ஜல் ஜீவன் இயக்கத்தால் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் : சாதித்து காட்டியதாக பிரதமர் மகிழ்ச்சி
புதுடில்லி : ''நாட்டில் 1.25 லட்சம் கிராமங்களில் உள்ள ஐந்து கோடி வீடுகளுக்கு, 'ஜல் ஜீவன்' இயக்கத்தின் வாயிலாக சுகாதாரமான குடிநீர் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல ஆண்டுகள் ஆட்சி செய்தோர், 70 ஆண்டுகளில் செய்ததை, நாங்கள் இரண்டே ஆண்டுகளில் சாதித்து காட்டியுள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.
நாடு முழுதும் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில், 'ஜல் ஜீவன்' இயக்கத்தை 2019 ஆக., 15ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தை 100 சதவீதம் செயல்படுத்தியதற்காக தமிழகம், மணிப்பூர், குஜராத், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து தலா ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த கிராமங்களைச் சேர்ந்த பஞ்., தலைவர்களுடன், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது, ஜல் ஜீவன் இயக்கத்தின் செயலியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திட்டம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது
அறிமுகம்
இங்குள்ள ஏழை மக்கள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவை சுகாதாரமான குடிநீர் பெற, வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள், நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி உதவி செய்வதற்காக, 'ராஷ்ட்ரீய ஜல் ஜீவன் கோஷ்' திட்டத்தையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:ஜல் ஜீவன் இயக்கத்தின் வாயிலாக மக்களுக்கு குடிநீர் மட்டுமல்லாமல், அதிகாரமும் பரவலாக்கப்பட்டுள்ளது.சுதந்திரம் பெற்றதிலிருந்து 2019ம் ஆண்டு வரை நாட்டில் மூன்று கோடி வீடுகளுக்குத் தான் குடிநீர் இணைப்பு
வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், 2019ல் ஜல் ஜீவன் இயக்கம் துவக்கப்பட்ட பின், 1.25 லட்சம் கிராமங்களில் ஐந்து கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.கடந்த 70 ஆண்டுகளில் செய்ததை, நாங்கள் இரண்டு ஆண்டுகளில் முடித்துள்ளோம்.
குழாய் வாயிலாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு எண்ணிக்கை 31 லட்சமாக இருந்தது; தற்போது 1.60 கோடியாக உயர்ந்துஉள்ளது.ரயில் மற்றும் டாங்கர்கள் வாயிலாக நாட்டின் ஒரு பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் நிலை ஏற்படக்கூடாது; இதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள், கொள்கைகளை வடிவமைத்தவர்கள், மக்களுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதையே மறந்து விட்டனர்.
அவர்கள் தங்கள் வீடுகளுக்கும், நீச்சல் குளத்துக்கும் மட்டும் தான் தண்ணீர் கொண்டு வந்து சேர்த்தனர்.கடந்த ஆட்சியாளர்கள் மக்களின் ஏழ்மையைப் பார்க்கவில்லை; அவர்களை கவர மட்டுமே செய்தனர். மக்களுக்கு விழிப்புணர்வை அவர்கள் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
கவர்ச்சி திட்டம்
நல்ல கிராமத்தை உருவாக்க உழைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை கிராமங்களில் குறைபாடுகள் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போது தான், கவர்ச்சி திட்டங்களை அறிவித்து, கிராம மக்களின் ஓட்டுகளை பெற முடியும் என நம்பினர்.
இந்த நிலை தற்போது மாற்றப்பட்டுஉள்ளது. கழிவு மேலாண்மை அமைப்பை இரண்டு லட்சம் கிராமங்கள் துவங்கியுள்ளன. 40 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளன.காதி மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை பல மடங்கு அதிகரித்து உள்ளது.
தன்னிறைவு இயக்கத்தை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிக உரிமைகள் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விமர்சனங்கள் குற்றச்சாட்டுகளாக இருப்பதாக பிரதமர் அதிருப்தி
டில்லியை தலைமையிடமாக வைத்து வெளியாகும், 'ஓபன்' ஆங்கில பத்திரிகைக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது:
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை நம் நாடு கண்டுபிடிக்கவில்லை என்றால், என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். உலகின் பெரும்பாலான மக்களுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை.
ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா வெற்றி பெற்றதற்கு, சுயசார்பு கொள்கை தான் முக்கிய காரணம். நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 69 சதவீதம் பேர் ஒரு 'டோஸ்' தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்; 25 சதவீதம் பேர் இரண்டு டோஸ் எடுத்துள்ளனர்.
டிச., இறுதிக்குள் தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை நோக்கமாக வைத்துள்ளோம். விமர்சனங்களை நான் நேர்மையான மனதுடன் மதிக்கிறேன்.
விமர்சனங்களை நான் ஏற்பவன் தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. பெரும்பாலான மக்கள், குற்றச்சாட்டுகளை மட்டும் சுமத்துகின்றனர். விமர்சனங்களை முன்வைக்க ஒருவர் நிறைய கடின உழைப்பு, ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.
இன்றைய வேகமான உலகில் இதற்கு நேரமில்லாமல் இருக்கலாம். இதனால், சில சமயங்களில் நான் விமர்சகர்களை இழக்கிறேன்.சிறு விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில்தான் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த சட்டங்களை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தவர்கள், தங்கள் தேர்தல் அறிக்கையில் இதுபற்றி வாக்குறுதியளித்தவர்கள், இப்போது இந்த சட்டங்களை கொண்டு வந்த பின் எதிர்க்கின்றனர்.
உலகில் எந்த பகுதியிலும் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்காத சூழலில், தடுப்பூசி இயக்கத்தை 2020 மே மாதத்தில் திட்டமிட்டபடி துவக்கினோம்.
முன்பு தடுப்பூசி கிடைக்க பல ஆண்டுகள் ஆகிவிடும். எனவே அப்படி இல்லாமல் தடுப்பூசி திட்டத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை முன்பே முடிவு செய்திருந்தோம்.
வேகமாகவும், திறமையாகவும் குறிப்பிட்ட கால அளவில் திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்பினோம். அதில் வெற்றி பெற்றுள்ளோம்.தங்களுக்கு தேவையான சேவைகளை பெற ஏழைகள் காத்திருக்கவோ, லஞ்சம் கொடுக்கவோ தேவையில்லை.
நகரத்தில் குடியேறியுள்ள ஏழை மக்கள், தங்கள் கிராமத்தில் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டிருந்தாலும், இரண்டாவது டோசை பணிபுரியும் நகரத்தில் எடுத்து கொள்ளலாம்.
இவ்வாறு மக்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் தடையின்றி தடுப்பூசி பெறுவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியுள்ளது. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அருள்மிகு சப்த கன்னியர் திருக்கோயில், கன்னிமார்பாளையம், திண்டுக்கல்
ஆலயத்தின் நுழைவாயிலைத் தொடர்ந்து மகாமண்டபம், அதையடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வடக்குப் பகுதியில் கிழக்கு திசை நோக்கி சூல வடிவில் பெரியசாமி அருள்பாலிக்கிறார். 🙏🇮🇳1
அடுத்துள்ள கருவறையில் சப்தகன்னியர் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் தல விருட்சம் ஆவி எனப்படும் ஒரு வகை மரம். இம்மரம் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் உள்ளது. இம்மரத்தின் அடியில் விநாயகர் அருள்பாலிக்கிறார். மேற்குப் பிரகாரத்தில் அழிஞ்சி மரம் உள்ளது.
🙏🇮🇳2
ஆதியில் சப்த கன்னியரின் திருமேனிகள் இம்மரத்தின் அடியில்தான் இருந்தன. பின்னரே தனி ஆலயம் அமைத்து கருவறையில் சப்தகன்னியர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த அழிஞ்சி மரத்திற்கு ஊஞ்சல் மரம் என்ற பெயரும் உண்டு. கிழக்குப் பிரகாரத்தில் ஐம்பது ஆண்டுகள் பழமையான மின்னமரம் உள்ளது.🙏🇮🇳3
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல்
எந்த கோயிலிலும் இல்லாமல் இங்கு 2 மூலவர்கள் சன்னதி உள்ளன. திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை இங்கு காலையில் நடக்காமல் மாலை வேளைகளில் நடைபெறுகிறது. 🙏🇮🇳1
பத்மகிரி நாதர் பேரில் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடிய தென்றல் விடு தூது இக்கோயிலின் இலக்கியப் பெருமையைப் பறை சாற்றுகிறது.
🙏🇮🇳2
பலபட்டடைச் சொக்கநாத புலவர் இயற்றிய பத்மகிரி நாதர் தென்றல் விடுதூது என்ற அரிய நூலைப் பதிப்பித்த டாக்டர் உ.வெ.சாமிநாத அய்யர் அந்நூலின் முன்னுரையில் பத்மகிரியென்பது திண்டுக்கல்லின் திருநாமம் இதற்கு திண்டீச்சுரம் என்ற திருநாமமும் உண்டு.இது தேவார வைப்புத் தலங்களில் ஒன்று என்கிறார்.🇮🇳3
உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்...
அவர் ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர் பேட்டி எடுத்தார்...
"உங்களை வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு ..
ஃபெமி கூறினார்:
"நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்."
மோடியின் சாதனையும் தமிழக இந்து அறநிலையத் துறையின் அவலமும்
ஸ்டான்லி இராஜன் அவர்களின் சஞ்சிகை பகிர்வு
மோடியின் அமெரிக்க பயணத்தின் மிகபெரிய வெற்றி என்பது அமெரிக்காவுக்கு கடத்தபட்ட சிலைகளை மீட்டிருப்பது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தபட்ட அல்லது விற்கபட்ட சுமார் 157 சிலைகளை திருப்பி கொடுக்க அமெரிக்க அரசு முடிவு செய்திருக்கின்றது. இதில் பெரும்பான்மையான சிலைககள் தமிழக சிலைகள்.
இதுவரை இச்சிலைகளை மீட்க நேரு முதல் மன்மோகன்சிங் வரை எந்த அரசும் முயற்சிக்கவில்லை. வாஜ்பாய் காலத்தில் சில பொருளாதார தடைகள் இருந்ததால் அவராலும் முழு வெற்றி பெற முடியவில்லை.
அரசின் ஒத்துழைப்பு வேண்டும் தலைமை நீதிபதி வலியுறுத்தல்
புதுடில்லி:"அனைவருக்கும் நீதி கிடைக்கவும், ஜனநாயகத்தை வலுபடுத்தவும், உச்ச நீதிமன்றம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வலியுறுத்தி உள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது:
கடந்த மே மாதம் முதல், உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளுக்கான பணியிடங்களை நிரப்ப, 106 பெயர்களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இதில் ஏழு பரிந்துரைகளுக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சூரியசக்தி, மாற்று எரிசக்தி ஆதாரங்களால் தெற்கு ரயில்வேக்கு ரூ.377 கோடி மிச்சம்!
சென்னை- சூரிய மின் சக்தி நிலையங்களாலும், பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களாலும், தெற்கு ரயில்வேக்கு 377 கோடி ரூபாய் மின் செலவு குறைந்துள்ளது.
சூரிய மின் சக்தி உள்ளிட்ட, பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்துவதன் வாயிலாக, பசுமை சூழ்நிலையை பாதுகாக்க, இந்திய ரயில்வே முயற்சி மேற்கொண்டுள்ளது. பூஜ்ய இலக்குவரும் 2030ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில் பூஜ்ய இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தெற்கு ரயில்வேயில் சுற்றுச்சூழல் பசுமை பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.