#HBDarignaranna
#MupperumVizha2021
#முப்பெரும்விழா
#DravidamisaLifestyle
#திராவிடம்_ஒரு_வாழ்க்கைமுறை

தொ. பரமசிவன்

அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்.
நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார்.எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம்.

நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள்.
கல்லூரியில் நான் படிக்கும்போது வகுப்பிலுள்ள 63 மாணவர்களில் 60 பேருக்கு ஏதேனும் ஒரு கட்சி சார்பு இருந்தது.

தனது வீடு தெரு,சாதி தாண்டி மாணவனுக்கென ஒரு பொது உலகம் இருந்தது.அவர்கள் பேசவும், சண்டைபோடவும் ஏதேனும் ஒரு தத்துவம் இருந்தது.
கட்சி வேறுபாடுகளைத் தாண்டியும் அண்ணா எல்லோர் மத்தியிலும் செல்வாக்கோடு இருந்தார். தமிழால் தமிழ் அரசியலால் அவர் எல்லோரையும் இணைத்தார்.

தமிழ் தான் இங்கே திராவிடஅரசியலுக்கான உயிர். திராவிடம் என்று எதைச் சொல்லுகிறோம்? இரு விளக்கங்கள் கொடுக்கலாம்.
இனம் சார்ந்து ஆரியர், திராவிடர் என்று இங்குள்ள இரு இனங்களில், எல்லா இடங்களையும் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முற்படும் ஆரிய பண்பாட்டிற்கு மாற்றாக, பன்மைத்துவத்தைப் பேசும்போது திராவிடம் பேசுகிறோம்.

அடுத்து இனம் சார்ந்து தென்னகத்தை- கர்நாடகம்,ஆந்திரம்,தெலுங்கானா,கேரளா
தமிழ்நாடு-இணைந்த பகுதியைக் குறிப்பிடும்போது திராவிடம் பேசுகிறோம்.

ஆரியம் திராவிடம் வரலாற்று வேறுபாடுகள் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. பண்பாட்டுத் தளத்திலும் இந்த வேறுபாடுகள் பல விஷயங்களில் இன்றளவும் நீடிக்கின்றன. தென் மாநிலங்களிலும் திராவிட மொழி பேசுபவர்களுக்கென்று
தனித்த பண்பாடு இருக்கிறது.பிராமணர் அல்லாத எல்லா சாதிகள் மத்தியிலும் பொதுவான அம்சங்கள் நிறையவும், ஒவ்வொரு சாதிக்குமான சின்னச் சின்ன பண்பாட்டு அசைவுகள் இருப்பதையும் பார்க்கிறேன்.
ஓர் உதாரணத்திற்கு, இந்தச் சமூகங்களில் தாய்மாமனுக்குள்ள மரியாதையைச் சொல்லலாம்.
தாய்வழிச் சமூகத்தின் எச்சப்பாடாகத் தொடர்கிறது இது. ஆரியப் பண்பாட்டில் இது கிடையாது.
மற்றொன்று இறந்தவருக்கு, சடலத்திற்குக் கொடுக்கும் மரியாதை. நிறைய சொல்லலாம். திராவிட அரசியல் என்பதன் அடிநாதம் அவரவருக்கு உரிய பிரதிநிதித்துவம், அதிகாரத்தை அவரவருக்குக் கொடு என்பது தான்.
இங்கே அரசியல் பண்பாடு எல்லாவற்றிலும் பிராமணியத்தின் ஆதிக்கம் இருப்பதால் பிராமணியத்திற்கு எதிரான இயக்கமாக அது உருவெடுத்தது.

ஆனால் தொடக்கம் முதலாகவே பிராமணர்களை எதிரியாக்கவில்லை. இன்னும் ஒரு படி மேலே போய் பிராமணர்களையும் இயக்கத்தினுள் கொண்டு வந்தார் அண்ணா.
சமூக ரீதியாக பிராமணர்கள் மட்டும் அல்லாது, இங்கேயே வந்து தங்கிவிட்ட மாற்று மொழியினரையும் உள்ளடக்கும் விதமாகத் தமிழையும் தமிழுணர்வையும் இணைப்புச் சங்கிலியாக்கினார்.
திராவிடநாடு என அவர் முன்வைத்த நாட்டினுடைய நிர்வாகமும் கூடத் தெளிவாக மலையாளிகளுக்கு,தெலுங்கர்களுக்கு,
கன்னடர்களுக்கு, தமிழர்களுக்கு என்று அவரவருக்கான தனி நிலத்தையும் அங்கே அவரவர் சுய ஆட்சியையும்
உறுதிப்படுத்துவதாகவே இருந்தது. ஒரு கூட்டரசாக இயங்கலாம் என அவர் நினைத்தார். ஆகையால் திராவிட அரசியலும் தமிழ் அரசியலும் வேறுவேறு அல்ல.
தமிழ் அரசியலுக்குக் கூடுதல் தத்துவ பலத்தைத் தருவது என்று திராவிட அரசியலைச் சொல்லலாம்.
இந்தியத் துணைக் கண்டத்தில் சாதிக்கும் பிராமணியத்திற்கு உள்ள செல்வாக்கை அவர் முழுமையாக உணர்ந்து இருந்தார். அதனால் தான் அரசியல் தளத்தில் பங்கெடுக்கும் ஒரு இயக்கத்தின் லட்சியத்தில் சாதி ஒழிப்பையும் முக்கியமான ஒன்றாக்கினார்.
சகலத்திலும் பிராமணியம் கலந்திருப்பதால்தான் ஒவ்வொரு தளத்திலும் அதற்கு மாற்றான ஒன்றை நிறுவ முற்பட்டார்.

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இருந்து சாதிப் பெயரை ஒழித்ததே அண்ணாவின் சாதனைகளில் ஒன்று தான். இஸ்ரோவின் தலைவராக இருந்த விஞ்ஞானியே
மாதவன் நாயர் என்று சாதியைக் கூடச் சூட்டிக் கொள்ளும் நாடு இது. அரசியலில் சொல்ல வேண்டுமா?

மேனன்கள்,கவுடாக்கள்,ராவ்கள், சர்மாக்கள், முகர்ஜிக்கள்... இந்தியாவில் எங்கே சாதி ஒட்டு இல்லாத அரசியியல்வாதி இருக்கிறார் தமிழ்நாடு தவிர?
எங்களுடைய நெல்லை மாவட்டம் சாதி உக்கிரத்தில் உழன்ற ஊர்.அண்ணாவின் அரசியல் எப்படிச் சூழலை மாற்றியது என்பதற்கு நானெல்லாம் நேரடி சாட்சியம்.
'சாதி கேட்பது கேவலம்' என்ற உணர்வை ஒரு தலைமுறைக் காலகட்டத்துக்குள் இங்கே அவர் கொண்டுவந்து விட்டார். பெரிய சாதனை இல்லையா இது? சங்க இலக்கிய மரபை அவர் மீட்டெடுத்தர்.
அதன் வழி புதிய மதிப்பீடுகளை உருவாக்கினார்.
தமிழ்நாட்டின் அரசியலுக்கு என்று தனிக் கலாச்சாரத்தை உருவாக்க முற்பட்டார். எல்லோரையும் உள்ளனைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது.
பொங்கல் பண்டிகைக்குப் புது உருவம் கொடுக்க முற்பட்டாரே! ஒரு சமூகம் இளைப்பாறிக் கொள்கிற
நிகழ்ச்சி திருவிழா. பண்டிகையும் அப்படித் தான்.இது அந்தந்தப் பகுதி மக்களோடும் உற்பத்தியோடும் மண்ணோடும் பிணைக்கப்பட்டிருக்கிறது.
சமூக மாற்றம் என்பது அரசியல் தளத்தில் மட்டுமே நிகழ்வது கிடையாது என்பதும் பண்பாட்டுத் தளத்தில் வேர் பிடிக்காத மாற்றம் நிலைக்காது என்பதும் அண்ணாவுக்கு
தெரிந்து இருந்தது. அதனுடைய விளைவாகவே தமிழர்த் திருநாளான பொங்கல் பண்டிகைக்குப் புத்துயிர் கொடுத்தார் அண்ணா.
எல்லோரையும் 'தமிழர்கள்' என்ற அடையாளத்தின் கீழ் ஒன்று திரட்டும் இலக்கும் சமத்துவ இலட்சியமும் அதன் பின்னே இருந்தன.

பிற்பாடு கருணாநிதி ஆட்சியின்போது தமிழ்ப் புத்தாண்டு
என்று தை முதல் தேதியில் இருந்து கணக்கைத் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதும்கூட இதன் தொடர்ச்சி தான்.
இந்து-இந்தி-இந்துஸ்தான்' என்று ஒரே மதம்,ஒரே மொழி,ஒரே நாடு என்கிற கொள்கையின் கீழ் இந்தியாவைக் கொண்டுவரும் பண்பாடுகள் அனைத்துக்கும் மாற்று வழிகளைச் சிந்தித்தவர் அண்ணா என்பதை நீங்கள் அண்ணாவைப் படிக்கும் போது விளங்கிக் கொள்ளலாம்.
அண்ணாவைப் பொறுத்த வரையில் இந்தியக் கலாச்சாரம் என்று ஒன்று கிடையாது.

வேண்டுமானால் இந்தியக் கலாச்சாரங்கள் எனச் சொல்லலாம். ஏனெனில் கலாச்சாரங்களின் தொகுப்பே இந்தியா. இதற்கு வழிகாட்டும் நிலமாகவே தமிழ்நாட்டை அண்ணா கனவுகண்டார்
அதற்கான பாதையாக ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருந்த பேச்சு,எழுத்து,உரையாடல்கள், வாசிப்பு வெளியை வெகுமக்கள் நோக்கி நகர்த்தினார்.

கடவுள் எதிர்ப்பு திராவிட இயக்கத்திற்கு சுமைதானே எனக் கேட்கிறீர்கள்.அப்படி கிடையாது. பெரியாரை, அண்ணாவை முழுமையாகப் படித்தவர்கள் எவரும் கடவுளர்களை
அவர் தாக்கிப் பேசியதன் நோக்கம் சாதி ஒழிப்பு என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்வார்கள்.

பெரியார், அண்ணா இருவருமே "நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களைச் சமூகக் கேடுகளாக நினைத்தனர்.
"நிறுவனமயமாக்கப்பட்ட மதத்தை நான் வெறுக்கிறேன்" என்பதைப் பல இடங்களில் அண்ணா பேசியிருக்கிறார்.
பெரியார் கடவுள் மறுப்பைத் தூக்கிப் பிடித்தது வைதீக எதிர்ப்பு பிராமணிய எதிர்ப்புக்காகத் தானே தவிர ஆன்மீக எதிர்ப்பு என அதைப் பார்க்க முடியாது.
பிள்ளையார் சிலையைத் தான் பெரியார் உடைத்தார். சுடலைமாடன் சிலையை அல்ல.

பெருந்தெய்வ சிறு தெய்வ அரசியல் பிராமணியம் உள்ளவரை நீடிக்கும்
நாட்டு தெய்வங்களை மக்களின் தெய்வங்களாகப் பார்க்கிறேன். இந்த ஆன்மிகம் மக்களுடைய ஆன்மிகம்.அதாவது இது நிறுவனமயமாக்கப்பட்டது கிடையாது.
அதிகாரச் சார்பற்ற ஆன்மிகம்.இன்றைக்கும் கிராம தெய்வங்களுக்கான திருவிழாவில் மத எல்லைக்கு அப்பாற்பட்ட கூடுகை, பங்கேற்பைப் பார்க்க முடியும்.
கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே குறுக்கே யாரும் இல்லாமல் வழிபட முடியும்.

கிராம எல்லையில் நிற்கிற வீரனை நீங்கள் தொட்டுக் கும்பிடலாம்.
படையல் போடும்போது குடும்பப் பெரியவர் தான் பல இடங்களில் பூஜை செய்கிறார்.

இந்த ஜனநாயகம் நிறுவனமயமாக்கப்பட்ட பெருந்தெய்வ வழிபாட்டில் கிடையாது.
அது நமக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு ஆளை நிறுத்துகிறது, சம்பிரதாயங்களை நிறுத்துகிறது.
இதன் மூலம் கிடைக்கும் ஆன்மிக அதிகாரத்தையும் அதன் வழியாகக் கிடைக்கும் அரசியல் அதிகாரத்தையும் கொண்டே பிராமணியம் வாழ்கிறது.

எபோது வரை மேல் கீழ் என்ற அடுக்குமுறை இருக்கிறதோ அப்போது வரை அதற்கு
எதிரான கலகங்களும் நீடிக்கத் தான் செய்யும்.
நான் என்ன சாப்பிடுகிறேனோ அதை என் தெய்வமும் சாப்பிடுகிறது. நான் கறி சாப்பிட்டால் அதுவும் கறி சாப்பிடும். நான் மது குடித்தால் அதுவும் மது குடிக்கும்.

இதுவும்கூட ஒரு உயர்தர சமத்துவம் தானே? அப்படிப்பட்ட மக்களின் தெய்வத்தை எப்படி நீங்கள்
அழிக்க முடியும்?.
கேள்வி:அண்ணாவின் பெருமையாக நீங்கள் தமிழ் அரசியலைக் குறிப்பிடுகிறீர்கள். தமிழகத்தில் தமிழரல்லாதோர்- தெலுங்கர்கள்,மலையாளிகள், கன்னடர்களும் கூட அரசியலில் கோலோச்சுகிறார்களே? இதை எப்படி புரிந்து கொள்வது?

இவையெல்லாம் பெரியார், அண்ண திராவிட இயக்கத்தின் சாதனை
என்று சொல்கிறேன்.
தமிழ் அரசியலுக்குப் புத்துயிர் கொடுத்தவர் அண்ணா. அப்படி க் கொடுக்கும்போது மத, இன வெறியூட்டாமல், இந்த மண்ணின் உணர்வைப் பெறும், தமிழுணர்வைப் பெறும் ஒவ்வொருவரும் தமிழர் என்பதை அடிப்படையாக்கினார்.
பிராமணரல்லாதோர் இயக்கமாகப் புகழ்பெற்ற ஒரு இயக்கத்தின் வழிவந்த
கட்சியில் ஜெயலலிதா என்ற பிராமணர் எப்படித் தலைமைக்கு வந்தார் என இதைப் பார்க்கக் கூடாது. அந்த இயக்கத்தை அவரும் உள்வாங்கினார் என்றும் அதனால் தலைமை ஏற்றார் என்றும் தான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு சாதனையில் ஜெயலலிதாவுக்கும் பங்கு இருக்கிறது. இல்லையா?
எம்ஜிஆர் தன்னை ஒரு மலையாளியாக நினைக்கவே இல்லையே! டெல்லி ஆதிக்கத்திற்கு எதிராக எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்கூடப் பேசியிருக்கிறார்கள்.
இனஉணர்வை மத உணர்வால் வெல்ல முடியவே முடியாது. ஏனென்றால் இனம் உங்கள் பிறப்போடும்,உடலோடும் உயிரோடும் கலந்திருக்கிறது. மதம் நீங்கள் நினைத்த
மாத்திரத்தில் மாற்றிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. மேலும் மதம் எந்தக் காலத்திலும் இனத்துக்கான அடையாளமாக இருக்கவே முடியாது.
ஏனென்றால், மதம் மாறும்போது அடையாளம் மாறுவதில்லை. இத்தாலியில் இருக்கும் கிருத்துவமும் தமிழ்நாட்டில் இருக்கும் கிருத்துவமும் ஒரே இன அடையாளமாக என்றுமே
மாற முடியாது.
கேள்வி; அண்ணாவின் மிகப்பெரிய சாதானை?

தமிழ் நிலப்பரப்புக்குத் தமிழ்நாடு எனப் பெயரிட்டது. உலகம் உள்ளளவும் தமிழ்நாடு என அவர் சூட்டிய பெயர் நிலைக்கும். அது அவரது கனவைக் காலமெல்லாம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

15 Sep
#கொலை_செஞ்சியா_எடப்பாடி

கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும், Image
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
Read 23 tweets
15 Sep
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17. Image
அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக - தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக - அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
Read 4 tweets
15 Sep
உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் நாய் தரகர் தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியா ?

அதிமுக முதுகில் சவாரியா ?

@Narayanan3 @BJP4TamilNadu @annamalai_k Image
சொந்தக்கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியுமா? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

அதிமுகவை ராமதாஸ் விமர்சிப்பதை ஏற்க முடியாது - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
உள்ளாட்சி தேர்தல்: அமமுக-தேமுதிக கூட்டணி முறிந்தது Image
Read 4 tweets
15 Sep
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
"because" என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அறிஞர் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
Read 25 tweets
15 Sep
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு என்ற
பெயர் மாற்றம் உட்பட முக்கியமான
சில காரியங்களைச் செய்திருக்கிறேன்,
- இதையெல்லாம் பார்த்துவிட்டு
சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. Image
'இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சிவைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா?' என்று நான்
சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அன்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்
மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே,
Read 4 tweets
14 Sep
#HBDarignaranna
#MupperumVizha2021
#முப்பெரும்விழா
#DravidamisaLifestyle
#திராவிடம்_ஒரு_வாழ்க்கைமுறை

ஹிந்தி திவாஸ்’ நாளான இன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்களது தாய் மொழியுடன் ஹிந்தியையும் அடிப்படை வேலைகளுக்கு பயன்படுத்த உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் - உள்துறை அமைச்சர் அமித்.
பெரிய நாய் உள்புகும் அளவில் கதவு இருக்க சின்ன நாய் போக தனி கதவு எதற்கு ? !

இந்தி மொழியை கற்றால் இந்தியாவில் எல்லோரிடமும் பேசிப்பழகலாம். ஒரு இணைப்பு மொழியாக இந்தி இருக்குமே?

1963ல் மாநிலங்களவையில் இந்த கேள்விக்கு பதிலலித்த அண்ணாதுரை
அவர்கள் அங்கிருந்தவர்களுக்கு புரியும்படி நாய் கதை ஒன்றை சொன்னார்.

Here is a short story he told to drive home the irrationality of arguments for making Hindi the link language of India.) “A man had two dogs – a big one and a small one.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(