குஜராத் முந்த்ரா துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ ஹெராயின் போதை பொருளை, வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், 'ஐ.இ.கோட்' எனப்படும் இறக்குமதி,- ஏற்றுமதி லைசென்ஸ் பெற்ற, சென்னையைச் சேர்ந்த ஏஜென்ட் மச்சாவரம் சுதாகர், அவரது மனைவி துர்கா பூரண வைஷாலி சிக்கினர். இந்த போதை பொருள், டில்லியில் இருக்கும் அமித் என்பவருக்கு செல்ல வேண்டியது என தெரிய வந்தது.
இந்த கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் குறித்தும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் டில்லி, நொய்டா உள்ளிட்ட பல இடங்களிலும் சோதனை நடத்தினர். இறுதியில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து, ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் மதன்குமார் கூறியதாவது:ஹெராயின் கடத்தல் விவகாரத்தில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நான்கு பேரும், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணும், டில்லியில் கைது செய்யப்பட்டனர்.
மேலும், டில்லியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. தொடர்ச்சியாக, டில்லியில் உள்ள மற்றொரு குடோன் மற்றும் உ.பி., மாநிலம் நொய்டாவில் இருக்கும் ஒரு குடோனிலும் 'ரெய்டு' நடந்தது.
அதில், 16 கிலோ ஹெராயின், 10 கிலோ கோகைன், மோலி டிரக் என்ற போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
போதை பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்படும் நபர், சிம்லாவில் தங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. செப்., 26ல் வருவாய் புலனாய்வு துறையினர் அங்கு சென்றனர்.
சிம்லாவுக்கு வெளியே இருக்கும் ஒரு ஓட்டலில், உள்ளூர் போலீஸ் உதவியுடன் அதிகாலை 3:00 மணியளவில் சோதனை நடத்தினர்.அங்கு இருந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முக்கிய புள்ளி சிக்கினார்; அவரிடம் இருந்து போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அவருடன், அதே நாட்டைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் சிக்கினார்.
அந்த முக்கிய புள்ளி, கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். அவரது வேலையே, ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்படும் போதை பொருளை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்வது தான்.
இதன் வாயிலாக கிடைக்கும் பணத்தில், இந்தியாவில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு கொடுத்தது போக, மீதம் இருப்பதை, ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் பயங்கரவாத குழுக்களுக்கு அனுப்பி வந்தார்.
மருத்துவ சிகிச்சைக்காக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமானோர் வருகின்றனர்.
அவர்களுக்கு மொழிபெயர்த்து உதவ பலரும் இந்தியாவுக்கு வந்து, பல ஆண்டுகளாக தங்கி உள்ளனர். அதில் ஒருவர் தான் முக்கிய புள்ளிக்கு உதவியாக இருந்துள்ளார். அவரும் இப்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இவர்களுக்கு உதவியது, டில்லியில் கைதான உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண். 'பப்' மற்றும் 'கிளப்'களில் நடனமாடக் கூடியவர். அங்கு வரும் பணக்காரர்களுடன், அந்த பெண்ணுக்கு நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது;
அந்த தொடர்பை பயன்படுத்தி, போதை பொருள் விற்பனை செய்துள்ளார்.இந்தியாவின் பல நகரங்களிலும் இப்பணியை செய்துள்ளார்.
இவர் தவிர, ஆப்கானிதானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்யும் பழ வியாபாரிகள், சிறு கடைகள் நடத்துவோர் என பலரும், போதை பொருட்களை சில்லரையாக விற்கின்றனர்.இவர்களை, 'drug mules' என்று அழைக்கின்றனர்.
அதாவது, போதை பொருட்களை சுமந்து செல்லும் கோவேறு கழுதை என்பது அதன் பொருள். சிம்லாவில் கைதானவர்களை பற்றிய தகவல்களை தற்போது வெளியிட, வருவாய் புலனாய்வு துறையினர் மறுத்து விட்டனர்.இவ்வாறு மதன்குமார் கூறினார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அரசின் ஒத்துழைப்பு வேண்டும் தலைமை நீதிபதி வலியுறுத்தல்
புதுடில்லி:"அனைவருக்கும் நீதி கிடைக்கவும், ஜனநாயகத்தை வலுபடுத்தவும், உச்ச நீதிமன்றம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வலியுறுத்தி உள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது:
கடந்த மே மாதம் முதல், உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளுக்கான பணியிடங்களை நிரப்ப, 106 பெயர்களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இதில் ஏழு பரிந்துரைகளுக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜல் ஜீவன் இயக்கத்தால் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் : சாதித்து காட்டியதாக பிரதமர் மகிழ்ச்சி
புதுடில்லி : ''நாட்டில் 1.25 லட்சம் கிராமங்களில் உள்ள ஐந்து கோடி வீடுகளுக்கு, 'ஜல் ஜீவன்' இயக்கத்தின் வாயிலாக சுகாதாரமான குடிநீர் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல ஆண்டுகள் ஆட்சி செய்தோர், 70 ஆண்டுகளில் செய்ததை, நாங்கள் இரண்டே ஆண்டுகளில் சாதித்து காட்டியுள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.
நாடு முழுதும் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில், 'ஜல் ஜீவன்' இயக்கத்தை 2019 ஆக., 15ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
சூரியசக்தி, மாற்று எரிசக்தி ஆதாரங்களால் தெற்கு ரயில்வேக்கு ரூ.377 கோடி மிச்சம்!
சென்னை- சூரிய மின் சக்தி நிலையங்களாலும், பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களாலும், தெற்கு ரயில்வேக்கு 377 கோடி ரூபாய் மின் செலவு குறைந்துள்ளது.
சூரிய மின் சக்தி உள்ளிட்ட, பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்துவதன் வாயிலாக, பசுமை சூழ்நிலையை பாதுகாக்க, இந்திய ரயில்வே முயற்சி மேற்கொண்டுள்ளது. பூஜ்ய இலக்குவரும் 2030ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில் பூஜ்ய இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தெற்கு ரயில்வேயில் சுற்றுச்சூழல் பசுமை பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக உள்நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஆனால் இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து மறுத்து வருகிறார். ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது அவ்வபோது வெட்டவெளிச்சமாகிறது. இதனை மறுபடியும் நிரூபிக்கும் வகையில் ஓர் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் செயல்படும் ஐநா.,வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு தேகிரீக்-ஐ-தாலிபான். இந்த அமைப்பு சுருக்கமாக பாகிஸ்தானி தாலிபான் என்று அழைக்கப்படுகிறது. தற்போது பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை பிடித்துள்ளது.
திருவனந்தபுரம்-''போலி மதச்சார்பின்மை கொள்கையை கடைப்பிடித்தால், இந்தியா அழிவை நோக்கித் தள்ளப்படும்,'' என, கேரள சைரோ - மலபார் கத்தோலிக்க சபையின் பலா தேவாலய பாதிரியார் ஜோசப் கலரங்கட் எச்சரித்துள்ளார்.
சர்ச்சை
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு முஸ்லிம் இளைஞர்கள், கிறிஸ்துவப் பெண்களை காதலித்து போதைக்கு அடிமையாக்கி மதம் மாற்றுவது, பயங்கரவாத அமைப்பில் சேர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக, ஜோசப் கலரங்கட் சமீபத்தில் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வியக்க வைக்கும் எல்லோர கைலாசநாதர் திருக்கோவில்..!!
ஒற்றைக்கல்லில் ஒரு சிலையை வடித்து கேள்விப்பட்டுள்ளோம். ஆனால்இ ஒற்றைபாறையில் ஒரு கோவிலையே வடித்துள்ளார்கள் என்றால்.... இது ஆச்சர்யம் மட்டுமல்ல வியப்பிற்குரிய ஒரு விஷயமாகும்.
🙏🇮🇳1
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோராஇ குகை சிற்பங்களுக்கு பெயர் பெற்றது.
🙏🇮🇳2
மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லோரா மலையில்இ குடைந்து கட்டப்பட்டிருக்கும் கோவில்தான் எல்லோரா கைலாசநாதர் திருக்கோவில். இக்கோவில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.