கடந்த 20 ஆண்டுகளில் மாணவர்கள் பெற்ற பட்டத்தால் பயன் இல்லை: தலிபான்கள் அடாவடி
காபூல்: 'ஆப்கனில் கடந்த 2000 முதல் 2020ம் ஆண்டு வரை பள்ளி, கல்லூரி, பல்கலைகளில் மாணவர்கள் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை' என, தலிபான்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆப்கனில் இருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறியவுடன் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின் ஆண்கள் தாடியை குறைக்கவோ, மழிக்கவோ கூடாது என்றும்; பெண் குழந்தைகள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் பல்வேறு அடாவடி உத்தரவுகளை தலிபான்கள் பிறப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் தலிபான்களின் கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளதாவது:
ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்கள் ஆட்சியில் இல்லை. அந்த காலகட்டத்தில் நேட்டோ, அமெரிக்கப் பாதுகாப்பில் ஹமீது கர்சாய், அஷ்ரப் கனி ஆகியோர் ஆட்சி செய்தனர். அப்போது, பள்ளி, கல்லூாரி, பல்கலைகளில் படித்து மாணவர்கள் பெற்ற பட்டத்தால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.
இன்றுள்ள முதுகலைப் படிப்புகள், முனைவர் பட்டங்கள் எல்லாம் மதரஸாவில் படிக்கும் மதரீதியிலான படிப்புகளைவிட மதிப்பு குறைவானவை. அதனால், தலிபான்களின் தேசத்துக்குப் பயன்படும், மதிப்புகளை உணர்ந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களை பணியமர்த்த இருக்கிறோம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வெள்ளை சட்டையில் ஸ்டாலின் படம் தெரிய குண்டர்கள் வடபழனியில் உள்ள தர்ப்பணம் அளிக்கும் மண்டபத்தை கைப்பற்றி அங்கு காரியம் செய்ய வருவோரிடம் பணத்தை அபகரிக்கும் வழிப்பறி செயல் அரங்கேறி வருகிறது என பிரபல ஆங்கில ஊடகம் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று சம்பிரதாயப்படி மகாளய அமாவாசை என்பதால் இந்து மதத்தை சார்ந்தவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள். இது சம்பிரதாய நடைமுறையாகும்.
வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதிகள் மீது போடப்படும் ஊழல் வழக்குகள் அனைத்தும் அரசியல் பழி வாங்குவதற்காக போடப்படுவதாகவும்,
அவர்களை கைது செய்யும் போது மகிழ்ச்சியுடன் கை அசைத்தபடியே சிறைக்கு செல்வதையும் பார்த்து வருகிறோம்.
சமீபத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர் வீட்டில், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், 'ரெய்டு' நடத்தினர்.
அப்போது அவர் வீட்டுக்கு முன் கூடிய கட்சியினருக்கு மூன்று வேளையும் சாப்பாடு போட்ட கூத்தையும் பார்த்தோம்.ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து திரும்பி வந்த சசிகலாவை, தியாகி போல சித்தரித்து கொடுக்கப்பட்ட வரவேற்பு, ஒவ்வொரு தமிழனையும் வெட்கித் தலைகுனிவு அடையச் செய்தது.
காபூல்: ஆப்கானில் தலிபான்கள் குருத்வாராவை சூறையாடி அங்கிருந்த சீக்கியர்களை சிறைபிடித்திருப்பது சிறுபான்மை மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கனை இரு மாதங்களுக்கு முன் கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள், அனைத்து மதத்தினரும் அவரவர் விருப்பப்படி வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவர் என, தெரிவித்திருந்தனர்.
அதற்கு மாறாக நேற்று, தலைநகர் காபூலில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்குள் தலிபான்கள் நுழைந்து அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி
ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருந்தால் அதை பரிவர்த்தனை யோகம் என்பர். அதுபோல இங்கு சுவாமி ஆற்றலை அம்பாள் வாங்கிச் சிவமயமாக உள்ளாள். 🇮🇳🙏1
அம்பாள் ஆற்றலைச் சுவாமி வாங்கி சக்திமயமாக உள்ளார். இதை பரிவர்த்தனை நிலை என்பர். இங்கு அம்பாளுக்கு தான் சிறப்பு எல்லாமே என்பதும் சிறப்பாகும். எனவே, சக்திதலமாகிய மதுரைக்குரிய மந்திர, யந்திர, தந்திர முறைகள் இங்கும் பின்பற்றப்படுகிறது. 🇮🇳🙏2
தந்திரம் என்பது பூஜை முறை, மந்திரம் என்பது தேவியை துதிக்கும் தோத்திரம் யந்திரம் என்பது சாமி சிலைகள் மருந்து சாத்தி?ப் பதிக்கப்படும் போது சிலைகளுக்கு அடியில் வைக்கப்படும் செப்புத் தகடு.
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், குண்டுக்கரை, இராமநாதபுரம்
சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது.
🙏🇮🇳1
அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். மற்ற கோயில்களில் எல்லாம், பிரணவ மந்திரத்தின் பொருள் கூற, முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். 🙏🇮🇳2
ஆனால், இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல, சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது.
ஒரு மலை மூன்று யுகத்திலும் பகவானுக்கு உதவியது அது எந்த மலை.
கோகுலத்தில் இந்திர விழாவை தடை செய்த கிருஷ்ணன் கோவர்த்தன கிரி பூஜை செய்யலாம் என்று சொன்னதால் அது கேட்டு வெகுண்ட இந்திரன் வருணனை அழைத்து கோகுலத்தில் மழை பெய்வித்து கோகுலத்தையே அழித்து விடுமாறு உத்தரவிட்டான்.
வருணனும் மிக பயங்கரமாக மழையை கோகுலத்தில் பொழிவித்தான்.
உடனே கோவர்த்தனகிரியை தனது சுண்டு விரலால் தூக்கி அனைத்து மக்களையும் ஆடுகளையும் மாடுகளையும் கோவர்த்தனகிரியில் வரச் செய்து அனைவரையும் மழையிலிருந்து காப்பாற்றினான்.
தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டிதீர்த்தது குழந்தைகள் ஆடுமாடுகள் அனைவரும் ஆனந்தமாய் கோவர்த்தனகிரியில் இருந்து மழை பொழிவதை ரசித்து கொண்டிருந்தார்கள். அப்போது கோவர்த்தனகிரியும் நகைத்தது.