"தேவைப்படாத நகைகளை அந்தத் தெய்வத்திற்கு, பயன்பாட்டிற்குத் தேவையில்லை என்று கருதுகின்ற நகைகளை, உடைந்த நகைகளை, சிறு சிறு நகைகளை - மும்பையில் இருக்கின்ற ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி, அதிலிருந்து பெறப்படுகின்ற தங்கக்கட்டிகளை, தங்க வைப்பு நிதியில் வைத்து(1/4)
அதில் கிடைக்கின்ற வட்டி தொகையை முழுமையாக தெய்வத் திருப்பணிகளுக்கு, திருக்கோவில்கள் வளர்ச்சிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருக்கின்றோம்" : அமைச்சர் சேகர்பாபு.
தேவைப்படாத நகைகள் என்ற ஒன்று இல்லவே இல்லை. எப்போது பக்தர்கள் அதை காணிக்கையாக ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு(2/4)
செலுத்தி விட்டார்களோ, அப்போதிலிருந்து அது அந்த கோவிலின் சொத்தாகி விடுகிறது. அந்த சொத்தை நிர்வகிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. ஆனால், அந்த சொத்தை வேறு ஒருவருக்கு கொடுக்க எந்த உரிமையும் இல்லை. ஆகையால் அந்த கோவில் நகைகளின் மூலம் எடுத்து ஈட்டும்(3/4)
வருமானத்தை வேறு எங்கும் பகிர்வது சட்ட விரோதம். நகைகளை உருக்குவதால் ஏற்படும் இழப்புகளை எந்த கோவிலின் கணக்கில் சேர்ப்பார்கள்? இந்த நடவடிக்கையில் முறைகேடுகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.
நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.(4/4)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மஹாளய அமாவாசையை முன்னிட்டு தங்களின் குழந்தைகள் நலம் வேண்டி, முன்னோருக்கு திதி தர்ப்பணம் செநீர் நிலைகளில் ய்யும் வழக்கத்தை நீண்ட நாட்களாக ஹிந்துக்கள் (அனைத்து சாதியினரும்) தங்களது வழக்கமாக, கடமையாக, உரிமையாக, நம்பிக்கையாக கடைபிடித்து (1/6)
கொண்டிருக்கும் நிலையில், இன்று அவர்களது உரிமைகள் இன்று மறுக்கப்பட்டும், மிதிக்கப்பட்டும் வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மயிலாப்பூரில் இன்று கபாலி கோவில் குளத்திற்கு மக்கள் வந்த வண்ணம் இருந்தபோதும், காவல்துறையினர் அங்கு அனுமதிக்கவில்லை. இதனால் மக்கள் கோவிலை ஒட்டிய பல்வேறு (2/6)
தெருக்களில் பல இடங்களில் தங்களது கடமையை நிறைவேற்ற வரிசையில் நின்று பரிதவித்து வருகின்றனர். மேலும், இன்று காலை அந்த தெருக்களில் இருந்த பொதுமக்களிடம், காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், மக்கள் கைகளில் இருந்த பழம், தேங்காய் உள்ளிட்டவைகளை தட்டி பறித்து(3/6)
"டெங்குவின் தாக்கம் தலைதூக்கத் தொடங்கி உள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தான் டெங்கு அதிகம் பரவுகிறது. தீபாவளி பண்டிகை இந்த கால கட்டத்தில் தான் கொண்டாடப்படுகிறது. அதிக பட்டாசுகளை வெடிப்பதனால் வளிமண்டலத்தில் உண்டாகும் புகை டெங்கு கொசுக்களை (1/5)
விரட்டுவதோடு, அதன் இனப்பெருக்கத்தை தடுக்கிறது.பட்டாசு வெடிப்பதனால் மாசு ஏற்படும் என்பது ஒரு புறம் இருந்தாலும் கூட, டெங்கு கொசுக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது. நமது நாட்டை சேர்ந்த பல மருத்துவர்கள் இதை ஏற்றுக்கொண்டாலும் கூட, சுற்றுப்புற ஆர்வலர்கள் என்ற பெயரில் (2/5)
சிலர் இதை ஏற்று கொள்ள மறுக்கிறார்கள். நீதிமன்றத்தில் இது குறித்து வாதங்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த சில வருடங்களாக பட்டாசு வெடிப்பதற்கு நீதிமன்றங்கள் கடுமை காட்டுவது கவலையளிக்கிறது. டில்லியில் அதீத தொழிற்சாலைகளால் மட்டுமல்ல,பஞ்சாப் போன்ற மாநிலங்களில்(3/5)
பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் தங்க காணிக்கைகளை உருக்கி அதை வங்கிகளின் மூலம் தங்க பத்திரங்களாக மாற்றி அதன் மூலம் கிடைக்கக்கூடிய வட்டியை மற்ற கோவில்களின் பராமரிப்புக்கு செலவு செய்வோம். இது சட்டவிரோதமானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது.(1/7)
அரசியலமைப்பு விதி 25 மற்றும் 26 க்கு முற்றிலும் எதிரானது.
தங்களுடைய நம்பிக்கை மற்றும் பக்தியின் அடிப்படையில் தான் பக்தர்கள் குறிப்பிட்ட கோவில்களில் உள்ள தெய்வத்திற்கு தங்கத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர். கோவில்களின் சொத்துகளுக்கு சொந்தக்காரர் அந்தந்த கோவில்களில் (2/7)
உள்ள தெய்வம் தான் என உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவாக கூறியுள்ள நிலையில், பல கோவில்களில் உள்ள சொத்துகளை உருக்கி ஒரே பத்திரமாக மாற்றி கோவில்களுக்கு ஹிந்து அறநிலையத்துறை தான் சொந்தக்காரர் என்பது போல், பக்தர்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் (3/7)
பல கோடி பேரை தொற்றி கொண்ட 'கொரோனா', கடந்த வாரம் என்னையும் தொற்றி கொண்டது. கடந்த 06/09/2021 அன்று ஞாயிறு இரவு கடும் காய்ச்சல் மற்றும் உடல் அசதி ஏற்பட்டது. உடனடியாக என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். மறுநாள் காலை வரை காய்ச்சல் நீடித்த காரணத்தால், உடனடியாக சென்னை பொது மருத்துவமனை(1/9)
தலைமை மருத்துவர் @ETRajan1 அவர்களை தொடர்பு கொண்டேன். 'தாமதப்படுத்தாமால் உடன் வருக' என்றார். சென்னை அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களின் வழக்கமான கனிவான மற்றும் இன்முகத்தோடு கூடிய பரிசோதனைகள். அன்று மாலையே கொரோனா தொற்று உறுதி(2/9)
என்றார் மருத்துவர் @ETRajan1 . வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள சொல்லி அறிவுறுத்தப்பட்டதன் பேரில் கடந்த பத்து நாட்களாக தனிமைப்படுத்திக்கொண்டேன். முதல் மூன்று நாட்கள் காய்ச்சல் மற்றும் .குளிர் இருந்தது. பிறகு பிரச்சினை எதுவும் இல்லை. மருத்துவர் அறிவுறுத்தலின் பேரில்(3/9)
மொழி அரசியலை முன்னெடுக்கும் தி மு க தலைவர் @mkstalin ஸ்டாலின் அவர்களுக்கு என் கேள்விகள்.
1.கேந்திர வித்யாலயா பள்ளிகள்,பாதுகாப்பு துறை அதிகாரிகளின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது என்பதும்,பணி மாற்றத்தின் அடிப்படையில் அவர்கள் எங்கு சென்றாலும் ஒரே சீரான பாடத்திட்டத்தில் பயில(1/8)
வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதும் பின்னர் மத்திய அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்காக அதே நோக்கத்தில் விரிவுபடுத்தப்பட்டது என்பதும் உங்களுக்கு தெரியுமா, தெரியாதா?
2. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் படித்தால் மட்டுமே கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் மூன்றாவது (2/8)
மொழி பயிற்றுவிக்கப்படும் என்ற விதி, மாநிலத்திலும், மத்தியிலும் தி மு க ஆட்சியில் இருந்த பொது இருந்ததா இல்லையா? அப்போது ஏன் எதிர்க்கவில்லை?
3. மூன்றாவது மொழி பயிற்றுவிக்க தற்காலிக ஆசிரியர்கள் என்பது 40 வருடங்களுக்கும் மேலாக உள்ள நடை முறை என்பதை மறந்து விட்டீர்களா?(3/8)
மிகுந்த கவலையோடு இதை பதிவிடுகிறேன்.
தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க இனி மேலும் இது அதிகரிக்கும். ஆனால் பாஜகவினர் உட்பட அனைத்து கட்சியினரும் சமூக விலகலை கடைபிடிப்பதில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை.(1/8)
அதே போல் முக கவசங்களை அணியாமல் இருப்பது, கழுத்தில் தொங்க விட்டு கொள்வது, கைகளில் பத்திரமாக வைத்து கொள்வது என்று அலட்சியப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதிக அளவு மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்த நிலையிலும் இறப்பு சதவீதம் குறைவாகவே உள்ளது என்பது (2/8)
குறிப்பிடத்தக்கது. ஒரு உயிர் மறைந்தாலும், அது பேரிழப்பே. ஆனாலும் உயிரிழப்பை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம். மத்திய மாநில அரசுகள் தங்களால் முடிந்த அளவிற்கு செயல்பட்டாலும், மக்களின் ஒத்துழைப்பே மிக அவசியம். ஆனால் அரசுக்கு நாம் ஒத்துழைக்கிறோமா என்றால், உறுதியாக இல்லை என்று தான் (3/8)