திராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா?

கீழடி அகழாய்வில் கிடைத்த வரலாற்றுப் புதையல் நமது இலக்கியப் பெருமைகளுக்குக் கிட்டிய மகுடம். நமது இலக்கியத்தில் கிடக்கும் நவநாகரீகத்தை கற்பனை என்று குறுங்சால் வெட்டிய இருண்டகர்களின் முகத்திலும் மூளையிலும் விழுந்த அடி.
சுதந்திரம் கிடைத்த பிறகு தமிழகத்தில் முறையாக அகழாய்வு நடத்தாமலும், அதன் மூலம் தமிழர்களுக்குப் பெருமை கிட்டிவிடாமலும் பார்த்துக் கொண்ட கெட்டிக்கார மத்திய பார்ப்பனிய அரசுகளுக்கும் எதிர்பாராமல் விழுந்த அடியே.
நமது இலக்கியப் பெருமைகளை கற்பனை என்று உதாசினப்படுத்திய, வன்மம் நிறைந்த பகையாளிகள் நாக்கில் நல்ல பாம்பு கொத்தியதுபோல் ஊளையிடுகிறர்கள், உளறுகிறார்கள். இதை எல்லாம் பார்த்து பார்ப்பனர்கள் மீது கோபம் கொள்ளாமல்,
சீற்றங்கொள்ளாமல் கீழடியைக் கொண்டாடுகின்ற திராவிட இயக்கத்தினரை வஞ்சகமாய் வசைபாடுகிறது ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்தினர்களுக்குப் பெயர் தமிழ்த் தேசியர்களாம். தங்களின் வயிற்றுப் பிழைப்பிற்கும், ?
வசதியான வாழ்விற்கும் தமிழரின் வாழ்க்கையை அடமானம் வைக்கும் தமிழ்த் தேசியவாதிகளை என்ன செய்வது மொழிமரபில் வேர்ச்சொல் தேடி உலக மொழிகளை ஆய்ந்தறிந்த மொழிஞானி தேவநேயப் பாவாணர் உலக மொழிகளில் எல்லாம் தமிழ் வேராய், விழுதாய் இனம் காட்டி நிற்கிறதென்று சொன்னார்.
‘உஹடு’ என்ற மாராட்டியச் சொல்லுக்குள் ‘உரல்’ என்ற தமிழ்ச்சொல் மறைந்து நிற்கிறது. ‘கரணே’ என்ற அரியானச் (அரியான மொழிக்கு வரிவடிவம் இல்லை) சொல்லுக்குள் ‘கரண்டி’ என்ற தமிழ்ச்சொல் முகம் மாறிக் கிடக்கிறது. ‘சுண்டு’ என்ற இந்திச் சொல்லுக்குள் ‘சுக்கு’ என்ற தமிழ்ச் சொல்லே கோலோச்சுகிறது.
இப்படி வேர்ச்சொல் மூலம் சொல்லை அடையாளம் கண்டு மொழிப் பெருமை பேசும் நாம், கொஞ்சம் இனத்தின் வேரையும் ஆய்வு செய்ய வேண்டாமா?

உலக மொழிகளில் உயர்வு தாழ்வு இல்லை. எல்லோருக்கும் தன் தாய்மொழி உயர்வானதே. மொழி அமைப்புகளில் உயர்வு, தாழ்வு இருக்கலாம். அது போல் உலக மாந்தரில் உயர்வு,
தாழ்வு இல்லை. உரிமைப் போராட்டமும் அதிகாரப் போட்டியுமே இங்கு இனங்களாய் வேறுப்பட்டு முரண் கொள்கின்றன.
2009 ஈழ இன அழிப்பிற்குப் பிறகு தமிழினத்தில் ஏற்பட்ட தாக்கத்தால் தமிழ் இளைஞர்களிடம் ஏற்பட்ட புத்தெழுச்சியைக் கண்டு வெலவெலத்த பார்ப்பனிய வல்லாதிக்கம் தனது ஊடறுப்பு வேலையை விரைவுபடுத்தியது. எடுத்துக்காட்டுக்கு,
மும்பை தாராவி 90 அடிச்சாலையில் உலகத் தமிழர் சார்பில் 2010, 2011 ஆண்டுகளில் நடத்திய மாவீரர்கள் நாள் நிகழ்ச்சிகளில் 200 இளைஞர்களுக்குமேல் கலந்து கொண்டார்கள். அதில் கிட்டத்தட்ட150 இளைஞர்கள் புதியவர்கள்.
அதில் சில ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். ஈழத்தில் நடந்த இன அழிப்பு அனைவரையும் பாதித்திருந்தது.

இந்த இளைஞர்களிடம் இனம்சார்ந்த விவாதங்கள் வரும்போது பார்ப்பனர்கள்தான் ஈழதேச அழிவிற்குக் காரணம் என்று சொல்லும்போது முகம் சுழித்தார்கள்.
பெரியாரைப் பற்றிப் பேச்சு வந்தால் முகம் கறுத்தார்கள். இப்படி இரண்டு மூன்று ஆண்டுகள் மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த முரண், நடிகர் சீமான்
‘நாம் தமிழர் கட்சி’ ஆரம்பித்த உடன் உலகத் தமிழர் பேரமைப்பு நடத்தும் மாவீரர் நாள் நிகழ்ச்சிக்கு வரும் இளைஞர்கள் கூட்டம் குறைந்தது. அப்படியே வந்தாலும் பெரியாரையும், கலைஞரையும், தி.மு.கவையும் குறை சொல்வதற்கென்றே வந்த கூட்டம் என்று அவர்கள் நடவடிக்கையில் தெரிந்தது.
நாம் தமிழர் கட்சி தனியாக மாவீரர் நாள் நடத்த ஆரம்பித்தார்கள். பிற இலக்கிய நிகழ்வுகளிலோ, வேறு நிகழ்வுகளிலோ கூடும் இடமெல்லாம் பெரியாரை தெலுங்கரென்றும், தமிழரைக் காட்டுமிராண்டி என்று சொன்னவரென்றும், தமிழினத்திற்கு தமிழர்தான் தலைவராய் வர வேண்டுமென்றும் மும்பையில்,
ஈழப் போருக்குப் பிறகு ஒருங்கிணைந்த தமிழர்களின் ஒற்றுமையைக் குலைத்தார்கள்.

இன்று மும்பையில் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் முதன்மையானவர்கள் பலர், நேற்றுவரை ஆர்.எஸ்.எஸ்சில் இருந்த (இருக்கும்) இந்து வெறியர்கள். தங்களைத் தமிழர்களின் மீட்பர்களாய் காட்டிக் கொள்கிறார்கள்.
பெரியாரை தெலுங்கர் என்று விமர்சிக்கும் எவரும் பார்ப்பனர்களைக் குறை கூறுவதில்லை. பெரியாரை சரியாக, முறையாகப் படித்து உள்வாங்கத் தெரியாத விடலைகள்தான் இப்படி என்றால், கற்றறிந்த மணியரசன் போன்றோர்களே அப்படித்தான் இருக்கிறார்கள். அரசுகள் செய்த ஒரு தவறைச் சுட்டிக் காட்டி
"மத்திய அரசும், மாநில திராவிட அரசுகளும்" என்று பேசுகிறார். "மத்திய பார்ப்பனிய அரசும் மாநில திராவிட அரசும்" என்று பேசுவதற்கு அவருக்கு நாக்கு வருவதில்லை.

பெரியாரின் மொழிக் கொள்கை தவறு என்று பேசும் மணியரசன், பெரியாரின் மொழிச் சீர்திருத்தம் எவ்வளவு நன்மை பயக்கிறது என்று பேசுவதில்லை.
பார்ப்பனிய உண்ணிகள் மேய்ந்து மணிப்பிரவாளமாய் சோகை பற்றி மாண்டுப் போகக் கிடந்தத் தமிழை புதுக் குருதி பாய்த்து புத்துணர்ச்சி ஊட்டியது திராவிட அமைப்புகள்தான் என்பதை தன்பின்னால் நிற்கும் விடலைகளுக்குச் சொல்வதில்லை. அன்று சமணத்தையும்,
பவுத்தத்தையும் அழித்தொழித்த பார்ப்பனியத்திற்கு சார்பாய் தமிழக இளைஞர்களை மடைமாற்றம் செய்யும் இவர்களை போலித் தமிழ்த் தேசியவாதிகள் என்று சொன்னால் அதில் பிழையேது?

தமிழ், தமிழர் என்று சொன்னால் நம் இனம் தமிழ்நாட்டு எல்லைக்குள் மட்டுமே அடங்கி விடும்.
இன்றைய இந்தியா முழுக்கப் பரவி இருந்த நாம், பார்ப்பனியக் கேடொழுக்க ஊடுருவலால் மொழி திரிந்து மராட்டியனாய், மொழி சிதைந்து தெலுங்கனாய், கன்னடனாய், மலையாளியாய், கொங்கணியராய் நம் இனம் மாறிப் போன வரலாற்றை எப்படி உணர்த்துவது?
இந்தியப் பார்ப்பனியத்தை நன்குணர்ந்த பஞ்சாபிக்காரர் சொல்கிறார், நானும் திராவிடன்தான் என்று. பஞ்சாபிக்காரர் இன்றைய காலச் சூழலில் தன்னைத் தமிழன் என்றோ, தமிழ்க் குடிமரபில் வந்தவன் என்றோ ஒப்ப மாட்டான். அதைப் போலத்தான் பிற மாநிலத்தவரும்.
திராவிடம் என்ற சொல் உங்களுக்குக் கசப்பாய் இருந்தால் தமிழ்த் தேசியத்தை முன்னெடுங்கள், வரவேற்கிறோம். தமிழ் உணர்வால் உங்கள் பின்னால் நிற்கும் இளைய தலைமுறைக்கு பெரியாரை ஏன் தவறுதலாக அடையாளப்படுத்துகிறீர்கள்? தெலுங்கன் என்று ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள்?
இந்தியப் பார்ப்பனியத்தை எதிர்க்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் பெரியாரும், அவர் வழிவந்த திராவிட இயக்கங்களும்தான். பெரியாரையும், திராவிட இயக்கங்களையும் நாம் இழந்துவிட்டு பார்ப்பனியத்தை எதிர்ப்பது
பொய்க்கால் குதிரையில் போர்க்களத்திற்குப் போவதற்கு சமம். பார்ப்பனியத்தை வெற்றி கொள்ளாமல் தமிழருக்கு விடுதலை இல்லை. ஏன் ஒட்டு மொத்த இந்தியாவிற்குமே விடுதலை இல்லை.

பெரியார் உங்களை விடவும் பன்மடங்கு தமிழுக்கும், தமிழருக்கும் தன் வாழ்நாளெல்லாம் வதைபட்டவர்.
அவர் போர்க்கருவியும் பட்டறையுமாக வாழ்ந்தவர். தூர்ந்து கிடந்த துறைதோறும் தூர்வாரி ஊற்றுக்கண் திறந்த உண்மையான சமூக நீதிப் போராளி. தமிழ்நாடு இந்தியாவிலிருந்து துண்டாகி, தனிநாடு ஆனால் ஒரு சிறந்த நாடாகத் திகழும் என்று கூறியவர்.
இந்தியாவில் அரசியல், வழிபாட்டு முறைகள், வாழ்வியல், மொழியியல், உளவியல் அனைத்தும் பார்ப்பனியத்தின் தாக்குதலுக்கு ஆட்பட்டே கிடக்கிறது. அப்படியே தமிழ் மொழியும் தாக்குதல் பெற்றே நிற்கிறது. இந்தியர் பார்வைக்கும் அவர்கள் வழி வெளிநாட்டுப் பார்வைக்கும் நாம்
திராவிடர்களே. ஈழத் தமிழர்களாலும், விடுதலைப் புலிகளாலுமே நம்மீது புதுவெளிச்சம் பாய்ந்து, நாம் தமிழர்களாய் அறியப்படுகிறோம்.

இப்பொழுதும் மும்பையில் ‘மதராசி’ என்றால் ஒட்டுமொத்த தென்னிந்தியரைத் தாங்கி நிற்கும் சொல். இன்றைய கன்னடர் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழரே,
இன்றைய தெலுங்கர் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தமிழரே, இன்றைய மலையாளிகளும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்தானே. இந்த இனங்கள் எல்லாம் வேர்மூலம், விழுதுமூலம் கிளைத்த நம் இனத்தவர்தானே. மொழிக் கலப்பால், மொழித் திரிபால்,
மொழித் தேய்வால் வேறு இனத்தவராய் மாறிப் போனவர்கள். இன உணர்வற்று அவர்கள் நமக்கு எதிரியாய்த் தோற்றம் பெறலாம். ஏனெனில் அவர்கள் இனவுணர்வு ஊட்ட அங்கு பெரியார் போன்ற ஒருவர் இல்லை.
இன்று காவேரிச் சிக்கலும் முல்லைப் பெரியாறு போன்ற சிக்கல்களும் இருப்பதால் அவர்கள் வேறு இனமாய் ஆகிவிட மாட்டார்கள். அங்கு நடக்கும் சிக்கலுக்கு அடிப்படைக் காரணம் ஆர்.எஸ்.எஸ்.சும், இந்துத்துவா கும்பலும்தான். தமிழ்நாட்டிலேயே நம்மை திராவிடம் என்றும்,
தமிழ்த் தேசியம் என்றும் வேறுபடுத்தி கூர்தீட்டும் பார்ப்பனியம், அண்டை மாநிலத்தில் கிடைக்கும் வெல்லம் போன்ற சூழலை விடுவார்களா? எனவே நம்மிடையே உள்ள முரணைக் கூர்தீட்டி முறுக்கேற்றுகிறார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புள்ளியைக் கோடாக்கி,
கோட்டினை கீறலாக்கி, கீறலை பெரும்பிளவாக்கி நம்மைத் துண்டாடுவதில் வல்லமை பெற்றது பார்ப்பனியம்.

உருமாறி, வடிவம் மாறி வேற்றுமொழியில் கிடக்கும் சொற்களை தக்கச் சான்றோடு தமிழ்ச் சொல் என்று ஏற்றுக்கொள்ளும் நாம், மொழியால் திரிபுற்ற தெலுங்கரை, மலையாளியை,
கன்னடத்தவரை நம் இனம் என்று ஏற்க மறுக்கிறோம்? வெல்லத்தை வேறுமொழி சொல்லி தந்தால் கசந்துவிடுமா என்ன? சூழ்நிலையால் நமக்கு எதிரியாய்த் தெரிந்தாலும் அவர்கள் நம் இனமே
மூவாயிரம் ஆண்டுகள் ஆனாலும், பார்ப்பனர்கள் பார்ப்பனர்களே. அவர்கள் ஆதிகாலத்திலும் நம் நீர்த்தேக்கங்களை உடைத்து சேதப்படுத்தியது போல, ஆநிரைக் கூட்டத்தைக் களவாடி சென்றதுபோல, இன்றும் நம்மோடு தொடர்ந்து சமமாய் சேர்ந்து வாழ விரும்பாமல் நமக்குக் கேட்டினையே செய்கிறார்கள்.
நம்மைக் கீழோராய் ஆக்க முனைகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கர்களும், கன்னடர்களும் தமிழுக்காகவும், தமிழருக்காகவும் உயிர்நீத்து, நம்மோடு இன்றும் போர்க்களத்தில் நிற்கிறார்கள். எடுத்துக்காட்டுக்குக் கூட தமிழுக்கும், தமிழருக்கும் உயிர் ஈகம் செய்த ஒரு பார்ப்பனரையோ,
ஈழத்துக்கு ஆதரவாய் இந்தியத்தை எதிர்த்த ஒரு பார்ப்பனரையோ நம்மால் காண முடியவில்லை. காலங்காலமாய் அந்த இனம் நம் இனத்திற்குச் செய்த, செய்து கொண்டே இருக்கும் கேட்டிற்கு அளவே இல்லை. வரலாறு முழுக்க அவர்கள் செய்த கேடு நம் மூளையை நகரவிடாமல் நங்கூரமாய்,
கால்களிலும், கைகளிலும் தொடரியாய் (சங்கிலி) விழிகளில் நிறக் குருடாய் நிலை பெற்று நிற்கின்றன. நாம் அனைத்தும் இழந்து ஓர் இரந்துண்ணிபோல பார்ப்பன சமூகம் முன் நிற்கிறோம்.
இந்த அடர்ந்து, திரண்ட இருளிடையே, அறிவுச் சுடரேந்தி மானப்போர் தொடுத்த தனக்குவமை இல்லாத பேராசான் தந்தை பெரியாரை வீழ்த்தவே, பார்ப்பனியம் நம்மிடையே திராவிடர், தமிழர் என்ற இரு முனைகளையும் கூர்மைப் படுத்துகிறது. இந்தச் சூழ்ச்சியை உள்வாங்கி உணரவில்லையானால்,
பெரியரால் நாம் பெற்ற மான உணர்வு வெளிச்சத்தை, பார்ப்பனியம் தன் இருள் கொண்டு நிரப்பும். வரலாற்றில் நாம் அடிமைகளாகவே அறியப்படுவோம்; அடிமையாகளாவே பதியப்படுவோம்.

Source :keetru

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

28 Sep
‘இராமனே’ எப்படிப் பிறந்தான்?

இராமன் பிறப்புப் பற்றி வால்மீகி இராமாயணம் என்ன கூறுகிறது? அஸ்வமேத யாகத்தில் பிறந்தவன் இராமன் என்று கூறுகிறது. இதன் கதை நாற்றமடிக் கிறது என்பதால், கம்பன், “அஸ்வமேத யாகத்தை” “புத்திர காமேஷ் யாகமாக” திருத்தி எழுதினான். கம்பனாலேயே
இராமன் பிறப்பை சகிக்க முடியவில்லை போலும். வால்மீகி இராமாயணம் தான் மூல இராமாயணக் கதை. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அந்த மூல இராமாயணம் இராமன் பிறப்புப் பற்றி என்ன கூறுகிறது?
கலைக்கோட்டு மகரிஷியும், இன்னும் அவருக்குத் துணைவராக இருத்துவிக்களும், புரோகிதப் பார்ப்பனர்களும் சேர்ந்து யாகசாலையொன்று ஏற்படுத்தி, வேதாகம விதிப்படி யக்கியங்களை வளர்த்து, யாக மண்டபத்தைச் சுற்றி வேதப் பிராமணர்கள் உட்கார்ந்துகொண்டு,
Read 11 tweets
27 Sep
சென்னை நகரை ம.பொ.சி. மட்டுமே மீட்டுக் கொடுத்தாரா?

பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளில் ம.பொ.சி. மட்டும்தான் சென்னை நகரை மீட்டுக் கொடுத்தார் என்று நம்புகின்றனர். இது உண்மையல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இந்தியாவில் மொழிவழி மாநிலம் பிரிப்பதற்காக இந்திய அரசினரால் முதன் முதலில் அமைக்கப்பட்டது நீதிபதி தார் தலைமையிலான குழு ஆகும். குடிஅரசு தலைவரால் 1948இல் இக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் மொத்தம் நான்கு பேர் இருந்தனர் நீதிபதி எஸ்.கே. தார் தலைவராகவும் டாக்டர் பன்னாலால், திரு ஜகத்நாரியன் லால், பி.சி. பானர்ஜி ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதும் குழுவினருக்கு அறிவுரை வழங்குவதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது.
Read 225 tweets
27 Sep
காங்கிரசில் மீண்டும் சேர துடித்த ம.பொ.சி.

காங்கிரஸ் கட்சித் தேர்தலில் போட்டியிட எனக்குத் தகுதியில்லை என்ற தேர்தல் அதிகாரியின் இந்த நடவடிக்கையானது என் மனத்திற்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. நேருஜி அப்போது அனைத்திந்திய காங்கிரசின் தலைவராக இருந்தார்.
என்னைப்பற்றி அவர் நன்கு அறிந்து வைத்திருந்த நேரம் அது. அதனால், தேர்தல் அதிகாரியின் முடிவை நேருஜிக்கு அறிவித்து, எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று அவருக்கு ‘மேல் மனு’ப் போட்டேன். 21 மணி நேரத்திற்குள் அவரிடமிருந்து கீழ்க்கண்ட தந்தி கிடைத்தது.
புதுடெல்லி, 16.11.1952 தாங்கள் காங்கிரஸ் தலைவருக்குச் செய்து கொண்ட அப்பீல் மனு கிடைத்தது.

காங்கிரஸ்மேலிடம் தமிழரசுக் கழக அங்கத்தினர்கள் பற்றி விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் வரையிலும் அந்தக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் காங்கிரஸ் தேர்தலில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.
Read 25 tweets
27 Sep
இந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.
எந்தவிதமான மரியாதைக்குரிய பண்பும் இல்லாத தலைவராகத்தான் ம.பொ.சி. வாழ்ந்திருக் கிறார். காங்கிரசுக்கு உள்ளேயே இருந்துகொண்டு 1946ஆம் ஆண்டு தமிழரசுக் கழகத்தை ம.பொ.சி. உருவாக்கினார்.
1938ஆம் ஆண்டிலேயே பெரியார் தனித் தமிழ்நாடு கேட்டார். ஆனால் அதற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து அமைப்பு தொடங்கிய ம.பொ.சி.தான் முதன்முதலில் தமிழ்நாடு கேட்டார் என்று தமிழ்தேசியவாதிகள் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். அப்போது முதலில் சுதந்திரத் தமிழரசு அமைப்பதே என் லட்சியம் என்றார்.
Read 44 tweets
27 Sep
ஆதித்தனார் - ம.பொ.சி.யின் தடுமாற்றங்கள்!

"நாம் தமிழர்". சி.பா. ஆதித்தன், கட்சியைக் கலைச்சிட்டு..

*அறிஞர் அண்ணாவிடம் சபாநாயகர் பதவி

*கலைஞரிடம், அமைச்சர் பதவி

1926 தேர்தலில் நீதிக்கட்சி தோற்று விட்டவுடன் 1927 இல் கோவையில் நடைபெற்ற மாநாட்டில்
நீதிக்கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்யப்பட்டது. அதற்கு இரண்டு நாள் கழித்து தான் இந்த நெல்லூர் பார்ப்பனரல் லாதார் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தலைவர் சித்தூர் முனிசாமி நாயுடுவும்,
ஏ.பி.பாத்ரோவும் நீதிக் கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தை மாற்றுவதற்காவே, கட்சியில் பார்ப் பனர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டாம்; தேர்தல் களிலும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டாம்;
Read 29 tweets
26 Sep
ம.பொ.சி பர்னிச்சர் - ஊரும் உணர்வும்

“நீதிமன்றம் என்னைத் தண்டித்தாலும் வரலாறு என்னை விடுவிக்கும்” என்று பிடல் காஸ்ட்ரோ சொன்னதற்கு நேர் எதிராக வெகுமக்களால் விடுவிக்கப்பட்டு வரலாற்றால் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருப்பவர் பெரு மதிப்புக்குரிய ம.பொ.சி அவர்கள்.
இன்றைக்குத் தமிழ்த் தேசியத்தின் பெயரில் ஆதாயம் தேடும் அற்பர்களுக்கு வெப்பன் சப்ளையர் யாரென்றால் அது ம‌.பொ‌.சி தான்.

வெற்று பிம்பத்தோடு, ஏராளமான கற்பிதங்களைக் கொண்ட ம.பொ‌.சி என்கிற பர்னிச்சரை கட்டுடைக்கிறது வாலாசா வல்லவன் எழுதியுள்ள ‘பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா?’
என்ற புத்தகம்.

திருத்தணியைச் சேர்ந்த வழக்குரைஞர் பா.குப்பன் அவர்கள் எழுதிய 'தமிழினத்தின் இனப்பகை ஈ.வெ.ரா’ என்ற புத்தகத்திற்கு மறுப்பாக எழுதப்பட்ட இப்புத்தகம், வழக்குரைஞர் குப்பனின் கருத்து, குப்பைக்கு சமானம் என்பதை ஆதாரத்துடன் விவரிக்கிறது.
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(