இங்கிலாந்து, ஐரோப்பா, சீனாவிலே எரிபொருள் பற்றாக்குறை - மின்சாரம் இல்லை
ஒருவேளை நமது பாரதத்திலே பெட்ரோல் பங்க் களுக்கு பெட்ரோல் கொண்டு வர லாரி ஓட்ட ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தால்
ஒருவேளை நமது நகரங்களிலே மின்சாரம் இல்லாமல் எல்லோரும் டார்ச் லைட் பயன்படுத்தி நடந்து போனால்
ஒருவேளை நமது நகரங்களிலே மின்சாரம் இல்லாமல் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தால்
ஒருவேளை நமது கடைகளிலே பொருட்கள் இல்லாமல் வெறுமனே காலியாக இருந்திருந்தால்
ஒருவேளை நமது வீடுகளுக்கு ஒரு துளி தண்ணீர் கூட குடிக்க இல்லாமல் இருந்திருந்தால்
இதெல்லாம் ஐரோப்பாவிலும் சீனாவிலும் இங்கிலாந்திலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் நடக்கிறது.
ஐரோப்பாவிலே மின்சாரம், இயற்கை எரிவாயு விலைகள் உச்சத்தை தொடுகின்றன.
சீனாவிலே பல மாகாணங்களிலே சுத்தமாக மின்சாரம் இல்லை. பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்கள் மின்சாரத்திற்கு ரேஷன் அதாவது கட்டுப்பாடு விதித்திருக்கின்றன.
இங்கிலாந்திலே பெட்ரோல் பங்க்களிலே பெட்ரோல் இல்லை. ராணுவ வீரர்களை கொண்டு பெட்ரோல் லாரிகளை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இதைபற்றி உள்ளூர் மீடியாக்களிலோ ஏன் உலக மீடியாக்களிலே கொந்தளித்து பார்த்தது உண்டா?
அந்த நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள், தலைவர்களை பார்த்து பாசிஸ்ட், கையாலாகதவர்கள் என்றெல்லாம் எழுதியது உண்டா?
கிடையாது எழுதவே மாட்டார்கள் ஏன்னென்றால் அது அவர்கள் நாடு. சிக்கலான நேரத்திலே நாட்டின் தலைமையை கேள்வி கேட்க மாட்டார்கள். நாட்டின் மொத்தமே இழக்கப்படுமே. இந்த மொத்த மீடியாவுமே இந்த நாடுகளின் கட்டுப்பாட்டிலே தானே இருக்கிறது.
இந்த நிலையிலே 2015 இல் இருந்து மோடி அரசு பாரதத்திலேயே நிலக்கரி உற்பத்தியை அதிகப்படுத்த செய்த முயற்சிகளை நினைவு கூறுகிறேன்.
எல்லா நிலக்கரி சுரங்களிலும் நிலக்கரி உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டது.
நிலக்கரி சுரங்கங்களுக்கு பக்கத்திலே இருக்கும் அனல்மின் நிலையங்களூக்கு நிலக்கரி போகும்படி செய்யப்பட்டது.
இதிலே பண்டமாற்றமும் அதாவது இந்த நிலக்கரியை பக்கத்திலே இருக்கும் மின்சார உற்பத்தி நிலையத்துக்கு கொடுத்துவிடு உன் மின்சார நிலையத்துக்கு அருகிலே இருக்கும் சுரங்கத்திலே இருக்கும் நிலக்கரியை பெற்றுக்கொள் என செய்தார்கள்.
உலக சூரியசக்தி கூட்டமைப்பு எனும் அமைப்பை நிறுவி அதன் மூலம் சூரிய ஓளி மின்சாரத்தை எங்கு பயன்படுத்த முடியுமோ அங்கு பயன்படுத்தினார்கள்.
இன்றைக்கு தங்கு தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது.
388 ஜிகா வாட் உற்பத்தி திறனும்
1583 டெராவாட் மின் உற்பத்தியும் ஒருவருடத்திற்கு செய்கிறோம்.
2012 இல் 199 ஜிகா வாட் ஆன இருந்த உற்பத்தி திறன் பத்தே வருடங்களிலே 388 ஜிகா வாட் ஆக அதாவது இரட்டிப்பு ஆகியிருக்கிறது. இன்னும் ஒரு 32 ஜிகா வாட் மின் உற்பத்தி நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அதே போலவே 2014 க்கு முன்பு இருந்ததை விட மூன்றில் ஒருமடங்கு அதிகமாக மின்உற்பத்தி செய்கிறோம்.
இவ்வளவு செய்தும் மோடி தொடர்ந்து தாக்கப்படுகிறார்? ஏன்?
இந்த இடதுசாரி அல்லைக்கை திட்டங்களை கேட்காததால்.
அனல்மின் நிலையங்களை அணுமின்சார உற்பத்தியை மூடி சூரிய ஒளி சக்தி மூலமே எல்லாம் செய்யவேண்டும் என போன ஐரோப்பா இன்று அவதிப்படுகிறது
அணைக்கட்டு மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் போதுமென்றிருந்த பிரேசில் கஷ்டப்படுகிறது.
ஆனால் இங்கே நாம் அதையெல்லம் கண்மூடித்தனமாக செய்யவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறூகிறோம்.
அதை பொறுக்காமல்
அதுவும் மாட்டை வழிபட்டு மாட்டு மூத்திரம் குடிக்கும் இந்துக்கள் எப்படி வாழலாம் என வெறூப்பிலே கிடந்து துடிக்கும் வெறுப்பின வியாதிகள் சும்மா இருப்பார்களா?
ஞாபகம் இருக்கிறதா?
2012 களிலே பத்திரிக்கைகளை தொறந்தாலே
இந்தியாவிலே உள்கட்டமைப்பு இல்லை
இந்தியாவிலே மின்சாரம் இல்லை
இந்தியாவிலே நகரங்கள் இருளிலே மூழ்கின
இப்படியே தான் இருக்கும்.
இன்றைக்கு அப்படி ஒரு செய்தியை படிக்க முடியுமா?
ஏன் இதுகள் எரிந்து விழுகின்றன?
எதுக்கெடுத்தாலும் அது சரியில்லை இது சரியில்லை என நொட்டை சொல்கிறது என?
இந்த ஐரோப்பிய பத்திரிக்கைகள் அதுகளின் கையாலாகதனத்திற்கு ரஷ்யாவை திட்டுகின்றன.
ரஷ்யா விலை ஏற்றிவிட்டதாம்.
ஏத்தாம பின்னே கொஞ்சுவாங்களா?
நாம் செய்த புண்ணியம் மோடி இருக்கிறார்.
இல்லையேல்
நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.
ராஜசங்கர் விஸ்வநாதன் அவர்களின் பதிவு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அரசின் ஒத்துழைப்பு வேண்டும் தலைமை நீதிபதி வலியுறுத்தல்
புதுடில்லி:"அனைவருக்கும் நீதி கிடைக்கவும், ஜனநாயகத்தை வலுபடுத்தவும், உச்ச நீதிமன்றம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வலியுறுத்தி உள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது:
கடந்த மே மாதம் முதல், உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளுக்கான பணியிடங்களை நிரப்ப, 106 பெயர்களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இதில் ஏழு பரிந்துரைகளுக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜல் ஜீவன் இயக்கத்தால் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் : சாதித்து காட்டியதாக பிரதமர் மகிழ்ச்சி
புதுடில்லி : ''நாட்டில் 1.25 லட்சம் கிராமங்களில் உள்ள ஐந்து கோடி வீடுகளுக்கு, 'ஜல் ஜீவன்' இயக்கத்தின் வாயிலாக சுகாதாரமான குடிநீர் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல ஆண்டுகள் ஆட்சி செய்தோர், 70 ஆண்டுகளில் செய்ததை, நாங்கள் இரண்டே ஆண்டுகளில் சாதித்து காட்டியுள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.
நாடு முழுதும் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில், 'ஜல் ஜீவன்' இயக்கத்தை 2019 ஆக., 15ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
சூரியசக்தி, மாற்று எரிசக்தி ஆதாரங்களால் தெற்கு ரயில்வேக்கு ரூ.377 கோடி மிச்சம்!
சென்னை- சூரிய மின் சக்தி நிலையங்களாலும், பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களாலும், தெற்கு ரயில்வேக்கு 377 கோடி ரூபாய் மின் செலவு குறைந்துள்ளது.
சூரிய மின் சக்தி உள்ளிட்ட, பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்துவதன் வாயிலாக, பசுமை சூழ்நிலையை பாதுகாக்க, இந்திய ரயில்வே முயற்சி மேற்கொண்டுள்ளது. பூஜ்ய இலக்குவரும் 2030ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில் பூஜ்ய இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தெற்கு ரயில்வேயில் சுற்றுச்சூழல் பசுமை பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக உள்நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஆனால் இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து மறுத்து வருகிறார். ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது அவ்வபோது வெட்டவெளிச்சமாகிறது. இதனை மறுபடியும் நிரூபிக்கும் வகையில் ஓர் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் செயல்படும் ஐநா.,வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு தேகிரீக்-ஐ-தாலிபான். இந்த அமைப்பு சுருக்கமாக பாகிஸ்தானி தாலிபான் என்று அழைக்கப்படுகிறது. தற்போது பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை பிடித்துள்ளது.
திருவனந்தபுரம்-''போலி மதச்சார்பின்மை கொள்கையை கடைப்பிடித்தால், இந்தியா அழிவை நோக்கித் தள்ளப்படும்,'' என, கேரள சைரோ - மலபார் கத்தோலிக்க சபையின் பலா தேவாலய பாதிரியார் ஜோசப் கலரங்கட் எச்சரித்துள்ளார்.
சர்ச்சை
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு முஸ்லிம் இளைஞர்கள், கிறிஸ்துவப் பெண்களை காதலித்து போதைக்கு அடிமையாக்கி மதம் மாற்றுவது, பயங்கரவாத அமைப்பில் சேர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக, ஜோசப் கலரங்கட் சமீபத்தில் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வியக்க வைக்கும் எல்லோர கைலாசநாதர் திருக்கோவில்..!!
ஒற்றைக்கல்லில் ஒரு சிலையை வடித்து கேள்விப்பட்டுள்ளோம். ஆனால்இ ஒற்றைபாறையில் ஒரு கோவிலையே வடித்துள்ளார்கள் என்றால்.... இது ஆச்சர்யம் மட்டுமல்ல வியப்பிற்குரிய ஒரு விஷயமாகும்.
🙏🇮🇳1
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோராஇ குகை சிற்பங்களுக்கு பெயர் பெற்றது.
🙏🇮🇳2
மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லோரா மலையில்இ குடைந்து கட்டப்பட்டிருக்கும் கோவில்தான் எல்லோரா கைலாசநாதர் திருக்கோவில். இக்கோவில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.