அரசு பணியில் பல துறையில் பணியாற்றி உள்ளேன். சம்பளத்தை விட கிம்பளம் (லஞ்சம்) நிறையவே பெற்று சந்தோஷமாக இருந்தேன்.
ஆண்டவன் நம்மை நல்லா வச்சிருக்கான் என்று சந்தோஷமாக கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரம் செய்து வந்தேன்.
எனக்கு ஓரே மகன். நல்லா எம்.பி.ஏ. வரை படிக்க வச்சேன்.
ஒரு கிரவுன்ட் இடம் வாங்கி கார் பார்கிங், வீடு, கார், தோட்டம் என நாங்கள் சந்தோஷமாக இருந்தோம்.
நானும் ஓய்வு பெற்றேன்.
என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, சென்னையில் ரூ.40,00,000-தில் பிளாட் வாங்கி குடியேறினேன்.
மருமகளும் கர்ப்பமாக இருந்தாள்.
7ம் மாதம் சீமந்தம் வைக்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு போன் வந்து என்னை தூக்கி போட்டது. போனில், அவர் சொன்ன விசயம்...
"உங்கள் மகன் பைக் விபத்தில் அரசு மருத்துவமனையில் உள்ளார் வந்து பாருங்க..." என்று.
விழுந்தடித்து சென்று பார்த்தேன்.
என் மகன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டான்.
என் மருமகளுக்கு ஆண் பிள்ளை பிறந்தது. ஆனால் என் மகன் இரண்டு மாதத்தில் உயிர் பிரிந்து விட்டான்.
என் மருமகள் அவர்கள் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டாள்.
பின்னர் அவளுக்கு *ஜீவனாம்சம்* மற்றும் பேரன் வாழ்க்கை செலவு என வழக்கு தொடர்ந்து எங்கள் சொத்துக்களை எல்லாம் வாங்கி கொண்டாள்.
இப்போது எனக்கு கிடைக்கும் பென்சனை வச்சுத்தான் காலம் போகுது.
சாப்பாடு செலவுகள், வீட்டுக்கு வாடகை போக முட்டி வலி, சர்க்கரை போன்ற நோய்கள் பற்றிக்கொண்டதால் மருந்து செலவு வேறு...
அப்போது தான் யோசித்தேன், 'ஏன் நம் வாழ்க்கை இப்படி ஆனது என்று...'
என் மனம் சொன்னது, 'நீ வாங்கிய லஞ்சம் தான் உன் வாழ்வை சீர்ழித்தது...' என்று.
'சரி... லஞ்சம் வாங்காமல், என்னுடன் சம காலத்தில் பணிபுரிந்த என் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன்.'
அவர் என் நிலை கண்டு மனம் சங்கடப்பட்டார்.
'சரிப்பா நீ எப்படி இருக்க..?' என கேட்டேன்.
அவர் சொன்னார், "நிம்மதியாக இருக்கேன்... உண்ண உணவு, உடுக்க உடை, பேரன் பேத்தி, ஓய்வு பணத்தில் சிறியதாக ஒரு வீடு, பையன், பொண்ணு தனியார் கம்பெனி வேலை...
நானும் என் மனைவியும் நிம்மதியாக இருக்கோம்.." என்று சொன்னார்.
என்னை யாரோ செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன்.
நானும் கோவிலுக்கு போனேன் விபூதி குங்குமம் வைத்தேன். அபிஷேகம் எல்லாம் செஞ்சேனே. எனக்கு மட்டும் ஏன் இப்படி..?
அப்போது தான் என் காதில் *அபிராமி அந்தாதி* எங்கோ பாடியது என் காதில் விழுந்தது.
*"தனம் தரும், கல்வி தரும்...*
*ஒரு நாளும் தளர் வறியா மனம் தரும்...*
*தெய்வ வடிவும் தரும்...*
*நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்* *அன்பர் என்பருக்கே...*
*கனம் தரும் அபிராமி கடைகண்களே."*
உணர்ந்தேன் நாமும் கோவிலுக்கு போனது பத்துல ஒண்ணா போச்சே.
நல்லா இருக்கும் போது உண்மையை உணரவில்லையே.
உயிரற்ற பொருள் வாங்கி குவித்தேன்.
என் உயிர் உள்ளே உள்ள பொருளை இழந்தேன்.
இன்று...
வாழ்க்கையை இழந்து நிற்கிறேன்.
*அரசன் அன்று கொல்வான்...*
*தெய்வம் நின்று கொல்லும்...*
*மக்களுக்கு செய்யும் சேவையே...*
*மகேசனுக்கு செய்யும் சேவை...*
- ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரியின் ஒப்புதல் புலம்பல் இது. லஞ்சம் வாங்கும் அனைவருக்கும் நல்ல பாடம்...
*லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!*
🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம். கால் மாறி ஆடிய தலமும் இதுவே.
🙏🇮🇳1
சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம். தென்னாடுடைய சிவனே போற்றி என சிவபக்தர்களால் மனமுருக கூறும் சுலோகம் அமைய காரணமான சிவத்தலம்.
இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.
🙏🇮🇳2
இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே சிவபெருமானுக்கு நடைபெறுகின்றன.
டவ்சனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து தமிழை ஆராய்ந்த இடம்.
அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில், ஆறுமுகமங்கலம், தூத்துக்குடி
திருச்செந்தூர் செல்லும் வழியில் ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க இத்தலத்தில் கணேச பஞ்சரத்தினம் பாடி, பின் திருச்செந்தூர் சென்று சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம் பாடி வியாதி நீங்கப் பெற்றார்.
🇮🇳🙏1
தஞ்சாவூர் அருகிலுள்ள திருச்செங்காட்டங்குடி வாதாபி விநாயகர் கூட ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், இத்தல விநாயகர் 2300 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்ற தகவல் புதுமையானதாகவே உள்ளது.
🇮🇳🙏2
மற்ற கடவுள்களை தேடி நாம் போக வேண்டும். ஆனால் விநாயகரோ நம்மை தேடி வருவார். எதுவுமே, இல்லாத இடத்தில் கூட கொஞ்சம் மஞ்சள், ஏன் மணலை பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் ரெடி. அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர்.
ஸ்வாமி ! ஒரு பெண்ணை சோமன் முதலிலும், கந்தர்வன் இரண்டாவதாகவும், அக்னி மூன்றாவதாகவும், பின்பு மனிதன் நான்காவதாகவும் மணம் செய்து கொள்கிறான் என்று கல்யாண மந்திரம் சொல்கிறது என்கிறார்களே.
அப்படியானால் ஒவ்வொரு பெண்ணுக்கும் கணவனை தவிர்த்த மூன்றுபேரும் கணவர்களா ?
எனது பகுத்தறிவு நண்பன், " எலே உங்க பிராமணபொண்ணுகளுக்கு நான்கு புருஷனாமேடா, ஏலே இதை நான் சொல்லலை உங்க இராமானுஜரே சொல்லிருக்காரு" என்று கேலி செய்கிறான் அது உண்மையா அதை விளக்க முடியுமா ?
அடியேன், திருமணத்தின் போது திருமாங்கல்யம் அணிவித்து சொல்லும் மந்திரமும் அந்த மந்திரத்திற்கான விளக்கமும் பார்ப்போம்.
நாடு முழுதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டம்: பிரதமர் மோடி துவக்கி வைப்பு
புதுடில்லி: நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள அட்டை எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும்.
ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூன்றாவது ஆண்டை தேசிய சுகாதார ஆணையகம் கொண்டாடும் வேளையில், நாடு தழுவிய ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள அட்டை எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும்.
தொடர் நிகழ்ச்சிகளால் சோர்வடையாத மோடி: காரணத்தை விளக்கிய மத்திய அரசு அதிகாரிகள்
புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அமெரிக்க பயணத்தை முடித்து நாடுதிரும்பியுள்ளார். இந்தப் பயணத்தின்போது தொடர்ச்சியாக சந்திப்புகள், கூட்டங்களில் அவர்பங்கேற்றாலும், அவர் சற்றும் சோர்வடையாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ச்சியான சந்திப்பு
தொடர்ச்சியாக சந்திப்புகள், கூட்டங்களில் அவர் பங்கேற்றதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். பயணத்தை முடித்து அவர் நேற்று நாடு திரும்பினார்.
அருள்மிகு சிவனணைந்த போற்றி திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் , விருதுநகர்
விஷ்ணு சன்னிதியில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இத்தல விஷ்ணு சூரிய நாராயணனின் அம்சமாக விளங்குவதால் இவருக்கு ஆதிநாராயணன் என பெயர் வந்தது. சிவபெருமான் இங்கு லிங்க வடிவமாக அருள் பாலிக்கிறார். 🇮🇳🙏1
வருடத்திற்கு ஒரு முறை மஹh சிவராத்திரி அன்று சுவாமிகளுக்கு குற்றால தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. நான்கு கால பூஜைகளும் காவல் தெய்வங்களுக்கு படைப்பு பூஜையும் நடைபெறுகின்றது.
🇮🇳🙏2
சிவ பெருமான் தனது மைத்துனரான விஷ்ணுவுடன் எழுந்தருளி விஷ்ணுவின் அவதாரமான சங்கிலி வீரப்பசுவாமியையும், சிவனின் அவதாரமான பொன் மாடனையும் காவலுக்கு வைத்த தலம். 🇮🇳🙏3