கீட்டை 40 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
இந்த பாடம் எல்லாம் பொது மக்களுக்கு மட்டும் தானா? நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., சார்பில் 173 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் அதில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை வெறும் 12.
ஏன் இதிலும் 40% இடங்களை பெண்களுக்கு ஒதுக்கலாமே. உண்மையில் அரசியலில் தான் பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைப்பதில்லை.

ஆண்களால் ஏகப்பட்ட தடைக்கற்கள் போடப்படுகின்றன. 12 வேட்பாளர்களில் 6 பேர் வெற்றிப் பெற்றனர். அவர்களில் 2 பேர் தான் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு எல்லாம் வழங்கப்படவில்லை. இவர்கள் பாலின சமத்துவம் பேசுவது எல்லாம் ஏமாற்று வேலை.” என்கின்றனர்.

தினமலர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

15 Sep
அமெரிக்காவில் உச்சம் தொடும் டெல்டா அலை; அலட்சியம் வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை

வாஷிங்டன்: 'அமெரிக்காவில் டெல்டா வைரசால் ஏற்பட்டிருக்கும் புதிய கோவிட் அலை விரைவாக உச்சம் தொடும்; கவனக்குறைவாக இருக்க வேண்டாம்' என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அவசர மருத்துவத் துறையின் துணை பேராசிரியர் பக்தி ஹன்சோதி தெரிவித்து உள்ளதாவது: அமெரிக்காவில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஏற்பட்ட கோவிட் அலை முடிவடைந்திருப்பது சற்று நிம்மதியை அளிக்கிறது.
ஆனால் தற்போது இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் ஒரே மாதிரியான கோவிட் தொற்று நிலை தொடர்வதை காண முடிகிறது.

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 13ம் தேதி வரையிலான ஏழு நாட்களில், பாதிப்பு 1.72 லட்சமாக பதிவாகியுள்ளது; தினமும் 1,800 பேர் உயிரிழந்து வருகின்றனர்.
Read 5 tweets
15 Sep
டெல்டா வைரஸ் பரவல்; சீனாவில் பள்ளிகள் மூடல்

பீஜிங்: சீனாவில் டெல்டா வகை வைரஸ் பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென் சீனப் பகுதியில் புஜியான் மாகாணத்தில் புட்டியான் நகருக்கு அண்மையில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மூலம் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அவரது பள்ளி செல்லும் மகனுக்கும் தொற்று ஏற்பட அந்தச் சிறுவன் மூலமாக 36 குழந்தைகளுக்குப் பரவியது. சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பள்ளிகளில் இந்த அளவுக்கு தொற்று பரவியது இதுவே முதன்முறை.
Read 6 tweets
15 Sep
குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் மோடி

புதுடில்லி :இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய 'குவாட்' அமைப்பின் தலைவர்கள் முதல் முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
வாஷிங்டனில், வரும் 24ம் தேதி நடக்கும் குவாட் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இரு தரப்பு உறவுகள்

குவாட் அமைப்பின் தலைவர்கள் மாநாடு, கடந்த மார்ச் மாதம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்தது. இந்த நான்கு நாடுகளின் தலைவர்கள் நேரில் சந்திக்கும் முதல் மாநாடு 24ம் தேதி வாஷிங்டனில் நடக்கிறது.
Read 9 tweets
15 Sep
இது உங்கள் இடம்: வாழ்த்து கூறி வரவேற்போம்!

மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின் புது கவர்னராக பொறுப்பேற்று உள்ள ஆர்.என்.ரவி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி என்பதால், காங்., தலைவர் உட்பட சிலர் கலக்கமுற்றுள்ளதாக தெரிகிறது.
இதில் கலக்கமடைய என்ன இருக்கிறது? மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் உண்டாகும்.

அண்டை மாநிலமான புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக இருந்து கலாட்டா நடந்ததால் பயந்து உள்ளனரோ... எல்லாரும் ஒரே மாதிரி தான் இருப்பர் என்று நினைக்க முடியுமா?
யார் புதிதாக பதவிக்கு வந்தாலும் திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும்.

ஆர்.என்.ரவி, கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகள் எஸ்.பி., உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார். பின், மத்திய அரசு பணிகளுக்கு மாற்றப்பட்டார்.
Read 8 tweets
15 Sep
ஜி.எஸ்.டி., கீழ் பெட்ரோல், டீசல்

புதுடில்லி :ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள், பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது பற்றி, ஜி.எஸ்.டி., கவுன்சில் நாளை மறுதினம் பரிசீலனை செய்கிறது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது.
அதனால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் கூட்டம், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நாளை மறுதினம் நடக்க உள்ளது.
Read 4 tweets
15 Sep
ராமர் கட்டிய பாலம்: தேவாரத்தில் ஆதாரம்

மதுரை : ஹிந்து கடவுள்களை அவதுாறு செய்வதற்காவே ஒரு கும்பல் சுற்றி வருகிறது. அந்த கும்பலின் சமீபத்திய பேச்சு ராமர் பாலம் கட்டியதற்கான ஆதாரம் தமிழ் இலக்கியங்கள் எதிலும் இல்லை என்பது.
ஆனால் தேவாரத்தில் அதற்கான ஆதாரம் தெள்ளத்தெளிவாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறார் தமிழ் இலக்கிய ஆய்வாளர் பா.இந்துவன்.
அவர் கூறியது: ராமாயணம், மகாபாரதம் போன்றவை கட்டுக்கதைகள், ராமாயணத்தை மேலோட்டமாகத்தான் திருமுறைகள் எடுத்து கூறுகிறதே அன்றி ராமர் பாலம் கட்டியது பற்றியோ, ராவணனை பழித்து பேசியது பற்றியோ எந்த ஒரு திருப்பதிகங்களும் பாடவில்லை என ஒரு கருத்தை தொடர்ந்து பேசி வருகின்றனர்.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(