வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதிகள் மீது போடப்படும் ஊழல் வழக்குகள் அனைத்தும் அரசியல் பழி வாங்குவதற்காக போடப்படுவதாகவும்,
அவர்களை கைது செய்யும் போது மகிழ்ச்சியுடன் கை அசைத்தபடியே சிறைக்கு செல்வதையும் பார்த்து வருகிறோம்.
சமீபத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர் வீட்டில், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், 'ரெய்டு' நடத்தினர்.
அப்போது அவர் வீட்டுக்கு முன் கூடிய கட்சியினருக்கு மூன்று வேளையும் சாப்பாடு போட்ட கூத்தையும் பார்த்தோம்.ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து திரும்பி வந்த சசிகலாவை, தியாகி போல சித்தரித்து கொடுக்கப்பட்ட வரவேற்பு, ஒவ்வொரு தமிழனையும் வெட்கித் தலைகுனிவு அடையச் செய்தது.
தற்போதைய தி.மு.க., அரசு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து ரெய்டு நடத்தினாலும், அவர்கள் யாரும் பயப்படுவதாக தெரியவில்லை. தி.மு.க., அமைச்சரவையில் உள்ள, 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் இருக்கின்றன.
இரு திராவிட கட்சிகளும் ஊழல் செய்வதில், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். கடந்த 1991- - 1996ல் ஊழல் செய்த, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சமூக நலத் துறை முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி, நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பின், தற்போது தான் ஐந்து ஆண்டுகள் சிறை என, தண்டிக்கப்பட்டு உள்ளார்.
இந்த இந்திர குமாரி, தற்போது தி.மு.க.,வின் இலக்கிய அணி செயலராக உள்ளாராம். அதனால், இவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனைக்காக தி.மு.க.,வினர் மகிழ்ச்சி அடைய முடியாது. இவ்வழக்கில், இந்திர குமாரியின் கணவர் பாபுவும் தண்டிக்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தில் ஒருவர் தவறான வழியில் சொத்து வாங்கி குவித்தால், அதை தடுக்காத அவரின் குடும்ப உறவுகளும் தண்டிக்கப்படுவது உறுதி என்பதை, அந்த தீர்ப்பின் வாயிலாக அறிய முடிகிறது.
மேலும் இந்த வழக்கில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சண்முகம் மூன்றாண்டுகள் தண்டிக்கப்பட்டுள்ளது, ஊழல் அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.
கால தாமதமான தீர்ப்பு என்றாலும், இந்திர குமாரிக்கு தண்டனை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறைக்கு செல்லும்போது மட்டும் அரசியல்வாதிகள் மயக்க நாடகம் அரங்கேற்றுவர். குற்றவாளி நாடகம் போடுகிறார் என தெரிந்தாலும், சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லையே!
இப்போதே 70 வயதைக் கடந்து விட்ட இந்திர குமாரி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மேல் முறையீடு செய்து, தன் ஆயுள் காலம் வரையில் வழக்கை இழுத்தடிக்க வாய்ப்பு உண்டு.
ஊழல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள், சட்டத்தில் உள்ள ஓட்டையில் தப்பிக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அண்ணா பல்கலை ஆட்சி மன்ற குழு உறுப்பினராக, முதல்வர் ஸ்டாலினின் மகனும், தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியை நியமித்துள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்களுக்கான பிரதிநிதித்துவ பிரிவின் கீழ், அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி தேர்வாகி உள்ளார்.
இதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.துறை நிபுணர், முனைவர் பட்டம் பெற்றவர், விஞ்ஞானி போன்றோர் சிண்டிகேட் உறுப்பினராக வேண்டும்.
அது தான், பல்கலையின் வளர்ச்சிக்கு நல்லது. அதை எம்.எல்.ஏ.,வுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ வழங்குவது நீதியே அல்ல.அரசியல்வாதிகள், பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக இருப்பதால் என்ன பலன்?
திருமலை சென்று திருப்பதி ஏழுமலையானை மட்டும் தரிசித்துவிட்டு வருவது தவறு. திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனி மரபு இருக்கிறது... இந்த மரபு ராமானுஜர் காலத்தில், அவரால் தொடங்கி, கடைபிடித்து வரப்படுகிறது.
🙏🇮🇳1
திருப்பதிக்குச்சென்றால் திருமலை வெங்கடாசலபதியை தரிசிப்பதற்குமுன் முதலில் வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்
1வது கோவில் அலமேலுமங்காபுரம்.
கீழ்திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து 5வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.
🙏🇮🇳2
இங்கு பத்மாவதி தாயார் சன்னதி உள்ளது. அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும். தாயாரின் பரிந்துரை அடிப்படையில்தான் பெருமாளின் கருணை கிடைக்கும்.
காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
நவராத்திரி அன்று கொலு எப்படி வைக்க வேண்டும் என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கொலு வைப்பவர்கள் புரட்டாசி அமாவாசை நாளில் (மகாளய அமாவாசை) கொலு வைத்து விட வேண்டும். கொலு என்றால் அழகு.
கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலங்கள் போடவேண்டும். பொம்மைகளை வரிசைப்படுத்த வேண்டும்.
*கொலு பொம்மை தத்துவம்*
மனிதன், குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதை நவராத்திரியின் கொலு படி தத்துவம் உணர்த்துகிறது. கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது சிறப்பு.
நிலக்கரி சுரங்கமே தந்தும் சும்மா இருந்த மின் வாரியம்
சென்னை:மத்திய அரசு ஒடிசாவில் உள்ள சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்தை வழங்கி, ஐந்து ஆண்டுகளாகியும் நிலக்கரி எடுத்து வராததே, தற்போது தமிழக மின் வாரியம் நிலக்கரி தட்டுப்பாட்டில் சிக்கி இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
துாத்துக்குடி, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.72 ஆயிரம் டன் தேவைஅவற்றில் தினமும் முழு மின் உற்பத்திக்கு பயன்படுத்த, 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை.
அதில், 60 ஆயிரம் டன், ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி., வேலி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய அரசின் சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது.
அ.கணேசன், பேட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்ட கணக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளன.
விளம்பரங்கள், நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணச் செலவு மற்றும் வேட்பாளர்களுக்கு கொடுத்தது ஆகியவை அடங்கலாக, தி.மு.க., 114.14 கோடி ரூபாயும், அ.தி.மு.க., 57.33 கோடி ரூபாயும் மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோருக்கே, 380 கோடி ரூபாய் தட்சணை கொடுத்தனர். இதை எந்த கணக்கில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவில்லை. 'பொய் சொல்லும் வாய்க்கு, போஜனம் கிடைக்காது' என்று ஒரு சொலவடை உண்டு.
தேனி மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார்.
🇮🇳🙏1
சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன் தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார்.
🇮🇳🙏2
இங்குள்ள அதிசயம் என்னவென்றால் இங்குள்ள விபூதிக்குகையில் மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. 🇮🇳🙏3