ஸ்வாமி ! ஒரு பெண்ணை சோமன் முதலிலும், கந்தர்வன் இரண்டாவதாகவும், அக்னி மூன்றாவதாகவும், பின்பு மனிதன் நான்காவதாகவும் மணம் செய்து கொள்கிறான் என்று கல்யாண மந்திரம் சொல்கிறது என்கிறார்களே.
அப்படியானால் ஒவ்வொரு பெண்ணுக்கும் கணவனை தவிர்த்த மூன்றுபேரும் கணவர்களா ?
எனது பகுத்தறிவு நண்பன், " எலே உங்க பிராமணபொண்ணுகளுக்கு நான்கு புருஷனாமேடா, ஏலே இதை நான் சொல்லலை உங்க இராமானுஜரே சொல்லிருக்காரு" என்று கேலி செய்கிறான் அது உண்மையா அதை விளக்க முடியுமா ?
அடியேன், திருமணத்தின் போது திருமாங்கல்யம் அணிவித்து சொல்லும் மந்திரமும் அந்த மந்திரத்திற்கான விளக்கமும் பார்ப்போம்.
மாங்கல்யம் தந்துநாநேந மம
ஜீவித ஹேதுநா கண்டே பத்நாமி
ஸூபகே ஸஜீவ ஸரதஸ்ஸதம் "
இது மணமகன் சார்பாக சொல்வதாக
அமைந்த மந்திரம்.
மந்திரத்தை வாத்யார் ஸ்வாமி எடுத்துக்கூற மணமகனும் திரும்பகூறி அக்கினி சாஷ்யாக மணமகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் இந்த வைபவத்தை திருமாங்கல்யதாரணம் என்பர்.
இதை தான் உமது பகுத்தறிவு பகலவ நண்பன் தவறாக புரிந்து கொண்டு இராமானுஜர், மன்னன் முன்னிலையில் வாதத்தில் ஜெயிக்க எந்த அர்த்தத்தில் கூறினார் என புரியாமல் தெரியாமல் உளறுவதை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.
தேவரீர், அவர்களிடம் வாதிடுவது விழலுக்கு இறைத்த நீர் போன்றது.
தேவரீருக்கு நன்கு தெரிந்துகொள்ள அதன் உட்பொருளை உமக்கு சொல்லுகிறேன்.
இதன் உட்பொருள் :
ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது
ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் ( பாதுகாப்பில்) கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது
கந்தர்வன் என்பது இசைக்கும் கேளிக்கைக்கும்
அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.
ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும் அழகும் நிரம்பி வழிய கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது.
அதன் பின் 11 - 16 வயது பருவ காலம் உடலில்
ஹார்மோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற, உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம்.
காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே, இது அக்னி (சூடு- வெப்பத்தின்) யின் ஆதிக்கத்தின் ( பாதுகாவலில்) கீழ் வரும் பருவம் எனப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால், பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் அழகுற பெற்று இன்று என் முன்னால் மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் ஆகிய நான் அக்னி சாட்சியாக உன் பாதுகாவலனாகிறேன்.
நம் உறவை மீண்டும் இந்த அக்னியை தவிர யாரும் பிரிக்க முடியாது.
அதாவது இந்த கால விவாகரத்து என்பது நாமே வகுத்த சட்டத்தில் தான் செல்லுபடியாகும். ஆனால், திருமணபந்தம் மந்திரம் நம் மணமகன், மணமகள் உறவை அந்திம கால மாயான அக்னி மட்டுமே இந்த ஜன்மத்தில் பிரிக்கும் என்கிறது.
இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.
யாரோ தெரியாமல் புரியாமல் கேலி செய்கிறான் என்பதற்காக நாமே நம் மந்திரங்கள் அப்படியா சொல்கிறது என தவறாக புரிந்து கொள்ள கூடாது.
முன்னோர்கள் மிக மிக மிக புத்திசாலிகள்.
இந்த கேள்வியை கேட்ட நீரும், கேட்க வைத்த உமது நண்பன் பகுத்தறிவு பகலவனும் பதினாறு வகை செல்வமும் பெற்று ஆண்டவன் அருளால் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்வீர்களாக.
ஜெய் ஶ்ரீராம்!!
🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம். கால் மாறி ஆடிய தலமும் இதுவே.
🙏🇮🇳1
சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம். தென்னாடுடைய சிவனே போற்றி என சிவபக்தர்களால் மனமுருக கூறும் சுலோகம் அமைய காரணமான சிவத்தலம்.
இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.
🙏🇮🇳2
இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே சிவபெருமானுக்கு நடைபெறுகின்றன.
டவ்சனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து தமிழை ஆராய்ந்த இடம்.
அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில், ஆறுமுகமங்கலம், தூத்துக்குடி
திருச்செந்தூர் செல்லும் வழியில் ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க இத்தலத்தில் கணேச பஞ்சரத்தினம் பாடி, பின் திருச்செந்தூர் சென்று சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம் பாடி வியாதி நீங்கப் பெற்றார்.
🇮🇳🙏1
தஞ்சாவூர் அருகிலுள்ள திருச்செங்காட்டங்குடி வாதாபி விநாயகர் கூட ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், இத்தல விநாயகர் 2300 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்ற தகவல் புதுமையானதாகவே உள்ளது.
🇮🇳🙏2
மற்ற கடவுள்களை தேடி நாம் போக வேண்டும். ஆனால் விநாயகரோ நம்மை தேடி வருவார். எதுவுமே, இல்லாத இடத்தில் கூட கொஞ்சம் மஞ்சள், ஏன் மணலை பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் ரெடி. அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர்.
நாடு முழுதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டம்: பிரதமர் மோடி துவக்கி வைப்பு
புதுடில்லி: நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள அட்டை எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும்.
ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூன்றாவது ஆண்டை தேசிய சுகாதார ஆணையகம் கொண்டாடும் வேளையில், நாடு தழுவிய ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள அட்டை எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும்.
அரசு பணியில் பல துறையில் பணியாற்றி உள்ளேன். சம்பளத்தை விட கிம்பளம் (லஞ்சம்) நிறையவே பெற்று சந்தோஷமாக இருந்தேன்.
ஆண்டவன் நம்மை நல்லா வச்சிருக்கான் என்று சந்தோஷமாக கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரம் செய்து வந்தேன்.
எனக்கு ஓரே மகன். நல்லா எம்.பி.ஏ. வரை படிக்க வச்சேன்.
ஒரு கிரவுன்ட் இடம் வாங்கி கார் பார்கிங், வீடு, கார், தோட்டம் என நாங்கள் சந்தோஷமாக இருந்தோம்.
நானும் ஓய்வு பெற்றேன்.
என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, சென்னையில் ரூ.40,00,000-தில் பிளாட் வாங்கி குடியேறினேன்.
மருமகளும் கர்ப்பமாக இருந்தாள்.
7ம் மாதம் சீமந்தம் வைக்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு போன் வந்து என்னை தூக்கி போட்டது. போனில், அவர் சொன்ன விசயம்...
"உங்கள் மகன் பைக் விபத்தில் அரசு மருத்துவமனையில் உள்ளார் வந்து பாருங்க..." என்று.
விழுந்தடித்து சென்று பார்த்தேன்.
தொடர் நிகழ்ச்சிகளால் சோர்வடையாத மோடி: காரணத்தை விளக்கிய மத்திய அரசு அதிகாரிகள்
புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அமெரிக்க பயணத்தை முடித்து நாடுதிரும்பியுள்ளார். இந்தப் பயணத்தின்போது தொடர்ச்சியாக சந்திப்புகள், கூட்டங்களில் அவர்பங்கேற்றாலும், அவர் சற்றும் சோர்வடையாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ச்சியான சந்திப்பு
தொடர்ச்சியாக சந்திப்புகள், கூட்டங்களில் அவர் பங்கேற்றதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். பயணத்தை முடித்து அவர் நேற்று நாடு திரும்பினார்.
அருள்மிகு சிவனணைந்த போற்றி திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் , விருதுநகர்
விஷ்ணு சன்னிதியில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இத்தல விஷ்ணு சூரிய நாராயணனின் அம்சமாக விளங்குவதால் இவருக்கு ஆதிநாராயணன் என பெயர் வந்தது. சிவபெருமான் இங்கு லிங்க வடிவமாக அருள் பாலிக்கிறார். 🇮🇳🙏1
வருடத்திற்கு ஒரு முறை மஹh சிவராத்திரி அன்று சுவாமிகளுக்கு குற்றால தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. நான்கு கால பூஜைகளும் காவல் தெய்வங்களுக்கு படைப்பு பூஜையும் நடைபெறுகின்றது.
🇮🇳🙏2
சிவ பெருமான் தனது மைத்துனரான விஷ்ணுவுடன் எழுந்தருளி விஷ்ணுவின் அவதாரமான சங்கிலி வீரப்பசுவாமியையும், சிவனின் அவதாரமான பொன் மாடனையும் காவலுக்கு வைத்த தலம். 🇮🇳🙏3