காபூல்: ஆப்கானில் தலிபான்கள் குருத்வாராவை சூறையாடி அங்கிருந்த சீக்கியர்களை சிறைபிடித்திருப்பது சிறுபான்மை மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கனை இரு மாதங்களுக்கு முன் கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள், அனைத்து மதத்தினரும் அவரவர் விருப்பப்படி வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவர் என, தெரிவித்திருந்தனர்.
அதற்கு மாறாக நேற்று, தலைநகர் காபூலில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்குள் தலிபான்கள் நுழைந்து அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும், வழிபாட்டு சின்னங்கள், பூஜை பொருட்கள் ஆகியவற்றையும் சூறையாடினர். கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களும் உடைத்து நொறுக்கப்பட்டன. கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த சீக்கியர்களையும் தலிபான்கள் சிறை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வன்முறை சம்பவத்தை, உலக சீக்கியர் பேரவை தலைவர் புனீத் சிங் சந்தோக் உறுதிசெய்துள்ளார்.
சமீபத்தில் ஆப்கன், பக்தியா மாகாணம், சம்கனி பகுதியில் உள்ள குருத்வாராவின் உச்சியில் பறந்த சீக்கியர் கொடியை தலிபான்கள் அகற்றினர்.
ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகளின் அராஜகம் அதிகரித்து வருவதால், அங்குள்ள சீக்கியர், ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் பீதிஅடைந்துள்ளனர்.
சோம்நாத் கோவில் இடிப்புக்கு பாராட்டு
குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவில், 17ம் நூற்றாண்டில், முஸ்லிம் மன்னர் முகமது கஜினியால் இடிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் கஜினிக்கு கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலத்துக்கு, தலிபான் தலைவர் அனால் ஹக்கானி சென்றுள்ளார்.
அப்போது, சோம்நாத் கோவில் இடிக்கப்பட்டதற்கு ஆதரவாகவும், கஜினியை பாராட்டியும் அவர் பேசியுள்ளார்.
இந்தியாவில் இருந்த பழமையான ஹிந்து கோவில் இடிக்கப்பட்டதை தலிபான் தலைவர் பாராட்டி பேசியுள்ளது, ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கஜினியால் இடிக்கப்பட்ட சோம்நாத் கோவில், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபபாய் படேல் முயற்சியால் புனரமைக்கப்பட்டது. தற்போது அந்த கோவில் நிர்வாக அறக்கட்டளையின் தலைவராக, பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அண்ணா பல்கலை ஆட்சி மன்ற குழு உறுப்பினராக, முதல்வர் ஸ்டாலினின் மகனும், தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியை நியமித்துள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்களுக்கான பிரதிநிதித்துவ பிரிவின் கீழ், அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி தேர்வாகி உள்ளார்.
இதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.துறை நிபுணர், முனைவர் பட்டம் பெற்றவர், விஞ்ஞானி போன்றோர் சிண்டிகேட் உறுப்பினராக வேண்டும்.
அது தான், பல்கலையின் வளர்ச்சிக்கு நல்லது. அதை எம்.எல்.ஏ.,வுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ வழங்குவது நீதியே அல்ல.அரசியல்வாதிகள், பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக இருப்பதால் என்ன பலன்?
திருமலை சென்று திருப்பதி ஏழுமலையானை மட்டும் தரிசித்துவிட்டு வருவது தவறு. திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனி மரபு இருக்கிறது... இந்த மரபு ராமானுஜர் காலத்தில், அவரால் தொடங்கி, கடைபிடித்து வரப்படுகிறது.
🙏🇮🇳1
திருப்பதிக்குச்சென்றால் திருமலை வெங்கடாசலபதியை தரிசிப்பதற்குமுன் முதலில் வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்
1வது கோவில் அலமேலுமங்காபுரம்.
கீழ்திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து 5வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.
🙏🇮🇳2
இங்கு பத்மாவதி தாயார் சன்னதி உள்ளது. அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும். தாயாரின் பரிந்துரை அடிப்படையில்தான் பெருமாளின் கருணை கிடைக்கும்.
காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
நவராத்திரி அன்று கொலு எப்படி வைக்க வேண்டும் என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கொலு வைப்பவர்கள் புரட்டாசி அமாவாசை நாளில் (மகாளய அமாவாசை) கொலு வைத்து விட வேண்டும். கொலு என்றால் அழகு.
கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலங்கள் போடவேண்டும். பொம்மைகளை வரிசைப்படுத்த வேண்டும்.
*கொலு பொம்மை தத்துவம்*
மனிதன், குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதை நவராத்திரியின் கொலு படி தத்துவம் உணர்த்துகிறது. கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது சிறப்பு.
நிலக்கரி சுரங்கமே தந்தும் சும்மா இருந்த மின் வாரியம்
சென்னை:மத்திய அரசு ஒடிசாவில் உள்ள சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்தை வழங்கி, ஐந்து ஆண்டுகளாகியும் நிலக்கரி எடுத்து வராததே, தற்போது தமிழக மின் வாரியம் நிலக்கரி தட்டுப்பாட்டில் சிக்கி இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
துாத்துக்குடி, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.72 ஆயிரம் டன் தேவைஅவற்றில் தினமும் முழு மின் உற்பத்திக்கு பயன்படுத்த, 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை.
அதில், 60 ஆயிரம் டன், ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி., வேலி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய அரசின் சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது.
அ.கணேசன், பேட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்ட கணக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளன.
விளம்பரங்கள், நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணச் செலவு மற்றும் வேட்பாளர்களுக்கு கொடுத்தது ஆகியவை அடங்கலாக, தி.மு.க., 114.14 கோடி ரூபாயும், அ.தி.மு.க., 57.33 கோடி ரூபாயும் மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோருக்கே, 380 கோடி ரூபாய் தட்சணை கொடுத்தனர். இதை எந்த கணக்கில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவில்லை. 'பொய் சொல்லும் வாய்க்கு, போஜனம் கிடைக்காது' என்று ஒரு சொலவடை உண்டு.
தேனி மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார்.
🇮🇳🙏1
சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன் தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார்.
🇮🇳🙏2
இங்குள்ள அதிசயம் என்னவென்றால் இங்குள்ள விபூதிக்குகையில் மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. 🇮🇳🙏3